search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தகராறு"

    மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாயி ஒருவர் நிலத்தகராறின்போது எதிரியை தடுத்து நிறுத்துவதற்காக பெற்ற தாயை மனித கேடயமாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.#Maharashtra #LandDispute #SonThrewMother
    வாஷிம்:

    மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம், முன்ஷிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் லட்சுமண் ராவத் என்பவருக்கும், கைலாஸ் தால்வி என்பவருக்குமிடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை தாசில்தாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ராவத். அப்போது பிரச்சனைக்குரிய அந்த நிலம் ராவத்துக்கு சொந்தமானது என தீர்ப்பு வந்தது.

    தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால், ராவத் கடந்த 21-ம் தேதி அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது தால்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்து பயிரிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். டிராக்டர் தொடர்ந்து முன்னேறியதால், ஆத்திரமடைந்த தால்வி, தன் தாயாரை டிராக்டரின் முன் தள்ளிவிடுகிறார். இதனால் பயந்துபோன டிரைவர் டிராக்டரை சற்று பின்னோக்கி நகர்த்துகிறார்.

    அதன்பிறகும், தள்ளாடிய நிலையில் இருக்கும் தாயாரை மீண்டும் டிராக்டரின் முன்னால் தூக்கி போடுகின்றனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதேசமயம், ராவத் மற்றும் அவரது தரப்பினர் தால்வியை மரத்தில் கட்டி வைத்ததாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக மாலேகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Maharashtra #LandDispute #SonThrewMother
    தவளக்குப்பத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம்:

    தவளக்குப்பம் ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் ரவி என்ற கோவிந்தராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமாக இடையார் பாளையம் பழைய பாலம் அருகே நிலம் உள்ளது. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்த நோணாங்குப்பம் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ரவி தனது நிலத்துக்கு சென்றார். அப்போது செந்தில்குமார் தனது நிலத்தின் வரப்பில் எப்படி நடந்து வரலாம்? என கேட்டு ரவியிடம் தகராறு செய்தார்.

    இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி ரவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில், ரவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகிறார்கள்.

    மரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.

    ×