search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ப்யூட்டர்"

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மர்மமான சர்ஃபேஸ் சாதனம் குறித்த விவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கசிந்து வருகிறது. ஆன்ட்ரோமெடா என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்ள் இதுவரை காப்புரிமைகள், அறிக்கைகள் மற்றும் இயங்குதள விவரங்களில் கசிந்து வந்தது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் டூயல் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன அறிக்கைகளில் இந்த சாதனம் பாக்கெட் சர்ஃபேஸ் சாதனமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஆன்ட்ரோமெடா திட்டம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினுள் ரகசியமாக உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு சந்தையில் புதிதாகவும், சீர்குலைக்கும் சாதனமாக ஒட்டுமொத்த சர்ஃபேஸ் சாதனங்களுக்கு உதாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரிடையே இருக்கும் பிரிவை குறைக்கும் என கூறப்படுகிறது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆன்ட்ரோமெடா இதுவரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் ராப்-அரவுன்ட் டிஸ்ப்ளே சாதனம் முழுமையாக திறக்கப்படும் போது ஹின்ஜ் மற்றும் டிஸ்ப்ளே பகுதியை மறைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் வழங்குவதற்கான ஸ்டைலஸ்-ஐ மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

    இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் ஸ்டைலஸ்கள் மற்றும் நோட்பேட் போன்ற செயலிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்த சாதனத்தில் ஏ.ஆர்.எம். பிராசஸர்கள் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் இன்டெல் அல்லது குவால்காம் சிப்செட்களில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும்.
    உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும்.

    • நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

    • தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வதைக் குறைத்திடுங்கள்.

    • கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும். எனவே கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வது போல் இருந்தால், கண்களுக்கு ஸ்பெஷலான கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். இதனால் கணினி திரையின் ஒளியால் கண்கள் விரைவில் களைப்படையாமல் இருக்கும்.



    • ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அப்போது கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

    • தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடையும். உங்கள் கண்கள் வறட்சியுடன் இருந்தால், அது கண்கள் துடிப்பதன் மூலம் வெளிப்படும்.

    • கண்களில் அலர்ஜி இருந்தால், அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கண்கள் அடிக்கடி துடிக்கவும் செய்யும்.
    அசுஸ் நிறுவனத்தின் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அசுஸ் நிறுவனத்தன் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் வேரியன்ட் இன்டெல் கோர் i9 பிராசஸர் மற்றும் 4K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 18.9மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் லேப்டாப் 1.86 கிலோ எடை கொண்டுள்ளது. 

    சென்புக் ப்ரோ 15 லேப்டாப் சிங்கிள் டீப் டைவ் புளு நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்த அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும் புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    சென்புக் ப்ரோ 15 (UX550GD) சிறப்பம்சங்கள்:

    அசுஸ் சென்புக் ப்ரோ 15 விண்டோஸ் 10 ப்ரோ / விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளங்களில் கிடைக்கிறது. 15.6 இன்ச் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி 1920x1080 பிக்சல் மற்றும் 4K 3840x2160 பிக்சல் பேனல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    புதிய அசுஸ் லேப்டாப் இன்டெல் கோர் i5-8300H / கோர் i7-8750H / கோர் i9-8950H பிராசஸ்ர்கள் மற்றும் 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் கிராஃபிக்ஸ் அம்சங்களை என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050 GPU ( Nvidia GeForce GTX 1050 GPU) மற்றும் 4 ஜிபி ரேம் கவனித்து கொள்கிறது. 



    மெமரியை பொருத்த வரை 1000 ஜிபி/ 512 ஜிபி PCIe SSD மற்றும் 512 ஜிபி/ 256 ஜிபி SATA3 SSD-யுடன் வழங்கப்படுகிறது. லேப்டாப்பில் ஃபுல்-சைஸ் பேக்லிட் கீபோர்டு மற்றும் 1.5மில்லிமீட்டர் கீ டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரெசிஷன் டச்பேடில் விண்டோஸ் ஹெல்லோ சப்போர்ட் கொண்ட கைரேகை சென்சார் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    ஆடியோவை எதிர்பார்ப்போருக்கு சென்புக் ப்ரோ 15 மாடலில் சோனிக்மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம், மைக்ரோபோன் மற்றும் கார்டனா குரல் அங்கீகார வசதி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹார்மன் கார்டன் பிரான்டிங் கொண்டுள்ளது. இ்துடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள விஜிஏ வெப்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்-ஐ சக்தியூட்ட 71Whr 8-செல் லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. 

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை அசுஸ் சென்புக் ப்ரோ 15 மாடலில் இரண்டு யுஎஸ்பி டைப் சி 3.1 ஜென் 2 (தன்டர்போல்ட்) போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி டைப் ஏ 3.1 ஜென் 2 போர்ட்கள், ஒரு ஹெச்டிஎம்ஐ, ஒரு காம்போ ஆடியோ ஜாக், ஒரு மைக்ரோ கார்டு ரீடர் உள்ளிட்டவையும் டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத் 5.0 வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
    ஹெச்பி நிறுவனத்தின் எலைட்புக் 700 G5, ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ஹெச்பி நிறுவனத்தின் எலைட்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் AMD ரைசன் ப்ரோ மொபைல் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன.

    வியாபாரம் மற்றும் அலுவல் ரீதியிலான பணிகளுக்கு என உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய லேப்டாப்களில் தன்டர்போல்ட் டாக் G2 வசதி கொண்டுள்ளது.

    ஹெச்பி எலைட்புக் 700 சீரிஸ் எலைட்புக் 735 G5, எலைட்புக் 745 G5, எலைட்புக் 755 G5 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 13.3 இன்ச் 1366x768, 14 இன்ச் 1920x1080 மற்றும் 15.6 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இவை 2.0 ஜிகாஹெர்ட்ஸ் AMD ரைசன் 7 ப்ரோ 2700U, ரேடியான் வீகா 10 GPU, 2 எம்பி L2 கேச்சி + 4எம்பி L3 கொண்டுள்ளது. 



    விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் 802.11ac + ப்ளூடூத் வயர்லெஸ் மாட்யூல் மற்றும் 4ஜி எல்ட்இ மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இதன் TB3 போர்ட் ஹெப் சமீபத்தில் அறிமுகம் செய்த தன்டர்போல்ட் 3 சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் பேங் மற்றும் லுஃப்சென் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஹெச்டிஎம்ஐ போர்ட், 720 பிக்சல் வெப்கேம், ஆடியோவிற்கு TRRS கனெக்டர், ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் கொண்டுள்ளது. இதேபோன்று ஹெச்பி ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடைலில் மிலிட்டரி ஸ்டேன்டர்டு டெஸ்டிங்-ஐ விரைவில் பூர்த்தி செய்ய இருக்கிறது.

    700 சீரிஸ் போன்றே இந்த லேப்டாப் மாடலிலும் AMD ரைசன் 7 ப்ரோ பிராசஸர், 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. விண்டோஸ் 10 மற்றும் கார்டனா வசதி கொண்டுள்ளது. ஹெச்பி ப்ரோபுக் 645 G4 மாடலின் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் இதன் விலை 759 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.51,114), ஹெச்பி எலைட்புக் 700 சீரிஸ் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.67,277) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×