search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிப்போட்டி"

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இதன் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    5 முறை சாம்பியனான இலங்கை, ஹாங்காங் தொடக்க சுற்றிலேயே வெளியேறின. ‘சூப்பர்4’ சுற்று 21-ந் தேதி தொடங்கியது.

    இந்திய அணி வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தானுடன் ‘டை’ செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 2 தோல்வியை தழுவியதால் வாயப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது.


    இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காள தேசம் 37 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பையை 7-வது முறையாக வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று இருந்தது.

    இந்த போட்டித்தொடரில் ஏற்கனவே வங்காள தேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் வங்காள தேசம் அணியை சாதாரணமாக எடை போட இயலாது. பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடவேண்டும்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. நாளைய இறுதிப் போட்டிக்கு அவர்கள் திரும்புவார்கள்.


    தொடக்க வீரர்களான தவான் (327 ரன்), ரோகித் சர்மா (269 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் தவான் இரண்டு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்துள்ளனர். இருவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும் இதே போல் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள்.

    பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ் (இருவரும் தலா 7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), யசுவேந்திர சாஹல் (5 விக்கெட்), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2012-ல் பாகிஸ்தானிடமும், 2016-ல் இந்தியாவிடமும் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் முஷ்பிகுர் ரகிம் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்.

    பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான் 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க கூடியவர். முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேச அணிக்கு பாதிப்பே.

    இரு அணிகளும் ஆசிய கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றனர்.
    சென்னை:

    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-20, 19-25, 25-20, 25-15 என்ற கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 25-7, 25-14, 25-12 என்ற கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.

    இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. #tamilnews
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018 #HockeyIndia
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று பெண்களுக்கன ஹாக்கி அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கத்தில் இரு தரப்பு வீராங்கனைகளும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தினர். இந்தியாவிற்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடிக்கவிடாது சீன வீராங்கனைகள் தவிர்த்தனர். 

    இந்த பரபரப்பான ஆட்டத்திற்கு மத்தியில் 52-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர், கோல் அடித்து நம்பிக்கை கொடுத்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 

    அதன்பின்னர் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்து சமன் செய்ய சீன வீராங்கனைகள் முயன்றனர். ஆனால், கடைசி நேரத்தில் சிறப்பான பாதுகாப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், சீனாவின் கோல் முயற்சியை தடுத்தனர். 

    இறுதியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இதனால் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணியுடன் மோத உள்ளது. 

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக 1982ல் டெல்லியில் நடந்த போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #HockeyIndia
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #RogersCup #Tsitsipas #RafaelNadal #SimonaHalep
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.



    சிட்சிபாசுக்கு நேற்று 20-வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும், ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார்.

    முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.



    பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் (உக்ரைன்) புரட்டியெடுத்தனர்.

    மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப், ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ், ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 
    சென்னையில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி நடைபெற்றது.

    கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

    டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டி.என்.பி.எல். கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    திண்டுக்கல் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜெகதீசன் (345 ரன்), விவேக் (249 ரன்), ஹரி நிஷாந்த் (249) ஆகியோரும் பந்துவீச்சில் அபினவ், முகமது (தலா 8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் அணி இந்தப் போட்டித் தொடரில் ஒரு ஒரே ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    மதுரை பாந்தர்ஸ் அணி ஏற்கனவே இரண்டு முறை தோற்றதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அருண் கார்த்திக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 397 ரன் குவித்து இந்தப் போட்டித் தொடரில் முதல் இடத்தில் உள்ளார். 5 அரை சதம் அடித்துள்ளார். தலைவன் சற்குணம் (191 ரன்), சுஜித் சந்திரன் (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

    பந்து வீச்சில் அபிஷேக் தன்வர் (11 விக்கெட்), கவுசிக் (9 விக்கெட்) ஆகியோர் முத்திரை பதித்து உள்ளனர்.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018 #NammaOoruNammaGethu
    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் மார்வன், ரோவன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். #WorldJuniorSquash #Rowan #Marwan
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக் (எகிப்து) 11-9, 6-11, 11-8, 2-11, 11-8 என்ற செட் கணக்கில் போராடி சக நாட்டவர் ஓமர் எல் டோர்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-3, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் மோஸ்தபா எல் செர்டியை விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மார்வன் டாரெக்- மோஸ்தபா அசல் மோத உள்ளனர்.



    பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோவன் எலராபி (எகிப்து) 11-5, 13-11, 11-6 என்ற நேர் செட் கணக்கில் 40 நிமிடங்களில் சக நாட்டவர் ஜனா ஷிகாவை வெளியேற்றி இறுதிசுற்றை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி 11-6, 8-11, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லுசி டர்மலை தோற்கடித்தார். 
    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இந்த அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது. #FifaWorldCup2018 #France
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதல் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு நடந்தது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் பெல்ஜியம் கேப்டன் ஈடன் ஹசாட் கோல் வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று வெளியே சென்றது.

    அடுத்த 4-வது நிமிடத்தில் அவர் அடித்த வேகமான ஷாட்டை பிரான்ஸ் பின்கள வீரர் ரபெல் வரேல் தடுத்து விட்டார். 22-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அருமையாக தடுத்து பெல்ஜியத்துக்கு ஏமாற்றம் கொடுத்தார். டோபி ஆல்டர் அடித்த ஷாட்டை அவர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.

    இதே போல பிரான்ஸ் அணியும் சில வாய்ப்புகளை தவற விட்டது. 39-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பவார்ட் அடித்த பந்தை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டஸ் தடுத்து விட்டார்.

    முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக கோல் அடிக்க போராடின. ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதனால் முதல் பாதியில் 0-0 என்ற நிலை இருந்தது.

    2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் அடித்தது. 51-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிரீன்ஸ்மேன் அடித்த பந்தை பின்கள வீரரான சாமுவேல் உமிட்டி தலையால் முட்டி மிகவும் அருமையாக கோலாக்கினார். இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.



    கோல் வாங்கியதால் சமன் செய்ய பெல்ஜியம் போராடியது. ஆனால் அந்த அணியின் முயற்சி எடுபடாமல் போனது. 61-வது நிமிடத்தில் டி புருயன் வாய்ப்பை தவற விட்டார். 65-வது நிமிடத்தில் மெர்டன்ஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் பெலானி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது.

    81-வது நிமிடத்தில் விஸ்டல் அடித்த அதிரடியான ஷாட்டை பிரான்ஸ் கோல்கீப்பர் தடுத்தார். மேலும் முன்னணி வீரரான லுகாகுவும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிட்டார். பெல்ஜியத்தின் கடும் போராட்டத்துக்கு பலன் இல்லாமல் போனது.



    அதே நேரத்தில் பிரான்ஸ் 2-வது கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை நழுவவிட்டது. ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டோலிகோ ஆகியோர் கோலாக்க தவறினர். ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    பிரான்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றது. இதற்கு முன் 1998, 2006-ல் அந்த அணி தகுதி பெற்று இருந்தது.

    இதில் 1998-ல் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. 2006-ல் இத்தாலியிடம் பெனால்டி ஷூட்டில் தோற்று கோப்பையை இழந்தது.

    பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது.

    பெல்ஜியம் சிறப்பாக ஆடியும் கோல் அடிக்க முடியாமல் போனது அதிர்ஷ்டம் இல்லாததே காரணம். இந்த தொடரில் அபாரமாக ஆடிய அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றமே.

    பெல்ஜியம்அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இன்றைய 2-வது அரை இறுதியில் தோற்கும் அணியுடன் விளையாடும். 3-வது இடத்துக்கான ஆட்டம் 14-ந் தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. #FifaWorldCup2018 #France
    ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி குரோசியா வீரர் போர்னா கோரிச் சாம்பியன் பட்டம் வென்றார். #HalleOpen2018 #BornaCoric #RogerFederer

    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வந்தது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். 

    இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (8-6) என கோரிச் போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பெடரர், 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

    மூன்றாவது செட்டில் கோரிச் அதிரடியாக விளையாடினர். இந்த செட்டை அதிரடியாக விளையாடிய கோரிச், 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்ற கோரிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #HalleOpen2018 #BornaCoric #RogerFederer
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #HalleOpen2018 #RogerFederer

    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - அமெரிக்காவின் டென்னிஸ் குட்லாவை எதிர்கொண்டார். 

    இதன் முதல் செட்டை பெடரர் 7-6 (7-1) என போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த செட்டையும் பெடரர் 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் படிஸ்டா ஆகுட், குரோசியாவின் போர்னா கோரிக் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை எதிர்கொள்வார். #HalleOpen2018 #RogerFederer
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது.

    இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர்.

    ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ்.

    அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார்.
    இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.

    இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப். இந்த போட்டி சுமார் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

    முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலப்புக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் மோதுகிறார்கள். #FrenchOpen2018 #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஹெலப் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதி ஆட்டத்தில் (2014, 2017) தோற்று இருக்கிறார். இதேபோல இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். இதனால் இந்த முறை முதல் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.



    ஸ்டீபன்ஸ் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் 5-வது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    களிமண் தரையில் விளையாடுவதில் ‘கிங்’காக திகழும் நடால் இறுதிப்போட்டியில் 7-ம் நிலை வீரரான டொமினிக் தியம்பை (ஆஸ்திரியா) சந்திக்கிறார். அவர் அரை இறுதியில் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற கணக்கில் இத்தாலி வீரர் மார்கோவை வீழ்த்தினார். #FrenchOpen2018 #SimonaHalep
    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 



    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார், வாட்சனுக்கு மெய்டனாக வீசினார். 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மீண்டும் 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

    4-வது ஓவரை சந்தீப் சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸ் கேட்சாகி வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். 5-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 6-வது ஓவர் சந்தீப் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.



    7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
    ×