search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்லை"

    பாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுப்பட்டதால் எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்ரவாதிகள் கடந்த மாதம் 14-ந் தேதி நடத்திய தற் கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. பங்கரவாதிகளின் பாலக்கோட் பயிற்சி முகாம் குண்டுகள் வீசி அழிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் 27-ந் தேதி காஷ்மீருக்குள் புகுந்து குண்டு வீச முயன்றது. ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் அடித்து விரட்டின.

    இந்த சண்டை காரணமாக எல்லையில் கடும் போர் பதட்டம் ஏற்பட்டது. எல்லையில் தினமும் பாகிஸ்தான் அத்துமீறியதால் பதட்டம் அதிகரித்தது. எல்லை யோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டன.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை காஷ்மீர் எல்லையில் பல இடங்களில் தாக்குதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அடுத்தடுத்து விமானங்கள் பறந்ததால் எல்லையில் மீண்டும் போர் பதட்டம் நிலவியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள எல்லையிலும் இந்திய விமானங்கள் இன்று அதிகாலை திடீர் போர் பயிற்சிகள் செய்தன.

    இதனால் பஞ்சாபிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போர் பயிற்சி பற்றி ராணுவ தரப்பில் கூறுகையில், எல்லையில் எந்த சவால் வந்தாலும் சமாளிப்பதற்காக பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடத்தப்பட்டது என்று கூறினார்கள்.

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் குழந்தை பலியானது. போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். #JammuKashmir #Pakistan #India
    ஜம்மு:

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இப்படி கடந்த 15-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர், பொதுமக்களில் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.

    இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பால் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியும், பீரங்கி குண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் ராணுவம், தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.



    இதையடுத்து தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இந்திய எல்லை பாதுகாப்புபடை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி இரு தரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

    ஆனாலும், நேற்று முன்தினம் இரவு சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் செக்டர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறிய தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி உள்ள அர்னியா செக்டார் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு அவர்கள் தாக்கினர்.

    அதனை தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

    இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில் 62 வயதான மூதாட்டி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

    பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ‘ராணுவ ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளும் அமைதி மற்றும் வளத்தை பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை’ என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வா கூறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “அமைதியை வேண்டி அண்டை நாடு முன்வைக்கும் எந்த ஒரு பரிந்துரையையும் அரசு தீவிரமாக பரிசீலிக்கும்” என்றார்.  #JammuKashmir #Pakistan #India 
    அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. #India #China #GoldMine
    பீஜிங்:

    இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

    இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அருணாசலபிரதேச எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது.

    இந்த சுரங்கத்தில் தங்கம் தவிர வெள்ளி மற்றும் பல விலைமதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சீன பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணிக்காக அங்கு சாலை வசதிகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ஏற்கனவே இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது பிரச்சினையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 
    ×