search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டணி"

    ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #EVKSElangovan #ADMK #BJP
    சென்னை :

    திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு நகல் வழங்கப்பட்டது. இதன்பின்னர், வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.

    இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருக்கிறேன்.

    என்னை பொறுத்தமட்டில் வழக்குகள் போடுவதன் மூலம் மட்டுமே எனது வேகம் அதிகரிக்கும். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.



    எதையெல்லாம் செய்வோமோ அதைத்தான் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளது. மோடியை போல் வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல் செயல்பாட்டில் காங்கிரஸ் வீரனாக இருக்கும்.

    பா.ஜனதாவின் எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை. எனவே தான், பாஜக. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். மேலிடம் பட்டியலை வெளியிடும்போது தான் ராஜாவின் பெயர் பட்டியலில் இருக்கப்போகிறதா? அல்லது ஆட்டுப்பட்டியில் அடைபட்டு போகிறாரா? என்பது தெரியும்.

    இந்தியா முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் காங்கிரஸ் பட்டியல் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது. விரைவில் பட்டியல் வெளியாகும். அதிமுக. தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளது.

    எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக அதிமுக.வுக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று கூறி வருகிறார்கள். ஓட்டுக்கு ரூ.1,500 அல்ல, ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட அதிமுக.-பாஜக. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #EVKSElangovan #ADMK #BJP

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார். #LSPolls #DMK #Congress #MKStalin #Velmurugan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று இரவு அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார். #LSPolls #DMK #Congress #MKStalin #Velmurugan
    மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Samajwadi #BahujanSamajParty
    மும்பை :

    உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மராட்டியத்தில் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மராட்டியத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியதாவது:-

    கூட்டணி குறித்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறோம். அகிலேஷ் யாதவிடம் பேசிவிட்டு இறுதி முடிவு எடுப்போம். பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிவதை தடுக்க வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். காங்கிரசுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.

    இ்வ்வாறு அவர் கூறினார்.



    இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் சுரேஜ் சக்காரே கூறுகையில், ‘‘வருகிற 20-ந்தேதிக்குள் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். விதர்பா, மரத்வாடா மண்டலத்தில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 16 லட்சம் வாக்குகளையும், 2014-ல் நடந்த தேர்தலில் 14 லட்சம் வாக்குகளையும் பெற்று உள்ளோம். எங்கள் கூட்டணியில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 முதல் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.

    பிரகாஷ் அம்பேத்கர் தனித்து போட்டியிடுவது, எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கொண்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு விதர்பா மண்டலத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளில் அந்த கட்சி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாக்குகளை பெற்று இருந்தது. இதேபோல முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பிவண்டி, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, நாந்தெட், அவுரங்காபாத் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Samajwadi #BahujanSamajParty
    பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதுதொடர்பாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என குறிப்பிட்டார்.



    இதேபோல், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். நம் நாட்டிற்கு சகோதரி மாயாவதிஜி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறினார். #Mayawati #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறினார். #Mayawati #Congress

    நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு களம் இறங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பல்வேறு பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து போவதை தடுக்க இது உதவும் என கருதப்பட்டது.

    ஆனால் இந்த முயற்சி, எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

    நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கரம் கோர்த்துள்ளன.

    இந்த நிலையில், டெல்லியில் தனது கட்சியை சேர்ந்த பல்வேறு மாநில தலைவர்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளாது.

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளேன் என்றால் அது பரஸ்பர மரியாதை, நேர்மையான நோக்கங்கள் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியானது, பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதற்கு சரியான கூட்டணி ஆகும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அந்த கட்சியை தோற்கடிப்போம். பல தலைவர்கள், நமது கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் தேர்தல் லாபத்துக்காக மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி எதையும் செய்யாது. ஏனென்றால் அது பகுஜன் சமாஜ் இயக்கத்துக்கு கேடாக அமைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேமுதிக தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்கள் முடிவை நாளைக்குள் அறிவிக்கும்படி அதிமுக மூத்த தலைவர்கள் கறாராக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிகள் தவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு தருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டது.

    ஆனால் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தது. அ.தி.மு.க.வை மிரட்டும் வகையில் மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசியதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க.விடமும் தே.மு.தி.க. பிடிவாதம் பிடித்ததால் தி.மு.க.வினர் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க.விடம் கூட்டணி சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் தே.மு.தி.க. தலைவர்களிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.

    தே.மு.தி.க.வின் இரட்டை நிலை காரணமாக அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள்தான் தர முடியும் என்று தெரிவித்தனர். பிறகு அது 4 தொகுதியாக அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக தே.மு. தி.க. மூத்த தலைவர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக நேரம் சரியில்லை என்று கூறி கூட்டணி உடன்பாட்டுக்கு தே.மு.தி.க. தலைவர்கள் வரவில்லை.

    இதனால் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலை எடுக்கும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதோடு தனித்து போட்டியிட பயப்பட மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினார்.



    பிரேமலதாவின் இந்த பேட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. தே.மு.தி.க.விடம் கூட்டணிக்காக கெஞ்சக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    பா.ஜனதாவின் வேண்டுகோளுக்காகவே தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைவர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் தே.மு.தி.க. தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் இழுபறி செய்த படியே இருப்பது மற்ற தேர்தல் பணிகளை பாதிப்பதாக அ.தி.மு.க.வில் அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை)க்குள் தே.மு.தி.க தனது முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடுவை அ.தி.மு.க. மூத்த தலைவர்களே மிகவும் கறாராக கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. தலைவர்களின் அதிருப்தி, கோபம் வெடிக்க தொடங்கி இருப்பதால் தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நாளை காலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தே.மு.தி.க. தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

    தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வுடனும் நாளை தொகுதி பங்கீட்டை அ.தி.மு.க. முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 19 அல்லது 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நாளை தே.மு.தி.க., த.மா.கா.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாடு முழுமை பெற்று விடும்.

    இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டு விடும். 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா, பா.ம.க. வேட்பாளர்களையும் அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 இடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் உள்ள மற்ற கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டி உள்ளது. ம.தி.மு.க. 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளும், கம்யூனிஸ்டு கட்சிகள் 3 தொகுதிகளும் கேட்பதாக தெரிகிறது.

    தே.மு.தி.க. எந்த கூட்டணியில் சேரும் என்பது முடிவாகவில்லை. எனவே தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சியும் நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் இன்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனையின் போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவும் உடன் இருந்தார். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    கோவையில் இன்று மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாநாடு முடிந்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #MKStalin
    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #DMDK
    சென்னை:

    கோயம்பேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது.

    பா.ம.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. தி.மு.க.-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தே.மு.தி.க. குறித்து சொன்ன கருத்து கட்சி கருத்து அல்ல. இதற்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #DMDK

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GKVasan
    சிவகங்கை:

    சிவகங்கையில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு விட்டது. த.மா.கா ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மேலும் மக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு இன்னும் 2 நாட்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

    த.மா.கா பலம் பெற வேண்டும். நாடு வலிமையடைய வேண்டும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் கூட்டணி அமைக்கப்படும்.

    நம்முடைய நாட்டை பாதுகாக்கும் வீரர்களை கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். இதற்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான மன நிலையில் உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GKVasan
    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து இன்று சென்னையில் ஒப்பந்தம் கையொப்பமானது. #LSpoll #DMKIUMLAlliance
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் இன்று அண்ணா அறிவாலயம் சென்றார். 

    அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்த ஸ்டாலினுக்கு நன்றி என அறிவித்தார்.

    ஏற்கனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LSpoll #DMKIUMLAlliance #Stalin
    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடங்களை தந்ததில் தான் வருத்தம் அடைந்தாக சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். #ParliamentElection #AkileshYadav #MulayamSinghYadav
    லக்னோ :

    நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கிற அளவுக்கு 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம், உத்தரபிரதேசம். அங்கு எதிர் எதிர் துருவங்களில் இருந்து வந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இது அரசியல் அரங்கை அதிர வைப்பதாக அமைந்தது.

    மகன் அகிலே‌ஷ் யாதவ் அமைத்துள்ள இந்த கூட்டணி குறித்து, சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.



    இதுபற்றி அவர் லக்னோவில் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடங்களை தந்ததில் நான் வருத்தம் அடைந்தேன்’’ என கூறினார்.

    பாராளுமன்றத்தில் சமீபத்தில் முலாயம் சிங் பேசியபோது, நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று வாழ்த்தியது நினைவுகூரத்தக்கது. #ParliamentElection #AkileshYadav #MulayamSinghYadav
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #ADMK #NRCongress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, சென்னையிலுள்ள அதிமுக அலுவலகத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை வந்தார். கூட்டணி பற்றி அதிமுக நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேறி தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுதொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், அதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். #LSpoll #ADMK #NRCongress
    ×