search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம்"

    ஆவடியில், ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்தது. எனவே மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #ATMRobbery
    ஆவடி:

    ஆவடி எச்.வி.எப். சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி, பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் அருகேயே அதன் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உள்ளன.

    இந்த ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளி கிடையாது. நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாரிகள் யாரும் வங்கியில் இல்லை. போன் மூலம் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனரா?. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா?. அல்லது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பியபோது சரியாக பூட்டாமல் சென்றதால் தானாகவே திறந்து கொண்டதா? என அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும் இன்று(திங்கட் கிழமை) வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து பார்த்தபிறகுதான், நடந்தது என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   #ATMRobbery #Tamilnews
    கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். #ATMRobbery
    கோவை:

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை நகரில் 250 ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஒண்டிப்புதூரை சேர்ந்த தாஜுதீன் (வயது 30), ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (26) ஆகிய 2 பேர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது தனியார் வங்கிக்கு சொந்தமான காந்திபுரம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்ட ரூ.21 லட்சத்து 99 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் அந்த 2 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 முறை தாஜுதீனும், ஆரோக்கிய தாசும் பணத்தை நிரப்பிய பிறகு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    அவர்கள் 2 பேரும் ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஜெகதீசன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவிய அக்பர் அலி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மூலம் செய்து வந்தோம். கோவையில் உள்ள 250 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவோம். தினமும் அதிகளவில் பணத்தை பார்க்கும்போது பணத்தின் மீது ஆசை வந்தது.

    எனவே ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை எடுத்து ஆடம்பரமாக வாழ முடிவு செய்தோம். நாங்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு செல்வோம். அடிக்கடி பணம் வைக்க செல்வதால் அங்கு பணியில் இருக்கும் காவலாளிக்கு எங்கள் மீது சந்தேகம் வராது. அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்ப்பதுபோல் ஷட்டரை மூடிவிடுவோம். இதனால் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட மாட்டார்கள்.

    எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண் மூலம் திறந்து பணத்தை எடுத்துவிடுவோம். உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எந்திரத்தில் உள்ள டிரேயில் பண அளவை மாற்றி வைத்துவிடுவோம். ஒரு மாதத்தில் ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை கையாடல் செய்தோம். இந்த நிலையில்தான் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசில் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
    புதுக்கோட்டையில் பெண்ணிடம் ஏ.டி.எம். எண்ணை பெற்று பணத்தை நூதன முறையில் திருடிய நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 46). இவர் திருவரங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் ஒருவர் நான் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்களது வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. இதனால் ஏ.டி.எம். எண்ணை கொடுக்குமாறு லட்சுமியிடம் கூறினார். 

    இதையடுத்து அவர் வங்கி ஏ.டி.எம். எண்ணை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் 2 தவணையாக லட்சுமி வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மனு கொடுத்துள்ளார். பின்னர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நெதர்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை கொண்டு யூரோக்களை க்ரிப்டோகரென்சிகளாக மாற்ற முடியும்.




    நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

    சோதனை அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு நிறுவப்பட்டிருக்கும், இந்த ஏடிஎம் பயணாளிகளின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் நீ்ட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஐரோப்பியாவில் இது போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தெரிவித்திருக்கிறது. 

    ஸ்கிபோல் விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர் தன்ஜா டிக் கூறும் போது, “பயணாளிகளுக்கு தலைசிறந்த சேவையை வழங்க ஸ்கிபோல் தொடர்ந்து புதுவித மற்றும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சிக்கிறது என தெரிவித்தார். 
    “பிட்காயின் ஏடிஎம் மூலம் பயணர்கள் தங்களின் யூரோக்களை சர்வதேச க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். இது பலருக்கும் பயன்தரும் வகையில் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 



    புதிய ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் பிவி (ByeleX Data Solutions BV) எனும் தட்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது.

    உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலிய விமான நிலையம் அறிமுகம் செய்தது. மே மாத வாக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. 

    பல்வேறு வியாபார நிறுவனங்களும் விர்ச்சுவல் கரென்சிக்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், க்ரிப்டோகரென்சிக்களை கொண்டே உலகை சுற்றி வருவது மிகவும் எளிமையாகிவிட்டது.
    கேட்டதை விட ஐந்து மடங்கு அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம்.மை பொதுமக்கள் முற்றுகையிட போலீசாருக்கு விஷயம் தெரிந்து வருவதற்குள் 2 லட்சம் ரூபாய் காலியாகியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் என்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சிறிது அதிர்ச்சியடைந்தாலும் அவர் தனது நண்பர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து, அப்பகுதியில் இந்த செய்தி பரவ அனைவரும் ஏ.டி.எம் கார்டுடன் ஏ.டி.எம்.மை முற்றுகையிட்டனர். ஆயிரம் கேட்டவருக்கு 5 ஆயிரம், 4 ஆயிரம் கேட்டவருக்கு 20 ஆயிரம் என ஐந்து மடங்கு அதிகமாக பணத்தை அள்ளி கொடுத்துள்ளது இயந்திரம்.

    தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதற்குள்ளாக இயந்திரத்தில் இருந்த 2 லட்சம் ரூபாயும் காலியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். அறையை பூட்டினர். சாப்ட்வேர் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. சிசிடிவி மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்டு தகவல்களை அடிப்படையாக கொண்டு யார் பணம் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot
    ×