search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதமாலா"

    கவுதமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லாரி புகுந்து நசுக்கியதில், 30 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் படுகாயமுற்றனர். #GuatemalaAccident
    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. நகராட்சி அலுவலகம் அருகே இந்த விபத்து நடந்தது. லாரியில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 30 பேர் பலியாகினர்.  இந்த துயர சம்பவத்தில் 17 பேர் படுகாயமுற்றனர். உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கவுதமாலாவின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் செய்துக் கொண்டிருக்கிறோம்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

    இவ்விபத்திற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கவுதமாலா அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #GuatemalaAccident





    மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. #valcanoeruption
    கவுதமாலா:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலைக் குழம்பு சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

    எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழப்பு 69 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

    எரிமலை வெடிப்பால் சிதறிய சாம்பல் துகள்கள் இறந்தவர்களின் மீது படிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், நெருப்பு குழம்பினால் உயிரிழந்த பலருக்கு ரேகை இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும்  மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தேசிய தடயவியல் நிறுவன இயக்குனர் ஃபனூயெல் கார்சியா தெரிவித்துள்ளார்.



    இதனால் டி.என்.ஏ மாதிரிகளை கொண்டு அடையாளம் காண இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்பு படையினரும் கடுமையாக போராடி பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ளும் படியும், வீட்டுக்கூரைகளின் மேல் படிந்துள்ள எரிமலை சாம்பலை அகற்றுமாறும், உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்குமாறும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
    கவுதமாலா நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் 62 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று அங்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #GuatemalaEarthquake

    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று முன்தினம் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், அங்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. #GuatemalaEarthquake
    மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை நேற்று வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. #valcanoeruption
    கவுதமாலா:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

    எரிமலை வெடிப்பினால் இன்று காலை வரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு ஒருங்கிணைப்பாளர் கான்ரெட் தெரிவித்துள்ளார்.

    ஃபுயீகோ எரிமலையைச் சுற்றி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பலர் காணாமல் போனதாகவும், அவர்கள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை என்றும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

    முன்னதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவரும், அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் ஜிம்மி மொராலஸ், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் ‘ரெட் அலார்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் பேசிய தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவர், நேற்று இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று காலை மீட்பு பணி மீண்டும் துவங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
    கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Guatemala #Fuegovolcanoeruption

    கவுதமாலா சிட்டி:

    கவுதமாலா நாட்டின் தலைநகரனான கவுதமாலா சிட்டியில் இருந்து தென்மேற்கு பகுதியில் பியுகோ என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்து சிதறும் நிலையில் இருந்தது. இதனால் அதிலிருந்து கரும்புகை வெளியாகி வந்தன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேறுமாறு அரசு அறிவித்தது.

    இந்நிலையில், இந்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியது. அதிலிருந்து எரிமலை குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தன. இந்த எரிமலை வெடிப்பிற்கு பின்னர் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    வீடடு ஒன்றில் தீப்பிடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மற்ற இரு சிறுவர்கள் எரிமலை வெடிப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Guatemala #Fuegovolcanoeruption
    ×