search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயவர்தன்"

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். #LoksabhaElections2019

    சென்னை:

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்,வீதி வீதியாக வாக்கு சேகரித்தார் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

    அவர் பொதுமக்களிடம், “அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் அ.தி. மு.க. அரசு கொடுத்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து உள்ள நமது வேட்பாளர் மீண்டும் வெற்றி பெற்றவுடன் பல புதிய திட்டங்களை தொகுதியின் வளர்ச்சிக்காக செயல்படுத்துவார் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்மாதிரி தொகுதியாக தென் சென்னையை உருவாக்கவும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

    அவருடன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் கே.பி.கந்தன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், கோவிலம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் கோவிலம் பாக்கம் சி.மணிமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LoksabhaElections2019

    இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #LokSabhaElections2019
    சென்னை:

    தரமணியில் உள்ள ராமானுஜம் ஐ.டி. பார்க் நிறுவனம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இளம் இந்திய குரல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தி ரிவர் என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மதுசரண் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் எனது 25-வது வயதில் அரசியலுக்கு வந்தேன். எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்னை அரசியலுக்கு அழைத்து எம்.பி.யாக்கினார். என்னைப் போன்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். உங்களால் தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனது எம்.பி. பதவியின் மூலம் தென் சென்னை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

    மீண்டும் வெற்றி பெற்று மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு வருவேன். தினமும் 100 பேருக்கு சிகிச்சை அளித்து வந்த நான் இன்று எம்.பி. பதவி மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். ஐ.டி. ஊழியர்கள் முதலாளிகளை எளிதில் தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019

    கந்தன் சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    காவிரி பிரச்சனைக்காக. பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் அ.தி.மு.க. எம்.பிக்கள். தி.மு.க. எம்.பிக்கள் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. ஸ்டாலின் தனது தந்தையை பயன்படுத்தி தி.மு.க.வின் தலைவர் ஆனவர். ஆனால் நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில், பாராளுமன்றத்தில் போதிய நிதி இருந்தும் மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிகாரம் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது தவிர, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

    ஆனால் அதிமுக அரசு கிடைத்த உரிமையை முறையாக பயன் படுத்தியது. நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதிராஜாராம், கமலகண்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீராமஜெயம், மூவேந்தர், பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், டால்பின் ஸ்ரீதர், மோகன்ராஜா, பா.ம.க. நிர்வாகிகள் சகாதேவன், விவேல், லோகநாதன், ராம்குமார், சிவகுமார், தே.மு.தி.க. வி.சி. ஆனந்தன், பிரபாகரன், தினகரன், முருகன்., த.மா.கா. மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மனோகர், சத்தியநாராயணன், புதிய நீதி கட்சி துரைராஜ், ரமேஷ், ஜெகன், புரட்சி பாரதம் கட்சி ராஜி, ஆதிவேந்தன், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

    தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். #LSPolls #edappadipalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் இன்று காலை திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.

    பிரசாரத்தின்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அம்மா அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஏழை மக்களின் நலன் காக்க தொடர்ந்து அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இத்தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் ஜெயவர்தன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.’

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ADMK #edappadipalaniswami
    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். #ADMK

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்களை பார்த்து கும்பிட்டபடி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஓட்டு கேட்டார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. ஆனந்தன், பா.ஜ.க டால்பின் ஸ்ரீதர், த.மா.கா கொட்டிவாக்கம் முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் டி.ஜெயசந்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு உள்பட அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தின் போது வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாடியில் நின்று பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய பிரசாரம் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கலங்கரை விளக்கம் அருகே முடிவடைந்தது. பிரசாரத்தின் இடையே ஜெயவர்தன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது :-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

    ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பொன்னான நலத்திட்டங்கள் இன்றும் நினைவு கூறத்தக்கவையாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எண்ணற்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் தென்சென்னை தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம். நிச்சயம் இந்த பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில உரிமையை நிலைநாட்டுவோம்.

    இவ்வாறு வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #ADMK

    மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி ஜெயவர்தன், தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கபோவதில்லை எனவும், மத்திய அரசுடன் சுமூகபோக்கையே கடைபிடிக்கப்போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், தமிழகத்தின் குறைகளை எடுத்துரைத்தார். அதன்படி, தமிழகத்துக்கு  2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.



    மேலும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பையும் பதிவு செய்தார். #NoConfidenceMotion
    ×