search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாதகம்"

    ஒருவரது ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத்தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும்.
    செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும். இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

    சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக்ர கதியில் இருப்பது ஆகிய நிலைகளில் இந்த யோகம் நல்ல முறையில் அமைவதில்லை என்பதும் ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

    27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். இன்று 27 நட்சத்திரங்களுக்கான தமிழ் அர்த்தங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஸ்வினி - குதிரைத்தலை

    பரணி - தாங்கிப்பிடிப்பது

    கிருத்திகை - வெட்டுவது

    ரோகிணி - சிவப்பானது

    மிருகசீரிஷம் - மான் தலை

    திருவாதிரை - ஈரமானது

    புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி

    பூசம் - வளம் பெருக்குவது

    ஆயில்யம் - தழுவிக்கொள்வது

    மகம் - மகத்தானது

    பூரம் - பாராட்டத்தகுந்தது

    உத்திரம் - சிறப்பானது

    ஹஸ்தம் - கை

    சித்திரை - ஒளி வீசுவது

    சுவாதி - சுதந்திரமானது

    விசாகம் - பிளவுபட்டது

    அனுசம் - வெற்றி

    கேட்டை - மூத்தது

    மூலம் - வேர்

    பூராடம் - முந்தைய வெற்றி

    உத்திராடம் - பிந்தைய வெற்றி

    திருவோணம் - படிப்பறிவு உடையது

    அவிட்டம் - பணக்காரன்

    சதயம் - நூறு மருத்துவர்கள்

    பூரட்டாதி - முன் மங்கள பாதம்

    உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்

    ரேவதி - செல்வம் மிகுந்தது. 
    இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.
    நம்மில் பலருக்கும் ஒரேஒரு சந்தேகம் உள்ளது. அது... “என் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் எது” என்பதுதான். இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.

    செவ்வாயின் நட்சத்திரங்களான :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது. எளிமையாக புரியும்படி:-

    பெண்————————-ஆண்
    மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்
    சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்
    அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்
    இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.

    சூரியனின் நட்சத்திரங்களான :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
    குருவின் நட்சத்திரங்களான:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
    இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.

    சந்திரனின் நட்சத்திரங்களான:- ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,
    ராகுவின் நட்சத்திரங்களான:- திருவாதிரை, சுவாதி, சதயம்.
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.

    சுக்ரனின் நட்சத்திரங்களான:- பரணி, பூரம், பூராடம்,
    சனியின் நட்சத்திரங்களான:- பூசம், அனுசம், உத்திரட்டாதி,
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.

    புதனின் நட்சத்திரங்களான:- ஆயில்யம், கேட்டை, ரேவதி.
    கேதுவின் நட்சத்திரங்களான:- அசுவினி, மகம்,மூலம்.
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.

    இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.

    சரி, நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.
    செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்(food poison), கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.

    செவ்வாய் - தலை ரஜ்ஜு
    சந்திரன்,ராகு- கழுத்து ரஜ்ஜு

    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.

    அஸ்வினி:- ஆண் குதிரை
    பரணி:- ஆண் யானை
    கார்த்திகை:- பெண் ஆடு
    ரோகிணி:- ஆண் நாகம்

    மிருகசீரிடம்:- பெண் சாரை
    திருவாதிரை:- ஆண் நாய்
    புனர்பூசம்:- பெண் பூனை
    பூசம்:- ஆண் ஆடு

    ஆயில்யம்:- ஆண் பூனை
    மகம்:- ஆண் எலி
    பூரம்:- பெண் எலி
    உத்திரம்:- பெண் எருது

    அஸ்தம்:- பெண் எருமை
    சித்திரை:- பெண் புலி
    சுவாதி:- ஆண் எருமை
    விசாகம்:- ஆண் புலி

    கேட்டை :- ஆண் மான்
    மூலம்:- பெண் நாய்
    பூராடம்:- ஆண் குரங்கு
    உத்ராடம்:- கீரி,மலட்டு பசு

    திருவோணம்:- பெண் குரங்கு
    அவிட்டம்:-பெண் சிங்கம்
    சதயம்:- பெண் குதிரை
    பூரட்டாதி:- ஆண் சிங்கம்

    உத்ரட்டாதி:- பெண் பசு
    ரேவதி:- பெண் யானை

    இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள். இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.

    சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்

    அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம். சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்? சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.

    தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.
    ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்

    பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
    இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
    இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்

    எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
     
    உங்களது ஜாதகத்தில் சந்திரம் எந்த கிரகத்துடன் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சந்திரன் சூரியனுடன் இணைந்தால், அரச பயம், பண முடக்கம் போன்றவை தோன்றும்.

    சந்திரன் செவ்வாயுடன் இணைந்தால், சிறு விபத்து, ஆயுத பயம் ஏற்படும்.

    சந்திரன் புதனுடன் இணைந்தால், குழந்தைகளுக்கு நோய், கல்வித்தடை உருவாகும்.

    சந்திரன் குருவுடன் இணைந்தால், ஸ்தான நாசம் உண்டாகும்.

    சந்திரனும் சுக்ரனும் இணைந்தால், செலவு அதிகரிக்கும், வரவு குறையும்.

    சந்திரன் சனி, ராகுவுடன் இணைந்தால், கலகமும், குழப்பமும் தோன்றும்.

    சந்திரன் கேதுவுடன் இணைந்தால், துயரமான சம்பவம் இடம் பெறும்.

    இந்த பலன்கள் மற்ற ராசி, லக்னம், கிரகங்கள் உட்கார்ந்த வீடு, தசா புத்திகளை அனுசரித்து மாறுபடலாம்.
    எந்த கிழமையைல் எந்த ஹோரையில் எந்த வேலையை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    எந்த கிழமையைல் எந்த ஹோரையில் எந்த வேலையை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


    சூரிய ஹோரை  : அரசு அதிகாரிகளை சந்திக்க, பதவி ஏற்க, மருந்து உண்ண, உயில் எழுத, வேலைக்கு முயற்சி செய்ய ஏற்றது.

    சந்திர ஹோரை  : ஆடை, ஆபரணங்கள் அமைய, பிரயாணம் செய்ய, பாஸ்போர்ட் எடுக்க, மாடு வாங்க, வியாபாரம் செய்ய, கல்வி கற்க உகந்தது.

    செவ்வாய் ஹோரை  : நிலம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, அடுப்பு அமைக்க, சூளைக்கு தீ மூட்ட, போர் கருவிகள் செய்தல், போர் தொடங்குதல், மருந்து உண்ண உகந்தது.

    புதன் ஹோரை  : புதிய கணக்குகள் எழுத, கடித போக்குவரத்து, தேர்வு எழுத, ஜோதிடம், அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட, பெண் பார்க்க, தரகு வேலை மேற்கொள்ள ஏற்றது.

    குரு ஹோரை  : சேமிப்பு கணக்கு தொடங்க, முதலீடுகள் செய்ய, பெரிய மனிதர்களை சந்தித்து பேச, குருவை சந்தித்து ஆசி பெற, சுபகாரியங்கள் செய்ய, பயிர் செய்ய ஏற்றது.

    சுக்கிர ஹோரை  : ஆடை, ஆபரணங்கள் வாங்க, வாகனங்கள் வாங்க, கால்நடைகள் வாங்க, திருமணம் குறித்து பேச, எதிர்பாலினத்தாரை சந்தித்து பேச, விருந்து உண்ண, கலைகள் பயில ஏற்றது.

    னி ஹோரை  : இரும்பு பொருட்கள் வாங்க, மின் சாதனங்கள் தொடர்பான பணிகளுக்கு, ஏர் உழ, எருவிட உகந்தது.
    ஒவ்வொருவரும் ஜாதகத்தில் அவருக்கு என்ன திசை நடக்கிறது என்பதை அறிந்து அதற்கு உகந்த தெய்வங்களை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
    சூரிய திசை நடப்பவர்கள் - வீர ஆஞ்சநேயரை வழிபடுக
    சந்திர திசை நடப்பவர்கள் - பார்வதி-பரமேஸ்வரனை வழிபடுக
    செவ்வாய் திசை நடப்பவர்கள் - முருகன், ஐயப்பனை வழிபடுக.
    புதன் திசை நடப்பவர்கள் - திருமாலை வழிபடுக. திருவெண்காடு அகோர கோர பத்திரகாளியை வழிபடுக.
    குருதிசை நடப்பவர்கள் - குருபகவானை வழிபடுக.
    சுக்கிர திசை நடப்பவர்கள் - ஸ்படிக லிங்கம் மற்றும் அம்பாளை வழிபடுக.
    ராகு திசை நடப்பவர்கள் - சிவனை வழிபடுக
    கேது திசை நடப்பவர்கள் - விநாயகரை வழிபடுக
    சனி திசை நடப்பவர்கள் - திருநள்ளாறு சனிபகவானை வழிபடுக.

    ×