search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்கப்பூர்"

    சிங்கப்பூரில் வருகிற 12-ந்தேதி அமெரிக்கா - வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் பாதுகாப்பு பணியை தீவிரமாக கண்காணிக்கும் கூர்க்கா வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளளனர்.
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நாடு முழுவதும் சென்று காவலாளி பணிகளையே செய்வது வழக்கம்.

    மேலும் இந்திய ராணுவத்திலும் கூர்க்கா படை என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது. அவர்கள் காவல் பணிகளில் மிகவும் திறமையாக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை செய்ய வைக்கின்றனர்.

    இதேபோல சிங்கப்பூரிலும் கூர்க்கா வீரர்களுக்கு முக்கியமான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் இந்தியர்கள் குடியேறியபோது அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூர்க்கா வீரர்களும் அழைத்து செல்லப்பட்டார்கள்.

    அவ்வாறு சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் தனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புக்கு மற்றவர்களை அனுமதிப்பது இல்லை.

    கூர்க்கா வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிங்கப்பூர் போலீசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தற்போது 1800 கூர்க்கா வீரர்கள் சிங்கப்பூர் போலீசில் பணியாற்றி வருகிறார்கள்.


    வருகிற 12-ந்தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பு, வடகொரி அதிபர் கிம்ஜாங் அன் ஆகியோரிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இரு நாடுகளும் நீண்டகாலமாக கடுமையான எதிரி நாடுகளாக இருந்து வந்த நிலையில் இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சிங்கப்பூர் அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

    டொனால்டு டிரம்ப்-கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் உள்ள சாங்கிரி லா ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த ஓட்டலில் பாதுகாப்பு பணியை கூர்க்கா வீரர்களிடம் ஒப்படைக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

    கூர்க்கா வீரர்கள் மிகவும் விழிப்புடன் இருந்து கண்காணிப்பார்கள் என்பதால் அவர்களை இந்த பணிகளில் அமர்த்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் 12-ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரியவந்துள்ளது. #KimJongUn #DonaldTrump
    சிங்கப்பூர்:

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சிங்கப்பூர் நாட்டின் எந்த பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது? என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இதற்கிடையில், சிங்கப்பூர் அரசு சில பகுதிகளை மிகுந்த பாதுகாப்புக்குரிய - முக்கிய சந்திப்புக்கான பகுதிகளாக நேற்று அடையாளப்படுத்தி இருந்தது.

    சிங்கப்பூரில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கான பொது அறிவிப்பையும் சிங்கப்பூர் அரசின் இணையதளம் வெளியிட்டிருந்தது.


    இந்நிலையில், சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தற்போது தெரியவந்துள்ளது.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூருக்கு வருகின்றனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க மெரினா பே பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஷாங்ரி-லா ஓட்டல் மற்றும் சென்ட்டோசா தீவுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளை வரும் 10 முதல் 14-ம் தேதிவரை உச்சகட்ட பாதுகாப்புக்குரிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.

    இந்த பகுதிகளில் வழியாக செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இப்பகுதிகளில் ஆயுதமேந்திய அரசு வாகனங்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வெடிப்பொருட்கள், பெயின்ட், கொடிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இப்பகுதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #Singaporesummit #KimJongUn #DonaldTrump #Sentosa island
    அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள இந்து, புத்த கோவில்கள் மற்றும் மசூதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். #Narendra Modi #Singapore
    சிங்கப்பூர் :

    அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் உள்ளார். அங்கு சீனாடவுன் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இந்த கோவில் கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்களால் 1827-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சூலியா எனப்படும் மசூதிக்கு சென்று பார்வையிட்ட அவர், பச்சை நிற ஆடை ஒன்றை மசூதிக்கு பரிசாக வழங்கினார்.


    இறுதியாக, புத்த மத கோவிலுக்கு சென்ற மோடி அங்கு அழகிய வேலைப்பாடுகாளால் உருவாக்கப்பட்டிருந்த கோவிலின் உட்கட்டமைப்பை பார்த்து ரசித்தார். இந்திய தூதரகம் மற்றும் இந்திய சிங்கப்பூர் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால சங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


    முன்னதாக, சிங்கப்பூரில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடமான காலிஃபோர்ட் பியர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவு சின்னத்தை மோடி திறந்து வைத்து சிறப்பித்தார். #Narendra Modi #Singapore
    அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசினார். #modiinsingapore
    சிங்கப்பூர்:

    அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் உள்ளார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங் உடன் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது. #modiinsingapore
    சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #NarendraModi #Singapore #MOU
    சிங்கப்பூர்:

    இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் அவர் கள் மறுஆய்வு செய்தனர்.

    இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடற்படை தளவாட ஒத்துழைப்பு உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில், ‘வருகிற நாட்களில் சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பே பிரதானமாக இருக்கும்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார்.



    இதைப்போல இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாகி இருப்பதாக பாராட்டியுள்ள லூங், இரு நாட்டு கூட்டு கடற்பயிற்சியின் 25-வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த சந்திப்பின் போது 6-வது நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிற்பம் ஒன்றை சிங்கப்பூர் பிரதமருக்கு மோடி பரிசளித்தார். இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தமதம் பரவியதை நினைவுகூரும் வகையில் இந்த பரிசை அவர் வழங்கினார்.



    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமி கோவுக்கு (வயது 80) இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றி இருக்கும் இவர், அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா ஆசியான் கூட்டமைப்பின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு இந்த விருதை அறிவித்து இருந்தது.   #NarendraModi #Singapore #MOU

    சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப், மற்றும் பிரதமர் லீ லூங் ஆகியோரை சந்தித்து பேசினார். #ModiInSingapore
    சிங்கப்பூர்:

    அரசு முறை பயணமாக இந்தோனேசியா நாட்டுக்கு முதலாவதாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மலேசியா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.



    இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப் மற்றும் பிரதமர் லீ லூங் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. #ModiInSingapore
    இந்தோனிசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #modimeetsMahathir
    கோலாலம்பூர்:

    இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். #modimeetsMahathir
    5 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இந்தோனேசியாவுக்கு சென்றடைந்தார். #PMModithreenationtour #ModiinIndonesia #PMModi

    புதுடெல்லி:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார். 

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியாவுக்கு சென்றடைந்தார்.

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    நாளை இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

    ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.

    மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார். #PMModithreenationtour #ModiinIndonesia #PMModi
    இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார். #PMModithreenationtour #PMModiIndonesia
    புதுடெல்லி:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    30-ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

    ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.



    மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார். #PMModithreenationtour #PMModiIndonesia 
    கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோ மீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளார். #Singaporehighspeedraillink
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டின் அருகாமையில் இருக்கும் செல்வ செழிப்பு மிகுந்த நாடான சிங்கப்பூர், குடிநீர் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளுக்கு மலேசியாவை நாடி வாழ வேண்டிய நிலையில் உள்ளது.

    முன்னர், மலேசியா பிரதமராக மஹாதிர் முஹம்மது பதவிவகித்தபோது, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளில் சற்று பூசல் காணப்பட்டது. ஆனால், அவருக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான அரசு சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமான உறவுகளை பேணி வந்தது.

    சமீபத்தில் மலேசியா பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மஹாதிர் முஹம்மது தற்போது மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவிலான கடன் சுமையில் மலேசிய அரசு சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.

    முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்யப் போவதாகவும் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளார்.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக சிங்கப்பூர் சென்றடையும் பயணநேரம் 5 மணி நேரமாக உள்ளது. விமானம் மூலம் ஒருமணி நேரத்தில் சென்றடையலாம் என்பதால் சிங்கப்பூர் - கோலாலம்பூர் விமானச் சேவைகள் வெகு பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு நஜீப் ரசாக் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த புல்லட் ரெயில் மூலம் சிங்கப்பூர் - கோலாலம்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வரும் 2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் 1400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இது இறுதி முடிவு என்றும் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Singaporehighspeedraillink
    ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump #KimJongUn #June12
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து டிரம்ப் நேற்று கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை உறுதி செய்தார். இதுபற்றி நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், “ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. சந்திப்புக்கான அனைத்தும் நன்றாகவே நடக்கிறது. இந்த சந்திப்பில் என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.    #DonaldTrump #KimJongUn #June12
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தென்கொரியா அதிபர் மூன் ஜே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    சியோல்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம்12-ந்தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “உங்களை சிங்கப்பூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உங்களது சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோத போக்கும் வெளிப்பட்டு இருப்பதால் தற்போதைய சந்திப்பு பொருத்தமானதாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

    அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரியா முற்றிலுமாக தகர்த்த நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனினும், கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. “உங்களிடம் எப்போதும், எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயாராக இருக்கிறது” என்று கூறி கிம் ஜாங் அன் ஒருபடி கீழே இறங்கி வந்தார்.

    அவருடைய வேண்டுகோளைத் தொடர்ந்து தென்கொரியா டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பை நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார்.

    இதையடுத்து, அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில் .அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    டிரம்ப் தனது டுவிட்டர் பதிவை வெளியிடும் முன்பாக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் மீண்டும் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நேற்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.




















    கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன

    எனவே, டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந்தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #trumpkimsummit
    ×