search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு உடனே சென்னைக்கு திரும்புவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மம்தா பானர்ஜியை கமல் சந்திப்பது இது 3வது முறை. முதல் முறை சந்தித்தபோது தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த அரசியல் தலைவர் என்று புகழ்ந்து இருந்தார்.


    அடுத்து கட்சி தொடங்காமல் அ.தி.மு.க. அரசை விமர்சித்து வந்த போது 2017-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி சந்தித்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மம்தாவை கமல் சந்திப்பது பரபரப்பாகி உள்ளது. #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பத்தின் மனைவி நளினி சிதம்பரத்தை கைது செய்ய கொல்கத்தா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. #Saradhascam #NaliniChidambaram #CalcuttaHC #interimprotection
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பொருளாதார அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தின.

    முன்னாள் மத்திய மந்திரி மட்டாங் சின்ஹ் மனைவியான மனோரஞ்சனா சின்ஹ் என்பவருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றியதற்காகவே மேற்படி தொகை கட்டணமாக பெறப்பட்டதாக நளினி சிதம்பரம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
     
    இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் 11-1-2019 அன்று சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி ஜாய்மால்யா பாக்ச்சி முன்னிலையில் நளினி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நளினி சிதம்பரத்துக்கு அறிவுறுத்திய நீதிபதி 6 வாரங்கள் வரை அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இவ்வழக்கு தொடர்பாக தங்களின் நிலைப்பாடு குறித்து சி.பி.ஐ. மற்றும் நளினி சிதம்பரம் தரப்பில் இன்னும் 6 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Saradhascam #NaliniChidambaram #CalcuttaHC #interimprotection
    கொல்கத்தாவில் துணிக்கடை கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. #Kolkata #Building #FireAccident
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கரியாஹட் என்ற இடத்தில் 5 மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் துணிக்கடை ஒன்றின் குடோன் உள்ளது. மற்ற தளங்களில் குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. இதனால் பதறிப்போன மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இதையடுத்து, இது பற்றி தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் துணி குடோனில் இருந்த லட்சக்கணக்கிலான மதிப்புடைய சரக்குகள் தீக்கிரையாகின. தீ விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #Kolkata #Building #FireAccident
    கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆட்சியை மாற்றுவோம் என வலியுறுத்தினார். #Mamata #AntiBJPRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். 
     
    இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது.

    மோடி ஆட்சியின் முடிவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. புதிய விடியல் வர உள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம், இது உறுதி. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
     


    பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம். மத்தியில் ஆட்சியை மாற்றுவோம்.

    மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பாஜக உரிய மதிப்பு அளிப்பதில்லை என தெரிவித்தார்.  

    இந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் வெற்றி பெற்று வந்தால் சர்வாதிகாரி ஹிட்லர் பாணியில் இந்த நாட்டை நாசப்படுத்தி விடுவார்கள் என குறிப்பிட்டார். #Mamata #AntiBJPRally
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தா:
        
    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



    நாங்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு பிரதமரை உங்களால் காட்ட முடியுமா? எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த காங்கிரஸ், அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

    என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், அத்தகைய மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் கீழ் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் திட்டத்தை பெரும்பாலான மாநில கட்சிகள் ஏற்கவில்லை.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

    இந்த சூழ்நிலையில் பா. ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.  இதற்காக நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்துள்ளனர்.


    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியது. மம்தா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சரத் பவார், தேவேகவுடா,  மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு,  குமாரசாமி,  அரவிந்த் கெஜ்ரிவால்,  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும்.  இதைத் தொடர்ந்து தலைவர்கள் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரிகிறது. இது தவிர எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துக்கு வர உள்ளனர்.  இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது கைகூடாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #OppositionRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுதினம் கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    மம்தாவின் அழைப்பை ஏற்று இந்த பேரணியில் சரத் யாதவ், ஸ்டாலின், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஹஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும். பா.ஜ.க 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரசை பற்றி தெரியவில்லை. பிராந்திய கட்சிகள் முடிவு எடுப்பதாக இருக்கும். பிராந்திய கட்சிகள் இரு கட்சிகளை விடவும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தார். #MamataBanarjee #OppositionRally
    மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, சாதிவாரி இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். #10pcreservation #JigneshMewani
    கொல்கத்தா:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:



    எஸ்.சி - எஸ்.டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவின் முக்கிய நோக்கம். அதற்கான முதல் படியாகவே பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள கூட்டணியை வரவேற்கிறேன். பாஜகவுக்கு எதிராக மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #10pcreservation #JigneshMewani
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    கொல்கத்தா:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். 

    இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இதற்கிடையே, ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. #ChennaiyinFC #ATK #ISL2018
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்த போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்ப்புக்கு தகுந்த படி சிறப்பாக விளையாடவில்லை. தடுப்பு ஆட்டத்தில் பலவீனமாக காணப்படும் சென்னை அணி கோல் அடிப்பதிலும் ஏமாற்றம் அளித்து வருகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. அத்துடன் சென்னை அணி 16 கோல்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறது. உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

    கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி களம் இறங்கும். அதேநேரத்தில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நிலையில் பெங்களூரு எப்.சி. அணியின் ரசிகர்கள் போட்டி நடுவர்களை திட்டியதற்காக பெங்களூரு எப்.சி. அணிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து நடுவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. ரசிகர்களின் மோசமான நடத்தைக்காக ஐ.எஸ்.எல். போட்டியில் ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    இதற்கிடையில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
    கொல்கத்தா விமானத்தை கடத்தி தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #PlaneHijackThreat

    கொல்கத்தா:

    கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

    அப்போது இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் பேசினார். நடுவானில் பறக்கும் போது இந்த விமானத்தை கடத்தி தகர்க்க போவதாகவும், பயணிகள் அனைவரையும் கொல்ல போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இதை அவர் அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் கேட்டனர். அந்த வாலிபர் தனது முகத்தை துணியால் மறைத்து கட்டி இருந்தார்.

    இதனால் அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என கருதிய பயணிகள் விமானியிடமும், ஊழியர்களிடமும் தெரிவித்தனர். அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினர்.

    இதையடுத்து அங்கு விரைந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜெ பொத்தார் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #PlaneHijackThreat

    அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #BrigadeRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்காக அவர் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்தார்.

    மேலும், மெகா பேரணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். #MamataBanarjee #BrigadeRally
    ×