search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர்"

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே திருமண வாழ்க்கையில் மன உளைச்சல் அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் பழனிவேல் (வயது 27), விவசாயி.

    இவருக்கும் தேளூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் மணிமாலாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே மணிமாலாவுக்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது.

    இதனால் திருமணம் நடந்த நாள் முதல் பழனிவேலுக்கும், மணிமாலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அவ்வப்போது மணிமாலா மாயமாவதும் தொடர் கதையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    இந்தநிலையில் மணி மாலா கடந்த மாதம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாயக்கன்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து எதுவும் பெறாமல் அவர் திருமணம் செய்து கொண்டதால் பழனிவேல் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது கணவர் மணிகண்டனை பிரிந்த மணிமாலா மீண்டும் முதல் கணவரான பழனிவேலிடம் குடும்பம் நடத்த ரெட்டி பாளையம் கிராமத்திற்கு வந்தார்.

    ஆனால் அவரை பழனிவேலின் தந்தை பிச்சை பிள்ளை துரத்தினார். என் மகனுடன் குடும்பம் நடத்த நீ தகுதியானவர் இல்லை, இனிமேல் இங்கு வராதே என்று கூறி திருப்பி அனுப்பினார். தனது மண வாழ்க்கை பாழாய்போய் விட்டதே என்று பழனிவேல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்தநிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தததால் கடனாளி ஆகிவிட்டதாகவும், மணிமாலாவிடம் இருந்து திருமண செலவு ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் மணிகண்டன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் முதல் கணவரான பழனிவேலை அழைத்து விசாரித்தனர். மேலும் ரூ.2 லட்சம் பணத்தையும் நீயே தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான பழனிவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் குறித்து எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில் இன்று காலை ரெட்டிபாளையம் பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை அருகே உள்ள ஒரு புளியமரத்தில் பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் ரெட்டிபாளையம் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பழனிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையில் யாராவது அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அரியலூரில் புதுப்பெண் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் எருத்துகாரன் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி என்பரது மகள் வெற்றி செல்விக்கும் (வயது23)பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தைதொடர்ந்து வெற்றி செல்வி மணிகண்டனிடம் ரூ1.20 லட்சம் கடனாக பெற்றார். ஆனால் வாங்கிய கடனை வெற்றி செல்வி திருப்பி கொடுக்க வில்லை.

    மணிகண்டன் பணத்தை திருப்பி கேட்ட போது வெற்றி செல்வி மற்றும் அவரது தந்தை பெரியசாமி, தாய் தமிழரசி ஆகிய 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிகண்டன் கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

    இதைத் தொடர்ந்து மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்திரவு படி கயர்லாபாத் போலீசார் வெற்றிசெல்வி, பெரியசாமி, தமிழரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந் நிலையில் கடந்த 29-5-18 அன்று வெற்றி செல்வியை மணிகண்டன் கடத்தி சென்று திருமணம் செய்தார். இருவரும் எருத்து காரன்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் வெற்றிசெல்வி வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்தும் அரியலூர் போலீசார் விரைந்து சென்று வெற்றி செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெற்றி செல்வியின் தந்தை பெரியசாமி அரியலூர் போலீசில் எனது மகளை மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் சேகர் அவரது மனைவி பரிமளா, மாரிமுத்து அவரது மனைவி வேவுகரசி ஆகிய 5 பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளார்கள் என கூறியுள்ளார்.

    இது குறித்து ஆர்.டி.ஓ. சத்திய நாராணன், இன்ஸ் பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வெற்றி செல்வி அடித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மழை நீரால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நேற்று மாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லும் முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச் சியை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே செந்துறை பகுதியில் நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே பருவ மழை காலத்திற்கு முன்பாக நீர்வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் மரங்கள் முறிந்து சாலையில் கிடப்பதை படத்தில் காணலாம்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போதிய அளவு மழை பெய்யாததால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கறம்பக்குடி பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி மலை, சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குளித்தலை பகுதியில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.#tamilnews
    அரியலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 80). இவருக்கு பரமசிவம் (55) என்ற மகனும், வளர்மதி (52) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வளர்மதிக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் , கிருஷ்ணமூர்த்தியை தாக்கி காலால் மிதித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரமசிவத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள்சார் பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி  தமிழகம்  முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மெடிக்கல் கடைகள், பெட்டிக்கடைகள், பால் பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோக்கள், பஸ்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, கீழராஜ வீதி, டி.வி.எஸ்., திலகர் திடல் ஆகிய பகுதிகளில்  உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில சிறிய கடைகள்  மட்டும்  திறந்து உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதி, வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் மதர்ஷா சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் ஓடியது. 

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், பழைய திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில்  செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

    இந்த  முழுஅடைப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
    அரியலூர் அருகே மொபட் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்கு மொபட்டில் அரியலூருக்கு வந்துள்ளார். ஜெயங்கொண்டம் சாலை சந்தை பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கருப்பண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விருதாச்சலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்த வாலிபரின் சட்டை பையில் ஐ.டி. கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் அவரது பெயர் மகேந்திரன் எனவும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும்  திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் தாம்பரம் செல்வதற்காக எடுக்கப்பட்ட டிக்கெட்டும் இருந்தது.  அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவரது செல்போனின் முகப்பு படத்தில் இளம்பெண் ஒருவரின் திருமண புகைப்படம் உள்ளது. இதனால் மகேந்திரனுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.  

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ரெயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் ரெயிலில் இருந்து தள்ளி அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ராஜீவ் நகரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

    மேலும் அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை பணியான கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயனற்ற பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் தேங்கும் நீரினை உடனடியாக அகற்றி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

    இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், நல்லமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    அரியலூரில் கர்ப்பிணி பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 28). கடந்த 2013-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், விழுப்புரத்தில் பயிற்சி முடித்து விட்டு, தஞ்சை, சென்னையில் பணியாற்றினார். பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் வைஷ்ணவிக்கும், மன்னார்குடி மான்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்கும் கடந்த 26.2.2018 அன்று திருமணம் நடைபெற்றது. கார்த்திக் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகியதும் தனது மனைவி வைஷ்ணவியுடன் அரியலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இதனிடையே வைஷ்ணவி கர்ப்பமடைந்தார்.

    நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்ற வைஷ்ணவி திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், வைஷ்ணவியை மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும் அரியலூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைஷ்ணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் காவிரி விவகாரம் மற்றும் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் வைஷ்ணவி ஈடுபட்டு வந்துள்ளார்.

    கர்ப்பிணியாக இருந்த அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கார்த்திக் வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்விகடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட  துணைச் செயலாளர், எழிலரசன்,  தங்கதமிழ்ச் செல்வன், தலைமை செயற்குழு  உறுப்பினர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் கலிய மூர்த்தி, ராஜா, மாவட்ட தொண்டரணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு, நாய், போன்ற விஷகடிகளுக்கு போதிய மருந்துகள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படுகின்றது. போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்  என கேட்டுக் கொள்கின்றோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் . விவசாய கடன்களையும், கல்வி கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசை கேட்டுகொள்கின்றோம். 

    அரியலூரில் புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும் , அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயனிகளின் நலன் கருதி கேன்டீன் வசதியை உடனே துவங்க வேண்டும். அரியலூர் மாவட்ட  கொள்ளிடம் ஆற்றில் கல்லனையிலிருந்து அனைக்கரை வரை மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது  உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

    கூட்டமுடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
    அரியலூரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாய் மற்றும் மகளை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே சுப்பு ராயபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வனஜா (வயது 45). இவர்களுக்கு அனுசியா என்ற மகள் உள்ளார்.

    நேற்று மாலை தாய்-மகள் இருவரும் சுப்புராயபுரத்தில் இருந்து அரியலூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே 2 வாலிபர்கள் பைக்கில் மோதுவது போல் வந்துள்ளனர். இதனால் வனஜா அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது வனஜா மற்றும் அவரது மகளை வாலிபர்கள் இருவரும் தாக்கி கீழே தள்ளினர். மேலும் வனஜா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து வனஜா அரியலூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் மேற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி காசாம்பு (37). இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று மாலை காசாம்பு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காசாம்பு கழுத்தில் அணிந் திருந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர். 

    இது குறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×