search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெதர்லாந்து"

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் பலியாகினர். #NetherlandShooting
    ஹாக்:

    நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.  #NetherlandShooting
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி. #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. 
    இந்நிலையில், உலககோப்பையை வெல்லப் போகும் அணிக்கான போட்டியில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் மோதின.



    இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 - 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.

    உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தார். #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    நெதர்லாந்து நாட்டில் அமெரிக்க மாணவி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Netherland #AmericanStudent #Murder
    ஆம்ஸ்டர்டாம்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் மாணவி, சாரா பாப்பன்ஹெயிம் (வயது 21). இவர் நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்து, இராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வந்தார்.

    இந்த நிலையில் சாரா, தனது அறையில் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு கடந்த புதன்கிழமையன்று தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றபோது அவரது உயிர் பிரிந்திருந்தது. இந்தப் படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சாரா வசித்து வந்த அதே அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் இன்தோவன் ரெயில் நிலையத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

    கொலை செய்யப்பட்ட சாரா, டிரம் இசைக் கலைஞரும் ஆவார், அமெரிக்காவில் மின்னசோட்டாவில் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

    இவரது சகோதரர் ஜோஷ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 21 வயதில் தற்கொலை செய்து கொண்டார். இப்போது சாராவும் கொலை செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்து விட்டது.  #Netherland #AmericanStudent #Murder 
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பெனால்டி ஷுட் முறையில் 4 -3 என்ற கணக்கில் தோற்கடித்த நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Netherlands #Australia
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 6 -0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையே இன்று இரவு நடைபெற்றது.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து வீரர் கிளென் ஷுர்மான் 9வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து, 20வது நிமிடத்தில் நெதர்லாந்தை சேர்ந்த சிவி வான் ஆஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் நெதர்லாந்து 2 -0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 45வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் ஹோவர்டு தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இறுதிவரை போராடிய ஆஸ்திரேலிய வீரர்கள், ஆட்டத்தின் இறுதி வினாடியான 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தேர்வு செய்ய பெனால்டி ஷூட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெனால்டி ஷுட் முறை இந்த போட்டியில்தான் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018 #Netherlands #Australia
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    உலக கோப்பை ஹாக்கி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018 #Netherlands

    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று வெளியேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல்ணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகியவை தகுதி பெற்றன. அரை இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதுவரை கோப்பையை பெறாத இங்கிலாந்து அணி 2-வது முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெல்ஜியம், இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும்.

    மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கடந்த உலக கோப்பை (2014) இறுதிப் போட்டியில் ஆஸ்ரேலியாவிடம் நெதர்லாந்து தோற்றது.

    அதற்கு பலி தீர்க்க நெதர்லாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #HockeyWorldCup2018 #Netherlands

    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. #HockeyWorldCup2018 #India #Netherlands
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 12வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் முதல் கோல் அடித்து முன்னிலை வகிக்க உதவினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நெதர்லாந்து வீரர் தெய்ரி பிரிங்மேன் 19வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை ஆனது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மிங்க் வான் டான் வெய்ர்டன் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2 - 1 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், நெதர்லாந்து அணி இந்தியாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் தோற்றதன் மூலம் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. #HockeyWorldCup2018 #India #Netherlands
    உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018
    புவனேஸ்வரம்:

    14-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது சுற்றில் அந்த அணி கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்குள் கால் பதித்தது. தற்போதைய உலக தரவரிசையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அணியை (5-வது இடம்) விட நெதர்லாந்து அணி (4-வது இடம்) ஒரு இடம் தான் முன்னணியில் உள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 105 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 48 முறையும், இந்திய அணி 33 தடவையும் வென்று இருக்கின்றன. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

    நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் எங்களுக்கு எதிராக நெதர்லாந்து அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் சமீப காலங்களில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தோம். இந்திய  ஹாக்கி அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும்.’ என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘130 கோடி இந்திய மக்களின் விருப்பம் என்னவோ? அது தான் எங்களுடைய விருப்பமாகும். இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கிறார்கள். நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    நெதர்லாந்து அணியின் கேப்டன் பில்லி பாக்கெர் கூறுகையில், ‘ஆட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் எப்பொழுதும் நாங்கள் எங்களுக்குரிய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. எங்களை விட இந்திய அணிக்கு அதிக நெருக்கடி இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

    முன்னதாக மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018
    உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தைப்பிடிக்கும் அணிகள் ‘கிராஸ் ஓவர்’ என அழைக்கப்படும் 2-வது சுற்றுக்கு நுழையும். கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.

    9-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிந்தது. அதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, ஆகிய 4 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    கிராஸ் ஓவர் ஆட்டம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடந்தது. இதன் முடிவில் நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், கனடா, சீனா, நியூசிலாந்து அணிகள் வெறியேற்றப்பட்டன.

    கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் மோது கின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை (13-ந்தேதி) எதிர்கொள்கிறது.

    1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், 5-1 என்ற கணக்கில் கனடாவையும் வீழ்த்தியது. 2-2 என்ற கணக்கில் பெல்ஜியத்துடன் ‘டிரா’ செய்தது.

    3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தது. 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும், 7-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது. கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும். #HockeyWorldCup2018
    நெதர்லாந்து - கனடா அணிகள் நாளை மோத உள்ள நிலையில் நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் கால் இறுதி ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவுடன் மோத வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    புவனேஷ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். கடைசி இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்படும்.

    மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கோல்கள் அடிப்படையில் இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதேபோல அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மீதியுள்ள 4 அணிகள் 2-வது சுற்று மூலம் நுழையும்.

    கிராஸ் ஓவர் என்று அழைக்கப்படும் 2-வது சுற்றில் பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து- நியூசிலாந்து. பிரான்ஸ், சீனா அணிகளும், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான், நெதர்லாந்து, - கனடா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து- கனடா மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 13-ந்தேதி நடக்கிறது.

    நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணி வெற்றி பெறலாம். இதனால் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோத அதிகமான வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியை 4 -1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Germany #Netherlands
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 13-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மிர்கோ புருஜ்சர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். 

    அதன்பின்னர் ஜெர்மனி அணி ஆட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டது. ஜெர்மனி வீரர் மதியாஸ் முல்லர் 30வது நிமிடத்திலும், லூகாஸ் விண்ட்பெடர் 52வது நிமிடத்திலும், மார்கோ மில்டாகு 54 வது நிமிடத்திலும், கிறிஸ்டோபர் ரூர் 58வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், நெதர்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜெர்மனி காலிறுதிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது. #HockeyWorldCup2018 #Germany #Netherlands
    ×