search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எத்தியோப்பியா"

    எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்-8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதற்கு முன்னர் நடந்த மற்றொரு விபத்திலும் தொடர்புடைய முக்கிய காரணத்தை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். #Ethiopian737Crash #EthiopiaplaneCrash #Ethiopian737Crashevidence
    நியூயார்க்:

    எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் கடந்த பத்தாம் தேதி காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.

    வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. பின்னர், அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 பணியாளர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள குரல் பதிவுகளின் அடிப்படையில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    இதற்கிடையில், விபத்துக்குள்ளான இந்த விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறு தடயத்தின் அடிப்படையில் இந்த கோர விபத்துக்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம் என விமானப் போக்குவரத்து துறை சார்ந்த வல்லுனர்களும், பொறியாளர்களும் தீர்மானித்துள்ளனர்.



    பொதுவாக, நவீனகால போயிங் ஜெட் ரக விமானங்கள் விண்ணில் உயரக்கிளம்பி பறக்கும்போதும், மிருதுவாக தரையிறங்கும்போதும் வால் பகுதியில் உள்ள ‘ஸ்டேபிலைசர்ஸ்’ என்னும் சமநிலைப்படுத்தும் கருவிகள்தான் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதியை தாழ்த்தவும், உயர்த்தவும் உந்துசக்தியாக செயல்படுகின்றன.

    இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியில் பொருத்தப்பட்டுள்ள இரு சென்சார்களில் இருந்து வெளியேற்றப்படும் அதிர்வலைகள் விமானத்தின் மூக்குப்பகுதியை இயக்கி உயரக்கிளம்பவும், தாழ்ந்து இறங்கவும் தேவையான பணியை செய்கிறது.

    போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களில் உள்ள இந்த தானியங்கி ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவிகள் விமானத்தின் மூக்குப்பகுதியை 10 வினாடிகளில் 2.7 டிகிரி செங்குத்தான கோணத்தில் தரையை நோக்கி திசை திருப்புவதாக முன்னர் தெரியவந்தது. இந்த வேகம் மிக அதிகமானது என கூறப்படுகிறது.

    இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கி 189 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த லயன் ஏர் விமான விபத்திலும் இதேபோல் நிகழ்ந்துள்ளது.

    இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் விமானிகள் மிக அதிகமான வேகத்தில் தரையை நோக்கி தாழ்ந்து செல்லும் மூக்குப்பகுதியை நிலைப்படுத்த முயன்றுகொண்டிருக்கும்போதே அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய தகவல் அவ்விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த விமானிகளின் குரல் பதிவின் மூலம் முன்னர் தெரியவந்தது.

    இதேநிலை எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8  விமானத்துக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த ஆதாரம் இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ’ஜேக்ஸ்குரு’ என்ற பாகத்தின் மூலம் கிடைத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    வால் பகுதியில் இருந்து மூக்குப்பகுதியை இயக்கும் இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியின் தவறான செயல்பாட்டால் எத்தியோப்பியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்புவதற்கு தேவையான முக்கிய ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.

    எனினும், எத்தியோப்பியா விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள விமானிகளின் கடைசி நிமிடக் குரல் பதிவுகளும் இந்த கருத்தை உறுதிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Ethiopian737Crash  #EthiopiaplaneCrash  #Ethiopian737Crashevidence
    கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் என்ற பயணி விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். #AntonisMavropoulos #EthiopianAirline
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அவர் விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.



    இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. விமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.  #AntonisMavropoulos #EthiopianAirline   #Boeing737MAX8
    எத்தியோப்பியாவில் இந்திய பிணைக்கைதிகள் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். #Ethiopia #IndianEmployees #Released
    மும்பை:

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ‘இன்பிராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ்’ என்ற இந்திய நிறுவனம் அந்நாட்டில் பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் திடீரென நலிந்து போனதால் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தியோப்பிய தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஒரோமியா மற்றும் அம்ஹாரா ஆகிய மாகாணங்களில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டனர். தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் மட்டுமே அவர்களை விடுவோம் என்றும் கூறி வருகின்றனர்.

    இதனிடையே இந்திய தொழிலாளர்கள் 7 பேரும் போதிய உணவு வழங்கப்படாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டி என்னும் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். இருவரும் சிகிச்சைக்காக தலைநகர் அடிஸ் அபாபா நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுபற்றி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் மற்ற 5 பேரும் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். 
    எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர்.

    ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. #Accident
    எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #EthiopiaViolence #IndianExecutiveKilled
    அடிஸ் அபாபா:

    நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார்.

    நேற்று மாலை அடிஸ் அபாபாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தீப் கம்ரா, இரண்டு ஊழியர்களுடன் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தீப் கர்மா, அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

    அடிஸ் அபாபா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. பிப்ரவரி மாதம் பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து நாட்டில் அவசர நிலையும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  #EthiopiaViolence #IndianExecutiveKilled
     
    ×