search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழைகள்"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்பு திட்டம் ஏழைகளை வாழ வைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்றினார். 2004 முதல் 2014 வரை நடைபெற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களால் 15 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து வெளியேற்றியதற்காக ஐ.நா. சபையே இந்தியாவிற்கு விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. இதை அத்வானியே பாராட்டியிருக்கிறார்.

    நரேந்திர மோடி அரசு வறுமை ஒழிப்பு முயற்சியில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

    இந்த திட்டத்தின்படி மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள் பயனடைகிற வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவை என்றும், முதல் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

    நரேந்திர மோடி ஆட்சியில் 15 தொழிலதிபர்களுக்கு வங்கிகள் மூலமாக சலுகை அளிப்பதற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். நரேந்திர மோடி குறிப்பிட்ட முதலாளிகளுக்காக சலுகை வழங்கியிருக்கிறார்.

    ஆனால் ராகுல்காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததோடு 25 கோடி மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்து வறுமைக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்.

    வறுமை ஒழிப்பு முயற்சியில் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து ஒத்துழைப்பார்கள்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். #LokSabhaElections2019  #KSAlagiri
    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    சென்னை:

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது.

    தாய்சேய் நலம் மற்றும் குடும்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், நோய்களைத் தடுப்பதற்காகவும் பல முன்னோடித் திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

    வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை, 2023-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கு அம்மாவால் வெளியிடப்பட்ட “தொலைநோக்கு திட்டம் 2023”ல் சேர்க்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை ஏற்கனவே அடைந்த நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே தேசிய இலக்குகளையும் தமிழ்நாடு அடைந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 27.73 லட்சம் பயனாளிகள் 5,426.74 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நமது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமீபத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனையாகும்.



    புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு, அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி வருகிறது. புற்றுநோய் உட்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 60 கோடி ரூபாய் செலவில் 4 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏழை மக்களுக்கு தரமான, உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகின்றது.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இதனால், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் தலைமையிடமாக விளங்குவது மட்டுமன்றி, நமது நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித்தருகிறது.

    ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அப்பல்லோ மருத்துவமனையின் பணி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami

    அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
    புதுடெல்லி:

    இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க “பிரதமர் உஜ்வலா யோஜனா” எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    இந்த திட்டத்துக்காக பணக்காரர்கள், சமையல் எரிவாயுக்கு பெறும் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று சுமார் 5 கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ்-பழங்குடி இன மக்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.


    இதற்கிடையே இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு செய்தார். அவரது உத்தரவின் பேரில் யார்-யாருக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்வது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    அந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இறுதியில் அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை-எளியவர்கள் பயன் பெறுவார்கள்.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே ரூ.2926 கோடி செலவில் புதிய பாலம் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
    வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. #FreeRationRice #MadrasHC
    சென்னை:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'ரேசன் அரிசியை கடத்துவது மன்னிக்க முடியாத செயல்' என தெரிவித்தனர்.

    அத்துடன், கடந்த 10 ஆண்டுகளில் ரேசன் அரிசி கடத்தலால் ஏற்பட்ட இழப்பு, கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், இலவச ரேசன் அரிசி திட்டத்தைப் பொருத்தவரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஆய்வு செய்த நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



    ‘பொருளாதாரரீதியாக முன்னேறியவர்களும் இலவச அரிசியை பெற்று வருகிறார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேசன் அரிசி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு அரசுகள் தள்ளிவிட்டன. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்க வேண்டும்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். #FreeRationRice #MadrasHC
    ×