search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா"

    • நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகி குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.ஏ. தங்கராஜ் மற்றும் சங்கர் உள்ளிட்டோரும் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர்.

    நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் முன்னிலை வைத்தார் இதில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மணி, தணிக்கை குமார், தாமரைத் துறை அரசன் ஆர்.எஸ். பாரத் செல்வ சுப்பிரமணியன், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
    • நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி நடந்தது.

    மதுரை

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    மதுரை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்களாக மூவேந்திரன், கண்ணன், கோசா பெருமாள், துணை தலைவர்களாக கோவிந்தமூர்த்தி, செல்வி, அரிச்சந்திரன், முத்துச்செல்வம், மஞ்சுளா, குப்பு, அனந்தஜெயம், மாவட்ட செயலாளர்களாக ஹரிகரபுத்திரன், சீதா, சித்ராதேவி, பொருளாளராக முத்துராம், அலுவலக செயலாளராக ஹரிகிரு ஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவராக சுரேஷ், விவசாய அணி மாவட்ட தலைவராக பூமி ராஜன், பட்டியல் அணி மாவட்ட தலைவராக வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க . தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

    நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் வக்கீல் வாரியார் வரவேற்று பேசுகிறார். வக்கீல் சின்னத்தம்பி நன்றி கூறுகிறார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாநில சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் சதீஷ்ராஜா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் 50 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றி கிறிஸ்மஸ் விழா சிறப்பு பிரார்த்தனை செய்து விழாவை கொண்டாடு கின்றனர். தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

    • பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
    • பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    நாகர்கோவில்:

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
    • பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டி ருந்தது. இதேபோல் பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அந்த போர்டுகளை பத்மநாபபுரம் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலையில் அகற்றி னர். இதை அறிந்த பாரதிய ஜனதா கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலையில் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணித்தலை வர் குமாரதாஸ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் நகராட்சி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தி லும் ஈடுபட்டனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஆணை யாளர் லெனின் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில்உடன்பாடு ஏற்படா ததால் கவுன்சிலர்கள் அலுவ லக அறைக்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுடன் நகராட்சி தலைவர் அருள் சோபன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து பாரத மாதா போர்டு போரா ட்டம் நடத்தியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அகற்ற ப்பட்ட இடத்திலேயே இர வில் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அந்த இடத்தில் பாரதமாதா போர்டு மாயமாகி இருந்தது.

    இதுபற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகம் அந்த போர்டை மீண்டும் அகற்றியிருப்பதாக தெரியவந்தது. இதனால் பாரதிய ஜனதாவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில், அக். 27-

    தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்.ராதாகிருஷ்ணன்

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.

    உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

    துரோகம்

    இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப

    டுத்தும்.

    குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.

    குரல் கொடுப்போம்

    தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.

    • பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கி பேசினார். இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் நட்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதன் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில இளைஞரணி சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளோம். பா.ஜ நிர்வாகிகள் வீடுகள், நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகமான வங்கி கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பெருகும். ஆர்.எஸ்.எஸ். பேரணி என்பது எப்போதும் நடந்து வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். இதற்கு முன்பெல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்க தேவையில்லை. ஆனால் தற்போது சிறிய போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாததால், நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஸ்பிக் நகரில் நடைபெற்றது
    • 10 கிளைகளில் கொடியேற்றும்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதீய ஜனதா கட்சி சார்பாக நாளை நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஸ்பிக் நகரில் நடைபெற்றது

    தெற்கு மண்டல் தலைவர் மாதவன் வரவேற்றார், விவசாய அணி மாநில பொறுப்பாளர் தமிழ் செல்வி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம்,அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு செய லாளர் புனிதா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நாளை (17-ந் தேதி )முதல் 10 நாட்கள் சேவை தினமாக கொண்டாட கட்சி தலைமை முடிவு செய்து அறிவித்துள்ளது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடற்கரை பகுதியில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும், 10 கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி, இளைஞர் அணி சார்பாக நடைபெறும் ரத்ததான முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொறுப்பாளரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெற்றிவேல், மகளிர் அணி தெற்கு மண்டல் தலைவி புனிதா, ஓ.பி.சி. மண்டல தலைவர் துர்க்கையப்பன், பொது செயலாளர்கள் பிரபு , மகேஷ் ,செயலாளர் பாலகுமார்,அருண்பாபு, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, வணிகர் பிரிவு துணைதலைவர் செல்லப்பன், இளைஞர் அணி செயலாளர் முனியசாமி, மகளிர் அணி பொதுசெயலாளர் லெட்சுமி மண்டல் துணை தலைவர் பொய்சொல்லான், கிளைதலைவர் முருகேசன், தரவு தளவு பிரிவு தலைவர் ராஜ்குமார், விவசாய அணி மண்டல் தலைவர் செல்வசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல்சேகரன் சிலைக்கு பா.ஜ.க. மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட துணை தலைவர் ரமேஷ்,பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    இமானுவேல் சேகரன் நினைவு நாளைெயாட்டி ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெரு, மலையடிப்பட்டி, சுந்தரராஜபுரம், இளந்துறை கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட தொழில் பிரிவு பார்வையாளர் சுகந்தம் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதில் ஒன்றிய செயலாளர் சிவசக்தி, பட்டியல் அணி பிரிவு ராமசுப்பு, மாவட்ட துணை தலைவர் ரமேஷ்,பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதிதாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு நுழைவு வாயில் வழியாக மீன் பிடித்து வரக்கூடிய படகுகள் கரைக்கு திரும்புகின்றன.
    • மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம் அடைவதாக அதில் கூறியுள்ளார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன், மத்திய இணை மந்திரி எல். முருகனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு நுழைவு வாயில் வழியாக மீன் பிடித்து வரக்கூடிய படகுகள் கரைக்கு திரும்புகின்றன. இதன் நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தாலும், இருட்டாக இருக்கின்ற காரணத்தாலும் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம் அடைந்து வருகின்றன. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தூண்டில் வளைவு நுழைவு வாயில் பகுதியில் 4 சோலார் மின்விளக்கு கோபுரங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • தமிழகத்திலிருந்து 25 பா.ஜ.க. எம்.பி.க்களை அனுப்பும் வகையில் கட்சிப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
    • தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இங்கு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    பா. ஜனதா தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் வகையில் பா. ஜனதா கட்சியில் பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.தமிழக பா. ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரையின் பேரில், பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சென்று கடந்த 8 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு அளித்துள்ள திட்டங்களையும் சலுகைகளையும் விளக்கி வருகிறோம்.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தி.மு.க. அரசில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சி என்று எங்களை பார்க்க வேண்டும். எதிரி கட்சியாக பார்த்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பா. ஜனதா அரசு செய்து வரும் நலத்திட்டங்களை எங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது கொண்டு சேர்ப்போம்.

    தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை மத்திய அரசு கண்காணித்து வருகின்றது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பா. ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

    தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இங்கு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது. இதை உடனடியாக நிறுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் மாநில அளவில் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×