search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காளபரமேஸ்வரி"

    பெண்ணாடம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் ஊர்வலமாக வெள்ளாற்றங்கரை மயானத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு மயானக்கொள்ளை நடைபெற்றது. முன்னதாக பொதுமக்களை முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மயானக்கொள்ளை உற்சவம் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி, கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் கோவில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்படுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வீதி உலாவும் நடைபெறுகிறது. இதில் நாளைமறுநாள் (1-ந்தேதி) இரவு 7 மணிக்கு 3 முக இருளகண்டனுடன் அம்மன் வீதி உலாவும், 2-ந்தேதி இரவு பூவாலை கப்பரையுடன் அம்மன் வீதிஉலாவும், 3-ந்தேதி அக்னி கரகத்துடன் அன்னவாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை உற்சவம் 6-ந்தேதி காலை 11.30 மணிக்கு மேல் நடக்கிறது. 8-ந்தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடந்தது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளினார்.

    இதையடுத்து பூசாரிகள் தாலாட்டு பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும் மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 
    அங்காளபரமேஸ்வரிக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.
    1. ஓம் அங்காள அம்மையே     போற்றி
    2. ஓம் அருளின் உருவே     போற்றி
    3. ஓம் அம்பிகை தாயே     போற்றி
    4. ஓம் அன்பின் வடிவே     போற்றி
    5. ஓம் அனாத ரட்சகியே     போற்றி
    6. ஓம் அருட்பெருந்ஜோதியே     போற்றி
    7. ஓம் அன்னப்பூரணியே     போற்றி
    8. ஓம் அமுதச் சுவையே     போற்றி
    9. ஓம் அருவுரு ஆனவளே     போற்றி
    10. ஓம் ஆதி சக்தியே     போற்றி
    11. ஓம் ஆதிப்பரம் பொருளே      போற்றி
    12. ஓம் ஆதிபராசக்தியே     போற்றி
    13. ஓம் ஆனந்த வல்லியே     போற்றி
    14. ஓம் ஆன்ம சொரூபினியே     போற்றி
    15. ஓம் ஆங்காரி அங்காளியே     போற்றி
    16. ஓம் ஆறுமுகன் அன்னையே     போற்றி
    17. ஓம் ஆதியின் முதலே     போற்றி
    18. ஓம் ஆக்கு சக்தியே     போற்றி
    19. ஓம் இன்னல் களைபவளே     போற்றி
    20. ஓம் இடர்நீக்குபவளே     போற்றி
    21. ஓம் இமயத்து அரசியே     போற்றி
    22. ஓம் இச்சா சக்தியே     போற்றி
    23. ஓம் இணையிலா தெய்வமே     போற்றி
    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே     போற்றி
    25. ஓம் இயக்க முதல்வியே     போற்றி
    26. ஓம் இறைவனின் இறைவியே     போற்றி
    27. ஓம் இகம்பர சுகமே     போற்றி
    28. ஓம் ஈசனின் தாயே     போற்றி
    29. ஓம் ஈஸ்வரி தாயே     போற்றி
    30. ஓம் ஈகைப் பயனே     போற்றி
    31. ஓம் ஈடில்லா தெய்வமே     போற்றி
    32. ஓம் ஈசனின் பாதியே     போற்றி
    33. ஓம் ஈஸ்வரி அங்காளியே     போற்றி
    34. ஓம் ஈசனின் இயக்கமே     போற்றி
    35. ஓம் ஈஸ்வரி ஆனவளே     போற்றி
    36. ஓம் ஈகை குணவதியே     போற்றி
    37. ஓம் உண்மை பொருளே     போற்றி
    38. ஓம் உலகை ஈன்றாய்     போற்றி
    39. ஓம் உலகில் நிறைந்தாய்     போற்றி
    40. ஓம் உருவம் ஆனாய்     போற்றி
    41. ஓம் உமை அம்மையே     போற்றி
    42. ஓம் உயிரே வாழ்வே     போற்றி
    43. ஓம் உயிராய் இருப்பாய்     போற்றி
    44. ஓம் உடலாய் அமைந்தாய்     போற்றி
    45. ஓம் உமாமகேஸ்வரியே     போற்றி
    46. ஓம் ஊனுயிர் ஆனாய்     போற்றி
    47. ஓம் ஊக்கம் அருள்வாய்     போற்றி
    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய்     போற்றி
    49. ஓம் ஊரைக்காப்பாய்     போற்றி
    50. ஓம் ஊழலை ஒழிப்பாய்     போற்றி
    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய்     போற்றி
    52. ஓம் ஊடல் நாயகியே     போற்றி
    53. ஓம் ஊழ்வினை களைவாய்     போற்றி
    54. ஓம் ஊற்றும் கருணை மழையே     போற்றி
    55. ஓம் எங்கும் நிறைந்தாய்     போற்றி
    56. ஓம் எங்களை காப்பாய்     போற்றி
    57. ஓம் எண்குண வல்லி     போற்றி
    58. ஓம் எழில்மிகு தேவி     போற்றி
    59. ஓம் ஏழிசைப் பயனே     போற்றி
    60. ஓம் ஏகம்பன் துணைவியே     போற்றி
    61. ஓம் ஏகாந்த ரூபிணியே     போற்றி
    62. ஓம் ஏழையை காப்பாய்     போற்றி
    63. ஓம் ஐங்கரன் தாயே     போற்றி
    64. ஓம் ஐயனின் பாகமே     போற்றி
    65. ஓம் ஐயம் தெளிந்தாய்     போற்றி
    66. ஓம் ஐம்பொறி செயலே     போற்றி
    67. ஓம் ஐம்புலன் சக்தியே     போற்றி
    68. ஓம் ஒருமாரி உருமாரி     போற்றி
    69. ஓம் ஒன்பான் சுவையே     போற்றி
    70. ஓம் ஒலி ஒளி ஆனாய்     போற்றி
    71. ஓம் ஒப்பில்லா சக்தியே     போற்றி
    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய்     போற்றி
    73. ஓம் ஒங்காரி ஆனாய்     போற்றி
    74. ஓம் ஒங்காரி அங்காளி     போற்றி
    75. ஓம் ஓம்சக்தி தாயே     போற்றி
    76. ஓம் ஒருவாய் நின்றாய்     போற்றி
    77. ஓம் ஒங்கார சக்தியே     போற்றி
    78. ஓம் கல்விக் கடலே     போற்றி
    79. ஓம் கற்பூர வல்லியே     போற்றி
    80. ஓம் கந்தன் தாயே     போற்றி
    81. ஓம் கனகாம்பிகையே      போற்றி
    82. ஓம் கார்மேகன் தங்கையே     போற்றி
    83. ஓம் காளி சூலியே     போற்றி
    84. ஓம் காக்கும் அங்காளியே     போற்றி
    85. ஓம் சங்கரி சாம்பவியே     போற்றி
    86. ஓம் சக்தியாய் நின்றாய்     போற்றி
    87. ஓம் சாந்தவதியே     போற்றி
    88. ஓம் சிவகாம சுந்தரியே     போற்றி
    89. ஓம் சினம் தணிப்பாய்     போற்றி
    90. ஓம் சிங்க வாகனியே     போற்றி
    91. ஓம் சீற்றம் கொண்டாய்     போற்றி
    92. ஓம் சுந்தரவல்லி     போற்றி
    93. ஓம் சூரசம்காரி     போற்றி
    94. ஓம் தாண்டவ ஈஸ்வரி     போற்றி
    95. ஓம் தாட்சாயணிதேவி     போற்றி
    96. ஓம் திரிபுரசுந்தரி     போற்றி
    97. ஓம் தீபச் சுடரொளியே     போற்றி
    98. ஓம் நடன நாயகி     போற்றி
    99. ஓம் நான்மறைப் பொருளே     போற்றி
    100. ஓம் நீலாம்பிகையே     போற்றி
    101. ஓம் நீதிக்கு அரசி     போற்றி
    102. ஓம் பஞ்சாட்சரியே     போற்றி
    103. ஓம் பம்பை நாயகியே     போற்றி
    104. ஓம் பார்வதி தேவி     போற்றி
    105. ஓம் பாம்பின் உருவே     போற்றி
    106. ஓம் பார்புகழும் தேவியே     போற்றி
    107. ஓம் பிணிக்கு மருந்தே     போற்றி
    108. ஓம் பிறவி அறுப்பாய்     போற்றி
    ×