search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிட்னி"

    மகாராஷ்டிர மாநிலத்தில் இந்து, முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவன்மார்களை காப்பாற்றுவதற்காக தங்கள் கிட்னிகளை மாற்றி தானம் செய்துள்ளனர். #KidneyDonate
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நதீம் கடந்த 4 ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது. இதற்காக அவர் மும்பையில் உள்ள சாய்பி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

    இதே போல் அந்த ஆஸ்பத்திரியில் பீகாரைச் சேர்ந்த ராம்ஸ்வரத் யாதவ் என்பவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை மனைவி சத்யதேவி கவனித்து வந்தார்.

    நதீமுக்கும் அவரது மனைவி நஸ்ரீனும், ராம்ஸ்வரத்துக்கு அவரது மனைவி சத்யதேவியும் கிட்னி (சிறுநீரகம்) தானம் செய்ய முன் வந்தனர். ஆனால் அவர்களுக்குள் ரத்த பிரிவு ஒத்துப் போகவில்லை.

    அப்போது நதீமுக்கு சத்யதேவியின் ரத்த பிரிவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரின் ரத்தபிரிவும் ஒத்துப் போனது. இதனால் நதீமுக்கு சத்யதேவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரினும் கிட்னி கொடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.



    இதனை இரு குடும்பத்தினரும் ஏற்க சம்மதித்தனர். அதன்படி ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு கிட்னியை தானமாக கொடுத்தனர். இதையடுத்து ஆபரேசன் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

    இவ்வாறு இந்து, முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவன்மார்களை காப்பாற்றுவதற்காக கிட்னிகளை மாற்றி தானம் செய்திருப்பது மத ஒற்றுமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.  #KidneyDonate
    ஐபோன் வாங்க ஆசைப்பட்டு ஒரு கிட்னியை விற்ற இளைஞர், தற்சமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #IPhone
    சீனாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வாங் என்ற இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, அதை வாங்க வழியில்லாமல் சோகத்தில் இருந்து வந்தார்.

    ஐபோன் மீது கொண்ட மோகத்தாலும், நண்பர்களின் பேச்சைக்கேட்டும் 2011 ஆம் ஆண்டு தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முன் வந்தார். தனது ஒரு சிறுநீரகத்தை 3,200 அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். கிடைத்த பணத்தில் தனது கனவு பொருளான புதிய ஐபோனையும் வாங்கினார்.


    உடலில் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில், நாளடைவில் வாங்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    அப்போதுதான் அவருக்கு அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததும், இதனால் தொற்று ஏற்பட்டதால் அவரின் மற்றொரு சிறுநீரகம் பாதிப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாங்கின் பெற்றோர் அவரது உயிரை காப்பாற்ற டயாலிசிஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான செலவுக்கு தேவையான பணம் திரட்ட முடியாமல் பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் தற்போது பரிதவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான செய்தி சமீப காலமாக சீன ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும் இதுபோல் உடலுறுப்பு தானம் மூலம் தங்களது தேவைகளை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். #IPhone
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இக்பால் என்ற 60 வயது முதியவரின் கிட்னியை மருத்துவர் விபு கார்க் திருடியுள்ளார்.

    இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் விபு கார்க் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ள உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறையினர், அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டள்ளதாக சிறப்பு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக இக்பால் என்ற 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் விபு கார்க், நோயாளிக்கு தெரியாமல் அவரது கிட்னியை திருடியுள்ளார். இதனை அறிந்த இக்பாலின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக மருத்துவர் விபு கார்க் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×