என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 117138
நீங்கள் தேடியது "slug 117138"
பிளஸ் டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்ததால் மன வேதனை அடைந்த மாணவி முத்துலட்சுமி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம். பனை ஏறும் தொழிலாளி. இவரது மகள் முத்துலட்சுமி (வயது 16). இவர் குளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. அதில் கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய இரு பாடங்களில் மாணவி முத்துலட்சுமி தோல்வி அடைந்தார். இதில் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.
உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தீக்குளித்தது குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம். பனை ஏறும் தொழிலாளி. இவரது மகள் முத்துலட்சுமி (வயது 16). இவர் குளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. அதில் கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய இரு பாடங்களில் மாணவி முத்துலட்சுமி தோல்வி அடைந்தார். இதில் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.
உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தீக்குளித்தது குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X