என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 120269
நீங்கள் தேடியது "கே.எஸ்.ராதாகிருஷ்ணன்"
கேரளாவில் காங்கிரஸ் ஆதரவாளரான முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார். #BJP #Radhakrishnan
திருவனந்தபுரம்:
கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடக்கிறது.
கேரளாவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இப்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் கணக்கை தொடங்கி விட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக கட்சி சார்பற்ற பிரமுகர்களை வளைத்து தேர்தலில் நிறுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.
அதன்படி பிற கட்சிகளில் இருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார்.
இவர் கேரள பப்ளிக்சர்வீஸ் கமிஷன் முன்னாள் தலைவரான இவர் காலடியில் உள்ள ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆவார்.
முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் பக்தர்கள் மத்தியில் அறிமுகமானவர்.
எனவே இவரை ஆலப்புழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது இவரது பெயரும் பட்டியலில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. #BJP #Radhakrishnan
கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடக்கிறது.
கேரளாவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இப்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் கணக்கை தொடங்கி விட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக கட்சி சார்பற்ற பிரமுகர்களை வளைத்து தேர்தலில் நிறுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.
அதன்படி பிற கட்சிகளில் இருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார்.
இவர் கேரள பப்ளிக்சர்வீஸ் கமிஷன் முன்னாள் தலைவரான இவர் காலடியில் உள்ள ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆவார்.
முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் பக்தர்கள் மத்தியில் அறிமுகமானவர்.
எனவே இவரை ஆலப்புழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது இவரது பெயரும் பட்டியலில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. #BJP #Radhakrishnan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X