search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பானி"

    உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #Modicanthide #Rahul #Rafalescam
    புதுடெல்லி:

    பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு நீங்கள் உதவி செய்ததாக வரும் தகவல்கள் தொடர்பாக... என்று நேர்காணல் செய்த பெண்மணி கேள்வி எழுப்பினார்.

    அதற்குள் இடைமறித்த பிரதமர் மோடி, நீங்கள் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, இல்லையா? என்று மறுகேள்வி கேட்டார். 

    ரபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. ஆனால், ரபேல் விவகாரம் தொடர்பாக சிலர் தொடர்ந்து கூறிவரும் பொய்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

    சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் உங்கள் நிறுவனம் தலைப்பு செய்தியாக்கி விடுகிறது. ஆனால், வெளிச்சத்துகு வர வேண்டிய உண்மைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்து விடுகிறீர்கள் எனவும் மோடி வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த பேட்டியின் ஒரு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ பதிவின் அடிக்குறிப்பாக, ‘திரு.மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது.  உங்களது ‘கர்மா’ (முன்வினைகள்) உங்களை காட்டிக்கொடுத்து விடும். அதை இந்த பேட்டியின்போது உங்களின் குரல் மூலம் இந்த நாட்டால் கேட்க முடிகிறது. 

    உண்மை என்பது மிகவும் வல்லமையான ஆயுதம். இந்த ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா? என சவால் விடுகிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  #Modicanthide #Rahul #Rafalescam
    ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியின்போது பதில் அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

    ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் எந்த அடிப்படையில் இதை குறிப்பிடுகிறது? என எங்களை பார்த்து பாஜகவினர் கேட்கிறார்கள்.

    இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய  நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.

    526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?

    இதில் உண்மை நிலவரம் என்னவென்றால் ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார்.



    என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.

    ரபேல் பேரம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பிரதமரை மிரட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.

    ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #AnilAmbani #Chowkidaarchorhai #Modi #RahulGandhi #RafaleDeal
    ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்த அம்பானிக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை வழங்கியதால் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலைன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துக்கு வரம்புகளை மீறி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில், மொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆர்காம் நிறுவனம் ஒப்புக்கொண்டபடி 550 கோடி ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு தரவில்லை. எனவே அனில் அம்பானி மற்றும் அவரது 2 உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனில் அம்பானியை கண்டிக்கும் விதமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-



    இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தங்களை பெற வேண்டும் என்றால் அதற்கு ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்தவராக இருக்க வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தாததன் காரணமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பிரதமர் மோடியால் ‘பாய்’ என்று அழைக்க வேண்டும். தகுந்த அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். பிரதமர் இந்த விதிகளை வகுத்துள்ளார்.

    இவ்வாறு ராகுல் அதில் குறிப்பிட்டுள்ளார்.  #RahulGandhi #Modi #RafaleDeal
    மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafale #Modi #AnilAmbani #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.



    இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான விஷயம்.

    ஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.

    மோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.

    அவர், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். Rafale #Modi #AnilAmbani #RahulGandhi 
    தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற ‘மக்களின் குரல்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட போர் விமானம், தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக இந்த துறையில் சிறிதும் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தில் பங்கு அளிக்கப்பட்டதில் இருந்து இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது என்றும், மக்களின் வரிப்பணத்தை தொழிலதிபர்களுக்கு மோடி வழங்கி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய அவர், மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல், தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் கிடைக்கும் லாபம் எதுவும் ஏழைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவுவதிலேயே மும்முரமாக செயல்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal 
    ×