search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிகள்"

    தேனி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection
    தேனி:

    தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019 மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல்களை சுதந்திரமாகவும், அமைதியான முறையில் நடத்திட துப்பாக்கிகள் அனைத்தும் அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் தேனி மாவட்டத்தில் உள்ள படைக்கலன் (துப்பாக்கி) உரிமதாரர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு உரிமம் பெற்ற தளவாட கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து அதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும், படைக்கலன் உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கி ஆயுதங்களை ஒப்படைக்கப்படாமல் தங்கள் வசமே வைத்திருப்பது கண்டறியப்பட்டால் துப்பாக்கியை பறிமுதல் செய்து, உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் படைக்கல சட்ட விதி மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection

    ×