search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர்"

    அரியலூர் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஒட்டி கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், கிளை சிறைச்சாலை, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. மைதானத்தில் உள்ள வகுப்பறைகளில் 10-ம், பிளஸ்-2 வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2-வுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மைதானத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் உடைத்துள்ளனர். தற்போது அந்த பாதை வழியாக மாணவர்கள் சென்று வருகின்றனர்.

    இதனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு, அதன் வழியாக காப்பி அடிப்பதற்காக ‘பிட்’ கொடுப்பதற்கும், சமூக விரோதிகள் அதன் வழியாக விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதே போல் கிளை சிறைச்சாலையின் சுவரையும் உடைக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குவதால், அதற்குள் உடைந்த சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    வயல்களில் மின் வேலிகளை அமைப்பது கூடாது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக மின்சார வாரியத்தின் அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின்பாதையில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி மின் வாரியத்தில் இல்லாத நபர்கள் பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது அதன் இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின் வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். #Jallikattu

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பண பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூரில் துணை தாசில்தாரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.க்களை ‘சஸ்பெண்டு’ செய்து வருவாய் அதிகாரி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர். இவர் விடுமுறை தொடர்பாக அரியலூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கேயன் மற்றும் அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் குருமூர்த்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியது.

    இதில் ராயருக்கு ஆதரவாக வெங்கனூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் குலமாணிக்கம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

    தகராறில் 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயன் மற்றும் குருமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திகேயன் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் துணை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் ராயர், பிரபாகரன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் மாவட்ட வருவாய் அதிகாரி சத்யநாராயணன் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளார்.



    அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 09.11.2018 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (தெ), காட்டகரம்(தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறையிலும், ஆண்டிமடம் வட்டத்தில் இடையக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே   பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    அரியலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

    பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டரிம் மனு கொடுத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 327 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    வாரியங்காவல் வடக்கு காலனி பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், வாரியங்காவல் வடக்கு காலனி தெருவில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியம் உள்ளது. ஆனால் மின்மோட்டார் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பழுதாகி போனது. அதனால் மேல்நிலை நீர்தேக்க தோட்டிக்கு நீர் ஏற்றி முடியாமல் உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் அன்றாட குடிப்பதற்கு மற்றும் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுநாள் வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அணைக்குடி கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், ஸ்ரீபுரந்தான் ஊராட்சியை சேர்ந்தது அணைக்குடி கிராமம். தற்பொது கொள்ளிடம் மற்றும் காவிரி வெள்ளத்தால், எங்கள் கிராமத்தில் கொள்ளிடம் நீர் புகுந்தது. இதனால் நாங்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி 4 நாட்களாக பாதுகாப்பு முகாமில் தங்க வேண்டிய நிலை உள்ளது. ஊரின் உள்ளே வன விலங்குகளான காட்டு பன்றி, குரங்கு, பாம்பு, முதலைகள் உள்ளிட்டவைகள் ஆக்கிரமித்து, பொருட்கள் அனைத்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் பல இன்னல்களுக்கு கிராம மக்கள் அனைவரும் ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், பொதுமக்களின் நலன் கருதி, பஸ் நிறுத்தம் அருகே சுமார் 6 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் அணைக்குடி கிராம மக்களை புதிதாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    தூய்மை நகரங்கள் பட்டியல் தரவரிசையில் அரியலூர் நகராட்சி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    அரியலூர்:

    தூய்மை இந்தியா திட்டத்தில் ஆண்டுதோறும் தூய்மையான நகரங்களை அவற்றின் சுகாதார செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தரநிலை அறிவிக்கப்படுவதோடு, சிறந்த நகரங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன் அடிப்படையில் “சுவச்சர் வக்சான் 2018’’ தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு, நாடு முழுவதும் 4,203 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு தரநிலை வெளியிடப்பட்டது.

    இத்திட்டத்தில் தெற்கு மண்டலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள நகரங்களில் 1,113 நகரங்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டது. தமிழக அளவில் 637 பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் இந்த போட்டியில் பங்கேற்றன. இதில் அரியலூர் நகராட்சி 2,194 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது.

    இதேபோல் தென்னிந்திய அளவில் அரியலூர் நகராட்சி 36-வது இடத்தை பெற்றுள்ளது. நடப்பாண்டில் அரியலூர் நகராட்சி திறந்தவெளி கழிப்பிடமில்லா நகராட்சியாகவும் தரச்சான்றை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

    அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 28 ஆயிரத்து 902 பேர் வசித்து வருகின்றனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தில் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்த நகராட்சிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் அருகில் உள்ள வாலாஜாநகரம் மற்றும் எருத்துகாரன்பட்டி ஊராட்சிகளையும் இணைத்து அரியலூர் நகராட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று நகர மேம்பாட்டு குழுவினர் விரும்புகின்றனர்.
    கண்டராதித்தம் பெரிய ஏரியை தூர்வார கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    பாளையபாடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு கலெக் டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் கண்டராதித்த சோழ மன்னரால் 416 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஆனால் தற்போது இந்த ஏரி முழுவதும் தூர்ந்து போய் உள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது. மன்னரால் வெட்டப்பட்டதற்கு பின்னர் இதுவரை இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. எனவே, இந்த ஏரியை, தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, கரைகளில் பூங்கா அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    அரியலூரில் உள்ள பொதுநல சங்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள செட்டி ஏரி வரத்து வாய்க்கால் மற்றும் 100 அடி சாலையை ஆக்கிரமித்து குடியிருப்பு வீடுகளை கட்டியுள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். இங்குள்ள 48 ஏக்கரில் மனைப்பிரிவு அமைத்து வீடுகளை கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செட்டி ஏரிக்கு நீர் வரத்துக்கு ஆதரமாக இருந்த குரும்பன்சாவடி வரத்து வாய்க்கால் முற்றிலும் ஆக்கிரமித்துள்ளதால், ஏரிக்கு வரவேண்டிய நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அருகிலுள்ள குடியிருப்புவாசிகள், தங்களது இடம் சாலை வரை உள்ளது என்று கூறி குத்துக்கல்லை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலை குறுகியுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடமும், அரியலூர் நகர வளர்ச்சி சங்கத்தினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 961 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    நாமக்கல்லில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பஸ்நிலைய வாசலில் அமர்ந்து தமிழக கவர்னரை கண்டித்தும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 61 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனை வரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர். மறியல் போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், இளைஞர் அணி தலைவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, சவுந்தர், நகர செயலாளர் முருகேசன், கதிரவன், ராஜேந்திரன், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் பாதசாரிகளுக்காக நடைமேடை அமைக்க வேண்டும். அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் நடைமேடை அமைக்க வேண்டும்.

    மேலும் நடைமேடைகளில் தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து அரியலூர் நகரை அழகு படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    அரியலூரில் வெளிநாடு செல்வதற்காக விசா, விமான டிக்கெட் எடுத்ததில் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி என்பவர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அல்போன்ஸ், ஜியாவுல்ஹக் ஆகியோர் மூலம் 35 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப செல்வி முடிவு செய்தார். இதற்காக 35பேரிடம் தலா ரூ.1லட்சம் வாங்கி, அதனை அல்போன்ஸ், ஜியாவுல்ஹக்கிடம் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் கடந்த 5.2.2018 அன்று 35பேரும் ஹாங்காங்கில் வேலைக்கு செல்லும் வகையில் விசா, விமான டிக்கெட் எடுத்து செல்வியிடம் கொடுத்துள்ளனர். அதனை செல்வி ஆய்வு செய்து பார்த்த போது அவை போலி விசா, போலி டிக்கெட் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய 2பேரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் உரிமையாளர் அல்போன்சை கைது செய்தனர். தலைமறைவான ஜியாவுல்ஹக்கை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    ×