search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிப்போட்டி"

    அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் தென்கொரியா அணி இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. #India #SouthKorea #AzlanShahHockey
    இபோக்:

    6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய வீரர் சிம்ரன்ஜீத் சிங் 9-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். தென்கொரியா அணி தரப்பில் ஜங் ஜோங் ஹியூன் 47-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் தென்கொரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் (5-3) இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 5 முறை சாம்பியனான இந்திய அணி 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் பட்டம் வென்றதில்லை என்ற சோகம் தொடருகிறது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. #India #SouthKorea #AzlanShahHockey
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #BengaluruFC #FCGoa #ISLFinal
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை குறுக்கிட்டதால் சில காலம் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில் லீக் ஆட்டம் முடிவில் பெங்களூரு, எப்.சி., எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. ஆகிய 4 அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, எப்.சி.புனே சிட்டி, டெல்லி டைனமோஸ் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பெற்று அரை இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்றில் பெங்களூரு அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோவ்வியும், 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியும், 2-வது சுற்றில் கோவா அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியும் கண்டது. கோல் வித்தியாசம் அடிப்படையில் கோவா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    கோவா அணியில் பெர்ரான் கோரோமினாஸ் (ஸ்பெயின்) 16 கோல்கள் அடித்து இந்த போட்டி தொடரில் முன்னிலை வகிக்கிறார். அந்த அணியில் இடம் பிடித்துள்ள எடு பெடியா 7 கோல்கள் அடித்துள்ளார். அவர்கள் இருவரையும் தான் அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி (9 கோல்கள்), மிகு (5 கோல்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். லீக் ஆட்டம் முடிவில் சமபுள்ளிகள் பெற்ற (10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி) இந்த இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    பெங்களூரு, கோவா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 3 முறையும், கோவா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டத்திலும் பெங்களூரு அணியே வெற்றி கண்டது. எனவே அந்த ஆதிக்கத்தை பெங்களூரு அணி இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. #AFCAsianCup #Qatar #UAE
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அந்த அணியில் போலெம் கோகி (22-வது நிமிடம்), அல்மோஸ் அலி (37-வது நிமிடம்), ஹசன் அலி ஹைடோஸ் (80-வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.



    முன்னதாக கத்தார் அணி கோல் அடித்த போது, ஆத்திரமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் செருப்புகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப்போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. வருகிற 1-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் கத்தார் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. #AFCAsianCup #Qatar #UAE 
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.



    ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். #AusOpen2019 #NaomiOsaka
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது செட்டை கிவிடோவா 5-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஒசாகா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது. #AusOpen2019 #NaomiOsaka
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறினார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #SainaNehwal
    தேசிய சீனியர் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் தமிழகம், சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #NationalHockey #Championship
    சென்னை:

    9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இந்திய விளையாட்டு ஆணையத்தை (சாய்) எதிர்கொண்டது. இளம் வீரர்களை கொண்ட சாய் அணியும், அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய தமிழக அணியும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன.

    9-வது நிமிடத்தில் சாய் அணி வீரர் பாபி சிங் தாமி கோல் அடித்தார். 16-வது நிமிடத்தில் தமிழக அணி பதில் கோல் திருப்பி சமநிலையை எட்டியது. ஜோஸ்வா கடத்தி கொடுத்த பந்தை சண்முகம் கோலுக்குள் திணித்தார். 20-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி வினோதன் கோல் அடித்து தமிழக அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இந்த முன்னிலை சற்று நேரத்தில் முடிவுக்கு வந்தது. 25-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சாய் அணி வீரர் மொகித் குமார் கோல் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    40-வது நிமிடத்தில் தமிழக அணி வீரர் ராயர் அபாரமாக கோல் அடித்தார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே சாய் அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ராகுல் குமார் கோல் அடித்து சமநிலையை எட்ட வைத்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளில் தமிழக அணியினர் 3 கோல் அடித்தனர். 2 வாய்ப்பை தவறவிட்டனர். தமிழக அணியில் ஷூட்-அவுட்டில் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோல் அடித்தனர். சாய் அணியில் விஷால், லோகேஷ் போரா ஆகியோர் மட்டுமே கோல் அடித்தனர். ‘ஷூட்-அவுட்’ முடிவில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பிற்பகலில் நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் மத்திய தலைமை செயலகம்-பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டமும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனை அடுத்து பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை பின்பற்றப்பட்டது. ஷூட்-அவுட்டில் மத்திய தலைமை செயலக அணி 4-3 என்ற கோல் கணக்கில் (மொத்தத்தில் 7-6) பெங்களூரு அணியை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-மத்திய தலைமை செயலக அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சாய்-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.

    இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றன.
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #NationalVolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரையிறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NationalVolleyball
    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் கோப்பையை கைப்பற்றியது. #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெற்றது.
     
    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்கள் விரைவில் புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 - 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர்.



    ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடினார். அவர் 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    புரோ கபடி லீக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் - உ.பி.யோத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-ரிஷாங் தேவாடிகா தலைமையிலான உ.பி.யோத்தா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் தடம் பதித்த உ.பி.யோத்தா அணி வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் மும்பை, தபாங் டெல்லி ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. இந்த கடைசி தடையை தாண்டினால் உ.பி.யோத்தா அணி இறுதிப்போட்டியை எட்டி விடும். கடைசி 8 ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத அந்த அணி அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடர முயற்சிக்கும்.

    குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக் ஆட்டங்களில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடம் பிடித்தது. ஆனால் முதலாவது தகுதி சுற்றில் அந்த அணி, பெங்களூரு புல்சிடம் தோல்வி கண்டு தனது முதல் வாய்ப்பை கோட்டை விட்டது. 2-வது தகுதி சுற்றிலும் தோல்வி அடைந்தால், வெளியேற வேண்டியது தான் என்பதால் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிக்காக பலமாக மல்லுக்கட்டும். கடைசி ஆட்டத்தில், தற்காப்பு யுக்தியில் சரிவு கண்டதே குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த தவறை சரி செய்து புத்துணர்ச்சியுடன் களம் காணும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் குஜராத் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி இருந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha 
    உ.பி.யில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #SyedModiInternational #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவும் மோதினர்.

    சீன வீரர் அபாரமாக ஆடியதால், 16-21 என்ற கணக்கில் சமீர் வர்மா முதல் செட்டை இழந்தார். ஆனாலும், மனம் தளராத சமீர் வர்மா இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சமீர் வர்மா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் 21 -14 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார். 

    இறுதியில், 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்திய இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

    இது சமீர் பெற்ற மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே சுவிஸ் ஓப்பன் மற்றும் ஐதராபாத் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SyedModiInternational #SameerVerma
    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் சமீர் வர்மா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். #SyedModiInternational #SainaNehwal #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், இந்தோனேசிய வீராங்கனை ருசெல்லி ஹர்தவானும் மோதினர். இதில் 12 - 21, 21 - 7, 21 - 6 என்ற செட்களில் சாய்னா நேவால் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், இந்தோனேசிய வீரர் ட்வி வார்டோயோவும் மோதினர். இதில் 21 -13, 17 - 21, 21 - 8 என்ற செட்களில் சமீர் வர்மா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில், சாய்னா நேவால் சீன வீராங்கனை ஹான் யூஹியுடனும், சமீர் வர்மா சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவுடன் மோதுகின்றனர். #SyedModiInternational #SainaNehwal #SameerVerma
    ×