search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிதேஜா"

    விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. #Theri #Vijay #ThalapathyVijay
    விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. பின்னர் எந்த அறிவிப்பு வராததால் கைவிடப்பட்டது என்று தகவல் கசிந்தது.



    தற்போது தெறி படத்தின் ரீமேக் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க இருக்கிறார். எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். 
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்க விரும்புவதாக கூறிய இலியானா, தனது சொந்த விஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony
    தமிழ், தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமான இலியானா இந்திக்கு சென்ற பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்தார்.

    இந்தியில் வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் தெலுங்கில் அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். தெலுங்கு படங்களின் இடைவெளி பற்றிக் கூறும் போது, “இந்தியில் அதிக படங்களுக்கு நேரம் ஒதுக்கியதால் தெலுங்கு படங்களுக்கு எனக்கு நேரம் குறைவாகவே கிடைத்தது.

    தெலுங்கு திரைப்படங்களில் நடனமாடுவதற்கும், ஒரு காட்சி பொருளாக இருப்பதற்கும் விரும்பவில்லை. சரியான கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் போது, ‘அமர் அக்பர் ஆண்டனி’ அப்படி அமைந்திருக்கிறது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. நான் 20 வயதில் இருந்தபோது என் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தேன்.



    பல வருடங்களாக திரைப்படங்களில் எல்லாவற்றையும் செய்தேன். இப்பொழுது 32 வயதாகிறது. என் சிந்தனை செயல்முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில விவேகமான தேர்வுகள் செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் பிரதிபலிக்கிறேன். நீண்ட காலமாக நினைவுபடுத்தும் படங்களின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony

    தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, அமர் அக்பர் ஆண்டனி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பதால், தான் விட்ட இடத்தை பிடிப்பேன் என்று கூறியுள்ளார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja
    தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். பர்பி எனும் படம் மூலம் இந்தியில் நுழைந்த இலியானா அதற்குப்பின் தெலுங்குப் பக்கம் வரவே இல்லை.

    சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமர் அக்பர் ஆண்டனி எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். ரவிதேஜா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கி உள்ளார். வரும் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் புரோமோ‌ஷன் பணிகளில் இறங்கி உள்ளனர். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



    இவ்விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகை இலியானா பேசும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் ‘தேவ்டு செசினா மனசுலு’ என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடித்துத்தரும் என்று நம்புகிறேன்.

    ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்தப் படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja

    ×