search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவா"

    கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் தங்கத்தினை ஜீன்ஸில் வைத்து கடத்திய பெண்ணை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Goacustomsaction #womenarrested
    பனாஜி:

    கோவா விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    அப்போது அந்த பெண், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை ஜீன்ஸ் உடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட தங்க பேஸ்ட் 590 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 18,08,840 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Goacustomsaction #womenarrested

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 31-ம் தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், திட்டமிட்டபடி சிகிச்சை முடிந்து டெல்லியில் இருந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார் என தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    தன்னை சந்தித்ததை மலிவான விளம்பரத்துக்கு பயன்படுத்துவதா என கேள்வி எழுப்பிய கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். #Parrikar #RahulGandhi
    புதுடெல்லி:

    சமீபத்தில் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் தனிப்பட்ட பயணமாக ஓய்வுக்காக கோவா சென்றிருந்தார்.

    ரபேல் ஒப்பந்தத்தின்போது ராணுவ மந்திரியாக முன்னர் பொறுப்பு வகித்து தற்போது கோவா முதல் மந்திரியாக பதவி வகிக்கும் மனோகர் பாரிக்கர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவா சென்றிருந்த ராகுல் காந்தி நேற்று திடீரென்று மனோகர் பரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை. அனில் அம்பானிக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் எல்லாவற்றையும் பிரதமர் மோடிதான் நடத்தினார் என்று முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெளிவாக தெரிவித்து விட்டார்’ என்று கூறினார். ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பாக மனோகர் பாரிக்கர் தன்னிடம் தெளிவான விளக்கம் அளித்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனோகர் பாரிக்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில்,  உங்களை சந்தித்து பேசியது தொடர்பான எந்த தகவலையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை.  சந்திப்புக்கு பிறகான உங்களது அழுத்தம் எனக்கு நன்கு புரிகிறது என தெரிவித்துள்ளார். #Parrikar #RahulGandhi
    கோவா மாநிலத்தில் பிரிட்டன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த லக்கேஜ்களை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். #GoaBeach #BritishWomanHarrassed
    பனாஜி:

    கோவா மாநிலம் பலோலம் பீச் அருகே தங்கியிருந்த பிரிட்டனைச் சேர்ந்த 48 வயது பெண் நேற்று அதிகாலை கேனகோனா ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் தனியாக நடந்து வருவதைக் கவனித்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணை திடீரென தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    அத்துடன் அந்த பெண் கொண்டுவந்த லக்கேஜ்களையும் (3 பேக்) திருடிச் சென்றுள்ளான். திருடிச் செல்லப்பட்ட பைகளில், அந்த பெண்ணின் பாஸ்போர்ட், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்கள் இருந்தன.



    தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். திருட்டுப்போன பொருட்களில் பணம் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரிட்டன் பெண் அளித்த தகவல் மற்றும் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளியை மார்கோ ரெயில் நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். #GoaBeach #BritishWomanHarrassed
    கோவா மாநிலத்தில் தனியாக கடற்கரை நோக்கி நடந்து சென்ற பிரிட்டன் நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #GoaBeach #BritishWomanHarrassed
    பனாஜி:

    கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பலோலம் பீச் அருகே பிரிட்டனைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தங்கியிருந்தார். அவர் நேற்று இரவு வடக்கு கோவாவில் உள்ள திவிம் ரெயில் நிலையம் செல்வதற்காக கேனகோனா ரெயில் நிலையம் சென்றார். ஆனால், ரெயில் மிகவும் தாமதமானதால், இன்று அதிகாலை அங்கிருந்து தான் தங்கியிருந்த பலோலம் கடற்கரை பகுதிக்கு நடந்து வந்துள்ளார்.

    அதிகாலை 4 மணியளவில் அவர் தனியாக நடந்து வருவதைக் கவனித்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணை திடீரென தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் அந்த பெண் கொண்டு வந்த லக்கேஜ்களையும் (3 பேக்) திருடிச் சென்றுள்ளான்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர். #GoaBeach #BritishWomanHarrassed
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. #ISL2018 #BengalureFC #GoaFC
    கோவா:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் ராகுல் பெகே (34-வது நிமிடம்), சுனில் சேத்ரி (77-வது நிமிடம்) கோல் போட்டனர்.

    6-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #DelhiDynamos
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.



    கோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. 
    கோவா விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 22 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #GoldSmuggling #Goa
    பனாஜி:

    இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதால் அதற்கான தேவையும் அதிகரிக்கும். அதன்படி எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு, கடத்தல்காரர்கள் அண்டை நாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்துகின்றனர். இதனை தடுக்க சுங்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இன்று கோவா விமான நிலையத்தில் வழக்கமான சோதனையின் போது சந்தேகப்படும் படியாக இருந்த வெளிநாட்டவரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 755 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன் மதிப்பு 22 லட்சத்து 4 ஆயிரத்து 592 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #GoldSmuggling #Goa
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #PuneCity
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து கோவா பக்கமே கணிசமான நேரம் (62 சதவீதம்) சுற்றி வந்தது. முதல் பாதி நேரத்திற்குள் கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (5, 35-வது நிமிடம்), ஹூகோ போமஸ் (12-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மார்சிலோ பெரீரா (8-வது நிமிடம்), எமிலியானோ ஆல்பரோ (23-வது நிமிடம்) ஆகியோர் புனே அணிக்காக பந்தை வலைக்குள் அனுப்பினர். ஆனால் பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை. இறுதி கட்டத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட நட்சத்திர வீரர் பெர்ரன் கோரோமினாஸ் (கோவா), டியாகோ கார்லஸ் (புனே) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

    முடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில செய்தித்தொடர்பாளார் செய்தியாளர்களை சந்தித்தபோது, கோவா மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு பாஜகவில் இருந்து விலகுமாறு பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் யடிஷ் நாயக், பாஜக ஒரு குழப்பமான கட்சி என்றும், கூட்டணி கட்சிகள் ஆட்சியை பார்வையிடலாமே தவிர முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவாவில் தலைமை இல்லாத பாஜக இருந்து வருவதாகவும், முதல்வர் இல்லாத நேரத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்கவே அவர்களால் முடியவில்லை எனவும் சாடிய நாயக், அரசை எப்படி வழிநடத்துவது எனவே அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், முதல்மந்திரி பாரிக்கர், மும்பை மருத்துவமனையிலும், டெல்லி, அமெரிக்க மருத்துவமனைகளுக்கும் சென்று வந்ததை நாம் பார்த்தோம் ஆனால் கடந்த பல மாதங்களாக தலைமை செயலகத்தில் அவரை காண முடியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

    அரசின் இயக்கம் முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாக விமர்சித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு கூட்டணியில் இருந்து விலக நேர்மையாக முடிவெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    கோவாவில் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டிய ஆடம்பர கார் மோதிய விபத்தில் 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ.வான கிலென் டிக்லோவின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆடம்பர காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தபோது சாலையை கடக்க முயன்ற 2 இளம்பெண்கள் மீது வேகமாக மோதினார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் டைனியாட் வஹித் பிஸ்தி என்ற 18 வயது பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்ரின் காலித் பிஸ்தி என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்த விபத்தின்போது அப்பகுதியில் இருந்த மக்கள் கார் மீது கற்களை எரிந்து சேதப்படுத்தவும், காரில் தீ வைக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ கைது செய்யப்பட்டார். மேலும், காரில் தீ வைக்க முயன்ற பொதுமக்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நாளை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐஎஸ்எல்) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    சென்னையின் எப்சி தனது 2-வது ஆட்டத்தில் நாளை கோவாவுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னை அணியில் பெர்னாண்டஸ், ஆகஸ்டோ, ஜெஜெ, ஜெர்மன் பிரீத்சிங், நெல்சன், சபியா போன்ற வீரர்கள் உள்ளனர். கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுபாட்டில் பந்து அதிக நேரம் இருந்தது.



    ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.
    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்தால் நாளைய போட்டி பாதிக்கப்பட கூடிய வாய்ப்பும் உள்ளது. கொச்சியில் இன்று இரவு நடக்கும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
    ×