search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல்முருகன்"

    வேல்முருகன் கைதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பிராட்வே:

    சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழர் பேரவை சார்பில் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்து தீக்குளித்து இறந்த ஜெகன்சிங் உருவ படத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    தமிழகத்தின் நலன் காக்க அறவழியில் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகும். தமிழர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய தமிழக அரசு அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றுள்ளது. ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்ற தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. இதற்கு துணையாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவை வைத்து தான் தமிழக அரசு மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தினகரன் சந்தித்து பேசினார். #TTVDinakaran #Velmurugan
    செங்குன்றம்:

    சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புழல் சிறையில் இருக்கும் வேல் முருகனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. அம்பத்தூர் வேதாச்சலம், உடன் சென்றார். #TTVDinakaran #Velmurugan
    வேல்முருகன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #thirumavalavan #velmurugan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை பொய் வழக்குகளில் கைது செய்து புழல் சிறையில் தமிழக அரசு அடைத்துள்ளது. அவர் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட புதிய வழக்குகள் புனையப்பட்டுள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேல்முருகன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப்பெறவேண்டும்.

    தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுப்பதிலும், போராடுவதிலும் முனைப்போடு இருப்பவர்கள் மீது பொய் வழக்குகளை புனைந்து அவர்களை முடக்கிவிடலாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதுவும் கூட மத்திய அரசின் நெருக்கடி காரணமாகவே தமிழக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது.



    காவிரி பிரச்சினையில் முதல்-அமைச்சர் உள்பட தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்காக வாதாடிய வக்கீல் நபாதேவும் ‘மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது’ என்று குற்றம்சாட்டிய நிலையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்துப் பேசினார் என்பதற்காக வேல்முருகன் மீது மட்டும் தேசவிரோத வழக்கு போடப்பட்டிருப்பது ஏன்? தமிழக அரசு இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட்டு ஜனநாயக பண்போடு நடந்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #thirumavalavan #velmurugan
    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    ராயபுரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கடந்த 25-ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த 28-ந்தேதி அவரை வைகோ சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.

    இதையடுத்து வேல்முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் நகர் போலீசார் திடீரென தற்போது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேல்முருகன் திடீரென புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேச துரோக வழக்கை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

    இது தொடர்பாக நிருபர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சென்றபோது என்னை கைது செய்தனர். என் மீதான கைது நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.

    நேற்று இரவு நெய்வேலி போலீசார் தேசதுரோக வழக்கில் என்னை கைது செய்திருப்பதாக கூறினார்கள். அது முதல் நான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன். உணவு, மருந்து, டிரிப்ஸ் எடுக்கவில்லை.

    இலங்கையில் ராணுவ அடக்கு முறையை கணடித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்தது போல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.

    மத்திய, மாநில அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே டீனை கட்டாயப்படுத்தி அவசர சிகிச்சை பிரிவில் இருந்த என்னை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.

    பல்வேறு தமிழ் அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதுபோல், துப்பாக்கி சூட்டில் பலியான என் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

    தூத்துக்குடியில் உயர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகள் வட மாநிலத்தவர் என்பதால் தமிழர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். நான் ஒரு பச்சை தமிழன். தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் என் மீது கைது நடவடிக்கை தொடர்கிறார்கள்.


    நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் குரல் கொடுப்பேன். மத்திய-மாநில அரசின் அடுக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன்.

    தூத்துக்குடியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறி உள்ளார். அவர்தான் தனது படங்களில் மது குடிப்பது மற்றும் புகை பிடிப்பது போன்று காட்சிகள் அமைத்து இளைய தலைமுறை தம்பி, தங்கைகளை தவறான பாதைக்கு அழைத்து சென்று உள்ளார்.

    அறவழியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வேல்முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 12 மணி அளவில் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். #Velmurugan
    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #VelMurugan
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி (பொறுப்பு) திருமகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த ஜாமீன்மனு விசாரணையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #VelMurugan
    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.#MKStalin #DMK
    செங்குன்றம்:

    மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வேல்முருகனை சந்தித்து நலம் விசாரித்தார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். சிறையில் அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தை கைவிட்டார்.

    அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புழல் ஜெயில் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. வேல்முருகனை நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். வேல்முருகன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.#MKStalin #DMK
    செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வேல்முருகன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி (பொறுப்பு) திருமகள் ஏற்றுக்கொண்டார். மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெறும் என்று கூறினார். #Velmurugan
    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. #Velmurugan #SterliteProtest
    திருக்கோவிலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும்  பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் விழுப்புரம் போலீசார் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவரை கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட வேல்முருகன் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். #Velmurugan #SterliteProtest
    காவிரி மேலாண்மை வாரிய செயல் அலுவலகத்தை கர்நாடகத்தில் அமைக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
    நெய்வேலி:

    தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பல்வேறு காரணங்களை காட்டி காலம் தாழ்த்தி வருகிறது.

    இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில் நாளை (17-ந் தேதி) மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அமைப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை வரவேற்கிறோம்.

    தமிழக அரசு தங்களது நியாயமான காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் பெறுவதற்கு அழுத்தம் தர வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் கொண்ட செயல் அலுவலகத்தை கர்நாடகாவில் அமைக்கக்கூடாது.

    இதனால் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். தமிழக அரசு உறுதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இந்த ஆணையம் அரசியலமைப்புக்கு மாறாக அதிகாரம் பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும்.

    தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசுக்கு இணங்கி செயல்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
    கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
    கோபி:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று கோபி வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கின் முக்கிய விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்துக்கு பாதகமாக காவிரி வழக்கில் தீர்ப்பு வந்தால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம். தமிழக விவசாயிகளின் உரிமைகள் பாதிக்காத அளவுக்கு தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. மாணவர்களை திருப்திபடுத்தவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை.

    எம்.எஸ்., எம்.டி. மருத்துவ உயர் படிப்புகளில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கிறோம். கல்வி, சுங்கவரி, வரிவிதிப்புகளின் உரிமை தற்போது தமிழ்நாட்டில் மாநில அரசின் கைகளில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற கொந்தளிக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?.

    அதிக எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் வெறும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழக மக்களின் நலனுக்காக இன்னும் துணிச்சலான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

    சிறிய கட்சியாக இருந்தாலும் நாங்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார். அதை நாங்கள் கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் விமான நிலையத்திற்கு ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாயிகள் நிலத்தை எடுத்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்.

    சேலம் உருக்காலை மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் ஆலை அருகில் பல ஆயிரம் ஏக்கர் காலி நிலங்கள் உள்ளன. அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

    அதையும் மீறி விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    காவிரி மேலாண்மை வாரியத்தை வி.பி.சிங் உருவாக்கியது போல முழு அதிகாரத்துடன் அமைத்தால் தான் ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    ×