search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சண்டை"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
    40 வீரர்கள் மரணமடைந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் சார்பிலும் பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது.



    இரு தரப்புக்கு இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கவராதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JammuKashmir #Encounter

    டெல்லியின் புராரி பகுதியில் பட்டப்பகலில் இரு ரவுடி கும்பல் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு அப்பாவி பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். #DelhiGangWar

    புதுடெல்லி:

    டெல்லியின் புராரி பகுதியில் நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் காரில் வந்த சிலர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்தனர்.

    இந்த தூப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ பதிவுகள் தற்போது இணைய தளத்தில் பரவி வருகின்றன.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். #crossborderfiring #Pakistanfiring

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்தியா வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. #crossborderfiring #Pakistanfiring
    ×