search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தம்"

    ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #DMKmanifesto #CropLoan
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது, வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கல்விக்கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

    5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து விவசாயிகளையும் திருப்தி செய்யும் வகையில் இருக்காது என்பதால், தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது.

    தற்போது விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். #DMKmanifesto #CropLoan
    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், நீக்கல், திருத்தம் விண்ணப்பங்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை பெறப்பட்டு அறிவிப்புக்கு பிறகு 11-வது நாளில் துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.
    புதுச்சேரி:

    புதுவை துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 31-ந்தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணி மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டியலில் சேர 1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை பெறப்பட்டு அறிவிப்புக்கு பிறகு 11-வது நாளில் துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.

    அதன்பிறகு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மனு செய்வதற்கான இறுதிநாள் வரை வாக்காளர் திருத்த பணி நடைபெறும். மறுநாள் துணை வாக்காளர் பட்டியல் 2 மட்டும் வெளியிடப்படும்.

    பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டிட தங்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரம் பெற விரும்புவோர் 1950 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. #VoterList #TN
    சென்னை:

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன.

    பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர். இந்த பணிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் முடிவடைந்தன.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் 1.9.2108 முதல் 31.10.2018 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டார்.



    அதன்படி தமிழகம் முழுவதும் இவற்றுக்காக அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர். அலுவலகங்கள் மூலமாக 18 லட்சத்து 87 ஆயிரத்து 283 பேரும், ஆன்லைன் மூலமாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 97 ஆயிரத்து 996 விண்ணப்பங்கள், சென்னையில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 434 விண்ணப்பங்கள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன.

    பெயர் சேர்ப்புக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும், சென்னை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரத்து 286 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன. தமிழகம் முழுவதும் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 13 லட்சத்து 11 ஆயிரத்து 861 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

    அதிகபட்சமாக சென்னையில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,631 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    அனைத்து வகை விண்ணப்பங்களையும் சேர்த்தால், அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 956 விண்ணப்பங்களும், அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 297 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள்.

    பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இனிமேலும் விண்ணப்பங்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படவுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்படாது. #VoterList #TN

    ரேசன்கார்டில் திருத்தங்கள் செய்தால் 20 ரூபாய்க்கு மாற்று ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உணவு வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். #RationCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

    ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன், மகள் பெயர்களில் பிழைகளை திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் பொது வினியோக திட்ட இணையதளத்தில் பலர் திருத்தம் செய்து வருகின்றனர்.


    இந்த கார்டுகளை நகல் எடுப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் சேவை மைய ஊழியர்கள் மாற்று கார்டு வழங்க அதிக பணம் வசூலித்ததால் கார்டு வழங்குவதை சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டனர்.

    தற்போது மாற்று கார்டுகள் கேட்டு ஏராளமானோர் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கும், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதனால் 20 ரூபாய்க்கு மாற்று ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார். #RationCard
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக இதுவரை 8.25 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். #SatyabrataSahoo #VoterList
    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அக்டோபர் இறுதி வரை நடைபெறும்.

    இதற்காக கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 23-ந் தேதியன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர்.



    அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்த இந்த முகாம்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 937 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 விண்ணப்பங்கள் வந்தன. அந்த வகையில் சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    கடந்த 9 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்த முகாம்கள் மற்றும் கடந்த 1-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    அவற்றில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 59,882 விண்ணப்பங்கள், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4,278 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 41,363, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 54,322 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.  #SatyabrataSahoo #VoterList
    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதில் வீடு வாங்குகிறவர்களுக்கு நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்து உள்ளது. #UnionCabinet #Bankruptcy
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.

    “திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.

    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

    குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.

    இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.

    மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.

    பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    * நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

    * மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. 
    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.#ramadoss
    சென்னை:

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாத 77.5 சதவீத மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81 சதவீத மக்களும் பழி வாங்கப்படுகின்றனர். இந்த உண்மை மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், சில சக்திகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து சட்டத்தை திருத்த முயல்வதும், அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கத் துடிப்பதும் திருத்த முடியாத தவறுகளாக மாறி விடும்.

    எந்த ஒரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது; அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அதை தடுக்கும் கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அந்தக்கடமையைத் தான் உச்சநீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு மத்திய அரசு துணை நின்றிருக்க வேண்டும்; மாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. பா.ம.க.வை பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை.

    கைவிட வேண்டும்

    மாறாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு அத்தகைய சட்டம் தேவை என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. அதேநேரத்தில் எந்தவொரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்ற அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இதை புரிந்து கொள்ளாத சில அரைகுறைகளும், அவர்களை ஆதரிக்கும் சில சக்திகளும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தையே பா.ம.க. எதிர்ப்பதாக அவதூறு பரப்புகின்றன. அந்த அரைகுறைகளுக்கும், அவற்றை ஆதரிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில், சரியான பாடம் புகட்டப்போவது உறுதி.

    எனவே, வன்கொடுமை சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகு தான் யாரையும் கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #ramadoss
    ×