search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமீன்"

    ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 27). இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. பிரபல ரவுடியான சிவராமன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பரவை என்ற கிராமத்துக்கு சிவராமன் சென்றார்.

    பின்னர் அங்குள்ள ஓட்டலில் அவர் சாப்பிட்டார். அப்போது சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். இதையடுத்து பணம் எதுவும் கொடுக்காமல் அந்த ஓட்டலை விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் சிவராமன், வடவூர் ரோட்டில் தலையில் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவராமனை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரவுடி சிவராமன் பரவை கிராமத்தில் உள்ள ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வாராம். நேற்றும் இதேபோல் தகராறு செய்ததால் இந்த பிரச்சினையால் சிவராமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை மர்ம கும்பல் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கவர்னர் மாளிகையில் அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை துணைச் செயலாளர், கிண்டி போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், ‘2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கவர்னர் மாளிகைக்கு நாற்காலி, மேஜை, அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவர்னர் மாளிகைக்கு நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ‘சப்ளை’ செய்த முகமது யூனூஸ், கவர்னர் மாளிகை கணக்காளரான சிவக்குமார், ஓய்வுபெற்ற உதவி கணக்காளரான குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

    இதில், சிவக்குமாரும், குப்புசாமியும் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews
    போலி நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்து இழப்பை ஏற்படுத்திய மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவிந்திரா பி மராத்தே இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். #BankofMaharashtra #BankofMaharashtraCMD #2000crfakeloans
    புனே:

    இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா வங்கி. 83 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த வங்கியின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் ரவிந்திரா பி மராத்தே என்பவர் பொறுப்பேற்றிருந்தார்.

    இந்நிலையில், டி.எஸ். குல்கர்னி மற்றும் அவரது மனைவியின் பெயரால் டி.எஸ்.கே. குழுமத்தின் சார்பில் இயங்கி வந்த சில போலி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் சுமார் 1150 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், முறைகேடான வகையில் வங்கிகளிடம் இருந்து சுமார் 2900 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, டி.எஸ்.கே. குழுமத்தின் உரிமையாளர் டி.எஸ். குல்கர்னி மற்றும் அவரது மனைவியை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநில அரசின் நடவடிக்கையால் இவர்களுக்கு சொந்தமான 120 சொத்துகளும், 275 வங்கி கணக்குகளும் கடந்த மே மாதம் முடக்கப்பட்டன.

    இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை வாரி வழங்கிய மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவிந்திரா பி மராத்தே, செயல் இயக்குனர் ராஜேந்திரா கே குப்தா, வட்டார மேலாளர் நித்யானந்த் தேஷ்பான்டே மற்றும் முன்னாள் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான சுஷில் முஹ்னோத் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி கைது செய்தனர்.

    புனே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 27-ம் தேதி வரை விசாரணை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு ரவிந்திரா பி மராத்தே நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

    இதனையேற்ற சிறப்பு நீதிபதி ஆர்.எம்.சர்தேசாய் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமினில் ரவிந்திரா பி மராத்தேவை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். #BankofMaharashtra #BankofMaharashtraCMD #2000crfakeloans 
    சென்னை அண்ணாசாலையில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சீமான் முன் ஜாமீன் பெற்றார்.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. சென்னை அண்ணா சாலையில் நடந்த இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டு சீமான் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவரது மனுவை ஏற்று சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான சீமான் பிணை தொகையை வழங்கி ஜாமீன் பெற்றார். #Seeman
    திருபுவனை அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது72), விவசாயி. இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஆனால் அவரிடம் குடும்பத்தினர் யாரும் பேசவில்லை. இதனால் கோபால் மனைஉளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள கோபால் முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து நிலத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வயல்வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் இதனை பார்த்து கோபாலின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஜாமீனில் வந்த வாலிபர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மகன் செல்லப்பாண்டி. சுந்தரராஜ் முதல் மனைவியை பிரிந்து 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    கடந்த மே மாதம் 21-ந்தேதி செல்லப்பாண்டி தனது நண்பர் மைதீன்பாட்சா (வயது24)வுடன் தந்தை சுந்தரராஜை சந்தித்து பணம் கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்லப்பாண்டியும், மைதீன் பாட்சாவும் தன்னை தாக்கியதாக விருதுநகர் கிழக்கு போலீசில் சுந்தரராஜ் புகார் செய்தார்.

    இந்த வழக்கில் மைதீன் பாட்சா உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மைதீன்பாட்சா தனது நண்பர் அஜித்துடன் அல்லம்பட்டி காமராஜர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சுந்தரராஜ் வாகனத்தில் வந்தார். அவர் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் மைதீன் பாட்சாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டார். பலத்த காயம் அடைந்த மைதீன்பாட்சா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் மைதீன் பாட்சாவின் தந்தை சேக்அப்துல்லா புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சுந்தரராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஜாமீன் கேட்டு வேல் முருகன் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #Velmurugan #HighCourt
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது.

    அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

    இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும், கடலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Velmurugan #HighCourt
    பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக தள்ளுபடி செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi
    விருதுநகர்:

    மாணவிகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நிர்மலாதேவி சார்பில் சாத்தூர் கோர்ட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறையும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


    இந்த நிலையில் 4-வது முறையாக ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நேற்று இதே நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #Nirmaladevi
    மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் லாலு பிரசாத், தனது மகன் திருமணத்துக்கு வழங்கப்பட்ட 3 நாட்கள் பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    ராஞ்சி:

    பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. 

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டு தண்டனையும் லாலுவுக்கு வழங்கப்பட்டது. 

    ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மகனின் திருமணத்துக்காக 5 நாள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 3 நாள் பரோல் மட்டுமே கிடைத்திருந்தது.

    இந்நிலையில், மகனின் திருமணத்தில் பங்கேற்ற லாலு பிரசாத், தனது பரோல் முடிந்து இன்று ராஞ்சி சிறைக்கு திரும்பினார். முன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரியிருந்த லாலுவுக்கு, 6 வார காலம் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே ஜாமீனுக்கான நடைமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் 6 வார கால ஜாமினில் லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பவுள்ளார். #LaluPrasadYadav
    ×