search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லீரல்"

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    தக்காளியை நாம் பெரும்பாலான உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கிறோம். அதற்கு காரணம் அதில் இருக்கும் சத்துக்கள்தான். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

    இதயநோய், நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்தும் காக்கவும் உதவுகிறது. தக்காளியில் இருக்கும் லைகோபின் புற்றுநோய்க்கு எதிராக போராடும் வலிமை கொண்டதாக விளங்குகிறது. கல்லீரல் புற்றுநோயை தடுக்கவும் தக்காளி உதவுகிறது.

    இதுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் டப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியாங் டங் வாங், ‘‘தக்காளியை சமைத்தோ, ஜூஸாகவோ, சாஸாகவோ தயாரித்து பயன்படுத்தலாம். அதிலிருக்கும் லைகோபின் சிறந்த மருந்து பொருள் போல் செயல்படுகிறது’’ என்கிறார்.

    கொய்யா, தர்பூசணி, திராட்சை, பப்பாளி மற்றும் சிவப்பு குடைமிளகாய் போன்றவற்றிலும் லைகோபின் இருக்கிறது. எனினும் தக்காளியை ஒப்பிடுகையில் அவற்றில் லைகோபினின் அளவு குறைவாகவே இருக்கிறது. மேலும் தக்காளியில் வைட்டமின் இ, சி, தாதுக்கள், போலேட், பீனோலிக் கலவைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் இந்த அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
    கல்லீரல் சுமார் 500 விதமான வேலைகளை செய்கின்றது. அப்படிப்பட்ட கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும். ஆக ஒவ்வொருவரும் கல்லீரலை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    * நீண்ட கால சோர்வு, எப்பொழுதும் மெத்தனமாக இருத்தல்
    * தலைவலி, மூட்டுகளின் வலி, தசைகளில் வலி
    * அதிக வியர்வை, அஜீரணம், வயிற்றுவலி
    * மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மனஉளைச்சல்
    * வாய் துர்நாற்றம், அதிக எடை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப்பெறவும்.
    கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.
    உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ரத்தத்தை சுத்திகரித்தல், ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல் போன்ற முக்கியமான பணியை அது செய்கிறது. கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். முரண்பாடான உணவுகளை சாப்பிடுவது, மரபணு ரீதியான பிரச்சினைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது, நீண்டகால நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற காரணங்களால் கல்லீரல் பலவீனமடைகிறது. ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.

    ஒருசிலருக்கு வயிற்றுப்பகுதியில் திடீரென வீக்கம் தோன்றும். உடல் பருமன், தொப்பை பிரச்சினை காரணமாக அப்படி இருக்கிறது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுவார்கள். வயிற்று பகுதியில் சுரக்கும் ஒருவித திரவம் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் கல்லீரலையும் சேதமடைய செய்துவிடும். அதன்மூலம் கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். ஒருசிலருக்கு கால் பகுதியிலும் வீக்கம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    மஞ்சள் காமாலை நோயால் அவதிப்படுபவர்களின் கல்லீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் சருமம் மஞ்சள் நிறத்திலும், கண்கள் வெள்ளை நிறத்திலும் காட்சியளித்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்திவிடலாம். அடி வயிற்றுக்கு சற்று மேல், வலது பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் அதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாகும்.

    தொடர்ந்து வயிற்று பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதும், நாளடைவில் அடர் மஞ்சள் நிறமாக தோன்றுவதும், மலச்சிக்கல் பிரச்சினையும் கல்லீரலை பாதிக்கும் விஷயங்களாகும். தொடர்ந்து இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு உடல் சோர்வும், மன குழப்பமும் உண்டாகும்.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.

    இதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    அதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    கல்லீரல் ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதி. இதன் மிக முக்கியமான வேலைகளையும், கல்லீரலை பாதுகாக்கும் வழிமுறைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரது உடல் நலம் பல காரணங்களை கூட்டாகக் கொண்டே அமையும். உணவு, தூக்கம், பரம்பரை, சுற்று சூழ்நிலை, உறவுகளின் ஒற்றுமை, சுறுசுறுப்பான அன்றாட வாழ்க்கை. உடல் எந்த அளவு மூச்சுக்களை உடனடியாக வெளியேற்றுகின்றது என்பதை பொறுத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியம் அமைகிறது. இதில் அநேகமானவற்றை நம் கவனம், அக்கறை மூலம் சீராய் வைத்துக் கொள்ள முடியும்.

    நாம் எப்போதும் நம் உடலின் நச்சுப் பொருள் வெளியேற்றம் சீராய் இருக்கின்றதா? என்பதனை கவனிக்கத் தவறி விடுகின்றோம். கல்லீரல் ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதி. 500 வகைகளுக்கும் மேலான வேலையினைச் செய்வது. உடலின் உள் உறுப்புகளில் பெரிதான உறுப்பு. இதன் மிக முக்கியமான வேலைகளில் சிலவையாக.

    பித்த நீர் உற்பத்தி

    * பித்த நீர் தான் கொழுப்பு, புரதம், சில வைட்டமின்கள் இவற்றினை உடைத்து குடல் முலம் உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றது.

    * மெட்டபாலிஸம் எனப்படும் வளர் சிதை மாற்று முறையில் ஹீமோகுளோபினை உடைத்து பிலுரூபின் எனும் புரத உருவாக்கத்திற்கு உதவுகின்றது. வெளிவரும் இரும்பு கல்லீரல் மற்றும் எலும்பு மஞ்ஜையில் சேமிக்கப்பட்டு புது ரத்த செல்கள் உருவாக உதவுகின்றது.

    * உடலில் அடிபட்டு ரத்தம் கசியும்போது அதிக ரத்தம் வெளியேறாமல் ரத்தம் உறைய உதவுகின்றது.

    * ரத்தம் உறைய வைட்டமின் கே சத்தும் அவசியமான ஒன்று. பைல் எனும் பித்த நீர் வைட்டமின் கே உடலில் உறிஞ்சப்பட அவசியமானது.

    * கார்போஹைடிரேட் என்பது மாவு சத்தின் வளர் சிதை மாற்றங்கள். கார்போஹைடிரேட்டுகளை கல்லீரல் உடைத்து க்ளுகோஸாக ரத்தத்தில் சேர்த்து உடலின் அனைத்து செல்களும் சக்தி பெற்று செயல்பட உதவும்.

    * அதிக க்ளுகோஸ் கல்லீரலில் க்ளைகோகனாக சேமிக்கப்பட்டு அவசர நேரத்தில் உடல் செயல்பாட்டிற்கு உதவும்.

    * கல்லீரல் வைட்டமின்கள் ஏ, பி12, சி, டி,,இ.கே தாது உப்புகளான இரும்பு, காப்பர் இவற்றினை சேமித்து வைத்து உணவில் இவற்றில் பற்றாக்குறை ஏற்படும் போது தற்காலிக அவசரத்திற்கு உதவி அளிக்கின்றது.

    * ரத்தத்தினை வடிகட்டி சுத்தம் செய்கின்றது. நச்சுப்பொருட்கள் அதிக ஹார்மோன் போன்ற பல பாதிப்பு ஏற்படும் பொருட்களை வடிகட்டி சுத்தம் செய்து உடலுக்கு அளிக்கின்றது.

    * நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட உதவுகின்றது.

    * உள்உறுப்புகளில் கல்லீரல் ஒன்று தான் காயப்பட்டாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ளது. இப்படி கல்லீரலின் அபார முக்கிய செயல்களை விவரித்துக்கொண்டே செல்லலாம். அதிக உடல் பாதிப்புகளும், ஆல்கஹாலும், பெரிதும் கல்லீரலை பாதித்துவிடும்.

    * வைரஸ் ஹைப்படைடிஸ் ஓ.லி.சி

    * ஆல்கஹால் இல்லாத கொழுத்த கல்லீரல் பாதிப்பு நோய்.

    * அதிக காப்பர் சேர்க்கை.

    * பித்தநீர் குழாய் சீராக இன்மை.

    * க்ளூகோஸ் வளர் சிதை மாற்ற குறைபாடு (பரம்பரை காரணம்).

    * கல்லீரல் தசை தடிப்பு. அதிக சர்க்கரை உண்ணும் பழக்கம்.

    * கிருமிகள் தாக்குதல் போன்றவைகள் கல்லீரல் பாதிப்பிற்கான காரணங்கள் ஆகின்றன. கல்லீரலை பாதுகாக்க

    * அதிக சர்க்கரை உண்பதைத் தவிருங்கள்.

    * இப்பொழு தெல்லாம் ஊசி போடுவது கூட அவரவருக்கு போட்டவுடன் நீக்கப்படுகின்றது. ஆகவே ஊசிகள் மூலம் எந்த தொற்றும் பரவாமல் தடுக்கப்படுகின்றது. கல்லீரல் சரிவர வேலை செய்யவில்லை என்பதனைக் காட்டும் அறிகுறிகள்.

    * மஞ்சள் காமாலை * வயிற்று வீக்கம் வலி * வீங்கிய கால்கள், கணுக்கால், * அரிக்கும் சருமம் * அடர்ந்த நிறம் கொண்ட சிறுநீர் * தார்போல் நிறத்தில் வெளிப்போக்கு * ரத்தம் கசிந்த வெளிப்போக்கு * அதிகசோர்வு * குழப்பம் * மூட்டுவலி * ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். ஆக கல்லீரலை எல்பொழுதும் ஆரோக்யமாக வைத்துக்கொள்வது நம் உடலை பாதுகாக்கும் சிறந்த முறையாகும்.

    தவறான உணவுகளை உட் கொள்வதைத் தவிருங்கள். ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிருங்கள் கெட்ட கொழுப்பு உணவுகளை தவிருங்கள். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு இருதய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அலர்ஜி என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றன. எனவே இவைகளை சிறுவயது முதலே தவிர்த்து விடுங்கள்.

    * காய்கறி சாறு குடியுங்கள்- வெகு எளிதாக கல்லீரலை  காத்துக் கொள்ளும் முறை காய்கறி சாறு குடிப்பது தான். * எலுமிச்சை * வெள்ளரி * தர்பூஸ் * புதினா * கொத்தமல்லி * காரட் * பீட்ருட்* கீரை* முட்டைகோஸ் * இஞ்சி  * பூண்டு * திராட்சை.



    மற்றும்  கடலை பீர்க்கை, சுரைக்காய் போன்ற காய்களில் தினமும் சிலவற்றினை  ஜூஸாக செய்து குடிப்பது கல்லீரலை மிகவும் சிறப்பாக பாதுகாக்கும். மிகவும் எளிதானதும் கூட.

    * பொட்டாசியம் சேர்க்க வேண்டும்- கல்லீரல் பாதிப்பு உடையவர்களுக்கு ரத்தத்தில் பொட்டாஷியம் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்  எனப்படும் கொழுப்பு சேர்ந்த கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கும் பொட்டாஷியம் குறைபாடு ரத்தத்தில் இருப்பதற்கும் தொடர்பு  இருக்கின்றது.

    என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கல்லீரலுக்கு பொட்டாஷிய சத்து கிடைத்தாலே பல முக்கிய வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும்.சிறு நீரக பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனைப்பெற்றே பொட்டாஷியம் சத்தினை அவர் அறிவுரைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * பீன்ஸ் பிரிவுகள் * பீட்ருட் கீரை * சர்க்கரை வள்ளி
    * தக்காளி ஜூஸ் *  வாழைப்பழ-ம் போன்றவை வெகுவாய் உதவும்.
    * மஞ்சளை சமையலில் நன்கு பயன்படுத்துங்கள்.
    *  மது பழக்கத்தினை அடியோடு விட்டு விடுங்கள்.

    இன்சுலின் செயல்பாடு தடை:

    உடலின் செல்களால் ஹார்மோன் இன்சுலினை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகின்றது. இதனை சரிசெய்ய மேலும் இன்சுலின் சுரக்கும். நாளடைவில் உறுப்புகள் பாதிப்பும் ஏற்படுகின்றது. அதிக கார்போஹைடிரேட் உணவு, இனிப்பு இவையெல்லாம் பாதிப்பினை கூட்டுகின்றன.

    இதன் அறிகுறிகளாக * அதிக தாகம் * சிறுநீர் போக்கு *  அதிக பசி * அதிக சோர்வு * பார்வை சரியின்மை * கை, கால்கலில் மதமதப்பு * புண்கள் சீக்கிரம் ஆறாமை * காரணமின்றி எடை குறைதல் * வறட்சியான சருமம் *  எளிதில் கிருமிகள், பூஞ்ஞை பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
    மேலும் இவர்களுக்கு

    * மனச்சோர்வு * இருதய நோய் * அதிக கொழுப்பு * உயர் ரத்த அழுத்தம் * சிறுநீரக நோய் * நரம்பு பாதிப்பு * பக்கவாதம் என மனிதனை உலுக்கி எடுத்து விடுகின்றன.

    சர்க்கரை நோய் பாதிப்பு  ஒரு இரவில் ஏற்படுவதில்லை. ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் உணவு குறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவற்றில் முறையான மாற்றங்களை கொண்டு வந்து கட்டுப்பாட்டில்  சர்க்கரையின் அளவினை கொண்டு வந்துவிடலாம்.
    மேலும் அமைதியான வாழ்க்கை முறை, 8 மணி நேர தூக்கம், தியானம், யோகா இவை இன்றைய ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமாகி விட்டது என்பதனை அறிந்து அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

    பூஞ்ஞை (அ) காளான் தொற்று

    கான்டிடா எனப்படும் பூஞ்ஞை தொற்று உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கலாம். இது உணவுக்குழாயில் பொதுவாக காணப்படும் ஒன்று. இதன் அளவு பெருகும் பொழுது பிரச்சினைகள் உணவு குழாயோடு மற்றும் நிற்காமல் பரவுகின்றன.

    இதனது அதி தீவிர வளர்ச்சி குடல் சுவற்றில் ஒட்டைகளை உருவாக்கு கின்றது. இதனால் நச்சுப் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. சர்க்கரை அளவு மாறுபடுகின்றது. ஹார்மோன்கள் கட்டுப்பாடு பாதிக்கப்படுகின்றது.

    ஏன் இந்த கன்டிடா பூஞ்ஞை அதிக வளர்ச்சி பெறுகின்றது. கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது. அதிக மன அழுத்தம், மது அருந்துவது அவசியம் காரணமாக சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் அதிக அளவினால் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவது போன்றவை இந்த பூஞ்ஞை அதிக உருவாக்க காரணம் ஆகின்றன.

    இதன் அறிகுறிகள்


    * தோல், நகங்களில் தொற்று * மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு * செரிமான பிரச்சினை * பிறப்புறுப்பில் அரிப்பு, தொற்று * இனிப்பு அதிகம் உண்ண ஆசைப்படுவது ஆகியவைகள் ஆகும்.

    இது வந்து விட்டால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். ஆனால் தவிர்ப்பு முறைகளாக

    * தேங்காய் எண்ணெய் உடலில் தடவி குளியுங்கள்
    * அதிக மாவு சத்து உணவுகளைத் தவிருங்கள்
    * இனிப்பு அதிகம் உண்ணாதீர்கள்
    * அன்றாடம் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்
    * பூண்டு உணவில் தினமும் சேருங்கள்
    * பச்சை காய்கறிகள், கீரை உணவுகளை உண்ணுங்கள்.
    கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
    தற்போது அருந்தியதன் காரணமாக, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

    நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது. உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது.

    உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் பரவக்கூடியது ஹெபடைட்டிஸ் ஏ. இந்த வைரஸால் மஞ்சள் காமாலை வரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், சில மாதங்களிலேயே சரி செய்ய முடியும். ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரைலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது.

    ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படும். இதற்குத் தடுப்பூசி கிடையாது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. சமீபத்தில் இதற்கு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்த முடியும்.

    ஆல்கஹாலை கல்லீரல் ‘ஆல்கஹால் டீஹைட்ரோகீனஸ்’ (Alchohol dehydrogenase) என்ற என்சைம் மூலமாகச் செரிமானம் செய்கிறது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும். அந்த நேரத்தில் கல்லீரலின் செயல்திறன் முற்றிலுமாக இழந்து, இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைபவர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், மது அதிகம் அருந்துபவர்களே என்பது முக்கியமான செய்தி.

    ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்கூட, சில சமயங்களில் அதிகக் கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து (Fatty liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 - 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.



    வெகு சிலருக்கு அதிகமாக மது அருந்துவதால், ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் முற்றினால், மூன்றே மாதங்களில் மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தினமும் மது அருந்துபவர்களுக்கு, வயது வித்தியாசமின்றி திடீரென இந்த நோய் தாக்கும்.

    கல்லீரல் சுருக்கம் தடுக்க டிப்ஸ்

    மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. சிலர் வாரத்துக்கு ஒரு முறைதானே மது அருந்துகிறோம் என்று, அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதுவும் தவறு.

     மற்ற உறுப்புகளுக்கு இல்லாத சிறப்பு, கல்லீரலுக்கு உள்ளது. அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது. கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது. எனவே, மது அருந்துபவர்கள், கல்லீரல் பாதிப்பு அடைந்திருக்கிறதா என, முன்கூட்டியே கண்டறிந்து, மதுவைத் தவிர்த்தால், கல்லீரலைப் பாதுகாக்க முடியும்.

    கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test), ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை மூலம், கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும். கல்லீரல் சுருக்கம் நோய்க்கு முந்தைய நிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில்தான், உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிறு வலி போன்றவை ஏற்படும். ஃபைப்ரோசிஸ் நிலையை அறிய, கல்லீரல் பயாப்சி எடுப்பதற்குப் பதிலாக தற்போது ஃபைப்ரோஸ்கேன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும்.

    மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்வதும் கல்லீரலைப் பாதிக்கும். இதையும் தவிர்க்க வேண்டும்.
    நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, குடும்ப உறவுகளின் ஆரோக்கியம், வாழ்வின் சுறுசுறுப்பு, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.

    இவற்றில் நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி  உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

    கல்லீரல் ஜீரண உறுப்புகளின் ஒரு பகுதி 500க்கும் மேற்பட்ட வேலைகளை பார்ப்பது இதன் பொறுப்பு.

    * பித்த நீர் உற்பத்தி செய்து கொழுப்பு, புரதம், போன்ற இவற்றினை உடைத்து குடலில் உடனடி எளிதாய் உறிஞ்ச  உதவுகின்றது.

    * வைட்டமின் கே உறிஞ்சப் பித்த நீர் மிக அவசியமாகின்றது. வைட்டமின் கே இல்லாவிடில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் கூட நிற்காது. ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    * கார் போன்ற டிரேட்டுகளை உடைத்து குளுகோசாக மாற்றி ரத்த ஓட்டத்தில் செலுத்தி திசுக்கள் அதனை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதிக குளுகோஸ்களை கோனாம் கல்லீரலில் சேமிக்கப்பட்ட தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் தாது, உப்புகளை பாதுகாத்து வைக்கின்றது. வைட்டமின் ஏ. பி12, டி, ஈ, கே மற்றும் இரும்பு காப்லர் போன்ற தாது உப்புகளை சேமித்து குறைபாட்டின் போது உதவுகின்றது.

    ரத்தத்தினை வடிகட்டி நச்சினை நீக்கி சுத்திகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது. இப்படி எண்ணற்ற கல்லீரல் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்மைத்தாக்குப் பல நோய்கள் கல்லீரலை பாதிக்கலாம்.

     * வைரஸ் தாக்குதல்

    மதுவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல். மது இல்லாமல் உணவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல். பித்த குழாய்கள் பாதிப்பு கல்லீரல் இறுகுதல், அதிக சர்க்கரை யால் ஏற்படும் பாதிப்பு என பல வகை பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துவதில் சுகாதாரமின்மை பச்சை குத்தி கொள்ளுவதில் சுகாதாரமின்மை ரசாயனங்கள், சர்க்கரை நோய், கூடுதலான எடை பொட்டாசியம் குறைபாடு ஆகியவைகளும் கல்லீரல் குறைபாட்டினை ஏற்படுத்தலாம்,

    மிக அதிகமாக பல்வேறு தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கும் கல்லீரலுக்கும் தாக்கு பிடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா. கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை ஏற்படலாம், வயிற்றில் வலி, வீக்கம் ஏற்படலாம். கால் கணுக்காலில் வீக்கம் ஏற்படலாம்.

    * சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்
    * சிறுநீர் அடர்ந்து இருக்கலாம்
    * ரத்தம் அல்லது கறுநிற  வெளிப்போக்கு இருக்கலாம்.
    * அதிக சோர்வு ஏற்படலாம்.
    * எப்பொழுது தூங்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
    * வயிற்று பிரட்டல், வாந்தி, பசியின்மை இருக்கலாம்.
    * குழப்பமான உணர்வு இருக்கலாம்.

    * மூட்டுவலி, ரத்த கொதிப்பு, மன உளைச்சல் போன்றவைகளும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    இத்தகு பாதிப்புகள் இருப்பின் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. தவிர்ப்பு முறையாக கீழ்க்கண்டவைகளை பின் பற்றலாம்.
    * அதிகம் பதப்படுததப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

    * காய்கறி ஜூஸ் அருந்துங்கள்- காரட், பீட்ரூட், முட்டைகோஸ், புடலை, பீர்க்கை இவைகளில் ஏதேனும் ஜூஸ் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
    எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, இவற்றினையும் ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை, பூண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றினையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருக்க வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், பசலை, கரும்பு ஜூஸ், சர்க்கரை வள்ளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றினை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஆல்கஹாலினை தவிர்த்து விடுங்கள்.

    இஞ்சி, மஞ்சள். பட்டை, லவங்கம் இவற்றினை நம் முன்னோர்கள் நன்கு உணவில் சேர்த்தனர். ஆரஞ்சு பழம், குடை மிளகாய், காரட், வெள்ளரி, ஆப்பிள் இவையும் நவீன விஞ்ஞான ஆய்வின் சிபாரிசாக கல்லீரல் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்படுகின்றது.
    கால்லீரலை பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கல்லீரலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகள் குறித்து பார்ப்போம்.
    உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரல் நோய் பாதிப்பால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கொடிய மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக கல்லீரல் நோய்கள் அமைந்திருக்கின்றன.

    உடலின் செரிமான மண்டலத்தின் முக்கிய அங்கமாக கல்லீரல் விளங்குகிறது. கழிவு பொருட்களை வெளியேற்றுவதிலும், ரத்தத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கல்லீரலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகள் குறித்து பார்ப்போம்.

    பீட்ரூட், அதிக அளவில் பீட்டோ கரோட்டின் நிரம்பப்பெற்றது. இது கல்லீரலின் நலனுக்கு அவசியமானது. அடிக்கடி உணவில் பீட்ரூட்டை சேர்ப்பதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக பராமரித்து வரலாம்.

    பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



    ‘வால்நெட்’ பருப்பு வகைகள் குளுட்டாதையோன் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டவை. அவை கல்லீரலை சுத்தப்படுத்தும் பணிகளையும் செய்யக்கூடியவை.

    கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கேரட் உதவுகிறது. இதில் குளுட்டாதையோன் அதிகம் கலந்திருக்கிறது. பீட்டோ கரோட்டீனும் கலந்திருக்கிறது. இவை கல்லீரலுக்கு நலம் சேர்ப்பவை.

    மஞ்சளும் கிருமி நாசினியாக செயல்பட்டு கல்லீரலை காக்கும் தன்மை கொண்டது. கல்லீரல் நோய் தொற்றுக்கு ஆளாகாமலும், வைரஸ் போன்ற நுண்ணுரியிகளின் தாக்குதலால் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றது. அதனால் தினமும் சிறிதளவு மஞ்சளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    சமையலில் அடிக்கடி ப்ராக்கோலி சேர்த்து வருவதும் அவசியம். இது கல்லீரல் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். 
    ×