search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டர்நெட்"

    அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

    அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



    அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam



    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைது செய்துள்ள பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒரேமுறை மட்டும் பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியிருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக பிபின் மருத்துவரிடம் தெரிவித்தார். மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதால், பிபின் வங்கியில் இருந்து பேசுவதை மருத்துவரிடம் நிரூபிக்க அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.



    மேலும், மருத்துவர் பயன்படுத்தும் வங்கி செயலியை மேம்படுத்த வங்கி சார்பில் அனுப்பப்படும் இணைய முகவரியை க்ளிக் செய்ய பிபின் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதை முழுமையாக நம்பிய மருத்துவர் பிபின் சொன்னதை போன்று அவன் அனுப்பிய இணைய முகவரியை க்ளிக் செய்தார்.

    இணைய முகவரியை க்ளிக் செய்ததும் மருத்துவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் தொகை எடுக்கப்பட்டு விட்டதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. பின் பிபினை தொடர்பு கொள்ள மருத்துவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவின.

    இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் துறை உதவியை நாடினார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் வங்கி கணக்கில் இருந்த தொகை மாற்றப்பட்ட வங்கி கணக்கு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவரை ஏமாற்றி அவரது பணத்தை பிபின் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
    கூகுள் க்ரோம் பிரவுசரில் புதிய அம்சங்களை வழங்குவதற்கான சோதனை நடைபெறுகிறது. அந்த வகையில் கூகுள் க்ரோமில் நெவர் ஸ்லோ மோட் வழங்கப்பட இருக்கிறது. #GoogleChrome



    கூகுள் நிறுவனம் தனது க்ரோம் பிரவுசரில் புதிய அம்சங்களை வழங்க இருக்கிறது. சமீபத்தில் பாஸ்வேர்டு செக்கப் எனும் க்ரோம் எக்ஸ்டென்ஷனை கூகுள் அறிமுகம் செய்தது. இத்துடன் லுக்அலைக் யு.ஆர்.எல். அம்சமும் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் நெவர்-ஸ்லோ மோட் எனும் அம்சத்தை வழங்க இருக்கிறது.

    புதிய நெவர்-ஸ்லோ மோட் அம்சம் ஸ்மார்ட்போன்களில் அதிவேக பிரவுசிங் அனுபவத்தை வழங்கும். இந்த அம்சம் தரவுகள் லோட் ஆவதை தடுத்து நிறுத்தி இணைய பக்கங்களை அதிவேகமாக திறக்கச் செய்யும். புதிய அம்சம் பற்றிய விவரம் க்ரோமியம் கெரிட் வலைபக்கத்தில் வெளியாகியுள்ளது. 

    புதிய அம்சம் தரவுகளை சிறிதளவு உடைக்க செய்யும் என்றும் இது மெமரி பயன்பாட்டையும் குறைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நெவர்-ஸ்லோ மோட் பற்றிய விவரம் அக்டோபர் 2018 இல் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.



    புதிய அம்சம் தற்சமயம் பெரிய ஸ்க்ரிப்ட்களை பட்ஜெட் அடிப்படையில் தடுத்து நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தரவுகளை ~CHECK~Content-Length~CHECK~ முறையில் பஃபெர் செய்யும். பட்ஜெட்கள் பயன்பாடிற்கு ஏற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.  இதனால் பெரிய ஸ்க்ரிப்ட் கொண்ட வலைப்பக்கங்கள் குறிப்பிட்ட அளவுக்கு தடுத்து நிறுத்தப்படும். கூகுள் க்ரோம் பிரவுசரில் நெவர்-ஸ்லோ மோட் வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.  

    சமீபத்தில் கூகுள் க்ரோம் பிரவுசரில் பாஸ்வேர்டு செக்கப் எக்ஸ்டென்ஷன் சேர்க்கப்பட்டது. இந்த எக்ஸ்டென்ஷன் உங்களது பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றிய விவரங்களை அவ்வப்போது சரிபார்க்கும். ஒருவேளை உங்களது கூகுள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், கூகுள் தானாக உங்களது அக்கவுண்ட் பாஸ்வேர்டை மாற்றிவிடும். 
    இணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email



    இணைய உலகில் தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சுமார்  200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் களவாடப்பட்டது. இவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. எனினும், இது மிகப்பெரும் தகவல் திருட்டு சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்களது தகவல்கள் களவாடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான டிராய் ஹன்ட் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் களவாடப்பட்டு அவற்றின் பாஸ்வேர்டுகள் இணையத்தில் பரவி வருவதை அறிந்து தடுமாறியிருக்கிறார். முன்னதாக இவர் ஆதார் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

    இந்த தவறுகள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் வெளியாக செய்ததாக அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட தகவல்களில் இந்த விவரங்கள் 12,000 வெவ்வேறு ஃபைல்களாக சுமார் 87 ஜி.பி. அளவு சேமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார். 



    முன்னதாக அவர் தனது வலைபக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் இணையத்தில் வெளியான விவரங்கள் தற்சமயம் கிடைக்கிறதா என தெரியவில்லை. எனினும் அவை ஹேக்கர்களிடையே பிரபலமாக இருக்கும் இணைய முணையங்களில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஹன்ட் வெளியிட்ட தகவல்களில் சுமார் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் தகவல் திருட்டு மூலம் வெளியாகி இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல்கள் HIBP (Have I Been Pwned) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீங்களும் உங்களது மின்னஞ்சல் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என இந்த வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு https://haveibeenpwned.com வலைதளம் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். 

    இதேபோன்று பாஸ்வேர்டு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள https://haveibeenpwned.com/Passwords வலைதளத்தை பயன்படுத்தலாம். 



    மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்? 

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் படி உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்டதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    - உடனடியாக மின்னஞ்சல் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். 

    - டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-Factor Authentication) வசதியை அனைத்து சேவைகளிலும் செயல்படுத்த வேண்டும். 

    - குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் வழங்கியிருந்த அனுமதிகளை திரும்ப பெற வேண்டும்.

    நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். சில சேவைகளில் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்தாலும் இவ்வாறு செய்ய வேண்டும். வெவ்வேறு சேவைகளுக்கென தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க முடியும்.
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை சேவையை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. #Jio #WiFi



    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) எனும் சேவையை சோதனை செய்கிறது. புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை சேவையை சோதனை செய்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் சோதனை துவங்கியிருப்பதால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கலாம். ஜியோவின் வோ வைபை சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சோதனை செய்யப்படுவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை சோதனை செய்வதாக கூறப்படுகிறது. ஜியோ வைபை சேவையை பயன்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஜியோ வைபை சேவை தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் ஜியோ விரைவில் வோ வைபை சேவையை வெளியிடலாம்.

    2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஜியோபோன்களிலும் இந்த சேவை வழங்கப்படலாம்.



    இந்திய ஃபீச்சர் போன் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு ஜியோபோன்கள் விற்பனையாவதால், வோ வைபை சேவை வெளியீட்டுக்கு பின் ஜியோபோன் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கலாம். 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வோ வைபை சேவையை பரிந்துரை செய்தது. இதன் மூலம் பயனர்கள் வைபை இணைப்பை கொண்டே வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால் மொபைல் நெட்வொர்க் வசதியில்லா சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். 

    ரிலையன்ஸ் ஜியோ போன்றே பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் வோ வைபை சேவையை இந்தியாவில் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மீடூ விவகாரம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கூகுள் பணியாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். #GoogleWalkout



    ‘மீ டூ’ இயக்கம் தற்போது உலகம் முழுவதும் பிரபல மடைந்துள்ளது. தொடக்கத்தில் ஆசிய நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த அமைப்பு ஐரோப்பாவிலும், அதை தொடர்ந்து வடஅமெரிக்கா நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது இது சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளையும் அதிர வைத்துள்ளது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. அதை ஏற்றுக் கொண்ட கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை. இது தொடர்பாக 2 ஆண்டுகளில் 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள குர்கான், ஐதராபாத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷீரீச், டியூப்ளின், பெர்லின், சிங்சப்டர், லண்டன் உள் ளிட்ட நகரங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.



    இந்தியாவில் உள்ள 4 கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுன்டெயின் வியூ பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

    ‘செக்ஸ்’ குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். நீலநிற ரிப்பன்களை அணிந்திருந்தனர். நியூயார்க், மேன்காட்டன், அட்லாண்டாவில் உள்ள கூகுள் நிறுவனங்களின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இது குறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஊழியர்களின் பாதுகாப்பு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
    இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் இன்டர்நெட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகை அறிவித்துள்ளது. #BSNL #broadband



    இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மூன்று புதிய சலுகைகளையும் குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

    நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது.

    ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.

    இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 
    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினசரி அடிப்படையில் பயன்படுத்தி வரும் டேட்டா விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினமும் 1 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    நெயில்சன் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி சிலகாலத்திற்கு முன் இந்தியர்கள் மாதாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 4 ஜி.பி. டேட்டா மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் அவர்கள் தினமும் அதிகபட்சம் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிக குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதால் உலகளவில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நெயில்சன் ஸ்மார்ட்போன் 2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அதிவேக 4ஜி இண்டர்நெட், விலை குறைந்த மொபைல் போன் மாடல்கள் மற்றும் அழைப்பு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கத் துவங்கியது," என நெயில்சன் இந்தியாவின் தலைவர் அபிஜித் மடாகர் தெரிவித்தார். 



    இந்திய சந்தையில் ஏற்படும் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ரூ.5,000 பட்ஜெட்டில் புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

    "திடீரென மலிவு விலை புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமானதால், புதிய பயனர்கள் தங்களது ஃபீச்சர்போன்களை ஸ்மார்ட்போன் மாடல்களாக மாற்றிக் கொண்டனர்," என மடாகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

    கடந்த 15 முதல் 18 மாதங்களில் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகபட்ச பயன்பாடு டேட்டா அதிகம் எடுத்துக் கொள்ளும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் குரோம் போன்றவற்றில் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்துள்ளது. #Jio



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாதத்தில் மற்ற நிறுவனங்களை விட சுமார் பத்து மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளது. 

    ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் ஒரு சதவிகிதம் அதிகரித்து தற்சமயம் 117.93 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115.7 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி அதிகரித்துள்ளது.

    ஜியோ மட்டும் பத்து மடங்கு வாடிக்கையாளர்களை அதிகளவு சேர்த்து இருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11.53 லட்சம் வாடிக்கையாளர்களையே சேர்த்து இருக்கின்றன.

    வோடபோன் நிறுவனம் 6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 3.13 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.25 லட்சம் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 5,489 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

    பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களை பொருத்த வரை ஜூன் மாதத்தில் இருந்து 1.3 கோடி வாடிக்கையாளர்கள் அதிகரித்து ஜூலை மாதத்தில் 46 கோடியாக உள்ளது, மொபைல் பிராட்பேன்ட் இணைப்புகள் மட்டும் 44.1 கோடியாக இருக்கிறது. 
    இந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking



    இந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.



    மொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். 

    இதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது. 

    புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.
    உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena



    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது. 



    புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற  நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

    புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena 
    ×