search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116083"

    வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மகன் இருக்கும்போதே மகள் தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம்-4ம் சேத்தி கோவில்குளத்தைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவரது மனைவி காந்திமதி (வயது 80). இவர்களுக்கு கரிகாலன் (60) என்ற மகனும், சரஸ்வதி (55) என்ற மகளும் உள்ளனர்.



    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகன் கரிகாலன் வீட்டில் இருந்த காந்திமதி தனது மகளுக்கு ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு தாய் காந்திமதி தனது மகள் சரஸ்வதி வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார். 15 ஆண்டுகளாக மகன் கரிகாலன் தாயை வந்து பார்க்கவில்லை. நேற்று காந்திமதி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். தகவலறிந்த மகன் கரிகாலன் தாயின் பிணத்தை தனது ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். ஆனால் இறப்பதற்கு முன் காந்திமதி இறுதி காரியங்களை மகளே செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாராம்.

    இதையொட்டி இறந்த தாயை தனது வீட்டிற்கு வந்து அண்ணன் பார்க்கக்கூடாது என்றும், சுடுகாட்டிற்கு வேண்டும் என்றால் வரட்டும் என்றும், சரஸ்வதி கூறிவிட்டார். பிறகு தாயின் இறுதி சடங்கை தானே முன்னின்று செய்து கணவன் வைரப்பன் துணையோடு இறுதி சடங்களை செய்து சிதைக்கு தீ மூட்டினார்.

    மகன் இருக்கும் நிலையில் மகள் தாய்க்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




    அகமதாபாத்தில் முன்னாள் காதலியின் ஆவி தன்னை இயக்குவதாக கூறிய தொழில் அதிபர் மனைவி, மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் குணால் திரிவேதி (வயது 45). அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது மனைவி கவிதா (45), மகள் ஷிரீன் (16), தாயார் ஜெயஸ்ரீ பென் (75) ஆகியோருடன் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

    அவரது உறவினர்கள் திரிவேதிக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாக ரிங் கொடுத்தும் போனை எடுக்கவில்லை.

    எனவே, நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு குணால் திரிவேதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மனைவி கவிதா, மகள் ஷிரீன் ஆகியோர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். தாயார் ஜெயஸ்ரீபென் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுபற்றி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். 3 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீபென் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வி‌ஷத்தை கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

    இந்த சம்பவத்துக்கு காரணம் என்ற என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணால் திரிவேதி எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் கிடைத்தன.

    அதில், தன்னை இறந்து போன முன்னாள் காதலியின் ஆவி இயக்குவதாகவும், அதனால்தான் குடிகாரனாக மாறி விட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மற்றொரு கடிதத்தில் காதலியின் ஆவி ஏவுவதால் குடும்பத்தினரை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விட்டு கடவுளிடம் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    இந்த சாவுக்கு கடன் பிரச்சினையோ, மற்ற வி‌ஷயங்களோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    தனது மூட நம்பிக்கையால் குணால் திரிவேதி குடும்பத்தையே கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. #tamilnews
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது முதல் பெண் குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிவீசியுள்ளார். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் பாரியெல்லி பகுதியில் வசிக்கும் அரவிந்த் கங்வார் என்பவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஏற்கனவே மூத்த குழந்தையும் பெண் குழந்தையாக இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், நேற்று மாலை, தனது வீட்டின் மாடியில் இருந்து தனது ஒன்றரை வயது மூத்த மகளை தூக்கி வீசியுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் அவரது தாய்க்கும் காயம் பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் படுகாயங்களுடன் தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் சுயமாக தங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் காலச்சூழலில், இப்போது கூட இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண் சிசுக்கொலை நடந்து வருவதும், பெண் பிள்ளைகள் பெறுவதற்கு அஞ்சும் சூழல் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. #UttarPradesh
    டெல்லியில் 7 மாத பெண் குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிதி கான் என்ற பெண்ணின் 7 மாத பெண் குழந்தை சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில் தனது மகள் நீர்த்தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவர் மற்றும் அவரது நண்பருக்கு தகவல் அளித்து பிறகு மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும் தாய் அதிதி கான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், குழந்தையின் உடற்கூறாய்வில், கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிதி கானிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    தனது குழந்தை பிறந்த பிறகு அடுக்கடுக்காக குடும்பத்துக்கு பிரச்சனைகள் வருவதாகவும், பிரச்சனைகளுக்கு குழந்தையே காரணம் என கருதியதாலும் குழந்தையை கொன்றதாக அதிதி கான் வாக்குமூலம் அளித்துள்ளார். 7 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    போலீசார் அலைக்கழித்ததால் உடல் முழுவதும் மின் வயரை சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும் ஒருமகளும் உள்ளனர். முதல் மகன் ரெங்கசாமி. இவர் படித்து முடித்து விட்டு விழுப்புரத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தனர்.

    இதனால் மனம் வேதனையடைந்த குமரேசன் போலீசாரிடம் தனது சார்பில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் அவரது மனுவை வாங்காமல் அலைக்கழித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமரேசன் இன்று தனது வீட்டில் உடல் முழுவதும் மின்சார வயர்களை சுற்றிக் கொண்டு வாயில் வயரை பிடித்தவாறே மின்சாரத்தை தன் உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்பத்தின் கவுரத்தை குலைப்பதாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #HonourKilling
    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இம்ரான் என்பவருடன் பவுசியா என்ற பெண் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். அதன்பிறகு பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை தண்டிக்க திட்டமிட்டனர்.

    அதையடுத்து, பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்து இக்பால் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரானும், பவுசியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் தந்தை இக்பால், மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    குடும்ப கவுரவத்தை சீரழித்ததாக பெற்ற மகளையே தந்தை உட்பட உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #HonourKilling
    கேரளாவில் மனோஜ் என்ற பத்திரிக்கையாளர் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். #StandWithKerala #KeralaRains #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு 3 மடங்கு பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

    நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநில அரசுகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்,



    இந்நிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது மகளின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கேரள மாநிலம் மிகப்பெரிய வெள்ளப்பாதிப்புகளை சந்தித்து வருவதால் நிச்சயதார்த்ததை ரத்து செய்து அதற்கான சேமிப்பை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். மணமகன் வீட்டாரின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் மீன் விற்பனை செய்து வரும் மாணவி ஹனன் ஹமித் என்பவர் வெள்ள நிவாரணமாக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #StandWithKerala #KeralaRains #KeralaFloods
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயதே ஆன தன் மகளுக்கு விஷம் அளித்துவிட்டு, அவர் சாவதற்காக அருகிலேயே காத்திருந்த கொடூர மனம் கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று சுக்ரதால். இங்கு அமைந்துள்ள ஒரு சுடுகாட்டின் வெற்றிட பகுதியில் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அவ்வாறு நேற்று மாலை அந்த குழுவினர் அப்பகுதிக்கு வந்த போது, சுடுகாட்டின் அருகே இருந்த இருக்கையில் ஒரு சிறுமி துடித்துக் கொண்டிருக்க, அருகே ஒரு நபர் நிற்பதை கண்டனர்.

    இவர்களை பார்த்ததும், அந்த சிறுமியும் இவர்களை சைகை மூலம் அழைக்க அப்பகுதிக்கு விரைந்த இளைஞர்களிடம், தனது தந்தை தமக்கு விஷமளித்திருப்பதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் சிறுமி தனது மரண தருவாயில் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த இளைஞர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அனைவரும் தீவிரம் காட்ட, அங்கிருந்த அவரது தந்தை தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் தானு என்பதும், அவரது தந்தை பெயர் சுந்தர் சிங் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த விசாரணையிலும், தனது தந்தையே தமக்கு விஷம் அளித்ததாக தானு தெரிவித்துள்ளார். அதுவே அவருக்கு மரண வாக்குமூலமாகவும் அமைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சிறுமி தானுவின் அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் மரணத்துக்கு பிறகு, மகள் தானு மீது பலர் புகார் கூறி வந்ததாகவும், தானுவை சரி செய்ய தனது தங்கையின் வீட்டுக்கு அனுப்பினால் அங்கிருப்பவர்களும் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனால் வேறுவழியின்றி தனது மகளை கொலை செய்துவிட முடிவு செய்து, அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மகள் இறந்தவுடன், அருகில் இருந்த கங்கை நதியில் அவரது உடலை வீசிவிட திட்டமிட்டு, அவள் இறப்பதற்காக காத்திருந்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார். இதையடுத்து, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சுந்தர் சிங்குக்கு தற்போது நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

    பெற்ற பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்தும் முழு அதிகாரம் கொண்ட பெற்றோர்களே, சிறு சிறு தவறுகளுக்கு இதுபோன்ற மிகப்பெரிய தண்டனைகளை வழங்குவது சரியான தீர்வாக அமையாது என்பதை அனைவரும் உணரவே வேண்டும்.
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் மாற்று ஜாதி இளைஞரை காதலிப்பதை அறிந்த தந்தை, தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ப் பிஹ்ரா பகுதியில் உள்ள தவுலத்ப்பூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் தட்டாராம். இவரது 21 வயது மகளான பூஜா வேற்று ஜாதி இளைஞரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு தட்டாராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, பூஜா நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு பூஜா நீதிமன்றத்தில் மனு அளிக்க அதனை வாபஸ் பெருமாறும், காதலை கைவிடுமாறும் தந்தை தட்டாராம் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பூஜாவின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தட்டாராம், பூஜாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக, பூஜாவின் தாயார் புகார் அளிக்கவே கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தட்டாராமை சிறையில் அடைத்துள்ளனர்.

    ஜாதி மோகம் அழிந்துவிட்டதாக இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில், ஜாதி வெறியால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் செய்தார். #Amrutha #Jayalalithaa
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளடர் ராஜகோபாலன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரகாஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன், தீபக் சார்பில் எஸ்.எல்.சுதர்சனம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

    மனுதாரர் வக்கீல்:- என்.டி.திவாரி வழக்கில், ஒருவரை மரபணு சோதனைக்கு செல்லவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுபோன்ற சோதனைக்கு உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. மரபணு சோதனையில் பெற்றோர் என்று நிரூபணம் ஆகவில்லை என்றால், அதனால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதமுடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளது.

    தீபக் வக்கீல்:- மனுதாரர் அம்ருதாவுக்கு தற்போது 37 வயது. அவரிடம் கண்டிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் என்று ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை மட்டும் தாக்கல் செய்துள்ளார்.

    மனுதாரர் வக்கீல்:- இவர்களை பொறுத்தவரை சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என்ற இருவர் மட்டுமே வாரிசு. 3-வதாக பிறந்த சைலஜா என்பவரை இவர்கள் ஏற்கவில்லை. ஆனால் சந்தியாவுக்கு அவரது கணவர் இறந்த பின்னர் சைலஜா பிறந்ததால் அவரை பெங்களூருவில் வைத்து வளர்த்துள்ளார்.

    அரசு பிளடர்:- சைலஜா உயிருடன் இருந்தபோது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதால் அவர் மீது ஜெயலலிதா கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

    மனுதாரர் வக்கீல்:- பின்னர் அந்த வழக்கை வலியுறுத்த விரும்பவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறியதால், அந்த அவதூறு வழக்கு தள்ளுபடியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. சைலஜாவுக்கும், சாரதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதனால் தனக்கு பிறந்த குழந்தையை அவர்களது குழந்தையாக வளர்க்கும்படி ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அதேநேரம் இந்த உண்மையை சைலஜா சாகும்வரை அம்ருதாவிடம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாரதி இறக்கும் தருவாயில் உண்மையை கூறியுள்ளார்.

    அதன்பின்னர் தான் ஜெயலலிதா தன் தாய் என்று அம்ருதாவுக்கு தெரியவந்துள்ளது. மனுதாரரின் பிரச்சினை இரண்டு தலைமுறைக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒரு குழந்தை யாருக்கு பிறந்தது என்று அறிவியல் தான் உறுதியான முடிவை அறிவிக்கும். சட்டம் இதுபோல அறிவிக்க முடியாது. அதனால் மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் தான் மனுதாரர் யாருடைய மகள்? என்று தெரியவரும். அதனால் அம்ருதா, தீபா ஆகியோரது ரத்தமாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

    தீபக் வக்கீல்:- தீபக்கின் பாட்டி சந்தியா 1971-ம் ஆண்டு உயில் எழுதிவைத்துள்ளார். அதில் சைலஜாவின் பெயரே இல்லை.

    நீதிபதி எஸ்.வைத்தியநாதன்:- சைலஜா படித்துள்ளாரா? அவர் சந்தியாவின் மகள் என்று வெளியில் ஏன் சொல்லவில்லை?

    மனுதாரர் வக்கீல்:- அவர் நன்றாக படித்தவர். இந்துஸ்தான் விமான நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பல கேள்விகள் இவர்களது வாழ்க்கையில் உள்ளது.

    நீதிபதி:- ஆமாம், சைலஜா யார்? என்பதில் கேள்விக்குறி. அம்ருதா யார் மகள்? என்பதும் கேள்விக்குறி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திலும் கேள்விக்குறி. எல்லாவற்றிலும் கேள்விக்குறி தான்.

    மனுதாரர் வக்கீல்:- அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பது உண்மை. எனவே மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும். அதில் நிரூபிக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மனுதாரர் சந்திக்க தயாராக உள்ளார்.

    அட்வகேட் ஜெனரல்:- இந்த வழக்கு ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்து தொடரப்பட்டுள்ளது. இதில் கூட்டுச்சதி உள்ளது. 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூலை 6-ந்தேதி நடந்த 27-வது ‘பிலிம்பேர்‘ விருது நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அந்த வீடியோ காட்சியை பாருங்கள். (இவ்வாறு கூறி அந்த வீடியோ காட்சியை ‘லேப்-டாப்பில்‘ நீதிபதிக்கு போட்டுக்காட்டினார்) நிறைமாத கர்ப்பிணியாக ஜெயலலிதா இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது எதுவுமே உண்மை இல்லை. அனைத்து விவரங்களும் நகைச்சுவையாக உள்ளது.

    1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவை சந்தித்தாகவும், போயஸ் கார்டனில் அதிக நாட்கள் வசித்ததாகவும் மனுதாரர் கூறுகிறார். ஆனால் ஒரு புகைப்படம் கூடவா அவருடன் எடுத்திருக்கவில்லை? 242 வினாடிகள் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசியதாக ரசீதை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த போனில் ஜெயலலிதாவிடம் தான் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    நீதிபதி வைத்தியநாதன்:- இந்த வழக்கை பார்த்தாலே ஒரு சினிமா படம் போல் உள்ளது. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை நான் எழுத வேண்டும்.

    இவ்வாறு கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.  #Amrutha #Jayalalithaa  #tamilnews 
    அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. #NawazSharif #Maryam
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

    தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

    ஆனால் மரியம், அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

    தனது தந்தை நவாஸ் ஷெரீப், கணவர் கேப்டன் சப்தார் ஆகியோருடன் தான் அடியலா சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதைத்தான் விரும்புவாக அதிகாரிகளிடம் மரியம் தெரிவித்து விட்டார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    நவாஸ் ஷெரீப்பும், மரியமும் காவலில் வைக்கப் படுவதற்காக சிஹாலா போலீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓய்வு இல்லம் ரூ.20 லட்சம் செலவில் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.  #NawazSharif #Maryam #tamilnews 
    மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Sridevi #JanhviKapoor
    மும்பை:

    மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ‘சாய்ரத்’ ஆகும். இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது.

    இப்போது இந்தப் படம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி, நடிகர் இஷான் கட்டார் இணைந்து நடித்து ‘தடக்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது. சஷாங் கைத்தான் இயக்கத்தில் எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படம் வரும் 20-ந்தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை பிரபலம் ஆக்கும் வகையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான ஜானவி கபூரும், நாயகனான இஷான் கட்டாரும் கலந்துகொண்டனர்.

    அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவர்களிடம், “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

    அப்போது சற்றும் தாமதிக்காமல் ஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே ஜானவி சுதாரித்துக்கொண்டார். “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவு செய்து பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

    அதைக் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.   #Sridevi #JanhviKapoor
    ×