search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பு"

    பாகிஸ்தானுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி அடுத்த ஆண்டு முதல் மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்த நாட்டு அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி தலீபான், ஹக்கானி வலைச்சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்றும் கூறுகிறது.

    இதன் காரணமாக அந்த நாட்டுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 ஆயிரத்து 820 கோடி) வழங்காமல் கடந்த ஜனவரியில் அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

    புத்தாண்டில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கான நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.

    இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான், அமெரிக்க தூதரக அதிகாரிகளை மோசமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் டானா ரோஹ்ராபச்சர் என்ற எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளித்த மைக் பாம்பியோ, “2018-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு குறைவான நிதியைத்தான் விடுவித்து உள்ளோம். மீதி தொகையை வழங்குவது பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று யூகிக்கிறேன்” என்று கூறினார்.  #MikePompeo
    ‘நிபா’ வைரஸ் தாக்கியதில் பலியான கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவை அபுதாபியில் வசித்து வரும் தொழிலதிபர்கள் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர். #Lini #Nipahvirus
    அபுதாபி:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பாவில் வசித்து வந்தவர் லினி (வயது 28). இவருடைய கணவர் சஜீஸ் பக்ரைன் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிர்துல் (7) மற்றும் சித்தார்த் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லினி அங்குள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.



    இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘நிபா’ வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போது, நர்சு லினிக்கும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தொற்றியது. பின்னர் அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    ‘நிபா’ வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்ததால் தான் இறப்பது உறுதி என்பதை உணர்ந்த லினி, தனது கணவர் சஜீசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதற்கிடையே லினி அவருடைய கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் வெளியானது.

    இந்த செய்தியை அறிந்த, அபுதாபியில் வசித்து வரும் சாந்தி பிரமோத் மற்றும் ஜோதி பாலத் ஆகிய 2 தொழிலதிபர்கள் நர்சு லினியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுகள் முழுவதையும் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

    இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டில் அவிட்டிஸ் மருத்துவ அறிவியல் மையத்தின் செயல் இயக்குனர்களாக உள்ளனர்.  #Lini #UAEExpats #Nipahvirus
    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின், குரோஷிய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #WorldCupSquads2018
    ஜாக்ரெப்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 24 பேர் கொண்ட குரோஷிய அணியை பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் நேற்று அறிவித்தார். லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச், மரியோ மான்ட்ஜூகிச், இவான் பெரிசிச் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதே போல் ஸ்பெயின் அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இனியஸ்டா, டேவிட் சில்வா, செர்ஜியோ ரமோஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் தகுதி சுற்றில் விளையாடிய ஆல்வரோ மோரட்டா மற்றும் மார்கஸ் அலோன்சோ நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, போர்ச்சுகல், மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே உலககோப்பை போட்டிக்கான பெல்ஜியம் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அந்த அணியின் நடுகள வீரர் 30 வயதான ராட்ஜா நையிங்கோலன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  #WorldCupSquads2018
    “சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்-4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித் கூறியுள்ளார். #H4Visa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு ‘எச்-1’ பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார்.

    அதை நீக்கிவிட தற்போதைய டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெருமளவில் இந்தியர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் மனு அளித்தனர்.

    இந்தநிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்-4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், நிறைய கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மாற்றப்பட உள்ளன. அதில் வேலை வாய்ப்பு அடிப்படையில் விசா வழங்கும் திட்டமும் அடங்கும்” என்று குறிப்பிட்டார்.

    எனவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் தற்காலிகமாக நிம்மதி அடையலாம்.  #H4Visa  #tamilnews
    கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?.

    பதில்:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.



    கேள்வி:-திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?.

    பதில்:-தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு நாளை இறுதி முடிவு எடுக்கிறது. #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்ததோடு, காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை (‘ஸ்கீம்’) 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தீர்ப்பு கூறியது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தி வந்த மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.



    அந்த வழக்கை கடந்த 8-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வரைவு செயல்திட்டத்தை 14-ந் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டில் வரைவு செயல் திட்டத்துடன் ஆஜராகி இருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர்.

    விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டு உத்தரவின் படி வரைவு செயல்திட்டத்தை மூடி ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

    அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

    அதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த விவகாரத்தின் மீது மேலும் புதிது புதிதாக வழக்குகளை விசாரித்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6ஏ பிரிவின் கீழ் செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது சட்டரீதியாக அவசியமாகிறது என்றும் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கே.கே. வேணுகோபால், இந்த வரைவு செயல்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்புக்கு ஒரு பெயர் தேவைப்படுகிறது. அது ‘வாரியம்’ அல்லது ‘ஆணையம்’ அல்லது ‘குழு’ என்று எந்த பெயரிலும் இருக்கலாம். இந்த அமைப்புக்கான பெயரை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும் என்றார்.

    அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக் கீல் சேகர் நாப்டே குறுக்கிட்டு, “தற்போது என்ன செய்ய வேண்டியிருந்தாலும் அதை இப்போதே இந்த கோர்ட்டு அறையிலேயே நீதிபதிகள் முன்னிலையிலேயே செய்ய வேண்டும். இதில் மாநில அரசுகள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்து இருக்கும் வரைவு செயல்திட்டம் பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பதை மட்டுமே பார்க்க முடியும்” என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், இந்த வரைவு செயல்திட்டம் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கோர்ட்டு ஆராய முடியாது என்றும், கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் கீழ் இந்த அமைப்பு அமைக்கப்படுமா? என்பதைத்தான் இந்த கோர்ட்டு கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறினார்கள்.

    அத்துடன் பிப்ரவரி 16-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தங்கள் கருத்தை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் புதன்கிழமைக்குள் (நாளை) கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அன்று இந்த வரைவு செயல்திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    14 பக்கங்களை கொண்ட வரைவு செயல்திட்டத்தின் நகல் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் ஆஜரான வக்கீல் களுக்கு கோர்ட்டு அறையிலேயே வழங்கப்பட்டது.

    இந்த வரைவு செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண ‘வாரியம்’ அல்லது ‘ஆணையம்’ அல்லது ‘குழு’ ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி இந்த பெயர் முடிவு செய்யப்படும். இந்த அமைப்புடன் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும்.

    * அதிகாரம் பெற்ற இந்த அமைப்பு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். தலைவரை மத்திய அரசு நியமிக்கும். இந்த தலைவர் நீர்வளம் மற்றும் நீர்மேலாண்மையில் செயல்திறன் கொண்ட பொறியாளராக இருப்பார். 5 ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை இவர் பதவியில் இருப்பார்.

    * தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை நிர்வாக செயலாளர்கள் தலா ஒருவர் இந்த அமைப்பில் பகுதிநேர உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.

    * மேலும் இரு முழுநேர உறுப்பினர்களும், இரு பகுதிநேர உறுப்பினர்களும் இந்த அமைப்பில் இருப்பார்கள். மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்.

    * உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரம் உண்டு.

    * மத்திய நீர்வள ஆணையம், தேசிய நீர்த்துறை நிறுவனம், இந்திய வேளாண்மை ஆய்வு மையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை இந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க தலைவர் அழைப்பு விடுக்கலாம்.

    * இந்த அமைப்பின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின்படி அணைகள் இயக்கப்படும்.

    * ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் அணைகளை திறப்பது, நீர் திறப்பை ஒழுங்குபடுத்துவதை இந்த அமைப்பு கண்காணிக்கும்.

    * கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் இரு மாநிலங்களின் எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் கண்காணிக்கப்பட்டு அளவிடப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக் கும். மாநில அரசின் துணையுடன் இந்த குழு அணைகளில் உள்ள நீர் இருப்பு, பங்கீட்டு விகிதம் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும்.

    * இந்த அமைப்பில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும்.

    * எந்த மாநிலமாவது காவிரி நடுவர் மன்றம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள ஒத்துழைக்க மறுத்தால் இந்த அமைப்பு மத்திய அரசை அணுகும். மத்திய அரசு எடுக்கும் முடிவு இறுதியாக இருப்பதோடு, அந்த முடிவு மாநிலங்களை கட்டுப்படுத்தும்.

    * ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அணைகளில் உள்ள நீர் இருப்பு எவ்வளவு என்பதை இந்த அமைப்பு ஆய்வு செய்யும்.

    * ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆண்டறிக்கை தயார் செய்து அனுப்பும்.

    * வறட்சி காலங்களில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது பற்றியும் இந்த அமைப்பு முடிவு செய்யும்.

    * இந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் செயல்படும்.

    * இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்களின் ஊதியம் ஆகியவற்றில் 80 சதவீதத்தை தமிழகமும் கர்நாடகமும் தலா 40 சதவீதம் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதத்தையும் தங்கள் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

    காவிரி ஒழுங்காற்று குழுவிலும் தலைவர், 4 மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் மற்றும் பிற உறுப்பினர்கள் இடம் பெற்று இருப்பார்கள். இந்த குழு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை கூடும். அதன்பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடும். அவசர காலங்களில் தேவைக்கேற்ப கூட்டங்கள் நடைபெறும்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த வரைவு செயல்திட்டம் தமிழகத்துக்கு பலன் தருமா? அல்லது பாதகமாக அமையுமா? என்பது, அதில் உள்ள அம்சங்கள் செயல் பாட்டுக்கு வரும்போதுதான் தெரியவரும்.  #CauveryMangementBoard #CauveryDraftScheme
    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் ‘பிலிப்கார்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ‘ஆன்-லைன்’ வணிகத்தை ஊக்குவித்து, சில்லரை வணிகத்தை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் சில்லரை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.

    ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர் கள் குறைந்த விலையில் பொருட் களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகையில் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லரை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருட் களை விற்பனை செய்யும் உரிமையை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடு.

    எனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். பொருட்களில் அதன் எம்.ஆர்.பி. அச்சிடப்படுவது போல அதிகபட்ச உற்பத்தி அடக்க விலையும் அச்சிடப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு என்பதை குறிக்கும் வகையில் தனி இலச்சினையோ அல்லது முத்திரையோ அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வணிகம் உயரும்.

    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஹெப்பால் வாக்குச்சாவடியில் நாளை(திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. #KarnatakaElection2018 #HebbalAssembly
    பெங்களூரு:

    ஹெப்பால் வாக்குச்சாவடியில் நாளை(திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு ஹெப்பால் தொகுதிக்கு உட்பட்ட லொட்டேகொல்லஹள்ளியில் காந்தி வித்யாலயா ஆங்கில மற்றும் தமிழ் வழி பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    அந்த வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவை செயல்படவில்லை. இதனால் அங்கு ஓட்டுப்பதிவே நடக்கவில்லை. ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் நாளை(திங்கட் கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களிடம் பல்வேறு விளம்பரங்கள் மூலம் இந்த மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. திங்கட்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் எனறும் கூறப்பட்டுள்ளது.  #KarnatakaElection2018 #HebbalAssembly

    ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார். #Russia #Iran #NuclearDeal
    மாஸ்கோ:

    வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறின.

    இந்த நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

    இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. #Russia #Iran #NuclearDeal
    தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. #TNRain #Rain
    சென்னை:

    தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் கடல் காற்று வீசச் தொடங்கியதும் வெப்பம் தணிகிறது. மற்ற மாவட்டங்களில் அவ்வப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    அதே போல் தமிழ்நாட்டில் அதிபட்சமாக திருத்தணியில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பம் கடுமையாக நிலவியது. மக்கள் சாலையில் நடமாட முடியாமல் அவதிப்பட்டார்கள்.

    இதற்கிடையே வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவியுள்ள மேக கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கோடை மழை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. மழைக்கு இன்னும் காத்து இருக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதியில் இருந்து இயல்பான அளவை தாண்டி மழை பெய்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் சராசரியாக 79.5 மி.மீ. மழை தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை 86 மி.மீ. மழை பெய்து கூடுதலாக 8 சதவீத மழை கிடைத்துள்ளது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிக்கு முன்பே தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக புனே வானிலை மையம் ஆய்வு செய்து தெரிவித்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுகிறது.

    இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. #TNRain #Rain
    ×