search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமீதா"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை அதிகாரி தங்களை அவமரியாதையாக நடத்தியதாக நமீதாவின் கணவர் வீரா புகார் கூறியுள்ளார். #Namitha #Veer
    பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் புலிக்குத்தி தெருவில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் நடிகை நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கும் நமீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கு நமீதாவின் கணவர் வீரா விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் வெளியாகின்றன. அதற்கு நான் வருந்துகிறேன். நடந்த சம்பவம் குறித்து எனது சார்பிலும், எனது மனைவி தரப்பிலும் விளக்கம் அளிக்கிறேன்.

    படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாங்கள் 8 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். எனது மனைவி நமீதா காரின் பின் இருக்கையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு 2.30 மணி இருக்கும்.

    இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு பல்வேறு இடங்களில் 3 தடவை காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தோம்.



    சேலம் - ஆற்காடு சந்திப்பை அடைந்த போது பறக்கும் படை அதிகாரி காரை தடுத்து நிறுத்தி எங்கள் அனைவரிடமும் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்தினார்.

    எனது மனைவி அசதியில் தூங்கி கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் அவரை எழுப்பிவிடுகிறேன் என்றேன். அதை பொருட்படுத்தாமல் நமீதா காரின் பின்புறம் கதவை திறந்தார். அப்போது அவர் காரில் இருந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் சில சட்ட விரோத பொருட்களை கடத்துவதாக கருதி காரில் சோதனை நடத்தினார். எங்களது அனைவரின் பைகளையும் சோதனை செய்தார்.

    நமீதாவின் பையை சோதனை செய்ய தொடங்கினார். ஆனால் அதை திறக்க நமீதா மறுத்துவிட்டார். எனது பையை பெண் போலீசை வைத்து சோதனை செய்யுங்கள் என்றார்.

    ஏனெனில் அதில் குறிப்பிட்ட சில முக்கியமான பொருட்கள் இருந்தன. பெண் போலீஸ் மூலம் சோதனை செய்தால் தனக்கு வசதியாக இருக்கும் என கருதினார். அதன் பின்னர் பெண் போலீஸ் வந்து பையை சோதனை செய்தார். அவ்வளவுதான் நடந்தது.

    அசவுகரியமான நேரத்தில் பெண் போலீசை அழைப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. ஆனால் இந்த விவகாரம் முழுவதும் வேறு விதமாக ஊதி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.

    அவர் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் அதுகுறித்து யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர் ஒரு பிரபலமானவர் என்பதால் அனைவரும் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். இதை தவறாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் இருந்து நமது நாட்டு பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Namitha #Veer

    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
    தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள். 

    அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.



    கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

    அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange

    நமீதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அகம்பாவம்’ படத்தின் இயக்குனர் வெளியேற்றப்பட்டுள்ளார். #Namitha #Agambavam
    ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள்.

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். 

    இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குனர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன். குடிக்காமல் படப்பிடிப்பை முடித்து தரும்படி கேட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் ஒப்பந்தத்தை மீறி தினமும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால், இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டேன். நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார்.



    தயாரிப்பாளர் வாராகி இதற்கு முன், ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அகம்பாவம்’ படத்தில் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தியன் பாஸ்கர் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்.
    திருமணத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நமீதா, இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார். #Namitha #Agambavam
    திருமணத்துக்கு பின் நடிக்க வந்து இருக்கும் நமீதா இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, முன்பு போன்று கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

    தற்போது என் கவனம் முழுக்க என் சினிமா கேரியர் மீது தான் உள்ளது. மீ டூ என்ற பெயரில் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றார்கள். தங்களுக்கு நடந்த வி‌ஷயம் பற்றி வெளியே சொல்ல துணிச்சல் வேண்டும்.



    இதில் உண்மை எது, பொய் எது என்று பார்க்காமல் புகார் தெரிவிக்கும் பெண்களை கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். முதலில் பெண்கள் கூறும் மீ டூ புகாரை கேளுங்கள். அதன் பிறகு அதில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார். #Namitha #Agambavam

    சினிமாவில் இருந்து விலகி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `அகம்பாவம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. #Agampavam #Namitha
    ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். 
    திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

    ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.



    ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    ஸ்ரீமகேஷ் இதற்கு முன்பாக சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம். 

    பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து  அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. 



    இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. #Agampavam #Namitha

    கூத்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நமீதா, மச்சான் வார்த்தை உருவான விதம் குறித்து பேசியிருக்கிறார். #Namitha
    சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

    மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

    இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது ’நான் இந்தமாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப்படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்’ என்றார்.

    படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்தினார்.
    பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் டி.ராஜேந்தர், இன்றைய காதலை பற்றி சொல்லும் விதமாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். #TRajendar
    ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை;, வீராசாமி ஆகிய பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படைப்பு டி.ராஜேந்தரின் ‘இன்றையக் காதல் டா..!

    இதில் நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் பிரபல நட்சத்திரங்கள், நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இளம் நகைச்சுவை நடிகர்கள் ஆக பல புதிய முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். மற்றும் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், உள்ளிட்ட பல நகைச்சுவை பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.



    முழுக்க, முழுக்க இளமை சொல்லும் காதல் கதையாகவும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், காதல்... காதல்... காதலை தவிர வேற ஒன்றும் இல்லை என்றும் உருவாக்க இருக்கிறார் டி.ராஜேந்தர். 
    நடிகை நமீதா சமீபத்தில் வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார். #Namitha
    திருமணத்துக்கு பிறகு நமீதா நடிக்க வருவதாக செய்திகள் வருகின்றன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    நான் எதிர்பார்த்ததை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான துணையை தேர்ந்தெடுக்க தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். வீராவுடனான வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. வீரா என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார். தொடர்ந்து நடிக்க சொல்லி உற்சாகப்படுத்துகிறார். என் வாழ்க்கையையே முழுமையாக்கி இருக்கிறது இந்த திருமணம்.

    வீராவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தது எப்படி?

    அவர் என்னிடம் காதலை தெரிவித்தபோது அவரை என் மனதுக்கு மட்டுமல்லாது ஆன்மாவுக்கே நெருக்கமானவராக உணர்ந்தேன். அதுதான் சம்மதிக்க காரணம். நன்றாக தெரிந்தவர். நல்ல நண்பர். எனவே ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து வைத்திருந்தோம். மிகவும் நேர்மையான ஒரு மனிதர். மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லக்கூடியவர். எனவே சம்மதித்துவிட்டேன்.



    தேனிலவுக்கு எங்கே சென்றீர்கள்?

    இதுவரை போகவில்லை. திருமணமான உடன் இருவருமே பிசியாகி விட்டோம். விரைவில் செல்ல வேண்டும். திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

    சமையல் கற்றுக்கொண்டீர்களா?

    என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். புல்கா, சப்பாத்தி, சப்ஜி, சிக்கன், முட்டை என்று வகைவகையாக சமைத்து கொடுத்து அசத்துகிறேன். அம்மாவிடம் போனில் பேசி கேட்டுக்கொண்டே சமைக்க தொடங்குவேன்.ஒன்றிரண்டு முறைக்கு பின் தானாகவே அதை சமைக்கிறேன்.

    வீரா எப்போது ஹீரோ ஆகிறார்?

    விரைவிலேயே அதற்கான அறிவிப்பு வருவேன். நிறைய கதைகள் கேட்டு வருகிறோம். சரியான நேரம் அமைவதற்காக காத்திருக்கிறோம்.



    நீங்கள் நடிக்க வருவது பற்றி செய்திகள் வருகிறதே?

    அதை பற்றி இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஆனால் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. உறுதியானதும் அறிவிப்பு வரும். ஆனால் விரைவில் ஒரு பவர்புல் வேடத்தில் என்னை திரையில் பார்க்கலாம்.

    அரசியல்?

    நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இது சரியான நேரம் இல்லை.

    உங்களது பொழுதுபோக்கு கவிதைகள் ஆயிற்றே?

    எழுதுகிறேன். திருமணத்துக்கு பிறகு அதிகமாகி இருக்கிறது. விரைவில் புத்தகமாக வெளியிடப்போகிறேன். #Namitha 

    ×