search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீசாந்த்"

    ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sreesanth #SC
    புதுடெல்லி:

    2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ‘கடினமான தண்டனையான ஆயுட்கால தடையை எல்லா வழக்குகளிலும் அமல்படுத்தக்கூடாது. ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை ரத்து செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி 3 மாத காலத்துக்குள் ஸ்ரீசாந்திடம் விசாரணை நடத்தி அவரது தண்டனையின் அளவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  #Sreesanth #SC
    ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட விரும்புவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறினார். #Sreesanth
    சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. எனது வாழ்க்கையில் இன்னும் மிஞ்சி இருப்பது என்ன வென்று எனக்கு தெரியாது. எது என்னுடைய வாழ்க்கை என்று நினைத்தேனோ? அந்த கிரிக்கெட்டை கடந்த 6 வருடங்களாக நான் விளையாடவில்லை. நாட்டின் உயரிய கோர்ட்டின் தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் மதித்து கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்ப என்னை அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் பள்ளி மைதானத்துக்கு பயிற்சிக்கு சென்றால் என்னை யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதனை செய்ய விரும்புகிறேன். வயது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்த விஷயமாகும்.

    ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.

    இருண்ட காலத்தில் எனது பெற்றோர் மற்றும் என்னுடைய மனைவி, அவரது பெற்றோர் என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹர்பஜன்சிங், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்’.

    இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

    ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். வருகிற 18-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.  #Sreesanth

    ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    புதுடெல்லி:

    2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
     
    குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இது சம்பந்தமாக விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


     
    இந்த வழக்கின் விசாரணை முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
     
    மேலும் ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து அளித்துள்ள மனுவிற்கு பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க  வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டியின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எடுத்தது.

    ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க கோரி அவர் பி.சி.சி.ஐ.யிடம் முறையிட்டார். ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீதான தடையை நீக்கி தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் மீதான ஆயுட் கால தடை நீடித்து வந்தது.

    கேரளா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், இங்கிலாந்து அணியில் தன்னை விளையாட அனுமதிக்க கோரியும் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸ்ரீசாந்தின் வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜராகி கூறியதாவது:-

    இங்கிலாந்தில் உள்ள கிளப் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்த்துக்கு அழைப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. ஆயுள் கால தடையை நீக்காவிட்டால் அவரால் விளையாட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது. சூதாட்ட வழக்கில் இருந்து அவரை டெல்லி ஐகோர்ட்டு விடுவித்து இருந்தது. இதனால் அவரை இங்கிலாந்து கிளப்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    கிரிக்கெட் வாரிய வக்கீல் கூறும் போது ஸ்ரீசாந்துக்கு எதிராக குற்றத்தை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருந்ததால் அவருக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுள்கால தடை விதித்தது. என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது. #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது டெல்லி போலீசார் தொடுத்திருந்த சூதாட்ட வழக்கில் ஜூலைக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.


    இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    ×