search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி"

    முதல் இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ், தன் முதல் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல். கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’வின் இயக்குநர் அமித் ‌ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

    இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் கீர்த்தியின் பாத்திரங்கள் இருவேறு தோற்றங்களில் இருக்கும். மிக இளவயது தோற்றம் ஒன்றிலும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார்.

    ஆனால், ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக செய்ததுபோல இந்தப் படத்தில் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. தன் நடிப்பின் மூலமாகவே வயது முதிர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்று கீர்த்தி முடிவெடுத்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KeerthySuresh

    அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #America #Hindi #India
    நியூயார்க்:

    அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 21.8 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் அயல் மொழி பேசுவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 33 சதவீதம் பேரும், குஜராத்தி மற்றும் தெலுங்கை 17 சதவீதம் பேரும் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையின்படி கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

    அயல் மொழி பேசுவோரின் எண்ணிக்கை முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. #America #Hindi #India
    அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் என மத்திய இந்தி குழுவின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். #Hindi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், மத்திய இந்தி குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசு விவகாரங்களில் இந்தி மொழியின் பயன்பாட்டை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “அன்றாட உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும். அரசு விவகாரங்களுக்காக அதிகாரிகள் உரையாடும்போது, சிக்கலான, தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து, உரையாடலை எளிமைப்படுத்த வேண்டும். அரசில் இந்தியின் பயன்பாட்டுக்கும், சமூகத்தில் இந்தியின் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள் உதவலாம். இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகள் மூலமும் உலகத்துடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்” என்றார். #Hindi #PMModi

    பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் அதிகமாக வருவதாக புகார் கூறியுள்ளார். #SwaraBhaskar
    சினிமா வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு, இந்தி நடிகைகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளும் முளைத்துள்ளன. இதனால் செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அடங்கி இருப்பதாக பேசப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வைக்கிறார்கள். பெண்மையை கேவலப்படுத்தும் வசனங்களும் உள்ளன. இதை கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன். சமூக வலைத்தளத்திலும் கருத்து பதிவிடுகிறேன்.

    இதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுயகவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
    ×