search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121701"

    சேலம் சென்னை இடையே அமையவுள்ள 8 வழிச்சாலையின் திட்டம் மற்றும் பயன்பாடு குறித்து முழுமையாக அறியாமல் அதனை எதிர்க்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். #GreenWayPlan #HC
    சென்னை:

    சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலையை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதிகமான நிவாரணம், மாற்று நிலம் என பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்தாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த திட்டம் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது.

    இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய த.மா.கா.வின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இரு பெருநகரங்களுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் கருத்து கேட்ட போது பல்வேறு வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூறியுள்ளார்.  #GreenWayPlan #HC
    சேத்துப்பட்டில் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    8 வழி பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் செங்கம், செய்யாறு, போளூர் வந்தவாசி, சேத்துப்பட்டில் 122 கிலோ மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதுவரை 94 கிலோ மீட்டர் நிலங்கள் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

    மீதமுள்ள 28 கிலோ மீட்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீக்குளிக்க முயற்சி, கிணற்றில் குதிப்பு, மாணவி கழுத்தறுப்பு உள்ளிட்ட தற்கொலை மிரட்டல்களால் விடுபட்ட நிலங்களையும் அதிகாரிகள் விரைந்து கையகப்படுத்தி வருகின்றனர்.

    வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    வஜ்ரா வாகனங்கள் செல்லும் கிராமங்களில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. சொந்த நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகளை கலவரக்காரர்களை போல அடக்குவதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பசுமை சாலைக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்த பேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்த திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) மற்றும் வேளுகானந்தலை சேர்ந்த மணிகண்டன் (25), பவன்குமார் (27) ஆகிய 3பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் போலீசாரும் 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் நெய்யூர் விநாயகபுரத்தை சேர்ந்த கதிரவன் (25) என்பவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கதிரவன் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் கதிரவன் பசுமை சாலைக்கு எதிராக ‘மீம்ஸ்’ உருவாக்கி அந்த திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மத்திய-மாநில அரசுகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிராகவும் கருத்து பதிவிடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக வாய் திறந்தாலே கைது செய்யப்படுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    பசுமை வழிச்சாலைக்காக விவசாய நிலத்தில் கல் ஊன்றியபோது அதிகாரிகள் முன்னிலையில் தாய்-மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GreenwayRoad
    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு, செங்கம் தாலுகாகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று கீழ்கொளத்தூர் என்னும் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி, விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    எதிர்ப்புக்கு மத்தியிலும் அதிகாரிகள் நிலம் அளவிட்ட இடங்களில் கல் ஊன்றிவிட்டு சென்றனர். அதன்பின்பு எருமைவெட்டி கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு உள்ள விவசாயி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வயலில் அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

    அதற்கு ரமேஷின் மனைவி மீனாட்சி (வயது 40), மகள் தேவதர்ஷினி (18) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார்கள் மகேந்திரமணி, தமிழ்மணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சி திடீரென தன் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனிலிருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை பிடுங்கி அவரை சமரசம் செய்தனர்.

    தொடர்ந்து வயலில் நிலம் அளவீடு செய்து கல் ஊன்றும் பணி நடந்தது. இதனை பார்த்த அவரது மகள் தேவதர்ஷினி “எங்களின் எதிர்ப்பையும் மீறி எப்படி கல் நடலாம். அந்த கல்லை அகற்றுங்கள் இல்லாவிட்டால் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளும், போலீசாரும் அவரை நெருங்கியபோது தேவதர்ஷினி பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அங்கிருந்த பொதுமக்கள் துணியை தண்ணீரில் நனைத்து அந்த ஈர துணியை தேவதர்ஷினியின் கழுத்தில் இறுக்கி கட்டினர். உடனே அவரை சமரசப்படுத்த அங்கு நடப்பட்டிருந்த கல்லை மட்டும் அதிகாரிகள் அகற்றினர். மற்ற இடங்களில் கல் நடும் பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது.

    அப்போது திடீரென மீனாட்சி மீண்டும் தனது கிணற்றின் அருகே வந்து “பணிகளை நிறுத்தாவிட்டால் குடும்பத்துடன் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம்” என்றார்.

    தேவதர்ஷினி பிளஸ்-2 முடித்து விட்டு அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #GreenwayRoad
    சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்டங்களிலும் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உளவு பிரிவினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இனி நடக்கப்போகும் எந்த போராட்டங்களாக இருந்தாலும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று உளவு துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    சேலம்-சென்னை இடையே 277 கி.மீ. தூரத்துக்கு பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலை 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது.



    இதற்காக 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 500 ஏக்கர் வனப்பகுதி, ஆறுகள், 8 மலை பிரதேசங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதற்காக 150-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதன் காரணமாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பசுமை வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள 5 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புகார் மனுக்களையும் அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி திரண்டு சென்ற 10 ஆயிரம் பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் உளவு பிரிவு போலீசார் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் நடைபெற்றது போன்று இந்த 5 மாவட்டங்களிலும் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரிலேயே உளவு பிரிவினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடுபவர்கள் யார்-யார்? என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பசுமை வழி சாலை திட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் அமைப்புகள் எவை? என்பது பற்றிய பட்டியலை தயாரித்து வைத்துள்ள போலீசார் அந்த அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு பொது மருத்துவமனை, பழைய ரெயில் நிலையம், மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

    மேலும் தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன.

    நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இந்த சாலையில், ராஜாஜி மார்கெட் அருகே அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.

    மாலை நேரங்களில் மதுக்கடைக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். எனவே இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாக அடிக்கடி 108 ஆம்புலன்சுகள் சென்று வரும்போது வாகனங்களால் நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

    எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள இந்த டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது. ‘‘முக்கிய சாலையால் உள்ள டாஸ்மாக் கடையில் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    குடிமகன்கள் தினமும் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்’ என்றனர். #tamilnews
    திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்யும் வகையில் வெளியாகும் ‘காலா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன.
    சென்னை:

    நாடார் மக்கள் சக்தி தலைவர் அ.ஹரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1956-ம் ஆண்டு காலகட்டங்களில் மும்பைக்கு பிழைப்பு தேடிச்சென்ற தமிழர்கள் இனரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர், நெல்லை மாவட்டம் உமரிக்காட்டை சேர்ந்த திரவிய நாடார்.

    ‘கூடுவாலா சேட்’ என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற திரவிய நாடார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காலா’. ஆனால் இப்படத்தில் திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்து, கதை நாயகனை ஒரு தலித் சமூக தலைவராக மாற்றியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

    ‘காலா’ படம் ஒரு கற்பனை கதை, திரவிய நாடார் கதை அல்ல என்பதை படக்குழு இதுவரை மறுக்கவே இல்லை. இப்படம் திரைக்கு வந்தால் நிச்சயமாக தென் தமிழகத்தில் சாதிய பிரச்சினைகள் நிகழும். எனவே தான் ‘காலா’ படத்தை தடை செய்யக்கோரி வலியுறுத்துகிறோம். ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    எல்லாவற்றையும் மீறி தமிழர்களை சமூக விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் திரைக்கு வந்தால், திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ‘காலா’ படத்தை நாடார் சமுதாய தலைவர்களுக்கு திரையிட்டு காட்டி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள படக்குழு தயாராக வேண்டும். அதன்மூலம் இச்சமூகத்தில் சாதிய மோதல்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார் உடனிருந்தார். #tamilnews
    மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம் கொசஸ்தலை ஆற்றில் குவாரி மூலம் மணல் எடுக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பே இதனை தடை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த குவாரியில் தற்போது மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மணல் எடுத்தால் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம் மற்றும் பாகசாலை, குப்பம் கண்டிகை, மணவூர் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனர்.

    எனினும் மணல் அள்ளுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    கரூர்:

    விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே இவ்வாறான மின் திட்டங்களுக்கு மாற்றாக சாலையோரமாக கேபிள் பதித்து மின் வயர்களை கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முன்னூர் கிராமம், தென்னிலை கீழ்பாகம், க.பரமத்தி ஆகிய இடங்களில் சில விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, சாலையோரமாக கேபிள் வயர்களை பதித்து மின்திட்டத்தை செயல்படுத்துமாறும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, மாவட்ட செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் ஈசன், ஆடிட்டர் நல்லுசாமி, செந்தில் உள்பட நிர்வாகிகள், விவசாயிகளுடன், நேற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது உயர் மின் கோபுரம் அமைக்கும் போது அதன் திட்டப்பாதை விவசாய நிலத்தின் உள்ளே செல்வதால் மரம் வளர்த்தல் உள்ளிட்டவை தடைபடுகிறது. மேலும் நீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதிக்கின்றனர்.

    அந்த மின்பாதையில் ஏற்படும் மின் தூண்டலினால் பயிர் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலத்தையொட்டி வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிப்படையக்கூடும். எனவே கரூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் கூறினர். அப்போது இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பதில் கூறினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    உயர் மின்கோபுர திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாழ்படுவதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கேபிள் மூலம் புதை வழித்தடத்தில் மின்வயர்களை கொண்டு செல்வது தான். எனவே இதை தான் கரூரில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தினோம். இந்த பிரச்சினை திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருக்கிறது. ஆனால் இந்த உயர் மின்கோபுர திட்டபாதையால் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை பொது மேடையிலோ அல்லது முக்கியஸ்தர்களின் முன்னிலையிலோ யாராவது வாதம் செய்து விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டியக்கம் சார்பில் ரூ.1 கோடி பரிசு தந்து விடுகிறோம். மேலும் விவாத மேடையிலேயே ரூ.1 கோடியை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ (டிடி) வைத்து விட்டு நாங்கள் பாதிப்புகளை முன்வைக்கிறோம். அந்த சமயத்தில் அதிகாரிகள் பாதிப்புகள் இல்லை என நிரூபிக்க தவறினால், ஏற்கனவே போடப்பட்டுள்ள உயர் மின்கோபுரங்களை கழற்றி கேபிள் மூலம் மாற்று முறையில் அதனை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #KarnatakaCMRace #congress
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  அதேசமயம், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரியது.

    ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #KarnatakaCMRace #congress

    ×