search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிதரூர்"

    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது கணவரான சசி தரூர் எம்.பி.க்குக்கு சம்மன் அனுப்பப்படுமா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ், சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 14-ம் தேதி டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சமர் விஷால் அறிவித்துள்ளார். எனவே, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடுவாரா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி போலீசார் கூறுவதை எதிர்த்து நான் கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
    திருவனந்தபுரம்:

    முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார்.

    2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினார்.

    முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 306 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.

    டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டி உள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான், தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான், கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
    சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அரசியல் நோக்கமுடையது என கேரளா எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar

    திருவனந்தபுரம்: 

    கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்க்குழு அவருடைய உடலில் விஷம் கலந்து இருந்தது என்று அறிக்கை அளித்திருந்தனர். 

    ஆனால், கொலைக்கான எந்த ஆதாரமும் சுனந்தா புஷ்கர் வழக்கில் போலீசாராருக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், போலீசார் இன்று 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

    அதில், சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலைகள் இருந்ததாகவும், உணவு உட்கொள்ளாமல் ஓட்டல் அறையில் விட்டு வெளியேறாமலும் சுனந்தா இருந்துள்ளார் என 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    மேலும், சுனந்தா மற்றும் சசி தரூருக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அவர் அடிக்கடி மன அழுத்த மாத்திரிகளை உட்கொண்டுள்ளார் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    இந்நிலையில், சசிதரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அரசியல் நோக்கமுடையது என கேரளா எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். 


    எம்.எம்.ஹசன்


    இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், அரசியல் பலத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர்களை அவமானப்படுத்தவும், ஒடுக்கவும் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சசிதரூரை அவமானப்படுத்துவதற்காக அவருக்கு எதிரான பல தவறான தகவல்கள் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது, என அவர் கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சங் பரிவார் அமைப்புக்கு எதிராக சசிதரூர் கருத்துகள் தெரிவித்து வந்ததால் அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என கேரளா காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹசன் கூறியுள்ளார். #ShashiTharoor #SunandaPushkar #SunandaPushkarDeath #RameshChennithala #MMHassan
    ×