என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 117702
நீங்கள் தேடியது "கோவா"
கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததை மேற்கோள்காட்டி, கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். #congress #bjp
பனாஜி:
கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால் அக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்ததாக விளக்கம் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரை சந்திக்க திட்டமிட்டனர்.
கோவாவில் இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில், கவர்னர் மிருதுலா சின்ஹாவை ராஜ்பவனில் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்குமாறு கடிதம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து சந்திரகாந்த் கவ்லேகர் கூறுகையில், 'கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியையே ஆட்சி அமைக்குமாறு அம்மாநில கவர்னர் அழைத்துள்ளார். அதுபோல கோவா கவர்னரும், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என கூறியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக ஆளுனர் முடிவெடுக்க 7 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இதே போல மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. #congress #bjp
கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால் அக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்ததாக விளக்கம் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரை சந்திக்க திட்டமிட்டனர்.
கோவாவில் இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில், கவர்னர் மிருதுலா சின்ஹாவை ராஜ்பவனில் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்குமாறு கடிதம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து சந்திரகாந்த் கவ்லேகர் கூறுகையில், 'கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியையே ஆட்சி அமைக்குமாறு அம்மாநில கவர்னர் அழைத்துள்ளார். அதுபோல கோவா கவர்னரும், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என கூறியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக ஆளுனர் முடிவெடுக்க 7 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இதே போல மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. #congress #bjp
மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் மாநிலத்தில் நிரந்தர முதல்- மந்திரியை நியமிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். #ManoharParrikar #GoaCM
பனாஜி:
கோவாவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக இருக்கிறார். இவர் கணைய நோய் காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே 3 மூத்த மந்திரிகளை கொண்ட ஆலோசனை குழு மாநில விவகாரங்களை கவனித்து வருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் நிரந்தர முதல்- மந்திரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தொடர்பாக அவர்கள் கவர்னர் உள்ளிட்டோரிடம் மனுவும் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் பனாஜியில் மிராமர் கடற்கரையையொட்டி உள்ள கோவாவின் முதலாவது முதல்-மந்திரியான தயானந்த் பன்டோட்கரின் நினைவகம் முன்பாக நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், பனாஜியில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இருந்து மனோகர் பாரிக்கர் பேசிய வீடியோ பதிவு அங்கு உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டது. அதில் பேசிய மனோகர் பாரிக்கர் ‘அடுத்த சில வாரங் களில் நான் கோவா திரும்பிவிடுவேன்’ என கூறினார்.
கோவாவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக இருக்கிறார். இவர் கணைய நோய் காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே 3 மூத்த மந்திரிகளை கொண்ட ஆலோசனை குழு மாநில விவகாரங்களை கவனித்து வருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் நிரந்தர முதல்- மந்திரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தொடர்பாக அவர்கள் கவர்னர் உள்ளிட்டோரிடம் மனுவும் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் பனாஜியில் மிராமர் கடற்கரையையொட்டி உள்ள கோவாவின் முதலாவது முதல்-மந்திரியான தயானந்த் பன்டோட்கரின் நினைவகம் முன்பாக நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், பனாஜியில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இருந்து மனோகர் பாரிக்கர் பேசிய வீடியோ பதிவு அங்கு உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டது. அதில் பேசிய மனோகர் பாரிக்கர் ‘அடுத்த சில வாரங் களில் நான் கோவா திரும்பிவிடுவேன்’ என கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X