search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    "அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.
    "அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.

    "அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

    "அன்னக்கிளி'' ரிலீஸ் ஆனபோது, மூகாம்பிகை கோவிலுக்குப் போகத் திட்டமிட்டேன். முடியவில்லை. 100-வது நாளுக்கும் போகமுடியவில்லை. 150-வது நாள், 175-வது நாள் (வெள்ளி விழா) எதற்கும் போக இயலவில்லை. `இனி அம்மா கூப்பிட்டால்தான் போகமுடியும்' என்று தீர்மானித்து, முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.

    ராஜ்குமார் ஷெனாய் வித்வானாக நடித்த "ஷெனாதி அப்பண்ணா'' என்ற படத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஷெனாய் வாசிக்க பிரபல ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் வந்திருந்தார். அவர் இதுவரை எந்த சினிமா படத்துக்கும் ஷெனாய் வாசித்ததில்லை. ஷெனாய் வித்வானைப்பற்றிய கதை என்பதால், அவர் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

    அந்தப் படத்திற்கு நான் ஜி.கே.வி.யுடன் பணியாற்றியபோது, என்னை பிஸ்மில்லாகானுக்கு ஜி.கே.வி. அறிமுகப்படுத்தி வைத்தார். "என் சிஷ்யன்; இப்போது இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார்'' என்றார்.

    நான், பிஸ்மில்லாகானின் காலில் விழுந்து வணங்கினேன். அவர் ஆசி கூறினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், எல்லா நேரமும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே கிடந்தேன். இசை ஆறாக - நதியாக ஓடி, சங்கீத சாகரத்தில் கலக்கும் அழகை ரசித்தேன்.

    பிஸ்மில்லாகான் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிடுவார். ஒரு துண்டை விரித்து நமாஸ் (தொழுகை) செய்வார். ஒரு நாளில் 6 முறை தொழுகை நடத்தும் ஒழுக்கத்தை அவர் கடைப்பிடித்து வந்தார். ஒருநாள்கூட, இந்த வழக்கத்தை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.

    ஒருநாள், ராஜ்குமாரின் பாடலை பதிவு செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சற்று நேரத்தில் ராஜ்குமார் அண்ணா வந்துவிட்டார். பாடலை கையில் வாங்கிக்கொண்டார்.

    ஜி.கே.வி. ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவருக்கு நேரே எதிர்த்தாற்போல் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். ஜி.கே.வி.யின் வலது புறம் நான். மறுபுறம் தபேலா கன்னையா, `டோலக்' பாலா.

    ஜி.கே.வி. பாட ஆரம்பித்தார். ராஜ்குமார் அண்ணா, பாடலை கவனிக்கவே இல்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    எனக்கு கூச்சமாக இருந்தது. ஜி.கே.வி.யின் பாடலுக்கு தக்கபடி நான் வாத்தியம் வாசிக்க அது இடைïறாகவும் இருந்தது.

    ராஜ்குமார் "எல்லாம் கடவுள் செயல்'' என்பது போல மேலே கையைக்காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு, "எல்லிநோடிதரு நின் ஹெசுரே கனோ'' (எங்கு பார்த்தாலும் உன் பெயர்தானப்பா) என்றார்.

    எனக்குக் கூச்சம் அதிகமாயிற்று. "அண்ணா! பாட்டைப் பார்க்கலாம் அண்ணா!'' என்றேன்.

    அப்போது ராஜ்குமாரைப் பார்த்து ஜி.கே.வி, "ஆமா, ஆமா முத்துராஜ்! பேரு பெரிய பேருதான்'' என்றார்.

    பிறகு ஒரு வழியாக, ராஜ்குமார் பாடுவதற்குத் தயாரானார்.

    அவர் பாடலை பதிவு செய்தோம்.

    "அன்னக்கிளி'' மிகப்பிரபலமான போதிலும், நான் இசை அமைப்பாளர்கள் இடையே பத்தோடு பதினொன்றாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன். அதற்கு மேல் நினைக்கவில்லை.

    "இரண்டாவது படம் வந்தால் மூகாம்பிகை போகலாம்'' என்று நினைத்தேன்.

    இந்த சமயத்தில், மனைவி ஜீவா, இரண்டாவது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இந்த முறை அடிக்கடி போய் பார்த்துக்கொண்டேன். பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நேரம், "பாலூட்டி வளர்த்த கிளி'' என்ற படத்துக்கு இசை அமைக்க, எனக்கு டைரக்டர் மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது. "பெண் குழந்தை பிறந்த ராசி'' என்று அம்மா கூறினார்கள்.

    அருண்பிரசாத் மூவிஸ் பேனரில் இப்படம் தயாராகியது. பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். கதாநாயகி ஸ்ரீபிரியா பாடுவதுபோல் "கொலை கொலையா முந்திரிக்கா'' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

    "அண்ணே! எனக்காக நீங்கள் எழுதும் முதல் பாட்டு இது!'' என்று நினைவூட்டினேன்.

    "அதனால்தான், இந்தப் பாடலின் நடுவே, `வா, ராஜா வா' என்று வருமாறு எழுதியிருக்கிறேன்'' என்றார், கவிஞர்.

    "உங்கள் ஆசி அண்ணே'' என்று மகிழ்ச்சியோடு கூறினேன்.

    பி.மாதவன் தயாரித்த இந்தப் படத்தை, தேவராஜ் - மோகன் இயக்கினர். விஜயகுமார் - ஸ்ரீபிரியா நடித்தனர். வசனம்: கோமல் சாமிநாதன்.

    20-8-76 அன்று வெளிவந்த "பாலூட்டி வளர்த்த கிளி'' சரியாக ஓடவில்லை. "கிளியின் அருமையான இசை'' என்றெல்லாம் மாதவன் சார் விளம்பரம் செய்து பார்த்தார், பலன் இல்லை.

    எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.
    எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.

    பலருடைய எதிர்ப்பையும் மீறி, "அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் வழங்கினார்.

    படம் வெளிவரும் வரை இளையராஜாவுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலை ("ரீரிக்கார்டிங்'') நடந்தபோதுகூட "இளையராஜாவுக்கு ரீரிகார்டிங் தெரியவில்லை. படத்தைக் கெடுக்கிறார்'' என்று சிலர் கூறினார்கள்.

    பஞ்சு அருணாசலத்துக்கும், டைரக்டர் தேவராஜ×க்கும் இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பிடித்திருந்தது. எனவே, இளையராஜா பற்றி குறை சொன்னவர்களிடம் "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். இந்தப்பக்கம் வராதீர்கள்'' என்று கண்டிப்புடன் சொல்லி அவர்களை விரட்டி அடித்தார், பஞ்சு அருணாசலம்.

    பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன், ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம், இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பற்றி குறை கூறியிருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வி, "அந்தப் பையனை எனக்குத் தெரியும். என் ரெக்கார்டிங்கில் வாசித்து இருக்கிறான். அவனுக்கு இசை பற்றி எல்லாம் தெரியும். தொந்தரவு செய்யாமல் அவனை விட்டு விடுங்கள். படத்துக்கு என்ன வேண்டுமோ அது வந்துவிடும்'' என்று சூடான பதில் கூறியிருக்கிறார்.

    இளையராஜாவின் இயற்பெயர் ராஜையா. அதை "ராஜா'' என்று மாற்றியவர் தன்ராஜ் மாஸ்டர்.

    இப்போது "அன்னக்கிளி'' டைட்டிலில் பெயரை எப்படிப் போடுவது என்று கேள்வி எழுந்தது. கச்சேரிகளில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயர் பிரபலமாகியிருந்ததால், அந்தப் பெயரையே பயன்படுத்தலாம் என்று கூறினார் இளையராஜா.

    "அது, ஆலத்தூர் பிரதர்ஸ், டி.கே.எஸ். பிரதர்ஸ் என்பது மாதிரி ரொம்பப் பழைய ஸ்டைல்!'' என்று பஞ்சு அருணாசலம் கூறினார். சற்று நேரம் யோசித்து விட்டு, "உன் பெயர் ராஜா. ஏற்கனவே, சினிமாவில் ஏ.எம்.ராஜா இருக்கிறார். பின்னணி பாடுவதுடன், சில படங்களுக்கு மிïசிக் டைரக்ஷனும் செய்திருக்கிறார். அவர் பெரிய ராஜா. நீ இளையராஜா! உன் பெயரை இளையராஜா என்று வைத்துவிடுவோம்''

    என்றார்.அவர் சூட்டிய வேளை நல்ல நேரமாகவும், பெயர் ராசியான பெயராகவும் அமைந்தது. ஒருசில நாட்களிலேயே "இளையராஜா'' என்ற பெயர் தமிழக மக்களின் செல்லப் பெயராக அமைந்தது.

    சிவகுமாரும், சுஜாதாவும் ஜோடியாக நடித்த "அன்னக்கிளி'' 14-5-1976ல் ரிலீஸ் ஆயிற்று.

    எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. எனவே, "அன்னக்கிளி''க்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள்.

    படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, "படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசை அமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன'' என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின.

    இதனால், தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் "அன்னக்கிளி'' திரையிடப்பட்டது.

    15 நாட்களில் "அன்னக்கிளி'' திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் "ஹவுஸ்புல்'' ஆனது.

    "அன்னக்கிளி'' இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. "அன்னக்கிளி ஒன்னைத்தேடுது'', "மச்சானைப் பார்த்தீங்களா'', "நம்ம வீட்டுக் கல்யாணம்'' முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.

    "அன்னக்கிளி'' 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

    "இளையராஜா அனுபவம்

    "அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

    "அன்னக்கிளி இசைத்தட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. கடைகளில் முன்பதிவு செய்து, இசைத்தட்டை வாங்கினார்கள்.

    அப்போது டெலிவிஷன் கிடையாது. ரேடியோ தான். அந்த சமயம் அன்னக்கிளி பாடலை ரேடியோவில் ஒலிபரப்பினால் ஒரு வீட்டில் பாடலை வைப்பார்கள். அது அடுத்த வீடு, அடுத்த வீடு என்று தொடர்ந்து தெரு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும். இதை நான் மலயப்பநாயகன் தெருவில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அதுவும் 6 மாதங்களுக்கு மேலாக நானே நேரடியாக கண்டு இருக்கிறேன்.

    அன்னக்கிளிக்கு நான்தான் இசை அமைத்தேன் என்பது  இரண்டு மூன்று வீடுகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    மக்கள் அந்த பாடல்களை கேட்க, கேட்க `எந்த பாடல் நன்றாக இருந்தாலும் அதை ரசிப்பார்கள்' என்று எண்ணினேனே தவிர, கர்வப்படவில்லை. சந்தோஷப்பட்டேன்.

    என் பெயர் வெளியில் பெரியதாக பேசப்பட்டாலும், இன்று ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அவர்களையே சுற்றிவரும் கூட்டம்போல் அன்று

    இல்லை.நானும் பெயர் வந்து விட்டது என்பதற்காக ஜி.கே.வி.யை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று எண்ணவில்லை. கிட்டாரைத் தூக்கிக்கொண்டு, அவர் எங்கு போனாலும் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.

    போடிநாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னைப்பார்க்க அதிகமான கூட்டம். கூட்டம் கலைய வேண்டும் என்றால் நான் வந்து எனது முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.

    நானும் கூட்டத்தினர் முன்பு வந்து நின்றேன். ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தனர். `என்னங்க! இன்னமும் இளையராஜாவை காணோம்' என்று ஒருவர் கேட்டார்.

    என் அருகில் இருந்தவர், `இதோ இவர்தான்!' என்று என்னை சுட்டிக்காட்டினார்.

    உடனே கூட்டத்தினர் கையை முகவாய்கட்டையில் வைத்து, "ஹூம்... இந்த பையன்தானா!'' என்று உற்சாகம் குறைந்தவர்களாக, காற்றுப்போன பலூன் மாதிரி ஆனார்கள்.

    பெயருக்கு ஏற்றபடி ஒரு பெரிய அழகான வாலிபனாக எதிர்பார்த்தவர்களுக்கு, சின்னப்பையனாய்... பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றம்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    "அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.
    "அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.

    இதுபற்றி இளைய ராஜா கூறியதாவது:-

    "பஞ்சு சாரின் கதை - வசனத்தில் ஹிட் ஆகியிருந்த "உறவு சொல்ல ஒருவன்'', "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற 2 படங்களுக்கும் விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.

    அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப்பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார்.

    "பஞ்சுசார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க'' என்றார்.

    இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சுசாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள்.

    "சார்! இந்த ராஜா ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்கிறவர் சார். ஏற்கனவே அன்லக்கி மிïசிக் டைரக்டர் என்று பெயர் எடுத்திருக்கார். அவர் மிïசிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்று போயிடும்'' என்று பலவிதமாக சொல்லி, பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்து விட்டார்.

    பஞ்சுசாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், "எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மிïசிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்டிரிபிïட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?'' என்று சொன்னார்கள்.  

    "அதைப்பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மிïசிக்!'' என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்து சொல்லிவிட்டார்.

    இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள்.

    பூஜைதேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாக சொல்லிவிட்டார்.

    "எப்போது திரும்பி வருவார்?'' என்று கேட்டதற்கு, "படத்தின் பூஜை முடிந்த பிறகு தான் திரும்பிவருவார்'' என்று பதில்வந்தது.   

    எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    அதேநேரம் "பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்'' என்று பஞ்சு சார் கூறிவிட்டார்.

    அதன்படி பாடலை எழுதித்தந்தார்.

    ரிகர்சல் நாள்வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும்

    வந்தது.காலையில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' பாடலுக்கு ரிகர்சல் செய்தோம்.

    அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, "மச்சானை பார்த்தீங்களா'' பாடலை ரிகர்சல் செய்தோம்.  மதிய உணவுக்குப்பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ்.ஜானகி வந்தார்.

    பெரும்பாலும் பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    ஆனால் ஜானகி ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார்.

    தவறாக பாடினால் ஜீ.கே.வி. என்னை விட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச்சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர்.

    ரிசர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும் போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.

    சுப்புவுக்கும், லட்சுமணனுக்கும் என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்து போனது.

    "நீ நன்றாகப்பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை'' என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார்.

    அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்து விட்டோம்.     

    பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது.

    ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, "ரெடி, ஒன், டூ, த்ரி'' என்று நான் சொன்ன அந்த நொடியில் "மின்சாரம் கட்'' ஆகி விளக்குகள் அணைந்து விட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.

    டோலக் வாசிக்கும் பாபுராஜ் `எம்... நல்ல சகுனம்' என்றார், கேலியாக.

    மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிதுநேரம் அப்படியே கழிந்தது.

    தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, "டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்கவேண்டுமாம்'' என்றனர்.

    நான் உடனே எழுந்து போனேன், அவர் "கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இந்தா பிரசாதம்'' என்று என் கையில் கொடுத்தார்.

    பின்னர், "நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்'' என்றார்.

    அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது.

    தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்கு காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.

    "சைலன்ஸ்! டேக்..ரன்னிங்'' என்ற குரல் ஒலிக்க, கோவர்தன் மாஸ்டர், "ஒன் டூ கொடுக்க, ஜானகி ஆ...ஆ... என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது.

    என்ஜினீயர் சம்பத், ஒன்ஸ்மோர் என்று கேட்கப்போனார்.

    "முதல் டேக் டேப்பை போட்டுக்காட்டினால், ஆர்க்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக் கொள்வார்களே'' என்று நான் கூறினேன்.

    எல்லோரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, "என்ன இது? இந்தபையன் இப்படிச் செய்கிறானே?'' என்று நினைத்தார். "ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே'' என்றார்.

    "எடுக்கலாம் சார்! ஆனா இதப்போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க'' என்றேன்.

    `சரி' என்று டேப்பை ரிவைண்ட் செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை.

    காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்கு தெரிந்து போய்விட்டது. உடனே, "சார், சார்! பாட்டு பதிவாகலை சார்,

    ஒன் மோர் டேக் சார்!'' என்றார்.

    சுப்புசாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார்.

    மீண்டும் பாடல் பதிவு தொடங்கியது.

    "டேக் நம்பர் ஒன்று இரண்டு'' என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது.

    பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார்.

    பாரதிராஜா மட்டும் பூஜைக்கு வரவில்லை. அது எங்களுக்குள் இருந்த அந்த போட்டியை எனக்கு நினைவு படுத்தியது.

    2-வது பாடல், "மச்சானைப்பார்த்தீங்களா'' பதிவாகியது. "சொந்தமில்லை பந்தமில்லை'' பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.

    `அன்னக்கிளி உன்னைத்தேடுதே' பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்த பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாக பாடிக்கொடுத்தார்.

    பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மிïசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம்.
    பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மிïசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம். அதன்படி "அன்னக்கிளி'' படத்தின் இசை அமைப்பாளர் வாய்ப்பை வழங்கி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    கன்னடத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தவர் ஜி.கே.வெங்கடேஷ். அவரிடம் இளையராஜா 1969-ம் ஆண்டு உதவி இசையமைப்பாளராக சேர்ந்தார். 150 படங்கள் வரை அவருடன் இணைந்து பணியாற்றினார்.

    இளையராஜா ஆர்மோனியத்தை வாசிப்பதைத்தான் அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் ஜி.கே.வெங்கடேசிடம் பணியாற்றும் போது, கிட்டார், பியானோ, கம்போஆர்கன் ஆகிய இசைக்கருவிகளையும் வாசித்தார். அத்தோடு பாடல்களை எப்படி பாட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது, பின்னணி பாடகர்கள் பாடும்போது தவறுகள் ஏற்படும்போது, அதை சரிசெய்வது போன்ற பணிகளையும் செய்தார்.

    இந்த சமயத்தில், இளையராஜா வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    இளையராஜாவின் நண்பரும், பிற்காலத்தில் பிரபல கதாசிரியராக உயர்ந்தவருமான ஆர்.செல்வராஜ் உருவத்தில் அதிர்ஷ்டம் அவரைத் தேடி  வந்தது.இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "செல்வராஜ் ஒருநாள் வந்து, `டேய்! உனக்காக பஞ்சு அருணாசலத்துக்கிட்டே சொல்லியிருக்கிறேன். அவர் உன்னை பார்க்க வேண்டும் என்று அழைத்துவரச்சொன்னார்' என்று கூறினான். பின்னர் நானும், செல்வராஜ×ம் ஒருநாள் அவரைப்பார்க்க சென்றோம்.

    காலை 10 மணி இருக்கும். ஒரு சிறிய அறையில் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தார். எங்களைப்பார்த்தவுடன் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, `வா..செல்வராஜ்' என்றார். உடனே செல்வராஜ், `இவர்தான் ராஜா!' என்று என்னை அறிமுகம் செய்து

    வைத்தான்.அதன்பின்னர் பஞ்சு அருணாசலம், `நீ ஏதாவது படத்திற்கு டிïன் போட்டு இருக்கிறாயா?, இருந்தால் கொஞ்சம் பாடிக்காட்டு, கேட்கலாம்' என்றார்.

    உடனே நான், ஏற்கனவே மெட்டமைத்து வைத்திருந்த "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப்பார்த்தீங்களா'', "சுத்தச்சம்பா'' போன்ற பாடல்களைப் பாடிக்காட்டினேன். பாட்டுக்கு ஏற்ற தாளமாக பக்கத்தில் இருந்த டேபிளையும் லேசாக தட்டினேன்.

    அவர் அந்தபாடல்களை ரசித்துக்கேட்டு விட்டு, `டிïன் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. இப்போது நான் எழுதுகின்ற படம் அனைத்தும் காமெடி படம்தான். ஏற்கனவே நான் எழுதி அதிக படங்கள் பாதியில் நின்று போனதால் எனக்கு `பாதிப்படம் பஞ்சு அருணாச்சலம்' என்று பேர் வைத்திருக்கிறது, திரைஉலகம்! இந்த நல்ல டிïன்களை காமெடிப் படத்தில் போட்டால், அதற்குரிய மரியாதை போய்விடும். நல்ல கதை அமைந்து அதில் இந்த பாடல்களுக்கு முக்கியத்துவம் வருகிற மாதிரி வந்தால்தான் படமும், இசையும் நன்றாக இருக்கும். அது போல எடுக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கின்ற நிலையில் எந்த புரோடிïசர் வரப்போகிறார்! ஒரு வேளை நானே தயாரிப்பாளராக வந்தால், உனக்கு கண்டிப்பாக சான்ஸ் தருகிறேன். அதுவரைக்கும் நீ பொறுத்து இருக்கணும்!' என்றார்.

    "சரி சார்'' என்று அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வந்தோம்.

    பஞ்சு சார் சொன்ன பதிலை, சாதாரணமாக எல்லோரும் சொல்கின்ற பதில்போல்தான் எடுத்துக்கொண்டேன். ஜீ.கே.வியின் வேலைகளில் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.

    இடையில் செல்வராஜ் ஒருநாள் வந்து `ஏய்.. பஞ்சுசார் கதை - வசனம் எழுதிய "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற படம் நல்ல ஹிட்டாகி விட்டது. அடுத்த படம் தொடங்கினால், நீதான் மிïசிக் டைரக்டர்! ரெடியா இருடா' என்றான். நான் அதையும் ஒரு பேச்சாக எடுத்துக் கொண்டேனே தவிர உண்மையாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சில நாட்களுக்குப்பின் செல்வராஜ் என்னிடம் வந்து, பஞ்சு அருணாசலம் என்னை அழைப்பதாகக் கூறினான். போனேன்.

    "வாய்யா'' என்று வரவேற்ற பஞ்சு சார், "செல்வராஜ் ஒன்றும் சொல்லலியா?'' என்று கேட்டார்.

    `இல்லை' என்கிற மாதிரி தலையசைத்து, செல்வராஜை நோக்கினேன்.

    "இல்லை சார். அதை நீங்களே சொன்னாத்தான் நல்லாயிருக்கும்'' என்று செல்வராஜ் சொன்னான்.

    "செல்வராஜ் சொன்ன ஒரு கதையை நானே சொந்தமாகத் தயாரிக்கப்போறேன், நீதான் மிïசிக்!'' என்றார், பஞ்சு அருணாசலம்.

    மகிழ்ச்சி தாங்காமல், "சரி அண்ணே'' என்றேன்.

    கோவர்த்தனுடன் சேர்ந்து இசையமைக்க ஒத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

    "வரப்பிரசாதம் என்ற ஒரு படத்தை கோவர்த்தன் - ராஜா என்ற பெயரில் இருவரும் சேர்ந்து இசையமைக்கிறோம். அதே பெயரில் இதில் இசையமைத்து விடுகிறோமே'' என்றேன்.

    "இங்கப்பாரு! நான் சான்ஸ் கொடுப்பதே உனக்கு! இதில் ஏன் அவர் பெயரைப்போட வேண்டும்? "கைராசி'', "பட்டணத்தில் பூதம்'' என்று பல படத்திற்கு கோவர்த்தன் தனியாகவே இசையமைத்திருக்கிறார். இது நான் உனக்கு கொடுக்கும் படம்'' என்று பஞ்சு சார் கூறினார்.

    இதை தயங்கி தயங்கி நான் கோவர்த்தனிடம் சொன்னேன். "பரவாயில்லை; சான்ஸ் கிடைப்பது கஷ்டம். உன் பெயரில் செய்'' என்று அனுமதி கொடுத்தார்.

    பஞ்சு சார், தன் தம்பி சுப்புவை தயாரிப்பாளராகப் போட்டு இந்த படத்தை எடுத்தார்.

    செல்வராஜ் ஏற்கனவே சொல்லியிருந்த ஒரு கிராமத்து மருத்துவச்சி கதையை கேட்டு, சில மாற்றங்கள் செய்து, திரைக்கதையையும், வசனத்தையும் பஞ்சு சார் எழுதினார். இதை தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தார்கள்.

    பாடல்களை எல்லாம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை டைரக்டர் தேவராஜிடம் விளக்கிக்கூறி, ஏற்கனவே கம்போஸ் செய்யப்பட்ட பாடல்களை அவரை கேட்கவைத்தார் பஞ்சு.

    உத்தமபாளையம் பகுதியில் பாடப்படுகின்ற நாட்டுப்பாடல். ஏற்கனவே சிறுவயதிலிருந்து நான் கேட்டு வந்த "புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி'' என்று தொடங்கும் ஒரிஜினல் பாடலை, நான் வேறுவகையாக மாற்றி அமைத்தேன்.

    அதுதான் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' என்ற பாடலாகும். அந்த அன்னக்கிளி என்ற பெயரே படத்தின் பெயரானது.

    அடுத்து "மச்சானை பார்த்தீங்களா'' என்ற பாடலை ஏற்கனவே அமர் (கங்கை அமரன்) எழுதி டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி.ரமணன் ஸ்டுடியோவில் பதிவு செய்து வைத்து இருந்தோம். அதை "அன்னக்கிளி'' படத்தில் பயன்படுத்த தீர்மானித்தோம்.

    பூஜை தினத்தன்று இந்த 2 பாடல்களையும் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதுவார் என்று பஞ்சு சொன்னார்.

    அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருந்தேன்.

    சவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்
    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.

    பாரதிராஜா உதவி இயக்குனராகவும், இளையராஜா ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (என்.எப்.டி.சி.) உதவியோடு படம் எடுக்க `மயில்' என்ற கதையை பாரதிராஜா உருவாக்கினார். அதற்கான விண்ணப்ப மனுவில், திரைக்கதை, டைரக்ஷன் பாரதிராஜா என்றும், கேமரா நிவாஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இசை அமைப்பாளராக என் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டார்.

    நிதி உதவி எப்படி யும் கிடைத்துவிடும், படம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இழுத்துக்கொண்டே போயிற்று.

    பாரதிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று, அவர் தாயார் விரும்பினார்.

    விரைவில், சொந்தத்திலேயே பெண் பார்த்து முடிவு செய்தார்கள். மணமகள் பெயர் சந்திரலீலா.

    கல்யாண நாள் குறித்தார்கள். திருமண வேலைகள் ஆரம்பம் ஆயின. அப்போது அவினாசி மணி இயக்கத்தில் "தலைப்பிரசவம்'' என்ற படத்தை, கே.ஆர்.ஜி. தயாரித்துக் கொண்டிருந்தார். கே.ஆர்.ஜி.க்கு பாரதி மீது ரொம்பப் பிரியம். அது, அடுத்த படத்தை பாரதிக்கு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வளர்ந்தது. அவரே கல்யாண விஷயங்களில் கலந்து கொண்டு நிறைய உதவி செய்தார்.

    திருமணம் ஆன பிறகு, காரணீஸ்வரர் கோவில் தெருவில் ஒரு வீடு பார்த்துக்கொண்டு, பாரதிராஜா குடியேறினார். பாரதிராஜாவின் அம்மா கொஞ்சநாள் வந்து இருந்துவிட்டுப் போனார்கள்.

    திருமணத்துக்குப்பின், நானும், பாரதியும் சந்திப்பது குறைந்து போயிற்று. அதைப் புதுப்பித்துக் கொள்ள நாங்கள் எப்போதாவது கடற்கரைக்கோ, டிபன் சாப்பிட லஸ் கார்னருக்கோ போய் வருவதுண்டு.

    அப்படி போகும்போது ஒருநாள், புதிய போட்டி ஒன்றை பாரதிராஜா தொடங்கினார்.

    நான் எப்போதும் ஜி.கே.வி., குமார், விஜயபாஸ்கர், ராஜன், நாகேந்திரா, ராகவலு, உபேந்திரகுமார், தேவராஜன், ஏ.டி.உமர், பாபுராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கிட்டாரோ, காம்போவோ வாசிக்கப்போய் வருவதைப் பார்த்த பாரதிராஜா, அதுபற்றி குறிப்பிட்டார். சிலர் வாழ்நாள் முழுவதும் உதவி டைரக்டராகவே காலம் கழித்துவிட்டு, அறுபது வயதுக்கு மேலும் வேலை செய்வதை சுட்டிக்காட்டினார்.

    பிறகு, "டேய்! நீ எல்லாம் மிïசிக் டைரக்டர் ஆக முடியாது போலிருக்கே! இப்படி கிட்டார் வாசிச்சுக்கிட்டே இருக்கணும்னு விதியோ என்னமோ! ஆனா ஒண்ணு! நீ மிïசிக் டைரக்டரா எப்போது ஆகமுடியும் தெரியுமா? நானெல்லாம் ஒரு இருபத்தஞ்சு முப்பது படம் டைரக்ட் பண்ணி, எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி பேர் எடுத்துப் புகழோடு இருக்கிறபோது, `சரி, போனாப்போகுது, நம்ம இவனுக்கு ஒரு படம் கொடுப்போம் என்று கொடுத்தாத்தான் நீ மிïசிக் டைரக்டர் ஆக முடியும்!'' என்றார்.

    எனக்குத்தான் மிïசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஐடியாவே இல்லையே! இசையைக் கற்றுக்கொண்டால் போதும் என்று இருக்கிறபோது பாரதி ஏன் இப்படி பேசுகிறார்! நாமும் ஒரு உதார் விடுவோம் என்று நினைத்தேன்.

    "பாரதி! நீ பெரிய டைரக்டர் ஆகு, அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனா, உன் படத்துக்கு நான் மிïசிக் பண்ணணும்னா, உன்னை புட்டண்ணாவிடம் அனுப்பி அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்த்து விட்டாரே ஜி.கே.வி, அவர் உன் படத்துக்கு மிïசிக் பண்ணியிருக்க வேண்டும். அதற்கப்புறம் அவர் என்னிடம், `டேய், ராஜா! போனாப் போகுது. பாரதி படத்துக்கு மிïசிக் பண்ணுடா' என்று சொன்னாத்தான் நான் மிïசிக் பண்ணுவேன். இல்லேன்னா பண்ணவே மாட் டேன்'' என்று சபதம் செய்தேன்.

    பெண்டியாலா சீனிவாசன் என்ற தெலுங்கு இசை அமைப்பாளர் இசை அமைக்கும் தமிழ்ப்படமான "பட்டாம்பூச்சி'' படத்துக்கு, உதவி இசை அமைப்பாளராக கோவர்த்தன் பணியாற்றினார். இவர் எம்.எஸ்.வி. அவர்களிடம் உதவி இசை அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

    இந்தப் படத்திற்கு கதை - வசனம்: ஏ.எஸ்.பிரகாசம். கமலஹாசன் ஹீரோ. ஜெயசித்ரா கதாநாயகி.

    இந்தப் படத்திற்கு கோம்போ ஆர்கன் வாசிக்க கோவர்த்தன் என்னை அழைத்தார். நானும் சம்மதித்து, வாசித்தேன். என் வாசிப்பைப் பார்த்துவிட்டு எனக்கு நிறைய சான்ஸ் கொடுத்து, பல இடங்களில் வாசிக்க வைத்தார்.

    ஒருநாள் சாப்பாடு இடைவேளை முடிந்து நான் வேலை தொடங்குவதற்கு முன், அவருக்கு இசையமைக்க ஒரு படம் வந்திருப்பதாக சொன்னார். "நíயும், நானும் சேர்ந்து இசை அமைக்கலாமா? பெயரை `கோவர்த்தன் - ராஜா' என்று போட்டுக்கொள்ளலாம்'' என்றார்.

    "சரி'' என்று சொல்லிவிட்டேன்.

    கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார், பிற்காலத்தில் சொந்தக் குரலில் பாடினார். இதற்கு வழி வகுத்தவர் இளையராஜா.
    கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார், பிற்காலத்தில் சொந்தக் குரலில் பாடினார். இதற்கு வழி வகுத்தவர்
    இளையராஜா.இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நìகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "என் மானசீக குருவான சி.ஆர்.சுப்பராமனை வணங்கும் அதே நேரத்தில், அவர் குடியால் தன் உயிரை இழந்தது எனக்குப் பிடிக்கவில்லை. சங்கீதத்திற்காக உயிரைக் கொடுக்கலாம். ஆனால் குடிக்காக உயிரைக் கொடுக்கலாமா?

    சினிமாவில் பல இசைக் கலைஞர்கள் குடியால் கெட்டுப் போனார்கள். இசையைத் தொழிலாகக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து, கரகாட்டத்திற்கு வாசிக்கும் நையாண்டி மேளக்காரர் வரை, குடிப்பழக்கம் இல்லாத கலைஞர்களைக் காண்பது அரிது.

    சினிமாவில் இருக்கும் அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களும் கூட இதற்கு விதி விலக்கு அல்ல. பாலுவின் கச்சேரிக்குப் போகும்போது, அதில் வாசிக்கும் அத்தனை பேரும் குடிப்பார்கள். மெதுவாக என்னையும் அதில் சேர்த்துக் கொண்டார்கள். வெறென்ன செய்வது? சேர்ந்து

    கொண்டேன்!வெளிïருக்கு போகிறோம். நாளெல்லாம் சும்மா இருந்து விட்டு, மாலையோ, இரவோதான் கச்சேரி. அது எப்போது முடியுமோ? அதற்கப்புறம் சாப்பிட்டு விட்டுப்படுத்து, அடுத்த நாள் ரெயிலைப் பிடித்து, பகலெல்லாம் காய்ந்து கருவாடாகித் திரும்புவோம்.

    இதில் அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷம் இந்தக் குடிதான். அவர்களுடன் அவ்வப்போது சேர்ந்து கொள்வேனே தவிர, அவர்களைப்போல் எப்போதும் அதிலேயே கிடப்பதில்லை.

    கச்சேரி முடிந்த பிறகுதான், எப்போதாவது அவர்களுடன் சேர்வேன். குடித்தால், ஆர்மோனியத்தை தொடமாட்டேன்.

    ராஜ்குமார் நடித்த "பங்காரத மனுஷியா'' என்ற படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக, ஜி.கே.வி.யுடன் பட அதிபர் கே.சி.என்.கவுடாவின் ஊரான தொட்டுபெள்ளாப்பூர் என்ற ஊருக்கு போயிருந்தோம். அங்கே, டிராவலர்ஸ் பங்களாவில் ரூம் புக் செய்திருந்தார்கள். அங்கே தங்கி பாடல் கம்போஸ் செய்தோம்.

    காலையில் எழுந்து நந்திஹில்ஸ் ரோட்டில் நடந்து விட்டு, 7 மணிக்கு கம்போசிங் தொடங்குவோம். 8ஷி - 9 மணிக்கு டிபன் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தொடங்க, தயாரிப்பாளரும், டைரக்டரும் வந்து கேட்பார்கள்.

    பிறகு மதிய உணவு. ஓய்வு. மாலை 4 மணிக்கு டீயுடன் மீண்டும் கம்போசிங் தொடங்கி, இரவு 9 மணி வரை தொடரும். அப்புறம், ஜீ.கே.வி.யாருடனாவது விஸ்கி, கோழி, டிபன்...

    இது தொடர்ச்சியாக ஒரு வாரம் நடந்தது.

    உதயசங்கர் பாடல் எழுதினார்.

    சமயத்தில், பட அதிபர் தன் நண்பர்களுடன் வந்து விடுவார். ஜி.கே.வி.யிடம் ட்ïனை வாசிக்கச் சொல்லி கேட்பார்.

    வாசிக்கத் தொடங்குவோம். ஜி.கே.வி.க்கு இடையில் மறந்து போகும். இடையில் நிறுத்தி, "எப்படி அது?'' என்று என்னிடம் கேட்டுவிட்டு, மறுபடியும் தொடங்குவார்.

    இப்படி இடையில் நிறுத்தி, மறுபடியும் பாட, அது மொத்தமாக என்ன ட்ïன் என்று தயாரிப்பாளர் கவுடாவுக்கு புரியாது. எனவே, "ராஜா! நீயே பாடப்பா! ஜி.கே.வி.யை விட நீ நல்லாப் பாடறே'' என்பார்.

    ஜி.கே.வி. இடையில் நிறுத்தி, நிறுத்திப் பாடுவதால் எனக்கு இந்த சர்ட்டிபிகேட். ஜி.கே.வி.யும், "டேய்! நீயே பாடு!'' என்பார்.

    நான் பாடுவேன்.

    வாத்தியத்தை தொட மறுப்பு!

    கடைசி நாள் அன்று, கம்போசிங் முடிந்ததும், ஜி.கே.வி. விஸ்கி பாட்டிலை எடுத்து, தபேலா கன்னையாவை பார்த்து, "டேய் கண்ணா! இந்தா!'' என்று ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுத்தார்.

    அதோடு, உதய சங்கரும் இதில் கலந்து கொண்டார்.

    "டேய், ராஜா! நீயும் வா!'' என்று ஜி.கே.வி. அழைத்தார்.

    "அண்ணே, வேணாம்!'' என்றேன்.

    "அட, பரவாயில்லை! வாடா!'' என்றார்.

    "இல்லேண்ணா! திடீர் என்று புரொடிïசர் வந்து ட்ïனை கேட்டால், நல்லா இருக்காதுண்ணே!''

    "அட, ராத்திரி 9 மணி ஆச்சு. இனிமே யாருடா வரப்போறா?''

    "நான் குடிச்சா கிட்டாரை தொடமாட்டேன். என்னை கிட்டார் வாசிக்கும்படி சொல்லக்கூடாது!'' என்றேன்.

    "சரி வா!'' என்றார். கலந்து கொண்டேன்.

    சற்று நேரத்தில், படத்தயாரிப்பாளரும், ராஜ்குமாரின் சகோதரர் வரதப்பாவும் வந்துவிட்டார்கள்! `பாடலை கேட்கவேண்டும்'

    என்றார்கள்!ஜி.கே.வி.யும், கன்னையாவும் வாத்தியங்களை எடுத்து வைத்தார்கள். ஜி.கே.வி. பாடத்தொடங்கினார்.

    "ஏனு ராஜா! நீனு ஏறு மாடுத்தியா? ஹாடு!'' என்று என்னை பார்த்து சொன்னார், படத்தயாரிப்பாளர்.

    ஜி.கே.வி. என்னைப் பார்த்தார். நான் `மாட்டேன்' என்று தலையை ஆட்டினேன்.

    புரொடிïசரைப் பார்த்து, "வேண்டாம். அவனை வற்புறுத்த வேண்டாம்'' என்று ஜி.கே.வி. சொன்னார்.

    நான் அவரிடம் வேலை செய்பவன். வாசிக்கச் சொல்லி என்னை அவர் கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

    மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஜி.கே.வி.யின் பண்பு, என்னைக் கவர்ந்தது.

    கன்னடப்படங் களில் ராஜ்குமாருக்கு பொதுவாக பி.பி.சீனிவாஸ்தான் பின்னணியில் பாடி வந்தார்.

    "சம்பத்திக்கே சவாலு'' என்ற ராஜ்குமாரின் படத்தில், அவர் முதல் காட்சியிலேயே எருமை மாட்டின் மீது உட்கார்ந்தபடியே பாடிக்கொண்டு வந்து அறிமுகம் ஆவார்.

    உதயசங்கர், பாடலை நன்றாக எழுதிவிட்டார். மிïசிக் எல்லாம் ரெடி.

    நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணா! ராஜ்குமார் பாடுவாரா?'' என்று கேட்டேன்.

    "என்னது! முத்துராஜ் (ராஜ்குமார்) பாடுவானா என்றா கேட்கிறாய்? அவன் நாடகத்தில்  பாடி நடித்து, சினிமாவுக்கு வந்தவன்டா!'' என்றார், ஜி.கே.வி.

    "அப்படின்னா, அவரே இந்தப்பாட்டை ஏன் பாடக்கூடாது?''

    "ஏண்டா?''

    "பாட்டு, பயங்கர குஷியோடு ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிற மாதிரி இருக்கு. பி.பி.சீனிவாஸ் பாடினா அதுவும் நல்லாத்தான் இருக்கும். ஆனா, அதிலே இந்த `பஞ்ச்' இருக்காது'' என்றேன்.

    ஜி.கே.வி. நேரே ராஜ்குமாரிடம் பேச, அவர் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

    பிறகு பாடல் பதிவுக்கு ஏற்பாடு நடந்தது. ராஜ்குமார் பிரமாதமாகப் பாடிவிட்டார். அந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களையும் அவரே பாடினார்.

    அவர் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் இருந்து, அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும், இசை யாராக இருந்தாலும் அவரேதான் கடைசி வரை பாடினார். அதற்கு அடிபோட்டவன் நானாக இருந்தேன் என்பது, வரலாற்றில் முக்கிய விஷயம்.

    இதுகுறித்து, வழக்கமாக ராஜ்குமாருக்கு பாடி வந்த பி.பி.சீனிவாஸ் என்னிடம் வருத்தம் கொள்ளவில்லை. எப்போதும் போலவே என்னிடம் அன்பாகப் பழகினார்.

    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.
    இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.

    தலைப்பிரசவ அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜீவாவுக்கு மூன்று மாதம். டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டும், செக்கப் செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குத்

    தோன்றவில்லை."தோன்றவில்லை'' என்றில்லை; எனக்குத் தெரியாது!

    அம்மாதான் இருக்கிறார்களே! அவர்களுக்குத் தெரியாதா? கவனித்துக் கொண்டார்கள். இருந்தாலும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜீவாவே செய்து வந்தாள்.

    நான் எப்போதும் போல் கம்போசிங், ரெக்கார்டிங், மிïசிக் எழுதுவது என்றிருந்தேன்.

    ஜீவாவுக்கு மகப்பேறு நேரம் வந்தது. அவளுக்கு வலி எடுத்தது. அது பிரசவ வலி என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று.

    அம்மா, கலாவின் வீட்டுக்கு போயிருந்தார்கள். நான்தான் வீட்டில் இருந்தேன்.

    "வலிக்கிறது'' என்றாள், ஜீவா. "என்ன செய்யவேண்டும்?'' என்று நான் கேட்க, "ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும்'' என்றாள்.

    "சரி'' என்று கூறிவிட்டு, ரிக்ஷா ஒன்றை அழைத்து வந்தேன். அவளே அதில் ஏறினாள்; அவளே கல்யாணி ஆஸ்பத்திரிக்குப்போனாள்; அவளே `அட்மிட்' ஆனாள்!

    "கூட யாரும் வரவில்லையா?'' என்று ஆஸ்பத்திரியில் கேட்டிருக்கிறார்கள். "இல்லை'' என்று இவள் கூற, அட்மிட் செய்து கொண்டார்கள்.

    என் மனைவி - என் வாழ்க்கைத்துணை, பிரசவ வலி எடுத்தபோது, `எல்லோருக்கும் ஏற்படுவதுதான் போலிருக்கிறது' என்று மிகவும் சாதாரணமாக எண்ணிய மூடன்!

    `பாவம், எப்படி தனியாகப் போவாள்? இடையில் ரிக்ஷாவில் போகும்போது வலி அதிகமாகி வேறு ஏதாவது

    ஆகிவிட்டால்...' என்றுகூட எண்ணாத கொடியவன்!

    - இப்படியெல்லாம் என்னைப்பற்றி இப்போது எண்ணத் தோன்றுகிறதே தவிர, அப்போது ஒன்றும் தோன்றவில்லை.

    ஜீவாவுக்கு குழந்தை பிறந்தது.

    அம்மா, பாஸ்கர் எல்லோரும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். நானும் போய்ப் பார்த்தேன்.

    பச்சை உடம்போடு வீட்டுக்கு வந்தாள் ஜீவா. பிஞ்சுக் குழந்தை கைகளையும், கால்களையும் ஆட்டுவது, அழு வது, மழலைக் குரல் கேட்பது - இதெல்லாம் விவரிக்க முடியாத விஷயங்கள்தான்.

    பிரசவம், தாய் வீட் டில் நடப்பதுதான் வழக்கம். நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்பதால், அது ஒரு விஷயமாக எண்ணிப் பார்க்கப்படவில்லை. இப்போது குழந்தை பிறந்து விட்டது. இந்த நேரத்தில் ஜீவா பிறந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று அக்கா, அத்தான் எல்லோரும் விரும்பியதால், அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

    ஜீவாவையும், குழந்தையையும் பாஸ்கர், பண்ணைபுரத்தில் கொண்டு போய் விட்டு வந்தார்.

    அப்போது, இந்த "ராஜா தி கிரேட்''டுக்கு உடன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் "ராஜ்யம்'' எப்படி நடக்கும்!

    மூன்று மாதம் கழித்து, அழைக்கப் போகவேண்டும் அல்லவா? அப்போதும் இந்த "ராஜா தி கிரேட்'' போகவில்லை! போனால் "ராஜ்யம்'' கவிழ்ந்து விடும் பாருங்கள்!

    பாஸ்கர்தான் போய் ஜீவாவையும், குழந்தையையும் அழைத்து வந்தார்.

    மதுரையில், அண்ணன் பாவலரிடம் குழந்தையைக் காட்டியிருக்கிறார்கள். குழந்தையை கையில் எடுத்து, அப்படியே வெகுநேரம் அண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று பாஸ்கர் கூறினார்.

    என் தாய்க்கு நான் நல்ல மகனா? என் மனைவிக்கு நல்ல கணவனா? உடன் பிறந்தார்க்கு நல்ல சகோதரனா?

    நானல்லவோ பாரதியார் பாடாத வேடிக்கை மனிதன்!

    குழந்தையின் ஜாதகத்தைக் கணித்து, இரண்டு மூன்று பெயர்களை பாஸ்கர் சொன்னார்.

    "கார்த்திக்'' என்ற பெயரை நான் தேர்ந்தெடுத்தேன்.

    அப்போது நான் வாங்கியிருந்த புது சவுண்ட் சிஸ்டத்தில், புதிய இசைத்தட்டுகளை காலை 4 மணிக்கே எழுந்து போடுவேன். மெதுவாக சத்தத்தை குறைத்து வைத்து இசைத்தட்டுகளைப் போடுவேன். எல்லாம் கார்த்திக்கிற்காகத்தான்!

    இப்படி அதிகாலையிலும், பிறகு நேரம் இருக்கும்போதும், இரவு 10 மணிக்கு மேலும் இசை ஒலிக்கும். அந்த இசைத்தட்டில் இசைத்தவர்களும், கம்போஸ் செய்தவர்களும் வந்திருந்து கவனிப்பார்கள். ரசித்து, ரசித்து, அவர்களை நேசிக்கும் என்னையும், என் குழந்தையையும் ஆசீர்வதித்துப் போவார்கள்.

    அந்த இசையைக் கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். நம் நாட்டில் எத்தனை பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் இதற்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள்?

    இசை இல்லாத இவர்கள் வாழ்வு - வறண்ட பாலை!

    கார்த்திக் குழந்தையாக இருக்கும்போதே இந்த இசையைக் கேட்கிறான். எனக்கு இந்த இசையை கேட்க 30 ஆண்டுகள் அல்லவா ஆகியிருக்கிறது! பியானோவை பார்க்கவே எனக்கு 27 ஆண்டுகள் ஆயிற்றே! கார்த்திக் பிறந்த மூன்று மாதத்திலேயே இசையைக்

    கேட்கிறானே!எஸ்.வி.வெங்கட்ராமன் இசை

    ஜி.கே.வெங்கடேஷ் மிïசிக் கம்போஸ் செய்யும்போது ஓய்வு கிடைத்தால், பழைய பாடல்களின் உயர்தரமான அமைப்புகளை விளக்குவார்.

    அவர் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு வீணை வாசித்தவர்.

    எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "மீரா'' உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், எஸ்.வி.வெங்கட்ராமன்.

    மீரா படத்தில் ஒரு காட்சி. ஒட்டகத்தின் மீது போய்க்கொண்டே எம்.எஸ். ஒரு பாட்டு பாடுவார்.

    இதற்கு இசை அமைக்கும் முன், உயிரியல் பூங்காவுக்கு ("ஜு'') வெங்கட்ராமன் சென்றார். அங்கு காசு கொடுத்து ஒரு ஒட்டகத்தின் மீது சவாரி செய்தார். ஒட்டகம் நடந்த நடையை தாள கதியாக வைத்து, மிïசிக் கம்போஸ் செய்தார் என்று சொல்வார், ஜி.கே.வி.

    "சிலையே நீ என்னுடன் பேசவில்லையோ?'' என்ற பாடலை ஜீ.கே.வி. பாடினால் மிக அழகாக இருக்கும்.

    பாலுவுக்கு சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்புகள் வந்தன.

    ஏற்கனவே என் கல்யாணத்துக்கு வராவிட்டால், நட்பு பொய்யாகிவிடும் என்று ப Öலுவிடம் சொல்லியிருந்தேன். அவன் வராததால், எனக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்தாலும் சிங்கப்பூர் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

    என்னை சமாதானப்படுத்த, வைத்தியை பாலு என்னிடம் அனுப்பி வைத்தான். நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.

    அவர்கள் சிங்கப்பூர் போனார்கள்; வந்தார்கள். அதுபற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    ஒரு சாதாரண வாத்தியக் கலைஞனுக்கு, முதன் முதலாக "வெளிநாட்டுப் பயணம்'' போக வாய்ப்பு வந்தால் அதைத் தவற விடுவானா? ஆனால், நான் தவறவிடுவேன்! அது எனக்குப் பெரிதில்லை. மரியாதையும், ஒழுங்கும், பண்பும்தான் முக்கியம்!

    இளையராஜா - ஜீவா திருமணம், சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக, அதே சமயம் எளிமையாக நடந்தது.
    இளையராஜா - ஜீவா திருமணம், சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக, அதே சமயம் எளிமையாக நடந்தது.

    திருமணம், தன் இசை வாழ்வுக்கு இடைïறாக இருக்கும் என்று கருதி, நீண்ட காலமாக திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்த இளையராஜா, முடிவில் தாயாரின் விருப்பத்தை தட்ட முடியாமல் திருமணத்துக்கு சம்மதித்தார்.

    திருமணநாளை நினைவு கூர்கிறார், இளையராஜா:

    "திருமண நாள் வந்தது.

    நாதசுரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் தெருமுனையில் இருந்து தொடங்கி, வீடு வரை வந்தது. மாப்பிள்ளை (அதாவது நான்) சிறுவயதில் விளையாடிய தெருவில், கழுத்தில் மாலையுடன் வந்தார்!

    இரண்டு நாற்காலிகளைப் போட்டு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்காரச் சொன்னார்கள். அதன்படி அவர்களும் உட்கார்ந்தார்கள்.

    அம்மா, அண்ணன், மதனி, அவர்கள் குழந்தைகள், அத்தான், அக்கா, மனைவியின் தம்பிகள், பாஸ்கர், அவர் மனைவி சுசீலா, தம்பி அமர், அவன் நண்பன் ராஜேந்திரன் ஆகியோர் சூழ்ந்து நின்றார்கள்.

    மற்றும் என் நண்பர் என்ஜினீயர் எம்.சுப்பிரமணி, தேவாரம் ராமராஜ், கோம்பை நண்பர்கள், பள்ளித்தோழன் மைத்துனன் ஜெயகரன், அவனுடைய குடும்பத்தார் குழுமியிருந்தார்கள்.

    முகூர்த்த நேரம் நெருங்கியது. "...ம்... தாலியைக் கொண்டு வாங்கப்பா!'' என்று ஒருவர் குரல் கொடுக்க, ஒரு தட்டில் தாலி வந்தது. அதைப் பெரியவர்கள் தொட்டு ஆசி வழங்க, "தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுங்கப்பா'' என்று ஒரு குரல் கேட்டது.

    தாலியை என் கையில் கொடுத்தார்கள். "கெட்டி மேளம்... கெட்டி மேளம்'' என்று யாரோ முழங்க, கெட்டி மேளம் முழங்கியது. தாலியைக் கட்டினேன். பின்னால் நின்றிருந்த சுப்பிரமணியனின் மனைவி, ராமராஜின் மனைவி, மற்ற பெண்கள், தாலியின் மற்ற முடிச்சுகளைப் போட்டார்கள். பூ தூவினார்கள்.

    "மாலை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, மாலை மாற்றிக்கொண்டோம்.

    பிறகு ஊர்ப் பெரியவர்கள் பேசினார்கள். வழக்கம் போலவே, "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'' - என்று அவர்கள் கூறியபோது, நான், பாஸ்கர், தோழன் ஜெயகரன், சுப்பிரமணியன், ராமராஜ் எல்லோரும் சிரித்து விட்டோம். ஏனென்றால், நாங்கள் போகும் கல்யாண வீடுகளில் எல்லாம், இதையேதான் பேச்சாளர்கள் பேசுவார்கள். அதுபற்றி கிண்டல் செய்வோம்.

    அதே அனுபவம் எனக்கும் நேரிட்டதால், எங்களை அறியாமல் சிரிப்பு வந்தது.

    மாலையில், மதுரையில் இருந்து வந்த இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

    அன்றைக்கே சாந்தி முகூர்த்தம்!

    ஆம்; முதல் இரவு.

    முதல் இரவு, முதல் இரவுதான்!

    சென்னை புறப்பாடு மறுநாள், சென்னையில் இருந்து நாங்கள் வந்திருந்த டாக்சியில், குடும்பத்தாருடன் சுருளிதீர்த்தம் சென்று நீராடிவிட்டு வந்தோம்.

    மாலையே சென்னை திரும்புவதாக இருந்தது.

    எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, அண்ணன் பாவலரிடமும் விடைபெற்றுக்கொண்டு, மாலை 6 மணிக்கு பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டோம். மறுநாள் காலை 6 மணி அளவில், சென்னைக்கு வந்து சேர்ந்து, வீட்டை அடைந்தோம்.

    காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு விட்டு, ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் வீட்டுக்குச் சென்று, ஜி.கே.வி. அண்ணன், அண்ணி, ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றோம். திரும்பும் வழியில் சாயி லாட்ஜ் சென்று தன்ராஜ் மாஸ்டர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

    அம்மாவுக்கு சமையல் பாரம் குறைந்தது. அண்ணியும், ஜீவாவும் அதை பார்த்துக்கொண்டார்கள்.

    அடுத்த நாள் முதல் என் வழக்கமான பணிகள் தொடங்கின. கர்நாடக சங்கீதம், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் ஆகியவற்றை கற்பது தொடர்ந்தது.

    காலையில் நான் குளிப்பதற்கு வெந்நீர் கலந்து வைக்குமாறு ஜீவாவிடம் அம்மா கூறினார்கள்.

    அதன்படி வெந்நீர் வைத்தாள். நான் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றிக்கொண்டதும், "போ! போய் முதுகு தேய்த்து விடு!'' என்று ஜீவாவிடம் அம்மா கூறினார்கள்.

    இந்த மாதிரி காட்சிகளை கிராமங்களிலும், சிறு ஊர்களிலும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

    "வேண்டாம்'' என்று சொன்னேன்.

    அம்மா, "பரவாயில்லை. தேய்த்து விடு'' என்று சொன்னார்கள்.

    ஜீவா ஒரு சொம்பு வெந்நீர் ஊற்றி முதுகு தேய்த்து விட்டாள்.

    மேற்கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அம்மாவோ, ஜீவாவோ இதுபற்றி என்ன நினைப்பார்கள் என்று நான்

    எண்ணிப்பார்க்கவில்லை.''மேற்கண்டவாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    கங்கை அமரன் திருமணம்

    இளையராஜாவின் திருமணத்துக்குப்பின், அவர் தம்பி கங்கை அமரன் திருமணம் நடந்தது.

    மணமகள் பெயர் கலா. தந்தை எஸ்.எஸ்.பி.லிங்கம், பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர்.

    கங்கை அமரன் - கலா திருமணம் மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் சிறப்பாக நடந்தது. வரவேற்பு, உட்லண்ட்ஸ் ஓட்டலில்

    நடந்தது.வரவேற்புக்கு அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி, மற்ற அமைச்சர்கள், பிரமுகர்கள் வந்திருந்து

    வாழ்த்தினார்கள்.

    பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார்.
    பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிக்குப்பின் திருமணத்துக்கு இளையராஜா சம்மதித்தார். மணமகள் ஜீவா, இளையராஜாவின் முறைப்பெண். (அக்காள் மகள்)

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். அமர் - கலா காதல் தீவிரமாகி வந்ததும், இதற்கு ஒரு காரணம்.

    என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க, அம்மா ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். "எனக்கும் வயசாச்சு. இப்படியே தினமும் உங்களுக்கு சமைச்சுப் போட எத்தனை நாள் முடியுமோ! அதனால் காலா காலத்திலே...'' என்று அம்மா கூறிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து விடுவேன்.

    என் அக்காவுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை (ஜீவா) பிறந்தபோது, அதன் ஜாதகத்தை என் தந்தையார் பார்த்திருக்கிறார்கள். "இந்தக் குழந்தையைத்தான் ராஜையாவுக்கு கட்டி வைக்கவேண்டும்'' என்று உத்தரவு போட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை அம்மா என்னிடம் சொல்லி பயமுறுத்துவார்கள்.

    ஜீவா பிறந்து, சிறு குழந்தையாக இருந்தபோதே, அதைப் பார்த்துக் கொள்ளும்படி அக்கா என்னிடம்தான் சொல்வார்கள். நான்தான் பார்த்துக் கொண்டேன். நான்தான் வளர்த்தேன். ஒரு தாய், சிறு குழந்தைக்கு செய்யும் அத்தனையும் நான்தான் ஜீவாவுக்கு செய்தேன்.

    அம்மாவிடம் மேற்கொண்டு மறுத்துப் பேசமுடியாத கட்டம் வந்தது. திருமணம் செய்து கொள்ள நான் சில நிபந்தனைகளை அம்மாவிடம்

    சொன்னேன்."அதைப் பார்க்கவேண்டும், இதைப் பார்க்க வேண்டும், சினிமாவுக்குப் போகவேண்டும், அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும் என்றெல்லாம் எல்லா பெண்களும் கணவன்மாரிடம் வற்புறுத்துவார்கள். அதுமாதிரி என்னிடம் கூறக்கூடாது. எனக்கு முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் இசைதான். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்'' என்று கூறினேன்.

    இது என் அக்காவுக்கும் தெரிந்தது. அவர்களும் மகளை பயமுறுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!

    எல்லாம் ஈசன் செயலே. கல்யாணம் நிச்சயம் ஆயிற்று, என்னைக் கேட்காமலேயே! அண்ணன் பாவலரும், அத்தானும், அம்மாவும் கலந்து பேசி, 1972 மே 22-ந்தேதி எனக்கும், ஜீவாவுக்கும் திருமணம் என்று நிச்சயித்து விட்டார்கள்.

    திருமண அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும் என்று, பாஸ்கர் கட்டாயப்படுத்தினார்.

    அதன்படி அழைப்பிதழும் அடித்துவிட்டோம். ஆனால் இன்று நினைத்தாலும், நெஞ்சை மிகவும் உறுத்துகிற விஷயம் - அழைப்பிதழில் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் பெயரை போடாமல் விட்டு விட்டோம்.

    "விட்டுவிட்டோம்'' என்ன, "விட்டு விட்டேன்.''

    அண்ணன் பெயரைப் போட்டால், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பவேண்டும். கூட்டம் வந்தால் செலவு தாங்காது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம் என்று சமாதானம் சொன்னால் அதை நம்பி விடுவீர்களா என்ன!

    அண்ணனும் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லை. அதுதான் மிகவும் வருத்தம்.

    திருமணத்துக்கு புதுத்துணிகள் எடுக்க வேண்டியிருந்தது.

    பாலு ஒரு டெய்லரைக் காட்டி, "ஒரு சூட் தைத்துக்கொள்'' என்றான். பணம் அவனா கொடுப்பான்? நான்தானே கொடுக்கவேண்டும்!

    கல்யாணம் நிச்சயமான நாளில் இருந்து எத்தனை கச்சேரிகள் இருந்ததோ, அத்தனை கச்சேரிகளில் என் சம்பளத்தை மொத்தமாக பாலுவையே வைத்திருக்கச்சொல்லி கல்யாணத்துக்கு முன் என்னிடம் கொடுக்கும்படியும், இல்லையென்றால் செலவாகிவிடும் என்றும் கூறியிருந்தேன்.

    ஜி.கே.வி.யிடம் `ஆர்க்கெஸ்ட்ரா' இன்சார்ஜ் ஆக இருந்த சீனிவாசன்தான் பாலுவிடமும் இன்சார்ஜ் ஆக இருந்தான். கடைசியில் பணம் பட்டுவாடா செய்தபோது, பெரிய தொகையை நான் எதிர்பார்க்க, ஏதோ ஒரு தொகையை "இவ்வளவுதான்'' என்று சொல்லி என் கையில்

    வைத்துவிட்டான்!சீனு விளையாடி விட்டானோ என்று எனக்கு சந்தேகம். பாலுவிடம் கேட்டதில், நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தபடிதான் இருக்கிறது என்று கூறிவிட்டான்.

    சரி; இப்போது என்ன செய்ய முடியும்!

    கல்யாணத்திற்கு பட்டுச்சட்டை தைத்துக்கொண்டேன். கல்யாண வேட்டியின் விலை என்ன தெரியுமா? 37 ரூபாய்! இன்றும் அந்த வேட்டி (என் மனைவியால் காப்பாற்றப்பட்டு) என்னிடம் இருக்கிறது!

    கல்யாணத்துக்கு ஒவ்வொரு காசையும் இழுத்துப்பிடித்து, எண்ணிப் பார்த்து செலவு செய்தேன்.

    என் திருமணத்துக்கு முக்கியமாக இரண்டு பேர் வரவேண்டும் என்று விரும்பினேன் - எதிர்பார்த்தேன்.

    அந்த இரண்டு பேர் பாரதிராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்.

    தனக்குப் படப்பிடிப்பு இருக்கிறது என்றும், திருமணத்திற்கு வர இயலாது என்றும் பாரதி சொல்லிவிட்டார்.

    எஸ்.பி.பி.யிடம், "நீ கட்டாயம் வரவேண்டும்'' என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், "நீ வராவிட்டால், நம் நட்பு பொய் என்றாகிவிடும். அவசியம் வா. உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்'' என்றும் சொல்லிவிட்டேன்.

    இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.
    இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தம்பி அமர் (கங்கை அமரன்) கலாவை காதலிக்கும் விஷயம், அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கடைசி பிள்ளை என்ற முறையில், அமர் மீது அம்மாவுக்கு ரொம்பப் பிரியம்.

    ஆனால், மூத்தவர்களான பாஸ்கரும், நானும் இருக்கும்போது, எங்களுக்கு முன் அமர் திருமணத்தை எப்படி நடத்துவது என்று அம்மா

    யோசித்தார்.என் அக்கா பத்மாவுக்கு பம்பாயில் திருமணமாகியிருந்தது. மாப்பிள்ளை ராஜன், கம்ïனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். பாஸ்கருக்கு பெண் பார்க்கச் சொல்லி, அவருக்கு அம்மா கடிதம் எழுதியிருந்தார் போலிருக்கிறது. பாஸ்கருக்கு பம்பாயிலேயே பெண் பார்த்து

    விட்டார்கள்.பாஸ்கருக்கு திருமணம் என்று தெரிந்ததுமே, பாரதியும், நானும் அவரை கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டோம்.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். அன்றுதான் பம்பாயில் பாஸ்கருக்குத் திருமணம் என்று முடிவாகியது.

    ஜாதகப் பொருத்தம் பார்த்தார்களா, ஜோசியர்கள் நாள் குறித்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. சாதாரணமாக, எந்த ஒரு காரியமானாலும், அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம். இதற்கும் ஜோசியம் பார்த்திருப்பார்களோ என்னவோ!

    குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே, நான், பாஸ்கர், பாரதி, அம்மா, அமர் எல்லோரும் ரெயில் மூலம் பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தோம். அண்ணனும் (பாவலர் வரதராஜன்) வந்து கலந்து கொண்டார்.

    தமிழர்கள் வசிக்கும் தாராவியில், குடிசைகள் நிறைந்த பகுதியில், ஒரு வீட்டின் முன் சிறிய பந்தல் போடப்பட்டு இருந்தது. அக்காவின் வீட்டில் உடைகளை மாற்றிக்கொண்டு, கல்யாணத்துக்கு பாஸ்கர் தயாரானார்.

    "மாப்பிள்ளை அழைப்பு'' ஊர்வலம் நடந்தது. யாரோ சரியாக வாசிக்கத் தெரியாத ஒருவர் நாயனம் வாசித்தார். மேளதாளம் முழங்க, பாஸ்கரை நடக்க வைத்து அழைத்துச் சென்றோம்.

    ஒரு சாதாரணப் பந்தல். இரண்டு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அதில் மாப்பிள்ளையும், பெண்ணும் உட்கார்ந்தார்கள். சுற்றிலும்

    கூட்டம்.பூக்கள் கிடைக்காத பம்பாயில், எப்படியோ இரண்டு சிறிய மாலைகளை தயார் செய்திருந்தார்கள். கெட்டி மேளம் முழங்க, மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ள, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட, திருமணம் நடந்தேறியது.

    திருமணம் முடிந்து சென்னைக்குத் திரும்பினோம். அங்கே ஒரு பிரச்சினை.

    எங்கள் வீட்டில் மேற்கு புறம் இருந்த அறையில் பாஸ்கரும், பாரதியும் வழக்கமாகப் படுப்பார்கள். அதை புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்க வேண்டி இருந்தது.

    நானும், அமரும் ஹாலில் படுப்பது வழக்கம். பாரதி, எங்களுடன் ஹாலில் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால், அது பாரதிக்கு சரியாகத் தோன்றவில்லை. தனியாக வேறு ரூம் பார்த்துக்கொண்டு போக விரும்பினார்.

    எது வந்தாலும் ஒன்றாக வாழ்வது என்ற உயர்ந்த நோக்கம் உள்ள நண்பர்களைக்கூட, கால நேரமும், சூழ்நிலைகளும் பிரித்து விடுகிறது அல்லவா?பக்கத்திலேயே வேறு ரூம் பார்த்துக்கொண்டு பாரதிராஜா போய் விட்டார். சாப்பாட்டிற்கு மட்டும் வீட்டுக்கு வந்து  போவார்.

    அம்மா அடுத்தபடியாக என் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். நான் அதைக்கண்டு கொள்ளாமல், தட்டிக் கழித்து, நான் உண்டு என் வேலை உண்டு என்று போய்க்கொண்டிருந்தேன்.

    முன்பே சொன்னது போல், நாள் முழுவதும் ஜி.கே.வி.யின் கம்போசிங் அல்லது ரெக்கார்டிங்கில் இருப்பேன். இரவுதான் வீடு திரும்புவேன்.

    இந்தக் காலக்கட்டத்தில், மற்ற இசை அமைப்பாளர்களும் என்னை வாசிக்கக் கூப்பிட்டார்கள். மலையாளத்தில் தேவராஜன் மாஸ்டர், பாபுராஜ், ஏ.டி.உமர், தட்சிணாமூர்த்தி சுவாமி, கன்னடத்தில் விஜயபாஸ்கர், ராஜன் நாகேந்திரா, உபேந்திரகுமார், தெலுங்கில் ராஜேஸ்வரராவ், பெண்டியாலா சீனிவாசன், ராகவலு... இப்படி எல்லோருக்கும் வாசித்துக் கொண்டிருந்தேன்.

    கர்நாடிக் இசை கற்பதும், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் கற்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. பாடல் பதிவுகளின்போது என்னை உற்சாகமாக வைத்திருந்ததே கர்நாடிக் இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம்தான்.

    ஆதலால், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. கல்யாணம் செய்து கொள்வது, இசை வாழ்க்கைக்கு இடைïறாக ஆனாலும் ஆகிவிடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எனவே, திருமணத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் இருந்தேன்.

    மாலையில் கடற்கரை வரை `வாக்கிங்' போவதாக இருந்தால், நானும், பாரதியும் மட்டும் போவோம். பாஸ்கர் எங்களைப் பார்ப்பார். பாரதி சிரித்துக்கொண்டே, "நாங்கள் எல்லாம் சின்னப் பசங்க. நீ இப்போது குடும்பஸ்தன்! அதனால் எங்கள் கூட வரக்கூடாது!''

    என்பார்.பாஸ்கர் பொறுத் துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, "அட போங்கடா'' என்று கூறிவிட்டு சில சமயம் எங்களுடன் வருவார்.

    அப்படி அவர் ஒரு நாள் வந்தபோது, "குடியரசு என்றால் என்னய்யா?'' என்று பாரதி வேடிக்கையாக கேட்டார்.

    "மக்களாட்சி. அதாவது நம்மை நாமே ஆள்வது!'' - இது பாஸ்கர்.

    "அப்படியானால் அது சுதந்திரம்தானே?''

    "ஆமாம். சுதந்திரம்தான்!''

    "அப்படியானால், சுதந்திரமாக இருக்க வேண்டிய நாளில் யாராவது கைதாவானா?'' என்று சிரித்தபடி கேட்டார், பாரதி.

    "ஆமாய்யா! ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினம் - சுதந்திரமாக இருக்க வேண்டிய நாள். அன்றைக்குப் பார்த்து, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஜெயில்லே அடைச்சுட்டீங்க!'' என்பார் பாஸ்கர்.

    "தலையில் எழுதினதை மாத்த முடியுமா பாஸ்கரூ!'' என்று சிரிப்பார், பாரதி.

    தமிழ்ப்படங்களின் தரம்

    பாஸ்கர் எங்களுடன் வராதபோது, நானும் பாரதியும் பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு வருவோம்.

    அப்போது, மத்திய அரசின் "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்'' (என்.எப்.டி.சி.) உதவியுடன் தயாரிக்கப்பட்டு வந்த "தாகம்'' என்ற படத்திற்கு பாரதிராஜா உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் திரைப்படத்துறை எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றன, எவ்வளவு உன்னதமான படங்களை வெளிநாடுகளில் தயாரிக்கிறார்கள், இங்கே அப்படி இல்லையே என்று ஆதங்கத்துடன் பேசி வருந்துவோம்.

    உலகத் தரத்துக்கு உயரும் வகையில் தமிழ்ப்படங்கள் வரக்கூடாதா? எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? இந்த மாதிரி உயர்ந்த படங்களைத் தந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்குவோம்.

    ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தயாரித்தால்தானே! தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் ஒத்துக்கொள்ள வேண்டுமே!

    இல்லை; ஒரு நாள் இதெல்லாம் மாறத்தான் போகிறது!

    - இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நடப்போம்.

    அதற்குள் நிலா கடலில் இருந்து மேலே வந்து, அதன் நிழல் கடல் பரப்பில் விழ, அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடனë இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண் டார்கள்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடனë இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண் டார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``சென்னையில் சபையர் தியேட்டரில் ``கிளியோ பாட்ரா'' ரிலீஸ் ஆகியிருந்தது. எப்படியாவது அந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று 2 முறை முயற்சி செய்தும், டிக்கெட் கிடைக்காமல் திரும்பி விட் டோம்.

    அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை, முன்னதாகவே சென்று `கிï'வில் நின்று, டிக்கெட் வாங்கி படத்தைப் பார்த்து விடுவது என்று முடிவு

    செய்தோம்.காலை எட்டு மணிக்கே கிளம்பி விட்டோம். பஸ் பிடித்து சபையர் ஸ்டாப்பில் இறங்கினோம். இன்னும் `கேட்' திறக்கவில்லை.

    `சரி, டிபன் சாப்பிட்டு விட்டு வருவோம். நேரம் சரியாக இருக்கும்' என்று தீர்மானித்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றோம்.

    கிளியோ பாட்ரா பார்க்கப் போகிறோம் என்பதால், எல்லோரும் நல்ல மூடில் இருந்தோம். ஜோக் அடித்துக் கொண்டே `ஆர்டர்' கொடுத்தோம்.

    `சரி, சரி! இவ்வளவு ஆர்டர் கொடுத்து விட்டோமே. பணம் குறைந்தால், யாரய்யா மாவாட்டுவது!' என்று கிண்டல் செய்து

    கொண்டிருந்தோம்.டிபன் வந்தது. நன்றாகச் சாப்பிட்டோம்.

    பில்லை வாங்கிக் கொண்டு, எங்கள் `நிதி மந்திரி' பாஸ்கர், பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டார். அவர் முகம் மாறியது.

    அதை கவனித்த பாரதி ராஜா, சிரித்துக் கொண்டே, `டேய்! காசு இல்லேண்ணு நடிக்காதே! போய் பணத் தைக் கொடு!''

    என்றார்.பாஸ்கரின் முகம் மாறவில்லை. இறுக்கமாகவே இருந்தது. ``யோவ்! காசு இருந்த பேண்ட்டுக்கு பதிலா, வேறு பேண்ட்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன்யா!'' என்றார்.

    இப்போது பாரதியின் முகம் சீரியசாக மாறியது. சுற்றும் முற்றும் பார்த்தார். நிறைய கூட்டம். நேராக கேஷியர் உட்கார்ந்திருந்த கல்லாவுக்கு போனார். பாஸ்கரிடம் இருந்த பில்லைப் பிடுங்கி, தான் போட்டிருந்த கைக்கெடிகாரத்தைக் கழற்றி இரண்டையும் கேஷியரிடம்

    கொடுத்தார்.``பணத்தை மறந்து வைத்து விட்டு வந்து விட்டோம். இந்த வாட்சை வைத்துக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்கிறோம்'' என்றார்.

    கேஷியர் நல்லவர். சரி என்று தலையை ஆட்டினார். வெளியே வந்ததும், பாஸ்கரைத் திட்டிய பாரதி, பணத்தைக் கொண்டு வருமாறு விரட்டினார். அங்கேயே காத்திருந்தோம். சிறிது நேரத்தில் பணம் வந்து சேர்ந்தது.

    பணத்தை கேஷி யரிடம் கொடுத்து, கெடிகாரத்தை மீட்டோம். இதற்குள் நேரம் ஆகி விட்டதால் அன்றைக்கும் கிளியோ பாட்ரா படத்தைப் பார்க்க முடியவில்லை.

    பின்னர், ஒரு தடவைக்கு மூன்று தடவை கிளியோ பாட்ராவைப் பார்த்தோம்''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    மெட்டுகளை மனதிலேயே பதிவு செய்து கொண்டு, பின்னர் அதை அப்படியே பாடக்கூடிய அபூர்வ ஆற்றலை சின்ன வயதிலேயே பெற்றிருந்தார், இளையராஜா. இந்த ஆற்றலைக்கண்டு வியந்து போற்றிய ஜி.கே.வெங்கடேஷ், பின்னொரு சமயம் இளையராஜா வாசித்த இசையை ஏற்காமல் கேலி செய்தார்.

    இந்த சம்பவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``ஒருநாள் ஜி.கே.வி. இசை அமைப்பில் ஒரு கன்னடப்படத்தின் பாடல் பதிவாக இருந்தது.

    காலை 7 மணிக்கு, விஜயாவாகினி கார்டனில் ஜி.கே.வி. யுடன் கம்போசிங் குழுவினர் உட்கார்ந் திருந்தோம். பாடலுக்கு முன் தொடங்கும் இசையை கம்போஸ் செய்ய வேண்டும்.

    இசைக்குழுவில் இருந்த வைத்தி, முயற்சி செய்து ஒரு இசையைப் போட்டார். அது நன்றாக இல்லை என்று ஜி.கே.வி. சொன்னார்.

    பிறகு ஜி.கே.வி. ஏதோ, சொல்ல வாத்தியக் காரர்கள் நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வாசித்தார்கள். அதுவும் நன்றாக இல்லை என்று கூறி விட்டார்.

    இப்படி நேரம் போய்க் கொண்டு இருந்தது. நான், `அண்ணா! எனக்கொரு ஐடியா! மிïசிக் கொடுக்கவா?'' என்றேன்.

    வைத்தியை  ஜி.கே.வி. அழைத்தார். ``டேய்,  வைத்தி! நம்ம ராஜா ஏதோ மிïசிக் கொடுக்கிறானாம், போய் கொடுத்து வாசிக்கச் சொல்லு'' என்றார்.

    நானும் இசைக் குழுவினருக்கு நோட்ஸ் கொடுத்து, வாசிக்கச் செய்து காட்டினேன்.

    அதுவும் ஜி.கே.வி.க்கு பிடிக்கவில்லை.

    அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வைத்தியை அழைத்து, ``டேய், பாருடா இவனை!'' என்று என்னை சுட்டிக் காட்டி சிரித்தார்.

    பிறகு, 555 சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகைத்தபடியே, ``டேய்! இதெல்லாம் பெரிய விஷயம். அவ்வளவு ஈசியா வந்திடுமா? அந்த இடத்துக்கெல்லாம் நீ இன்னும் வரலை!'' என்று என்னைப் பார்த்து உரத்தக்குரலில் சொல்லி, சிகரெட் பாக்கெட்டை ஆர்மோனியத்தின் மீது `டக்' கென்று போட்டார்.

    இசைக்குழுவினர் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு உடம்பே கூனிக் குறுகி கூசியது.

    அப்போதே நான் ஓர் முடிவுக்கு வந்தேன். எந்த ஐடியா எனக்குத் தோன்றினாலும், அதை ஜி.கே.வியிடம் சொல்லக்கூடாது; உதவவும் கூடாது. எனக்கு இசை அமைக்க சந்தர்ப்பம் வந்தாலும், உதவிக்காக யாரையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் தீர்மானித்தேன்.
    ``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.
    ``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.

    நாகேஸ்வரராவ்- சாவித்திரி நடித்த ``தேவதாஸ்'' படத்துக்கு இசை அமைத்தவர், சி.ஆர்.சுப்பராமன்.

    எம்.கே.தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த ``ராஜமுக்தி'', என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்னில் உருவான லலிதா, பத்மினி, பாலையா நடித்த ``மணமகள்'', பானுமதி -நாகேஸ்வரராவ் நடித்த ``லைலா மஜ்னு'' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன்.

    அவர் பற்றி இளைய ராஜா கூறியதாவது:-

    ``ஏவி.எம். ஸ்டூடி யோவிலும், ஜுபிடர் ஸ்டூடியோவிலும் அவர்களுக்கு என்று இசைக் குழுக்கள் இருந்தன. மற்ற ஸ்டூடியோக்களில் இசைக் கலைஞர்களைத் தனியாக அழைத்துதான் வாசிக்கச் செய்து, பதிவு செய்ய வேண்டும்.

    அதெல்லாம் போய் விட்ட காலத்தில் அல்லவா நான் திரை உலகுக்கு வந்தேன்! அந்தக் காலப் பெருமைகளை, அனுபவம் மிக்க பெரியவர்கள் சொல்வது ஒரு பாடமாகவே இருக்கும்.

    குறிப்பாக, என் முதல் `மானசீக குருநாதர்' சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்குமë என்று அறிந்திருக்கிறேன்.

    பின்னணி இசை (ரீரிகார்டிங்) அமைப்பதற்கான காட்சியை சுப்பராமனுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால், பியானோ முன் வந்து உட்கார்ந்து விடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க, அதை `நோட்ஸ்' எடுக்க வலது புறம்  விசுவநாதனும் ராமமூர்த்தியும் இடது புறம் கோவர்த்தனும், ஸ்ரீராமுலுவும் அமர்ந்து கொண்டு, சுப்பராமன் வாசிக்க வாசிக்க எழுதிக் கொள்வார்களாம்.

    எதை எந்த வாத்தியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பிரித்துக் கொடுத்து ரிகர்சல் பார்க்கும்போது, `ஏய்! இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு? இங்கே வா!' என்று அழைத்து அதை மீண்டும் பியானோவில் வாசித்துக் காட்டி சரி செய்வாரம்.

    வாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர, அதை ஞாபகமாய்ச் சரி செய்தார் என்றால், அவருடைய ஞானத்தை என்ன சொல்வது?

    முப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர், எவருக்கும் இணை இல்லாத மேதை.

    ஆனால் ஆர்மோனிய பெட்டி மீது `விஸ்கி' பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்!

    அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, சினிமா கலைஞர்களுக்குப் புகழ் வரவர, குடியும், காமவெறியும்தான் உயர்ந்த சுகபோக நிலையாகவும், அதிலேயே சுகித்திருப்பதே நல் வாழ்க்கையாகவும் இருக்கிறது.

    சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த பாடல்கள் மிகவும் `பாப்புலர்' ஆனதால், பொறாமை கொண்டவர்கள் அவரை `டப்பா மிïசிக் டைரக்டர்' என்று கூறி வந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீத வித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம்.

    கலைவாணர் என்.எஸ். கே.யும், சி.ஆர்.சுப்பராமனும் நல்ல நண்பர்கள். என்.எஸ்.கே.யிடம் சுப்பராமன் இதுபற்றி கூறி வருத்தப்பட, `கவலைப்படாதே, சுப்பராமா! உன்னுடைய சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்' என்று கூறி, `மணமகள்' என்ற படத்தைத் தயாரித்தார்.

    அதில் அத்தனையும் கர்நாடக சங்கீதப் பாடல்கள். அத்தனை பாடல்களையும் வைரமணிகள் போல் ஒளி வீசும் வண்ணம் இசை

    அமைத்திருந்தார்.உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல்கள் மறக்க முடியாதவை. ``எல்லாம் இன்பமயம்'' என்ற பாடலில்,

    மலையின் அருவியிலே - வளர்

    மழலை மொழிதனிலே

    நிலவின் ஒளியாலும்

    குழலின் இசையாலும்

    நீலக்கடல் வீசும் அலையாலுமே!

    கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்

    கானமா மயிலின் ஆடல் அறுசுவையில்

    காதலோடு மனிதனின் புலன் காண்பதெல்லாம் இன்பமயம்!

    - சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை யாரால் மறக்க இயலும்!

    மகாகவி பாரதியாரின் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசை அமைத்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். இத்தனை காலம் கடந்தும், அதற்கு மேல் இதோ ஒரு ராகமாலிகை என்று யாராலும் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு இசையை அறிந்தவர், சுப்பராமன்.

    `டப்பா சங்கீதம்' என்று சங்கீத வித்வான்கள் கூறி வந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, அதை அப்படியே திருப்பிப் போட வைத்தது சி.ஆர்.சுப்பராமனின்  இசை. சினிமா பாடலை சங்கீத மேடைக்கு கொண்டு போக வைத்த நிலைமை, சி.ஆர்.சுப்பராமன் காலத்தில்தான் ஏற்பட்டது. இன்றைய இளம் வித்வான்களில் யார் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடவில்லை?

    சரளமான நடைபோல வந்த பாட்டுக்கு, இத் தனை மகத்துவம்.சி.ஆர்.சுப்பராமனின் ``வர்ணமெட்டால்'' வந்தது. அதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.

    என் மானசீக குருவே- உம்மை என்றும் வணங்குகி  றேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

    சில மலையாளப் படங்களில் பணியாற்ற இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    ``சில மலையாளப் படங்களுக்கு கிட்டார் வாசிக்க சான்ஸ் வந்தது. ``12 பி'' பஸ்சில் வடபழனிக்குச் சென்று, ஏவி.எம்.மிலோ, பரணியிலோ, ரேவதியிலோ நடக்கும் ரெக்கார்டிங்குக்கு நடந்து போவேன். முடிந்ததும் கடைசி ``12 பி'' பஸ்சில் திரும்பி வந்து

    சேருவேன்.மலையாள இசை அமைப் பாளர் யாராக இருந்தாலும், பாடல் பதிவின் போது ``கண்டக்ட்'' செய்பவர் சேகர் அவர்கள்தான். அவர் தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். அதை விட ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்று கூறினால் நன் றாகத் தெரியும்.

    எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் ``பிஜிஎம்'' (பேக்ரவுண்ட் மிïசிக்) சேகர் தான் செய்து கொடுப்பார். மாஸ்டர் தேவ ராஜனிடம் மட்டும் அவர் ``கண்டக்ட்'' மட்டும் செய்வார்.

    அவர் ``பிஜிஎம்'' மட்டும் செய்யும் படங்களில் சில இடங்களை  குறிப்பிட்டு, ``நீ இந்த இடத்தில் வாசித்து விடு'' என்பார். எனக்காக கம்போஸ் செய்ய மாட்டார்.

    மற்ற அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து விட்டு, எனக்கு மட்டும் ஒன்றும் சொல்லாமல், ``வாசித்து விடு'' என்று சுதந்திரமாக விட்டு விடுகிறாரே, ஏன் என்று யோசிப்பேன். நான் தன்ராஜ் மாஸ்டரின் மாணவன் என்பதால்தான் என்னிடம் இவ்வளவு நம்பிக்கை என்று

    தெரிந்தது.ஒத்திகையைப் பார்க்கும் யாராவது இசை அமைப்பாளர்கள், கிட்டாரில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தால், அவரை சேகர் கூப்பிட்டு, ``அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. `டேக்'கின் போது சரியாக -நன்றாகவே வரும்' என்று சொல்லி, என் அருகே யாரையும் நெருங்க விடமாட்டார். அவ்வளவு நம்பிக்கை.

    அவர் தனியாக இசை அமைத்த எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. அதுபற்றி அவர் வருந்தியும் நான் பார்த்தது இல்லை. தன் தந்தையின் ஆசியால் ரஹ்மான் பெரும் அளவில் பேரும், புகழும் பெற்றார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.''

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.


    ×