search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்"

    பாராளுமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருபாலருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கிய 1952-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்களே அதிக அளவில் வாக்களித்து வந்தனர். எனினும் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நிலைமை மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் நடந்துள்ள தேர்தல்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான பிரன்னாய் ராய், தொரப் சொபரிவாலா ஆகியோர் ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இந்திய தேர்தலில் ஆண்-பெண் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1962 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான பாராளுமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், ஆண்களின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. தற்போது ஆண்களும், பெண்களும் சமமான பங்களிப்பை வழங்கி வருவதாக கூறியுள்ள ஆசிரியர்கள், எனினும் சில சட்டசபை தேர்தல்களில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.இது வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என அந்த புத்தகம் கூறுகிறது. அந்தவகையில் வருகிற தேர்தல் இந்திய பெண்களின் தேர்தலாக இருக்கும் எனவும் புத்தக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
    “ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை.
    “ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. அழகு மற்றும் அழகு நிலையங்கள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்டது. நமக்கும், அதற்கும் ரொம்ப தூரம் என்று முக்கால்வாசி ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்.

    அதுவும் திருமணம் ஆன ஆண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நமக்கு தான் கல்யாணம், குழந்தை, என்றாகிவிட்டதே என்று சலிப்புடனேயே இருப்பார்கள். நாம் ஏன் தோற்றத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்று நினைத்தீர்களேயானால், நீங்கள் “உற்சாகமில்லா மனநிலை” என்ற படிக்கட்டில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள், இல்லை, இல்லை, இறங்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்க்கை தொடங்குவதே திருமணத்திற்கு பின்பு தான் என்பதை உணருங்கள். உங்கள் செல்ல குழந்தை “எனது அப்பா” என்று நண்பர்களிடமும், உங்கள் அன்பு மனைவி “எனது கணவர்” என்று உற்றார், உறவினர்களிடமும் அறிமுகம் செய்வதில் எப்போதும் ஆனந்தம் அடைவார்கள். அப்போது நீங்கள் பார்க்க நன்றாக இருந்தால் தானே அவர்களுக்கும் பெருமை.

    “நீங்கள் சொல்வதை பார்த்தால் நானும் சிலரை போல பணத்தை அழகு நிலையங்களில் செலவு செய்யவேண்டுமா? காசை கரியாக கரைக்கணுமா?” என்று கேட்பீர்களேயானால் அதுவல்ல நான் கூற நினைப்பது. சாதாரணமாக முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் என்று ஆரம்பித்து உங்களால் முடிந்ததை, இயன்றதை மாதம் தோறும் தவறாமல் செய்துகொள்ளுங்கள். இதை செலவு என்று ஒருபோதும் நினைக்காதீர், முதலீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளியுங்கள். ஆம், எப்பொழுதும் சிடுசிடு என்று இருப்பவர்களை யார் தான் ரசிப்பார், சொல்லுங்கள்? இதனால் உங்கள் தன்னம்பிக்கை மட்டுமல்ல செயல்திறனும் கூடும். உங்கள் மனைவி மக்களும் பெருமை கொள்வர்.

    ஆண் அலங்காரத்தில் அடுத்த முக்கிய பிரச்சினை தொந்தி. திருமணமான பின்பு ஆண்கள் விளையாட்டு, உடற்பயிற்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலை, வேலை என்று அலைவார்கள். நீரிழிவுநோய், ரத்தகொதிப்பு என்று வந்த பின்பு தான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். ஏன் அதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டும்?. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் கூற்றிற்கேற்ப தினமும் குறைந்தது ஒரு முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்து நீங்கள் உடல்நலத்துடனும், மனநலத்துடனும் மட்டுமின்றி தொந்தி இல்லா புற அழகுடனும் இருக்கலாமே.

    அடுத்து உடல் துர்நாற்றம். புறஅழகை காக்க நம் மேல் எந்தவித துர்நாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தினமும் உண்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தினமும் குளிப்பது. வெயில் காலங்களில் அவசியம் ஏற்பட்டால் இருமுறை குளிப்பதும் தப்பில்லை. அதேபோல் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இருமுறை பல்விளக்குதல், உணவு உண்ட பின்பு, வாய் கொப்பளித்தல், ஏலக்காய் சாப்பிடுதல் என்று சில செயல்களால் அதை தவிர்க்கலாம்.

    “கூழ் ஆனாலும் குளித்து குடி, கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு” என்று பழமொழிக்கேற்ப ஆடைகளை துவைத்து அணியவேண்டும். ஆடையின் நிறம் மற்றும் அளவு நமக்கு தகுந்தாற் போல் பார்த்து கொள்வது முக்கியம். பொத்தான்கள் இல்லாமல் அணிவது, கிழிந்த ஆடைகளை அணிவது என்று இல்லாமல் நாம் அதனை உடனுக்குடன் சரி செய்து அணிதல் வேண்டும். வெயில் காலங்களில் மட்டுமின்றி முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிவது உடல் நலத்திற்கும் நல்லது, பார்க்கவும் நன்றாக இருக்கும். இதை நம்பி இருக்கும் நெசவாளர்களும் மகிழ்வர்.

    புற அழகில், நாம் நமது தனிப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து பேணுதல் மிக முக்கியம். நகம் வெட்டுதல், முடி வாருதல், முகம் கழுவுதல் என்று நம்மை நாமே கவனித்து செய்துகொள்ள வேண்டும். காலணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து கருப்பு பூச்சு அணிந்து செல்ல வேண்டும்.

    எனது நண்பர் ஒருவர், “பல மேடை பேச்சுகளை கேட்டும், நம்பிக்கை தரும் நூல்களை படித்தும் கிடைக்காத தன்னம்பிக்கை, முடிவெட்டி, சவரம் செய்த பின்பு கண்ணாடியை பார்க்கும் போது கிடைக்கிறது. அதற்கு அந்த சவரதொழிலாளிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்பார். உங்கள் புற அழகை பேணுவதால் உங்கள் தனித்துவம் மேம்படும் என்பதை மறவாதீர். நேர்காணலில், பணி இடங்களில் வெற்றி பெற, வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை பெற என்று மட்டும் இல்லாமல் உங்களுக்குள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் நாள் முழுக்க பெருக்கெடுத்து ஓடவைக்கும் வித்தை இது என்பதையும் மறவாதீர். தினமும் சிலநிமிடம் கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்து ரசியுங்கள், உங்களுக்கு நீங்களே முதல் ரசிகனாய்.

    கமலேஷ் சுப்பிரமணியம்
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததுடன், உணவு, குடிநீர் ஏதுமின்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். #UttarPradesh
    லக்னோ:

    இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி திருமண முறிவு செய்யும் முறைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி, ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நயீம் என்பவர் தனது மனைவி ரசியாவை கடந்த ஏப்ரல் மாதம் செல்போன் மூலம் முத்தலாக் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி ரசியாவை தனி அறையில் உணவு, குடிநீர் இன்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி ரசியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டுள்ளனர். இந்நிலையில், ரசியாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரசியாவின் சகோதரி கூறுகையில், 2005-ம் ஆண்டு திருமணம் ஆன சில நாட்களில் இருந்து வரதட்சணை கேட்டு நயீம் கொடுமை படுத்தியதாகவும், சமீபத்தில் தொலைப்பேசி மூலம் அவர் தலாக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நயீம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். #UttarPradesh
    ஆந்திர மாநிலத்தில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதற்காக பெற்ற மகளையே தந்தை கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. #AndhraPradesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் தொடராவுலப்பாடு பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர் சந்திரிகா. இவர் தனது கல்லூரி நண்பர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரிகா, தனது காதலருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தந்தை ஆத்திரமடைந்து சந்திரிகாவை கோடாரியால் தாக்கியுள்ளார். இதனால் சந்திரிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் சந்திரிகாவின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். காதலருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்து தந்தையே தன் மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh
    மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
    நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம்.

    ஆனால், உண்மையில் இரு பாலித்தனவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறுவிதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.

    பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

    இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.

    ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன.



    ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்.

    ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

    பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அதீத அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
    ×