search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஸ்சி"

    லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்சியின் 51-வது ஹாட்ரிக் கோலால் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என வீழ்த்தியது பார்சிலோனா. #Laliga #Messi
    லா லிகா கால்பந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆட்டத்தின் 18-வது நமிடத்தில் ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை பதிவு செய்தார். முதல் பாதி நேரம் முடிவடைவதற்கு சற்று முன் (45+2) 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் சுவாரஸ் கோல் அடித்தார். 82-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் லோரென் மொரோன் கோல் அடித்தார். மெஸ்சி 85-வது நிமிடத்தில் 3-வது கோல் அடித்தார்.

    இதனால் பார்சிலோனா 4-1 என வெற்றிபெற்றது. மெஸ்சி இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் தனது 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்துள்ளார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் 2-வது லெக்கில் லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. #UCL #Barcelona
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லியோன் அணிகள் மோதின. லியோன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.

    சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது நிமிடத்தில் லியோன் அணியின் லூகாஸ் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். 81-வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்காய் ஒரு கோலும், 86-வது நிமிடத்தில் டெம்பேல் ஒரு கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    லா லிகா கால்பந்து லீக்கில் கெடாபி அணியை 2-1 என வீழ்த்தி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது பார்சிலோனா #Barcelona #LaLiga
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து லீக்கான லா லிகாவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கெடாபி சிஎஃப் - எஃப்சி பார்சிலோனா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோலை பதில் செய்தார். 39-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான சுவாரஸ் ஒரு கோல் அடித்தார். 43-வது நிமிடத்தில் கெடாபி அணியின் மேட்டா கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேர ஆட்டத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது.



    அதேவேளையில் அட்லெடிகோ டி மாட்ரிட் - செவியா எஃப்சி இடையிலான ஆட்டம் 1-1 டிராவில் முடிந்தது. இதனால் பார்சிலோனா 18 ஆட்டத்தில் 12 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி மூலம் 40 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அட்லெடிகோ டி மாட்ரிட் 18 ஆட்டங்களில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 35 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. செவியா எஃப்சி 33 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 30 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 68 போட்டியில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி, ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார். #Messi
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் விளையாடும் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்க ஷூ வழங்கப்படும். 2017-18 சீசனில் பார்சிலோனாவின் மெஸ்சி, லிவர்பூல் அணியின் முகமது சாலா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருக்கிடையே தங்க ஷூவை பெற கடும் போட்டி நிலவியது.

    இறுதியில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி தங்க ஷூவை தட்டிச் சென்றார். மெஸ்சி இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்கள் அடித்திருந்தார்.

    தங்க ஷூவை வென்ற மெஸ்சி இதுபற்றி கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் கால்பந்து போட்டியை தொடங்கும்போது இது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை மீண்டும் பெறுவேன் என்று நினைத்தது கிடையாது’’ என்றார்.
    ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளைாடினால் போதுமா? இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார். #Messi #Ronaldo
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சிக்கும், போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோவிற்கும் எதிராகத்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. லி லிகா தொடரில் மெஸ்சி பார்சிலோனாவிற்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். கடும் போட்டி நிலவும்.

    ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.



    அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.

    மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
    கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை முதன்முறையாக லூகா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். #BallondOr
    பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரசுரிக்கப்படும் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்தோறும் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இதில் விருதிற்கு கடந்த 10 வருடமாக ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களை வேறு எந்த வீரர்களும் நெருங்க முடியாத நிலை இருந்தது. இந்த விருதை கடந்த 2008-ல் இருந்து மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர்தான் வாங்கிக் கொண்டிருந்தனர்.



    இந்த வருடம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதனால் கிளப் போட்டிகளுடன் உலகக்கோப்பை போட்டிகளும் கணக்கிடப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனும், மிட்பீல்டரும் ஆன லூகா மோட்ரிச் இந்த முறை முன்னணியில் திகழந்தார்.



    ஏற்கனவே, பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற லூகா மோட்ரிச் பலோன் டி’ஆர் விருதையும் தட்டிச் சென்றார். கடந்த 2007-ம் ஆண்டு பிரேசில் வீரர் காகா பலோன் டி’ஆர் விருதை கைப்பற்றிய பின்னர், 2008-ல் இருந்து 2017 வரை மெஸ்சியும், ரொனால்டோவும் 10 வருடம் கோலோச்சியிருந்தனர். அவர்களின் சாதனைகளுக்கு லூகா மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் முன்னணி அணியான பார்சிலோனாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து ரியல் பெட்டிஸ் 4-3 என வீழ்த்தியது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. சில போட்டிகளில் இடம்பெறாமல் இருந்த மெஸ்சி இந்த ஆட்டத்தில் இடம்பிடித்திருந்தார்.

    ஆட்டம் தொடங்கியது முதலே ரியல் பெட்டிஸ் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் ஜூனியர் ஃபிர்போ கோல் அடித்தார். 34-து நிமிடத்தில் ஜோக்குயின் கோல் அடித்தார். இதனால் ரியல் பெட்டிஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா வீரர்கள் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் செல்சோ கோல் அடித்தார். இதனால் 3-1 என ரியல் பெட்டிஸ் முன்னணி பெற்றது.



    79-வது நிமிடத்தில் விடால் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-3 என பின்தங்கியிருந்தது. அடுத்த 4-வது நிமிடத்தில் ரியல் பெட்டிங் அணியின் செர்ஜியோ கானலெஸ் கோல் அடித்தார். இதனால் 2-4 என பார்சிலோனா பின்தங்யிருந்தது.

    அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்ட நேரம் நிறுத்தம் ஆகியவற்றிற்கான கூடுதல் நேரத்தில், 92-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் ரியல் பெட்டிஸ் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.
    லா லிகா புள்ளிகள் தரவரிசையில் நடப்பு சாம்பியன் ஆன பார்சிலோனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. #LaLiga #Barcelona
    லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே வாலன்சியா அணியின் கரேய் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்சிலோனா கேப்டன் மெஸ்சி 23-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 சமநிலை ஆனது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.



    இந்த போட்டியை பார்சிலோனா டிரா செய்ததால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 8 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.



    செவியா 8 போட்டியில் 5 வெற்றி, 1 டிரா, இரண்டு தோல்விகள் மூலம் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரியால் மாட்ரிட் நான்கு வெற்றி, தலா இரண்டு டிரா, தோல்வியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஆன பீலே, தனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். #Messi #Ronaldo #Pele
    கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்பவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார். நான் அணியை தேர்வு செய்தால் மெஸ்சிக்குதான் இடம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).



    நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
    சர்வதேச அணியில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்க மெஸ்சிக்கு நேரம் கொடுக்க வேண்டும் என அர்ஜென்டினா முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். #Messi
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. உலகக்கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா காலிறுக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனாக மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மெஸ்சி தனது சர்வதேச கால்பந்து விளையாட்டு குறித்து ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச போட்டி குறித்து முடிவு எடுக்க மெஸ்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அர்ஜென்டினா வீரர் சேவியர் சவியோலா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவியர் சவியோலா கூறுகையில் ‘‘ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் நாம் எதிர்பார்த்தபடி அர்ஜென்டினா அணி விளையாடவில்லை என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். மெஸ்சிக்கு சற்று ஓய்வு தேவை. அர்ஜென்டினா அணிக்காக விளையாட விரும்புகிறாரா? என்பதை முடிவு செய்ய அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அணிக்கு திரும்புவது அவரது சொந்த விஷயம்’’ என்றார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார். #Messi #Ronaldo
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.

    எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.

    சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். #Messi #Barcelona
    கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவும். இருவரும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.



    இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.



    யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
    ×