search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை  தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

    இதன் காரணமாக "அன்லக்கி'' (ராசி இல்லாதவர்) என்று பெயர் பெற்றார்!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜி.கே.வி.க்கு நிறைய படங்கள் வந்தன. இரவு இரண்டு மணி வரை கம்போசிங் நடக்கும். காலை 7 மணிக்கு பாடல் பதிவு! இப்படி எத்தனையோ மாதங்கள் நடந்துள்ளன.

    சென்னையில், இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு, வெளிநாட்டுக் கிட்டார் வந்திருந்தது. விலை 150 ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கி விட்டேன்.

    பாடல்களுக்கு நானும், பிலிப்சும் கிட்டார் வாசிப்போம். பாட்டின் இடையே சில சமயம் பிலிப்ஸ் வாசிப்பார்.

    அவர் கைக்கு நல்ல நாதம் அமைந்திருந்தது. அதே கிட்டாரை வேறு யாராவது வாசித்தால் அந்த நாதம் வராது. சில பேருடைய கைவாகு அப்படி. அதேபோல் வாத்தியமும் அவர்களுக்கு படிய வேண்டும். குதிரைகளில் எல்லோரும் சவாரி செய்து விட முடியாது. அது சிலருக்குத்தான் கட்டுப்படும்.

    அதே போலத்தான் வாத்தியங்களும், இசையும், பாட்டும், கலைகளும், பண்பும், ஒழுக்கமும், தவமும்!

    நாம் தவமிருப்பதல்ல; தவம் நமக்கு அமைய வேண்டும்.

    ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைக்கும் படங்களின் டைரக்டர்கள் வந்து, கதையைச் சொல்லி, பாடல்கள் இடம் பெற வேண்டிய இடங்களையும் சொல்லி விட்டுச் செல்வார்கள். அந்த வேலை முடியும் வரை என் பணியைச் செய்து விட்டு, வீட்டுக்கு வருவேன். பாடலின் அந்த கட்டத்திற்கு நான் இசை அமைக்க வேண்டியிருந்தால் என்ன செய்வேன் என்று யோசிப்பேன். இசை அமைத்துப் பார்ப்பேன். பாடலை கம்போஸ் செய்து பார்ப்பேன். இப்படியே, நிறைய டிïன்கள் சேர்ந்து விட்டன!

    பாஸ்கர், பகல் நேரத்தில் சும்மா இருக்க முடியாது. வழக்கமாக சினிமா கம்பெனிகளுக்குப் போய் வருவார். அதில், டைரக்டர் டி.என்.பாலுவுக்கு உதவியாளராக இருந்த முருகானந்தம், பாஸ்கருக்கு பழக்கமாகி நண்பர் ஆனார். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்க போவதாகவும், அதற்கு நாம்தான் இசை அமைக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சொன்னார்.

    படக்கம்பெனிக்கு "வலம்புரி மூவீஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டது. ராயப்பேட்டையில் ஆபீசும் திறக்கப்பட்டது.

    இசை அமைப்புக்கு அட்வான்சாக ஐந்தாயிரம் ரூபாய் செக்கை, முருகானந்தம் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் காலத்தில் பெரிய இசை அமைப்பாளர்களுக்கு முழு இசை அமைப்புக்கும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள். இவர், அட்வான்சாகவே ஐந்தாயிரம் கொடுக்கிறாரே, பெரிய புரொடிïசர்தான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    இந்த செக்கை பாங்கியில் போடாமல் நானே வைத்திருந்தேன். ரெக்கார்டிங்கில் வாசிக்கும்போது, வலம்புரி மூவிஸ் கொடுத்த செக்கை நண்பர்களிடம் அவ்வப்போது பெருமையுடன் காட்டுவேன். அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஆனால், வலம்புரி மூவிஸ் படம் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை.

    இதன் பிறகு, இன்னொரு பட அதிபரிடம் பழகி விட்டு பாஸ்கர் வந்தார். அந்தப் படத்திற்கு அடுத்த நாள் ஆழ்வார்பேட்டை ஆனந்த் ஓட்டலில் கம்போசிங் என்று சொன்னார்.

    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்த நாள் ஆனந்த் ஓட்டலுக்குப் போனோம். தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் சேதுராமன் ஆகியோர் ஓர் அறையில் இருந்தார்கள். டைரக்டர் படத்தின் கதையைச் சொல்லி, "பூஜைக்கு ஒரு காதல் பாட்டை பதிவு செய்யலாம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்தேன். டைரக்டருக்கும் பிடித்திருந்தது.

    பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக முடிவு செய்யப்பட்டது. "பாடல் பதிவுக்கு ஸ்டூடியோ வாடகை, பாடகர்கள் இசைக் குழுவினர் சம்பளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று பட அதிபர் கேட்க, அவருக்கு பட்ஜெட் கொடுக்கப்பட்டது.

    பாடல் பதிவு நாள். இசைக் குழுவினருடன் ஒத்திகை பார்த்தோம்.

    இடையிடையே இசைக் குழுவினர், "பணம் வந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், காலையில் இருந்தே புரொடக்ஷன் மானேஜர், புரொடிïசர் எவரையுமே காணோம்!

    நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பணம் வந்த பாடில்லை. பட அதிபர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனந்த் ஓட்டலில் அவர் தங்கியிருந்த ரூம் காலி செய்யப்பட்டிருந்தது!

    இதற்கிடையே பாடுவதற்கு பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வந்து விட்டார்கள். அவர் களுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

    பணம் வந்து சேர வில்லை. என்ன செய்வ தென்று ஆலோசித்தோம்.

    "இவ்வளவு நேரம் சிரமப்பட்டு, பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலை பதிவு செய்வோம். பணம் கொடுத்த பிறகு அவரிடம் பாடலை கொடுப்போம்'' என்று முடிவு செய்து, அதை ஸ்டூடியோவுக்கு தெரிவித்தோம். ஒலிப்பதிவு என்ஜீனியரும் ஒப்புக் கொள்ளவே, பாடல்

    பதிவாகியது.ஆனால் இன்று வரை பணமும் வரவில்லை; பட அதிபரும் வரவில்லை.

    அதிலிருந்து, இசைக் கலைஞர்கள் மத்தியில் என்னை "அன்லக்கி மிïசிக் டைரக்டர்'' (ராசியில்லாத இசை அமைப்பாளர்) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசைக் குழுவில் இளையராஜா பணியாற்றிய அதே கால கட்டத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணி பாடகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

    இளையராஜாவும், பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அந்த "மலரும் நினைவுகள்'' பற்றி இளையராஜா

    கூறியதாவது:-

    நாராயணன் என்னும் டைரக்டர் இயக்கிய "ஸ்ரீதேவி'' என்ற படத்துக்கு ஜி.கே.வி. இசை அமைத்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு நல்ல நண்பன் ஆகியிருந்த நேரம் அது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடல் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது, எஸ்.பி.பி.க்குத் தெரியாது.

    ஸ்ரீதேவி படத்தில் ஒரு "டூயட்'' பாடல் வந்தது. பழைய கதாநாயகர்களுக்கு என்று இல்லாமல், ஒரு இளம் ஜோடி பாடுவது போல்

    அமைந்தது.நாராயண் ரெட்டி இதை எழுதினார். "ராசானு ப்ரேம லேக்க லென்னு'' (எத்தனை எத்தனை காதல் கடிதம் எழுதினேன்) என்று தொடங்கியது அந்தப்பாடல்.

    ட்ïன் கம்போசிங் முடிந்தது. யாரைப் பாட வைக்கலாம் என்று டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணே! இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே!'' என்றேன்.

    "ஏன்டா! அவன் நன்றாகப் பாடுவானா? இந்த பாட்டுக்கு சரியாக இருக்குமா!'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அண்ணே! இது இளம் ஜோடி பாடும் பாட்டு! இதற்கு ஏன் பழைய பாடகர்? பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட்!''

    "எம்.ஜி.ஆருக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும்!''

    "அப்போ சீர்காழி போன்றவர்களுக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை? பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா?'' என்றேன்.

    "சரி. அவனை ரிகர்சலுக்கு வரச் சொல்!'' என்றார், ஜி.கே.வி.

    பாலு ரிகர்சலுக்கு வந்து, சொல்லிக் கொடுத்ததை உடனே நன்றாகப் பாடி விட்டான். அவனுக்கு இருந்த திறமையைக் கண்டு கொண்டார், ஜி.கே.வி.

    "ஓ.கே.! பாலுவே பாடட்டும்'' என்று அவர் சொல்ல, பாடல் பதிவாகி, படம் வெற்றி பெற்று பாடலும் ஹிட் ஆனது.

    சினிமாவில் பாட எஸ்.பி.பி.க்கு நிறைய வாய்ப்புகள் வந்ததுடன், கச்சேரிகளும் நிறைய வந்தன. ஆந்திராவில் நிறைய கச்சேரிகளுக்கு போக வேண்டியிருக்கும். அப்போது எனக்கு ஜி.கே.வி.யின் இசை அமைப்பில் பின்னணி இசை சேர்ப்பு வேலை இருக்கும்.

    எஸ்.பி.பி.யுடன் ஒரு கச்சேரிக்கு போனால் எனக்கு சம்பளமாக 75 ரூபாய் கிடைக்கும். ஜி.கே.வி.யின் இசை அமைப்புக்கு போனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் நான்கு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும்.

    இதை மனதில் வைத்து, "நான் வர முடியாது'' என்று பாலுவிடம் சொன்னால், "நீ இல்லாமல் நான் எப்படி கச்சேரி செய்வேன்? யாரை வைத்து என்ன செய்ய முடியும்?'' என்றெல்லாம் பேசி, எப்படியாவது என்னை அழைத்துச் சென்று விடுவான்.

    எழுபத்தைந்து ரூபாய்க்காக, அறுநூறு ரூபாய்களை இழந்தது எத்தனை முறை என்று கணக்கு இல்லை. இது பாலுவுக்கு இப்போது ஞாபகம் இருக்குமோ என்னமோ! பாலுவை எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை.

    ஒரு முறை எஸ்.பி.பி.க்கு பொள்ளாச்சியில் கச்சேரி. அடுத்த நாள் எனக்கு இசைக் கல்லூரியின் தேர்வு இருந்தது. அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.

    ஆனால், நான் கட்டாயம் வரவேண்டும் என்று எஸ்.பி.பி. வற்புறுத்தினான். `கச்சேரி முடிந்ததும், நான் காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்' என்றான்.

    `சரி' என்று கச்சேரிக்குப் புறப்பட்டேன்.

    இரவு கச்சேரி முடிந்ததும், பாலுவின் காரில், ஏறிக் கொண்டேன். `கிளாரினட்' பல்லாராவ், `தபேலா' மது ஆகியோரும் எங்களுடன் புறப்பட்டார்கள். பாலுவே காரை ஓட்டினான். சேலம், உளுந்தூர்பேட்டை வழியாக வருவதற்கு பதிலாக, சேலம், அரூர், தர்மபுரி என்று தவறான பாதையில் காரை ஓட்டியதால், வேலூர் வந்து சேருவதற்கே காலை ஐந்து மணி ஆகி விட்டது. விடியப் போகும் நேரம்.

    `அப்பாடா! வேலூர் வந்து விட்டோம். ஏழு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம்' எண்ணினேன்.

    காரை ஓட்டி வந்த பாலு, டிரைவரை ஓட்டச் சொல்லி விட்டு பின் சீட்டுக்கு வந்து, என் மடியில் தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான்.

    டிரைவர் சீட்டுக்குப் பின்புறம் நான் இருந்தேன். வேலூர் அவுட்டருக்கு கார் வந்தபோது, ஒரு குழந்தை திடீரென்று காரின் குறுக்கே ஓடிவந்தது. டிரைவர் காரை ஒடிக்க, கார் மணலில் சறுக்கி, 40 அடி பள்ளத்தில் உருண்டது.

    தூங்கிக் கொண்டு வந்த நான் விழித்துப் பார்த்தால், கார் உருண்டு கொண்டிருக்கிறது!

    நான் தயாராகி விட்டேன். `இதோ இப்போது அடி விடும்', `இதோ இப்போது!' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா!' என்று இருவர் கூச்சலிடும் சப்தம் கேட்டது. `சரி; முன்னால் இரண்டு பேர் காலி' என்று நினைத்தேன்.

    கார், தலை கீழாக பள்ளத்தில் போய் விழுந்தது. சக்கரங்கள் நாலும் மேலே பார்த்தபடி நின்றன! சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது! முன்புறக் கண்ணாடி வழியாக ரத்தம் வழிவது தெரிந்தது.

    டிரைவர் பக்கத்து கண்ணாடி கதவு திறந்திருந்தது. அதன் வழியாக ஒவ்வொருவராக வெளியே வந்தோம். பார்த்தால், ஒரு பாலத்துக்குக் கீழே இருக்கிறோம் என்பது தெரிந்தது. மேலே, பாலத்தில் பெரிய கூட்டம்! அவர்கள், "என்ன ஆச்சு, என்ன ஆச்சு?'' என்று கத்தினார்கள். என்ன ஆச்சு என்று எங்களுக்கே தெரியவில்லை!

    கார் கண்ணாடியில் வழிந்தது ரத்தம் அல்ல, என்ஜின் ஆயில். ரோடு புழுதி காரணமாக, ரத்தக் கலரில் வழிந்திருக்கிறது.

    "செத்துப் பிழைத்தவன்டா!''

    எப்படியோ தப்பிப் பிழைத்தோம். மேலே வந்ததும், "நான் செத்துப் பிழைச்சவன்டா!'' என்று சத்தம் போட்டுப் பாடினேன்!

    உண்மையில், நானும், மற்றவர்களும் அந்த விபத்தில் உயிர் தப்பியது ஆச்சரியம்தான். நான், கார் கண்ணாடியில் தலையை சாய்த்து வைத்து தூங்கிக் கொண்டுதான் பயணம் செய்தேன். அந்தக் கண்ணாடி முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. எனக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை.

    பின்னர், வேலூர் பஸ் அதிபர் ஒருவர் எங்களை தனது வண்டியில் சென்னையில் கொண்டு வந்து விட்டார்.

    இந்த விபத்து காரணமாக, அப்போது இசை தேர்வு எழுத முடியாமல் போயிற்று. பிறகுதான் எழுதினேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாள ராக இளையராஜா பணியாற்றிக் கொண்டிருந்த போது, இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நாடகங்களுக்கும் இசை அமைத்தார்.

    இப்படி, இரவு - பகலாக வேலை பார்த்து வந்ததால், தன்ராஜ் மாஸ்டரை பார்க்க முடியாமல் போய் விட்டது.

    ஏற்கனவே அவர் கூறிய படி, இசையில் பட்டம் பெற லண்டன் `டிரினிட்டி காலேஜ் ஆப் மிïசிக்'' நடத்தும்  பரீட்சையில் பங்கு கொள்ள இளையராஜா பணம் கட்டியிருந்தார்.

    ஒருநாள் சற்று ஓய்வு கிடைத்த போது, தன்ராஜ் மாஸ்டரை பார்க்கச் சென்றார். தன்னை விட்டு விட்டு கோடம்பாக்கத்துக்குச் சென்றதாலும், இடையில் தன்னைப் பார்க்க வராததாலும் இளையராஜா மீது மாஸ்டர் கோபம் கொண்டிருந்தார்.

    இளையராஜாவை பார்த்ததுமே, அவர் கண்களில் அனல் வீசியது. ``நான் அப்போதே சொன்னேன், கோடம்பாக்கம் போனால் உருப்பட மாட்டாய் என்று! அப்படியே ஆயிடுச்சு பார்!'' என்றார்.

    ``இல்லை சார். கொஞ்சம் ரெக்கார்டிங் வேலை இருந்தது. இனிமேல் கரெக்டா வந்துடறேன், சார்'' என்று இளையராஜா கூறினார்.

    ``இனிமே என்ன வர்றது? உனக்கு இனிமேல் நான் பாடம் எடுக்கப் போறதில்லே. நீ போ! ரெக்கார்ட்டிங்குக்கே போ!'' என்று கோபத்துடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தார், ஆனால் மாஸ்டரின் கோபம் தணியவில்லை. ``நான் சொன்னா சொன்னதுதான்'' என்றார், கண்டிப்புடன்.

    ``சார்! நீங்க சொல்லித்தான் லண்டன் டிரினிட்டி காலேஜ் பரீட்சைக்கு பணம் கட்டினேன், எட்டாவது கிரேட் பிராக்டிக்கல், நான்காவது கிரேட் தியரி இரண்டுக்கும் நான் தயாராக வேண்டும்...''

    ``ஆமாம்...பணம் கட்டச் சொன்னேன். இனிமேல் என்னால் முடியாது. இனி நீ இங்கு வரவும் வேண்டாம்''

    - கண்டிப்புடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா ஓர் முடிவுக்கு வந்தார்.

    ``சார்! நான் இங்கே மீண்டும் ஒருநாள் வருவேன். பரீட்சைகளில் நல்ல முறையில் தேறி, ஹானர்ஸ் சர்டிபிகேட்டுடன் வந்து உங்களைப் பார்ப்பேன்'' என்று சபதம் செய்வது போல் கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

    நன்றாக உழைப்பவர்கள் சபதம் செய்தால் என்ன நடக்குமோ அதுதான் இளையராஜாவுக்கும் நடந்தது. சதாசர்வ காலமும் இசை பற்றிய படிப்பு... பயிற்சி!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``பாரதிராஜாவிடம் ஒரு சபதம், மாஸ்டரிடம் ஒரு சபதம்.

    திரையில் என் பெயரை பாரதிக்கு முன்னால் கொண்டு வந்து விட வேண்டும் என்று நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இசை தேர்வுக்கு பணம் கட்டியதற்காகவாவது எப்படியும் தேறி விட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டேன்.

    பிராக்டிக்கல் பரீட்சை பற்றி நான் கவலைப்படவில்லை. கிட்டாருக்கு என்னென்ன பாடங்கள் உண்டோ அதையெல்லாம் பிராக்டிஸ் செய்து

    விடலாம்.ஆனால் இந்த `தியரி'க்கு (எழுத்துப் பரீட்சை) என்ன செய்வது முக்கியப் பிரச்சினை- ஆங்கிலம்!

    தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி, நானாகப் படிக்க ஆரம்பித்தேன்.

    புத்தகத்தை திறப்பேன். முதல் வாக்கியத்தை வாசிப்பேன். புரியாது. மீண்டும் வாசிப்பேன். ஓரிரு வார்த்தைகள் - ஏற்கனவே தெரிந்த வார்த்தைகள் மட்டும் புரியும். அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு, `இந்த வாக்கியம் எதைச் சொல்ல எழுதப்பட்டிருக்கிறது' என்று யோசிப்பேன்.

    மூன்றாவது முறை வாசிப்பேன். யாரும் விளக்காமலேயே, நன்றாக அர்த்தம் மனதில் வந்து விடும்.

    `சரியாக இருக்கிறதா?' என்று அடுத்தவரிடம் கேட்டு சரிபார்த்தால், 100க்கு 100 சரியாக இருக்கும்!

    தெரியாத புது வார்த்தைகளுக்கு அர்த்தத்தை யாரிடமா வது கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

    ரெக்கார்டிங் இல்லாத நேரங்களில், பரீட்சைக்கு உரிய இசையை, மனப்பாடமாக பிராக்டிஸ் செய்வேன். எப்போதும் பேப்பரும் கையுமாக இருக்கும் நான், ஓய்வு நேரத்தில் எழுதிக் கொண்டே இருப்பேன். இசைக் குழுவினர் எல்லோரும் என்னை வியப்புடன் வேடிக்கை

    பார்ப்பார்கள்.பரீட்சை வந்தது. பிராக்டிக்கல் 8வது கிரேடு, தியரி 4வது கிரேடு ஆகிய இரண்டிலும் 85 மார்க் எடுத்து ``ஹானர்ஸ்'' தகுதியுடன் தேறினேன்.

    இந்த சான்றிதழுடன் தன்ராஜ் மாஸ்டரை போய்ப் பார்த்தேன். சான்றிதழைக் காட்டினேன்.

    அதைப் பார்த்த மாஸ்டர், வியப்புடன் என்னை நோக்கினார். ``ராஜா! ரியலி ï ஆர் கிரேட்!'' என்றார்.

    அதுமட்டுமல்ல ``இசையில் இன்னும் எவ்வளவோ இருக்கு. நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம்'' என்று திறந்த மனதோடு அழைப்பு

    விடுத்தார்.ஆயினும் மறுபடியும் மாஸ்டரிடம் போக எனக்கு மனம் வரவில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.
    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா அசிஸ்டென்டாக இருந்தபோது, புட்டண்ணாவிடம் பாரதிராஜா உதவி இயக்குனராகச் சேர்ந்தார்.

    ஒருநாள் இளையராஜா வும், பாரதிராஜாவும் பேசிக் கொண்டிருந்த போது, ``சினிமாவில் டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் வருகிறது என்று பார்ப் போமா?'' என்று பாரதிராஜா சிரித்துக் கொண்டே கேட்டார். இளையராஜாவும் சிரித்தபடி, ``பார்த்து விடுவோம்'' என்றார்.

    புட்டண்ணா இயக்கிய `இருளும் ஒளியும்'' படத்தில், உதவி டைரக்டராக பாரதிராஜா பணியாற்றினார். வாணிஸ்ரீ கதாநாயகியாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது.

    இந்தப் படத்தில்தான் ``உதவி டைரக்டர்- பாரதிராஜா' என்று டைட்டில் கார்டு போடப்பட்டது.

    படம் வெளிவந்ததும், ``பார்த்தியா! பந்தயத்தில் நான்தான் ஜெயித்து விட்டேன்'' என்று இளையராஜாவிடம் கூறினார், பாரதிராஜா.

    ``ஓகே பாரதி'' என்றார், இளையராஜா.

    காரணம், அவர் கவனம் எல்லாம் இசையை முழுவதுமாக கற்றறிய வேண்டும் என்?தில் இருந்ததே தவிர,தன் Ù?யர் திரையில் வரவேண்டும் என்?தில் இல்லை!

    ``இருளும் ஒளியும்'' ஒரு சிறந்த படமாக இருந்தும், புட்டண்ணா தமிழ்நாட்டில் புகழ் பெறவில்லை. ஆனால், கன்னடப் படஉலகில் ஈடு இணையற்ற டைரக்டராக விளங்கினார். எனவே அவர் கவனம் கன்னடப்பட உலகத்தை நோக்கித் திரும்பியது.

    தமிழ்ப்பட உலகில் புகழ் பெற விரும்பிய பாரதிராஜா, டைரக்டர் கிருஷ்ணன் நாயரிடம் சிலகாலம் உதவி டைரக்டராக பணியாற்றினார். ஏ.ஜெகநாதன் டைரக்ட் செய்த ``அதிர்ஷ்டம் அழைக்கிறது'' படத்துக்கும் அவர்தான் துணை டைரக்டர். தேங்காய் சீனிவாசனும், சவுகார் ஜானகியும் நடித்த படம் இது.

    இந்த சமயத்தில், கே.ஆர்.ஜி. ``சொந்த வீடு'' என்ற படத்தை தயாரிக்க தீர்மானித்தார். டைரக்ஷன் பொறுப்பை பாரதிராஜாவுக்கு வழங்கினார்.

    கதை ஆர்.செல்வராஜ்; இசை: வி.குமார் என்று முடிவாயிற்று.

    ஜி.கே.வெங்கடேசிடம் `பிசி'யாக இருந்தாலும், இசையை கற்றுக் கொள்வதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், இளையராஜா இதுபற்றி கவலைப்படவில்லை.

    ``பாரதியைப் பார்த்தாயா! படம் கிடைத்ததும், உன்னை மறந்திட்டான்'' என்று இளையராஜாவிடம் செல்வராஜ் சொன்னார். அதை இளையராஜா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

    என்ன காரணத்தினாலோ, ``சொந்த வீடு'' படம் நின்று விட்டது.

    ``16 வயதினிலே'' என்ற திரைக் காவியம் பாரதிராஜாவின் முதல் படமாக அமைய வேண்டும் என்றும், அதன் இசை அமைப்பாளராக இளையராஜா பணியாற்ற வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் என்பது, அன்று யாருக்கும் தெரியாது!

    இந்த சமயத்தில், ஊரில் இருந்த இளையராஜாவின் அம்மா, பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு தன் கையால் சமைத்துப்போட வேண்டும் என்று விரும்பி சென்னைக்கு வந்து விட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``எங்களைப் பிரிந்திருப்பது பொறுக்க மாட்டாமல், அம்மா சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டார்கள். ``எம் புள்ளைங்க இங்கே கஷ்டப்படும்போது, நான் எதுக்கு அங்கே இருக்கணும்? உங்களுக்கு சமைத்தாவது போட வேண்டும் என்றுதான் வந்து விட்டேன்''

    என்றார்கள்.``இந்த வயதில் நீங்க ஏன் கஷ்டப்படணும்?'' என்று கேட்டால், ``அடப் போங்கப்பா! சமைக்கிறது ஒரு கஷ்டமா?'' என்று அடித்துப் பேசி விடுவார்கள்.

    1969-ல் இருந்து நான்கு வருடம் அம்மா சமையல்தான்.

    பாரதியின் தாய் எனக்கும் அம்மா போல. என் அம்மாவும் பாரதிக்குத் தாய்தான். கிடைக்கிற காசை அவர்களிடம் கொடுத்து விடுவோம். எல்லாவற்றையும் அம்மாதான் பார்த்துக் கொள்வார்கள்.

    ஒருமுறை அம்மாவிடம் 200 ரூபாய் கொடுத்தோம். அவர்கள் சென்னை வந்த பிறகு நாங்கள் கொடுத்த பெரிய தொகை. அம்மா மிகவும் மகிழ்ந்து, வெற்றிலைப் பையில் அந்தப் பணத்தை வைத்து, இடுப்பில் செருகிக் கொண்டார்கள். எல்டாம்ஸ் ரோடு மார்க்கெட்டிங் காய்கறி வாங்கப் புறப்பட்டார்கள்.

    ஒரு கடையில் ஏதோ காய்கறி வாங்கியிருக்கிறார்கள். அதை கவனித்த எவனோ பணப்பையை திருடி விட்டான்.

    பை களவு போனது தெரியாமல், அம்மா அடுத்த கடையில் சாமான்களை வாங்கி விட்டு இடுப்பைத் தொட்டுப் பார்த்தால், பையை காணவில்லை. சாமான்களை அங்கேயே வைத்து விட்டு, வந்த வழியில் பை எங்காவது கிடக்கிறதா என்று நடந்தபடி தேடிப் பார்த்திருக்கிறார்கள். அது கிடைக்காமல், வாங்கிய சாமான்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு, வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பி னார்கள்.

    ``எம் புள்ளைங்க பாடுபட்டு சேர்த்த பணத்தை, இந்த படுபாவி தொலைச்சுட்டேனே!'' என்று வாய் விட்டு புலம்பினார்கள்.

    ``சரிம்மா... போகட்டும், விடுங்க! இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?'' என்று தேற்றினோம்.

    வருத்தத்தை மாற்றிக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ அவர்களால் முடியவில்லை. வெந்து போன மனதுடன், வீட்டிலிருந்த அரிசி, வெங்காயம், புளி, மிளகாயை வைத்து, சாதம் வடித்தார்கள்.

    வெங்காயத்தை தண்ணீரில் நறுக்கி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு, சாதத்தில் ஊற்றிச் சாப்பிடக்

    கொடுத்தார்கள்.உண்மையில் சொல்கிறேன், இன்று வரை அது போன்ற ருசியான சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.
    இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

    கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது.

    பூஜையன்றே பாடல் பதிவு.

    பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது.

    இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல.

    ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது.

    பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.

    எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

    அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில்.

    பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது.

    "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது. எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது!

    ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.

    இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.

    உபேந்திரகுமாரோ எதுபற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கி விட்டார்.

    இனி இங்கே வேலைக்காகாது என்று தெரிந்து போக, ரெக்கார்டிங் நடத்த ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவை கேட்கச் சொன்னேன். அங்கே நடத்தலாம் என்பது தெரியவந்ததும் ஆர்க்கெஸ்ட்ராவுடன் அங்கே போனேன். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து, ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது.

    இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த `ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம்.

    ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது. ஜானகி வந்தார். `மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து `டேக்' போகலாம் என்று தொடங்கினோம்.

    இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில்

    இருந்தேன்.இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன்.

    ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது.

    அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், `கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.

    எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மிïசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று

    கேட்டேன்.அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக.

    எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.

    மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,

    "பிள்ளை பெறாத பெண்மை தாயானது

    அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''

    - என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார்.

    "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன்.

    ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

    பொதுவாக `டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் `வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார்.

    என்னவென்று புரியாமல் `வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது

    தெரிந்தது.விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டிïனும் வார்த்தையும் கலந்து `பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.''

    ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

    ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் `அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.

    ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது `பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது.

    கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.

    அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது.

    அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் `பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.

    இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது.

    கமல் `பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை `பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.

    ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார்.

    யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை `தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.

    ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.

    ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார்.

    அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

    "ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''

    - என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''

    "நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம்.

    மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.

    இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

    அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.

    ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டிïன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

    இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.

    "சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!

    இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

    மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

    ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.

    அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டிïன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

    தனது இசைப்பயண அனுபவம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பைரவி படத்தை தயாரித்த கலைஞானம், "மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை (பின்னணி இசை சேர்ப்பு) முடிக்க வேண்டும். அந்த அளவுக்குத்தான் என்னிடம் பணம் இருக்கிறது. எனவே மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை முடித்துவிடுங்கள்'' என்று என்னிடம்

    சொல்லிவிட்டார்.இதுமாதிரியானதொரு நெருக்கடியை இதுவரை சந்தித்திராதவன் என்ற முறையில், அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    நான் அவரிடம், "படம் மிகவும் சீரியசாக மனதைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவே, மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அதோடு மூன்று நாளைத் தாண்டிவிட்டால் யார் பணம் கொடுப்பது?'' என்று கேட்டேன்.

    அவரோ, "எப்படியும் மூன்று நாளைக்குள் முடித்தாகணும்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் நான் இன்னும் கோபமாகி, "மூன்று நாட்களுக்கும் மேலாக ரீரிக்கார்டிங் போனால் என் சம்பளப்பணத்தை நீங்கள் தரவேண்டாம். அதை ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கொடுத்து விடுங்கள்'' என்றேன்.

    கலைஞானம் பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

    ரீரெக்கார்டிங் தொடங்கியாயிற்று. படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் போல, ஹீரோவின் தங்கையை கெடுப்பது, அவளின் மரணம், அதன் இறுதிக்காட்சிகள், ஹீரோவின் சபதம், வில்லனின் ஆட்களோடு சண்டை என்று போய்க்கொண்டிருந்தது.

    எல்லா ரீல்களிலும் மிïசிக். மூன்று நாட்களுக்குள் முடியவில்லை. "சரி; அப்படியே இரவும் தொடர்ந்து வேலை செய்து முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதனால் இரவு 9 மணிக்கு முடிக்க வேண்டிய கால்ஷீட்டை முடிக்காது, இரவும் தொடர்ந்து வேலை செய்து அதிகாலை 4-30 மணிக்கு

    முடித்தோம்.கலைஞானத்திடம் `வருகிறேன்' என்றுகூட சொல்லாமல் கிளம்பினேன்.

    அப்போது அவர் நான் எதிர்பாராத ஒரு காரியம் செய்தார். என்னுடைய பாக்கி சம்பளத்தை கையில் வைத்தார்.

    "நீங்கள்தான் பணம் இல்லை என்றீர்களே?'' என்று கேட்டேன்.

    "பரவாயில்லை. கலைஞர்கள் வயிறெரியக்கூடாது'' என்றார், கலைஞானம்.

    நான் அவரிடம், "வேண்டாம். எனக்கு வருத்தமில்லை'' என்றேன்.

    அவரோ, "இல்லையில்லை, கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேசிய தொகை கொடுத்தால்தான் மரியாதை'' என்று சொன்னவர், மேற்கொண்டு என்னை எதுவும் பேசவிடாமல் கையில் பணத்தை வைத்தார்.

    ஜெய்சங்கர், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் காயத்ரி. இதில் "வாழ்வே மாயமா?'' என்ற பாடல், நல்ல பாடலுக்கு இசையமைத்தோம் என்ற திருப்தியை தந்தது.

    இந்தப் படத்தில்தான் இந்தியத் திரை இசையில் முதன் முதலாக `எலெக்ட்ரிக் பியானோ' உபயோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து டி.என்.பாலு இயக்கிய "ஓடி விளையாடு தாத்தா'' என்ற காமெடிப் படத்துக்கு இசையமைத்தேன். இது சோபியா லாரன்ஸ் நடித்த "ரோமன் ஹாலிடே'' என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

    பத்ரகாளியை அடுத்து ஏ.சி.திருலோகசந்தரின் "பெண் ஜென்மம்'' படத்திற்கும் என்னையே இசையமைக்க அழைத்தார். இந்தப் படத்தில் `செல்லப்பிள்ளை சரவணன்' என்ற பாடல் எனக்கு பிடிக்கும். இப்போது கேட்டாலும், அதில் மூன்றாவது சரணத்திற்கு முன்வரும் இசையை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    ஸ்ரீதேவி நடித்த `சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்ற படம் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது. ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தாய்மார்கள், இருட்டும்வரை தங்களிடம் வேலை வாங்கும் முதலாளிகளைப் பார்த்து கெஞ்சுகிற முறையில் பாடும் பாடலான

    "தண்ணி கறுத்திருச்சு - மணித்தங்கமே

    தவளை சத்தம் கேட்டுருச்சு - ஒயில் அன்னமே

    புள்ளையுமே அழுதிருச்சு - மணித்தங்கமே

    புண்ணியரே வேலை விடு''

    - என்று ஒரு பாட்டு இருக்கிறது.

    சூரியன் மறைந்ததால், தண்ணீரில் இருட்டுப்பட்டு கறுப்பாகிவிட்டது. தவளைகள் கூட கத்துகின்றன. தொட்டிலில் தூங்க வைத்த பிள்ளையும் பசியால் அழுகிறது. புண்ணியவானே காலையில் இருந்து இருட்டும் வரை வேலை செய்து விட்டோம். இப்போது அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காகவாவது செய்த வேலை போதும் என்று சொல்லி, எங்களை விட்டுவிடு'' என்று கெஞ்சும் பாடல் இது.

    இந்த மெட்டை இந்தப் படத்தில் அதன் வார்த்தைகளை விட்டு விட்டு, வேறு வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி பாட்டு எழுதினார். இது ஒரு தாலாட்டுப்பாடல் போல் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

    "துணையிருப்பாள் மீனாட்சி'' என்ற படத்தில் `சுகமோ ஆயிரம்' என்று ஒரு பாடல் பிரபலம். இந்தப்படம் தொடர்பான ஒரு விஷயம் சொல்லவேண்டும்.

    "சரசா பி.ஏ'' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் நடராஜன், திருச்சி ரங்கராஜன் என்பவருடன் சேர்ந்து பி.ஆர்.சோமு டைரக்ஷனில் "உயிர்'' என்ற படத்தை ஜெமினி ஸ்டூடியோ உதவியோடு தயாரிக்க இருந்தார்.

    ஏற்கனவே திருவையாறு ரமணஸ்ரீதர் - சரளா கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன்.

    ரமணி (ரமணிஸ்ரீதர்) இன்றைய நடிகர் ராகவேந்தர். இவர் தயாரிப்பாளர்களுக்கு நண்பர்.

    என்னைப்பற்றிசொல்லி இந்தப் படத்துக்கு இசையமைக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்.

    அதற்கு அவர்களோ, "முதன் முதலில் அவருக்கு படம் கொடுத்ததே நாம்தானே. அதற்கும் நீதானே சிபாரிசு செய்தாய். ஜெமினிகணேசன் - பத்மினி நடிக்க தாதாமிராசி டைரக்ஷனில், வாசு ஸ்டூடியோவில் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட, `சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு' என்று அமரன் பாட்டெழுதி ரெக்கார்டு செய்து படம் நின்று போயிற்றே! அந்த ராஜாவைத்தானே சொல்கிறாய்?'' என்று ரமணியை கேட்டிருக்கிறார்கள்.

    "இல்லையில்லை. அது ஏதோ அசந்தர்ப்பம். அதற்காக திறமை உள்ளவர்களை தள்ளி வைத்தால் எப்படி?'' என்று பதிலுக்கு இவர் கேட்டிருக்கிறார்.

    இப்படிச் சொன்னதும் அவர்கள், "சரி சரி! ஒரு 5 பாடல்கள் ரெக்கார்டு செய்து கொடுக்கட்டும். ஏனென்றால் ஜெமினி ஸ்டூடியோவின் ஆதரவில் இந்தப்படம் வரவேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களிடமும் ஒப்புதல் வாங்க இந்தப் பாடல்கள் உதவியாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ரமணி எங்களிடம் வந்து இதைச் சொல்ல, ஸ்டூடியோவுக்கும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கும் என் கையில் இருந்த பணத்தைப்போட்டு ரெக்கார்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வசந்தா, சரளா, ரமணி பாடினார்கள். ஒரே நாளில் 5 பாடல்கள் பதிவாயின. ஜெமினி ஸ்டூடியோவில் கோடீஸ்வரராவ் என்ற என்ஜினீயர் பாடல்களை பதிவு செய்தார்.

    பாடல்கள் "ஓ.கே'' ஆயின. பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.

    இப்போது போல, அப்போதெல்லாம் பூஜைக்கு அழைப்பிதழோ, போஸ்டர்களோ அடிக்கும் பழக்கம் இல்லை.

    பூஜை, பாடல் பதிவு அவ்வளவுதான். எல்லாரையும் நேரிலோ, போனிலோ அழைத்து விடுவார்கள்.

    பூஜைக்கு முதல் நாள். ரமணி காமராஜர் சாலையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.

    அப்போது நான் வீட்டில் இல்லை. இந்த ரமணி எப்போதுமே துறுதுறுவென்றிருப்பார். டிபன் சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வெளியே பீடா ஸ்டாலில் பீடா போட்டால், கடைக்காரரை குஷிப்படுத்த சத்தம் போட்டு ஏதாவது ஒரு பாடலைப் பாடுவார். இப்படிப்பாடும்போது ரோட்டில் டிராபிக்கோ, மாணவ, மாணவியரோ, ஜனங்களோ யார் வேடிக்கை பார்த்தாலும் கவலையே படமாட்டார். பாடி முடித்ததும் காசு கொடுத்துவிட்டு `கண்ணா நான் வரட்டுமா?' என்று கிளம்பிவிடுவார்.

    நாங்களெல்லாம் அவர் பாடுவதையும், சிவாஜி போல் நடித்துக் காட்டுவதையும் சிரித்த முகமாய் ரசிப்போம்.

    வீட்டுக்கு என்னைப் பார்க்க வந்தவர், காத்துக்கொண்டிருக்க முடியாமல் ஒருவித தவிப்பு நிலையில் இருந்திருக்கிறார். அம்மா அவரை "உட்காரு தம்பி'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    உட்கார்ந்தவர் என் ஆர்மோனியப் பெட்டியை எடுத்து ஏதோ வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    எனக்கோ என் ஆர்மோனியம் உயிருக்கு மேல். அதை யாரையும் தொடவிடமாட்டேன்.

    என் ஆர்மோனியத்தை இவர் வாசிப்பதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    "ஏய்! யாரைக் கேட்டு இதைத் தொட்டாய்?'' எப்படி நீ இதைத் தொடலாம்?'' என்று கன்னாபின்னா என்று சத்தம் போட்டேன்.

    அவர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் கத்தியதில் ஏற்பட்ட அதிர்ச்சியையும், அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்றாலும் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு, "ஏய் ராஜா! என்னய்யா இது? இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று என்னை சமாதானப்படுத்த முனைந்தார்.

    ஆனால் நான் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது இருந்தேன். இதனால் மேலும் கத்திவிட்டேன்.

    ஒரு கட்டத்தில் ரமணியால் தாங்கமுடியவில்லை. உடனே அவருக்கும் கோபம் வந்து, "ஏய்! என்னை இந்த (ஆர்மோனியம்) பெட்டியைத் தொடக்கூடாதுன்னு சொல்லி திட்டிட்டே இல்லே? உன் முன்னால் நான் மிïசிக் டைரக்டரா ஆகிக்காட்டலைன்னா நான் ரமணி இல்லை'' என்று சபதம் செய்தார்.

    நானும் விட்டேனில்லை. "நீ மிïசிக் டைரக்டராகு. பேர் எடு. அதனால எனக்கொண்ணும் இல்லை. என் இடம் எனக்குத்தான். உன் இடம்  உனக்குத்தான். ஆனால் நீ ஒரு பாடகனா இந்த சினிமாவில் பேர் எடுக்கவே முடியாது'' என்று கண்மூடித்தனமாக வார்த்தைகளை

    விட்டுவிட்டேன்.அடுத்த நாள் பூஜையில் "உயிர்'' படத்துக்கு ரமணி இசையமைப்பாளர். அவரது இசையில் பாடல் பதிவானது. ரமணி, ரமணஸ்ரீதர் ஆகிவிட்டார்.

    இந்தப் படத்துக்கு நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பாடல்களில் ஒன்றான `புது நாள் இன்று தான்' என்று அமரன் எழுதி வசந்தா பாடிய பாடல், இப்போது "சுகமோ ஆயிரம்'' என்று எஸ்.பி.பி.யும், பி.சுசீலாவும் பாட, `துணையிருப்பாள் மீனாட்சி' படத்தில் இடம் பெற்றது.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

    கலையுலக அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "பாடல்களில் புதுமை என்பது எனக்குப் பிடித்த விஷயம். கிடைக்கிற வாய்ப்புக்களில், அதற்காக முயற்சிக்கவும் செய்வேன். ஆனால் அம்மாதிரி முயற்சிகளுக்கு வார்த்தைகள் மூலம் முதலிலேயே முட்டுக்கட்டை போடுவதும் தொடர்ந்தே நடந்தது.

    ஆரம்பத்தில் ஜி.கே.வி.யிடம் கன்னடப்படங்களுக்கு பணியாற்றியபோதும், இம்மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. அழகான இலக்கியத் தரம் வாய்ந்த பாடல் அமையும்போது, வினியோகஸ்தர்கள் யாராவது தற்செயலாக வந்து கேட்க நேர்ந்தால், அப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட் மிகவும் மட்டமாக இருக்கும்.

    கன்னடத்தில், "உச்சா ஹாடு நமகு யாத்தக்கே?'' (இது மூத்திரப்பாட்டு - நமக்கெதற்கு) என்பார்கள்.

    அதாவது, தியேட்டரில் படம் பார்ப்பவர்களை, பாத்ரூமுக்குப் போகவைக்கும் பாட்டாம்.

    ஒரு சமயம் பஞ்சு சாரையும், என்னையும் பார்த்த ஒருவர், "இந்த `மச்சானைப் பார்த்தீங்களா?' மாதிரி ஒரு டாப் கிளாஸ் பாடல் ஒண்ணு போடலாமே'' என்றார்.

    "அந்தப் பாடலை யாரும் கேட்காமல் நாமே தானே போட்டோம்'' என்று நானும் பஞ்சு சாரும் பேசிக்கொண்டோம். அதை இவர் போன்றோருக்கு எப்படிப் புரியவைப்பது?

    அதுமாதிரி "கவிக்குயில்'' படம் ரிலீசானபோது இந்த கசப்பை நான் அனுபவிக்க நேர்ந்தது. படத்தில் `காதல் ஓவியம் கண்டேன்' என்ற அந்தப் பாடலை தியேட்டர் ஆபரேட்டரிடம் சொல்லி வெட்டி வைத்து விட்டுத்தான் ஓட்டினார்கள்.

    `இவர்கள் இப்படித்தான் மட்டம் தட்டுவார்கள்' என தெரிந்து வைத்திருந்ததால் பொருட்படுத்தாமல் இருப்போம். அதோடு நிறைய வேலை இருந்ததால், இதையெல்லாம் கேட்டு வருத்தப்படவும் நேரமில்லை. நாங்கள் பாட்டுக்கு காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகு போல, சினிமா வெள்ளத்தில் விழுந்து வெற்றி அலைகளுக்கு எழும்புவதும், தோல்விப் பள்ளங்களில் வீழ்வதும் இல்லாது, மணற்பாங்கான பகுதியில் அமைதியாக ஓடும் ஆறு போல ஒரே சீராக போய்க்கொண்டிருந்தோம்.

    ஆரம்ப காலங்களில் என் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தால், மைக் முன்னால் ரிகர்சலின் போது ஒரு காரியம் செய்வான். அன்று அவன் பாட வேண்டிய பாட்டு எந்த ஸ்ருதியில் என்ன ராகத்தில் இருக்கிறதோ, அதே ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் கம்போஸ் செய்த பாடலை பாடிக்காட்டுவான்.

    எனக்கோ, இதை நான் எம்.எஸ்.வி.யிடம் இருந்து காப்பியடித்து விட்டேன் என்று சொல்வது போல குத்தும்.

    இப்படி நான் நினைக்க காரணமிருக்கிறது. சிறு வயதில் பாவலர் அண்ணன் கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடலை வாசிக்க, ஜனங்கள் கை தட்டினால், இந்த கைதட்டல்கள், பாராட்டுகள் எல்லாம் இதை இசை அமைத்தவர்களுக்குத்தான் போய்ச் சேரவேண்டும், ஜனங்கள் எனக்காக கைதட்டவில்லை என்பதில் தெளிவாக இருந்தவன் நான்.

    இன்னொருவரின் டிïனை நான் காப்பியடித்தால் அதனால் எனக்கு எப்படி பெயர் வரும்? கம்போஸ் பண்ணியவருக்கல்லவா அது போய்ச்சேரும். அந்த ஸ்ருதியில் இருக்கும் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக, அதன் காப்பி என்று எஸ்.பி.பி. சொல்கிறானோ என்று மனம் துக்கப்படும்.

    பாடல் வெளிவந்து ஜனங்கள் பாராட்டியவுடன் அவனே வந்து, "டேய்! அந்தப் பாடல் ரொம்பப் பிரமாதம், அதைப் பாடும்போது இப்படி வரும் என்று தெரியாது'' என்று நல்லபடியாகப் பேசிவிடுவான்.

    இசையில் புதுப்புது முயற்சிகளுக்கு நான் தயாராக இருந்ததால், நாளடைவில் எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் கூட, `ராஜா! உங்க ரெக்கார்டிங்கிற்கு வருவதாக இருந்தால் பரீட்சைக்கு போகும் மாணவன் மாதிரி பயந்து கொண்டே வரவேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள்.  எல்லாம் ஜாலியாகத்தான். புதுமை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்போது அவர்களுக்கும்தானே பெயர்!

    ஆனால் இன்று வரை நான் யாருக்கும் பரீட்சை வைக்கவில்லை. எனக்கு நானே ஒவ்வொரு படத்திலும் பரீட்சை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்திலும் கற்றது எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்கிறேன்.''

    அண்ணன் பாஸ்கர் அடிக்கடி போய் சந்திக்கும் நண்பர்களில் ஒருவர் கலைஞானம். அவர் அப்போது தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தார். அங்கே அவருடன் தூயவன், மகேந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.

    கலைஞானம் நல்ல கதை ஞானம் உள்ளவர். அவர் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும், டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாஸ்கர் டைரக்ட் செய்யப் போவதாகவும், படத்தில் ரஜினி - ஸ்ரீபிரியா ஜோடியாக நடிப்பதாகவும் கூறினார். இந்தப் படத்துக்கு இசையமைத்துத்தர என்னைக் கேட்டார். ஒப்புக்கொண்டேன்.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் செட்டில் ரஜினியை பார்த்துப் பேசினேன். அன்றைய தினம், கால் நொண்டியானதும் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    டைரக்டர் கே.பாலசந்தர் சாரிடம் இரண்டு ஹீரோக்களாக கமலும், ரஜினியும் நடித்துக் கொண்டிருந்தவர்கள், தனித்தனியாக நடிக்க முடிவெடுத்த நேரத்தில் ரஜினிக்கு இந்தப் படம் வந்திருந்தது.

    இது தனி ஹீரோ படம். அடுத்து "புவனா ஒரு கேள்விக்குறி'' என்ற படத்தில் சிவகுமாருடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது.

    ரஜினியை ஷூட்டிங்கில் பார்த்தபோது, ஒரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது போல் தெரிந்தது. எனக்குள்ளும் தான் அப்படியொரு `நெருப்பு' ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இருவருடைய பேச்சும், சாதிக்க வேண்டிய இலக்கு பற்றியே வெறியோடு இருந்தது.

    "பைரவி'' பட செட்டில் கலைஞானமும் பாஸ்கரும் என்னிடம், "தேவையான பாடலை உடனடியாக ரெக்கார்டு செய்ய வேண்டும்'' எனச்சொன்னார்கள்.

    கவிதா ஓட்டலில் கவியரசர் கண்ணதாசனுடன் கம்போசிங்கிற்கு போனோம்.

    டைரக்டர் பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, "நண்டூருது நரிïருது'' என்று கிராமப்புறத்தில் பாடப்படும் குழந்தைகளின் விளையாட்டுப் பாடலை பல்லவியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே டிïனை `நண்டூருது நரிïருது' என்ற சந்தத்தை வைத்தே தொடங்கியிருந்தேன்.

    கண்ணதாசனும் `நண்டூருது' என்றே தொடங்கி, தங்கையை இழந்து நிற்கும் அண்ணன், தங்கையை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் சரணத்தில், உச்சஸ்தாயியில் "ஏழைக்கு வாழ்வு என்று எழுதியவன் எங்கே?'' என்று எழுதியவுடன், பாடலின் வல்லமை எங்கேயோ உயரத்துக்குப்

    போய்விட்டது.இந்தப் பாடலுக்கான காட்சி படமாக்கப்படும்போது, நான் இருந்தேன். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய அந்த அருமையான ஆண்மைக் குரலின் வார்த்தைகளுக்கு, ரஜினி காலிழந்து கட்டைகளோடு நிற்க, ஒரு டிராலி ஷாட் போட்டு ரஜினியிடம் காமிரா போய் நிற்பதாக எடுத்தார், டைரக்டர் பாஸ்கர்.

    எடுக்கும்போதே அந்த `ஸ்பிரிட்' தெரிந்தது. அது படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.

    இந்தப் படத்திலேயே `கட்டப்புள்ள குட்டப்புள்ள' என்ற கிராமியப் பாடலையும் டைரக்டரும், கலைஞானமும் போடச் சொன்னார்கள். கவிதா ஓட்டலில் கம்போஸ் நடந்தபோது, கலைஞானம் என்னைக் கேட்காமல் வினியோகஸ்தர்கள் சிலரை வரவழைத்து விட்டார். அதில் குடந்தையைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார்.

    அவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே கவிக்குயில் பாடல் பதிவின்போது ஏற்பட்ட சம்பவம் நினைவுக்கு வர, இவர்கள் நம் பாடல் இப்படித்தான் வரவேண்டும் என்று தீர்மானம் செய்தால், நாம் புதிதாய் எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து போயிற்று. எனவே யாராவது "பாடலை பாடிக்காட்டுங்கள்'' என்று கேட்டால், பாடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

    பாடல்களை கவியரசரும் எழுதிவிட்டார். எல்லாவற்றையும் முழுமையாக பாடிவிட்டேன்.

    இந்த நேரத்தில் கலைஞானம், வினியோகஸ்தர்களை அழைத்து வந்தார். கவியரசருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு என்னைப் பார்த்து "பாடலைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுங்கள்'' என்றார்.

    ஆனால், நானோ எல்லாரும் ஆவலுடன் பாட்டை எதிர்பார்த்தும் ஆர்மோனியத்தை மூடிவிட்டு எழுந்து விட்டேன்.

    எழுந்தவன் கலைஞானம் அவர்களிடம் கூலாக, "இங்கே பாடினா ஒன்றும் புரியாது. டி.எம்.எஸ் - சுசிலாவை பாட வைத்து மிïசிக்கோடு ரெக்கார்டு செய்து போட்டுக் காட்டிவிடுவோம். அப்போது நன்றாக இருக்கும்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த யாருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

    கண்ணதாசன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்பது அவர் எங்களைப் பார்த்த பார்வையில் இருந்தே புரிந்து போயிற்று.

    ரிக்கார்டிங் சமயத்தில் எனக்கும் கலைஞானத்துக்கும் ஒரு தகராறு.

    "மூன்று நாளைக்குள் ரிக்கார்டிங்கை முடிக்கத்தான் பணம் இருக்கிறது. அதனால் எப்படியாவது மூன்று நாளைக்குள் முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதுவரை இதுபோன்றதொரு பிரச்சினையை சந்தித்து இராததால், கலைஞானம் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.
    தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து இளையராஜா அவரை கவனித்துக் கொண்டார் .
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா. மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூகாம்பிகை மீது நான் பாடிய கன்னடப் பாடல்களை, சினிமாவில் எனக்கு இசையமைப்பாளர் அங்கீகாரம் கொடுத்த பஞ்சு அருணாசலம் சாரிடமும் போட்டுக்காட்ட விரும்பினேன்.

    அப்போதே இரவு 10-30 மணி ஆகியிருந்தது. இருந்தாலும் போனேன். பாடல்களைக் கேட்டவர் பிரமை பிடித்தவர் போலானார். "பக்திப்பாடல் இப்படிக்கூட ஜீவனை உலுக்குவதாக அமையுமா என்ன? இதுபோல பக்திப்பாடல் வருவது இதுதான் முதல் தடவை. இது முற்றிலும் உண்மையான தெய்வீக நிலையில் பாடிய பாடல்கள் என்றார்.

    அங்கேயே அண்ணி (பஞ்சு அருணாசலத்தின் மனைவி) இருவருக்குமாக டிபன் எடுத்துக்கொண்டு வந்து பரிமாறினார்கள். சாப்பிடத் துவங்கும்முன் அவரிடம், "அண்ணி! இந்தப் பாடல்களை கேட்டீர்களா?'' என்று கேட்டேன்.

    "அய்யோ! கேட்கும்போதே உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது'' என்றார்.

    நான் அவர்களிடம், "அண்ணி! அது யாருன்னு நினைச்சீங்க? அது என் அம்மா'' என்றேன். அதோடு நில்லாமல், "நான் கூப்பிட்டால் இப்ப இங்கே வருவாங்க'' என்று விரலை சொடுக்கினேன்.

    நான் விரலை சொடுக்கிய அந்த வினாடியில் அண்ணிக்கு ஆவேசம் வந்துவிட்டது. சத்தமாக "ஏய் நான்தாம்ப்பா அது'' என்று குரல் கொடுத்தார்கள்.

    அவர்கள் சத்தமாக `ஏய்' என்ற நொடியில் என் கைகள் தானாக கூப்பியது. கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. உள்ளம் கரைந்து கசிந்தது. சிறிது நேரம் அப்படியே இருந்து மனம் சாந்தமானதும் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

    இந்தப் பாடல்களை வருடத்தின் முதல் நாள் அம்மாவின் சன்னதியில் ஒலிக்கச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இதற்காக டிசம்பர் 31-ந்தேதி மூகாம்பிகை போய்விட்டேன். இரவு தங்கி காலை 4 மணிக்கு சவுபர்ணிகாவில் குளித்து, நிர்மால்ய சேவை பார்த்துவிட்டு காலை 6 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு டேப் ரிக்கார்டருடன் போனேன்.

    அங்கே தரிசனத்துக்கு நிற்கும் பகுதியையொட்டிய திண்ணையில் ஒரு பக்கத்தில் டேப் ரிக்கார்டரை வைத்து அந்த பாடலில் இரண்டு பாடல்களை போட்டேன். சிறிதளவே பக்தர்கள் இருந்த அந்த சூழ்நிலையில் மனம் ரம்மியமானது. உள்ளம் அன்னையிடம் ஏங்கியது. "அம்மா! இந்தப் பாடலை நீ ஏற்றுக்கொண்டாயா என்பதை எனக்குப் புரியுமாறு நீ தெரிவிக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டேன்.

    இந்நிலையில் இரண்டாவது பாடல் முடிந்து `டேப்'பை `ஆப்' செய்தேன்.

    ஆனால் நான் பாடிய ஸ்ருதி மட்டும் என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இது எங்கிருந்து கேட்கிறது என்று யோசித்தேன். அப்போதுதான் கோவிலில் காலை 7 மணியை அறிவிக்கும் கோவில் மணியை அடிக்கிறார்கள்; அந்த ஓசை அடங்காது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்தது.

    அடடா! அம்மா அல்லவா என் வேண்டுகோளுக்கு பதில் சொல்லி இருக்கிறாள். "பார்த்தாயா நீ பாடிய ஸ்ருதி என் கோவிலின் மணிச்சுருதியில் இருந்து இம்மிகூடப் பிசகாமல் அப்படியே பின்னிப் பிணைந்திருப்பதை!'' என்று எனக்கு உணர்த்துவதைப் போலிருந்தது.

    மெதுவாக கேட்ட அந்த கோவில் மணி ஓசையின் ஸ்ருதியை என் பாடலுடன் இணைத்துப் பார்த்தேன். ஆச்சரியம். எள்ளளவும் பிசகாத அதே

    ஸ்ருதி.அம்மாவின் கருணையை எண்ணி ஆனந்தமானேன்.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    இசை குரு தன்ராஜ் மாஸ்டர்

    தனது இசை குரு தன்ராஜ் மாஸ்டருக்கு சேவை செய்த அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற செய்தி வந்தது. நானும் `வயலின்' கல்யாணமும் போனோம். அவர் உட்கார பயன்படுத்தும் ஈஸி சேரில் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அதிலேயே `பாத்ரூம்' வேறு போயிருந்தார். கைத்தாங்கலாக பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்தோம்.

    நோய் உபாதையிலும் இசைக்குள் ஆழ்ந்துபோன அவரது குணநலன் வெளிப்பட்டது. அவரைத் தூக்கும்போது `மெதுவாக மெதுவாக' என்பதற்கு பதில் `அன்டான்டே அன்டான்டே' என்றார். இது, "இசையில் மெதுவாக வாசிக்கவும்'' என்பதை குறிக்கும் இத்தாலிய மொழிச்சொல்.

    இசையை மட்டுமே அறிந்த அவர், உடல் செயலிழந்து போனாலும், உயிரில் கலந்து போன இசையைக்கொண்டே தனது தேவையை சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.

    அவரை பெஞ்சில் படுக்க வைத்து ஈஸி சேரை சுத்தம் செய்து காயப்போட்டோம். ரூமில் இருந்த பேனை வேகமாக ஓடவிட்டோம். காலை அமுக்கிவிடச் சொன்ன வார்த்தைகள் முனகல் போல கேட்டது. கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.

    வலது காலை நானும், இடது காலை கல்யாணமும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். விரல்களை பிடித்து விடுமாறு சொன்னார். பெருவிரலை பிடித்தேன். `அன்டாண்டே' என்றார். மெதுவாக பிடித்து விடவேண்டுமாம்!

    அப்படியே அடுத்த விரல்களை பிடித்து விட்டேன். "டேய் இ ஸ்ட்ரிங்' என்றார். "சார்'' என்றேன். அவர் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில்.

    "கிட்டாரில் ஓப்பன் ஸ்ட்ரிங் எது?'' என்று கேட்டார்.

    "இ ஸ்ட்ரிங் சார்'' என்றேன்.

    "ம்... அதை பிடித்துவிடு'' என்றார்.

    அவரது, கால் பெருவிரல்தான் கிட்டாரின் கீழ் ஸ்தாயி கணக்கில் `இ ஸ்ட்ரிங்'காம். இந்த வகையில் சுண்டு விரல் முதல் ஸ்ட்ரிங்காம். விரல்கள் எல்லாமே கிட்டார் வாத்தியத்தின் தந்திகள் ஆகிவிட்டன!

    உலகத்தின் எந்த இசை மேதை வாழ்விலும் இப்படியொரு சம்பவத்தை நான் அறிந்ததில்லை.

    நாங்கள் அங்கிருந்த நேரத்தில் சாயி லாட்ஜ் முதலாளி, மாஸ்டரை பார்க்க வந்திருந்தார். அவர் எங்களிடம், "நீங்கள் இவரை அவசியம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல வேண்டும். இது சாதாரணமாக வரும் தேக அசவுகர்யம் இல்லை. அதிகமாக குடித்ததால் சேரியில் எங்கேயோ விழுந்து கிடந்திருக்கிறார். சேரி ஆட்கள் தூக்கி வந்து வீட்டில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். காலில் அடிபட்டிருக்கிறது. கைகளைப் பாருங்கள், சிராய்ப்பு எப்படி இருக்கிறது? ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் "ஈரல்'' ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்'' என்றார். தொடர்ந்து அவரே, "உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்'' என்றும் யோசனை சொன்னார்.

    நாங்களும் தாமதிக்கவில்லை. ஒரு டாக்சியை வரவழைத்தோம். ரூமில் இருந்து அவரை தூக்கி குறுகலான படிகள் வழியாக இறக்கி, டாக்சியில் ஏற்றுவதற்குள்ளாகவே சிரமப்பட்டுப் போனோம்.

    மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நானும் கல்யாணும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் உடனிருந்து மாஸ்டரை

    கவனித்துக்கொண்டோம்.மறுபடியும் அவரை சாயி லாட்ஜ் 13-ம் நம்பர் அறையில் கொண்டு போய் சேர்த்தோம்.

    உடல் நலிவு சரியாகிவிட்டது. ஆனால் சோர்வாக இருந்தார். ஆனால் இன்னும் அன்டாண்டே, அடாஜியோ போன்ற இத்தாலிய இசைக் குறிப்பு வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன.

    அன்டாண்டே என்றால் `மெதுவாக' என்று சொல்லிவிட்டேன். அடாஜியோ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமல்லவா, அதற்கு `இன்னும் மெதுவாக' என்று அர்த்தம்.

    கொஞ்சம் அவர் பழைய நிலைக்கு திரும்பும்வரை சாயி லாட்ஜில் இருந்து விட்டு, டாக்டர் கொடுத்த மருந்துகளை எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி சொல்லிவிட்டு விடை பெற்றோம். சாயி லாட்ஜ் மானேஜரிடமும் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    குரு பக்தி ஒருபுறம் இப்படி என்றால், `அம்மா' மூகாம்பிகை மீதான பக்தி இன்னொரு புறம் ஆழமாக போய்க்கொண்டிருந்தது. அம்மா மீதான பக்தி மேலீடு அதிகரித்த பிறகு தனது இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டார், இளையராஜா.

    அதுபற்றி கூறுகிறார்:-

    "அம்மா மீதான என் ஈடுபாடு அதிகரித்த பிறகு திரை வாழ்விலான என் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன் யாரிடமும் உற்சாகமாக உரையாடுவது, நகைச்சுவை விஷயங்களை சிலாகித்து மகிழ்வது என்றிருந்த என் போக்கு அடியோடு மாறிற்று. நடை, உடை, பாவனைகளில் கூட மாறுதல் தெரிந்தது.

    கதை சொல்ல டைரக்டர் என்று யார் வந்தாலும், கதையுடன் `பாடல் சிச்சுவேஷன்' கேட்பதோடு சரி. பேச்சுவார்த்தை முடிந்து

    போகும்.அம்மா பக்தியில் என் ஆன்ம பலம் கூடியிருந்த போதிலும், திரை வாழ்க்கையில் என் வேலையிலும் கவனமாகவே இருந்தேன். கவிக்குயிலை தொடர்ந்து, அவர் எனக்கே சொந்தம், உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என படங்கள் தொடர்ந்தன. ஒவ்வொன்றிலும் புதிதாக செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பேன்.

    கவிக்குயில் படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடல் இருந்தாலும், "காதல் ஓவியம் கண்டேன்'' என்றொரு பாடலை படத்தின் பிற்பகுதியில் சேர்க்க பஞ்சு சார் விரும்பினார். இந்தப் பாடலை சுஜாதா என்ற 10 வயது சிறுமியைக்கொண்டு பாட வைத்தோம். குழந்தைதானே தவிர, குரல் என்னவோ பி.சுசிலா, எஸ்.ஜானகி போல பெரியவர்களின் தரத்தை ஒத்திருந்தது.

    இந்தப் பாடலில்தான் முதன் முதலாக இசை மேதை `பாக்'கின் காலத்திய இசையைப்போல கொடுத்து, அதன் மேல் நம் நாட்டு இசையான `வீணை'யை வாசிக்க வைத்து பாடலை பதிவு செய்திருந்தேன். சினிமா இசையில் இரு வேறு பாணி இசைகள் ஒன்றாக கலந்தது அதுவே முதல் முறை. அது நன்றாகவும் அமைந்ததில் வெற்றி கிடைத்தது.

    ஆனால், இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே வினியோகஸ்தர்கள் சிலர் கேட்டுவிட்டு, "படத்தில் இந்தப்பாடல் வரும்போது, ரசிகர்கள் புகை பிடிக்க வெளியே போய் விடுவார்கள்'' என்று கமெண்ட் அடித்தார்கள்.

    அதோடு நின்று விடாமல் "அவர்கள் புகை பிடிப்பதற்காக நாம் ஏன் பாடல் போடவேண்டும்?'' என்று படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு சாரிடமும் கேட்டுவிட்டார்கள்.

    இது விஷயம் என் காதுக்கு வந்தபோது நொந்து போனேன். புதிய விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது என்று நான் உற்சாகமாக பணிபுரிந்த நேரத்தில், மட்டமான அவர்கள் பேச்சு என் இதயத்தில் குத்துவது போல் இருந்தது.
    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.
    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இரட்டையர்களில், தேவராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். "சிட்டுக்குருவி'' படத்தில் காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஒரு பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

    இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் `கவுண்ட்டர் பாயிண்ட்'டை உபயோகிக்க முடிவு செய்தேன்.

    இதுபற்றி தேவராஜிடம் விளக்கி சம்மதமும் வாங்கிவிட்டேன்.

    கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது டிïனை வாசிக்கச் சொல்லி கேட்டார். "ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அண்ணே! இரண்டு டிïனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டிïனுக்கு இன்னொரு டிïன் பதில் போலவும், அமையவேண்டும். அந்த பதில் டிïனும் தனியாகப்பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்'' என்றேன்.

    பதிலுக்கு வாலி, "என்னய்யா நீ! இந்த நட்ட நடு ராத்திரியில `சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே! முதல்ல ஒரு "மாதிரி'' பாடலை சொல்லு!'' என்றார்.

    உடனே வேறு ஒரு பாடலைப்பாடி விளக்கினேன். நான் ஒரு டிïனையும், அமர் ஒரு டிïனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.

    ஆண்: பொன்

    பெண்: மஞ்சம்

    ஆண்: தான்

    பெண்: அருகில்

    ஆண்: நீ

    பெண்: வருவாயோ?

    - இப்படி பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதை தனியாகவும், பெண் பாடுவதை தனியாகவும் பிரித்துப் படித்தால் தனித்தனி அர்த்தம் வரும்.

    அதாவது `பொன் தான் நீ' என்கிறான் ஆண்.

    `மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள், பெண்.

    சேர்ந்து பாடும்போது `பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ' என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.

    `சரி' என்று புரிந்ததாக தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பிறகு கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென எழுதினார்.

    இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்ததில் எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று.

    இந்தப் பாடலை ரெக்கார்டு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாடவேண்டும் அல்லவா.

    இதை எப்படி ரெக்கார்டு செய்வது?

    ஏவி.எம். சம்பத் சாரிடம் "ஒரு குரல் பாடுவதை மட்டும் முதலில் ரெக்கார்டு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி "பிளே'' செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.

    டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இருவரில், மோகன் சாருக்கு கம்போசிங் சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் "உம்''மென்றே காணப்பட்டார்.

    `எப்படி வருமோ?' என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

    தேவராஜோ உற்சாகமாக இருந்தார். "இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கிற நேரத்தில் அதைப்பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் `கலைஞனாக' இருப்பதற்கு அர்த்தம் என்ன?'' என்று பேசினார்.

    இந்தப் பாடலின் இடையிடையே, பஸ்சில் கண்டக்டர் "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்... இறங்கு!'', "இந்தாம்மா கருவாட்டுக்கூடை! முன்னாடி போ!'' என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரை பேச வைத்தேன்.

    அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பை பெற்றது.''

    - இப்படிச் சொன்ன இளையராஜா, மூகாம்பிகை அம்மன் பேரில் கொண்ட பக்தியால் 4 பாடல்களை அதுவும் கன்னடப் பாடல்களை பாடி அன்றைய இசை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபற்றி கூறியதாவது:-

    "என்னதான் பாடல்கள் இசையமைப்பு, பாட்டுப் பயிற்சி என்று பிசியாக இருந்தாலும் அம்மா மூகாம்பிகை மீது எனக்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை போவதும், யார் வந்தாலும் என் செலவில் அழைத்துப்போவதும் தொடர்ந்தது.

    இந்த நேரத்தில் அம்மாவைப் பற்றி கன்னடத்தில் பக்திப்பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தாமதமின்றி கன்னடப் பாடலாசிரியர் உதயசங்கரை சந்தித்தேன். "மூகாம்பிகை அம்மன் பற்றி 4 பக்திப்பாடல்கள் எழுதித்தர வேண்டும்'' என்று கேட்டேன்.

    அவரோ பிசியாக இருப்பதாகவும், இன்னொரு நாள் எழுதித் தருவதாகவும் சொல்லிவிட்டார்.

    நான் அவரை விட பிசியாக இருந்தும், குறிப்பிட்ட அந்த நாளில் அந்த 4 பாடல்களையும் ரெக்கார்டு செய்தே தீருவது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.

    என் பிடிவாதம் தெரிந்து கொண்ட உதயசங்கர், "எப்படியாவது பாடல்களை எழுதித்தந்து விடுகிறேன். ஆனால் நான் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என்னுடைய உதவியாளரை அனுப்புகிறேன். ஆனால் உன்னால் கன்னடத்தில் பிழையின்றி பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

    "பரவாயில்லை; முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கி விட்டேன். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் புதல்வர் கே.எஸ்.ரமணனின் "ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்டரில்'', குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடினேன்.

    அப்போது என் மனமெல்லாம் அம்பாளின் திருவடியிலேயே ஒன்றியிருந்தது. பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டிருந்தது.

    4 பாடல்களையும் ரெக்கார்டு செய்து முடிக்கும் நேரம் உதயசங்கர் வந்தார். பாடலின் கன்னட உச்சரிப்பில் தவறு ஏதும் இருக்கிறதா என்பதை கேட்பதற்காக வந்தார்.

    பாடலைக் கேட்டவர்: "கன்னடப் பாடகர்களே பாடினாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாக பாடிவிட்டீர்கள்'' என்று பாராட்டினார்.

    அந்த டேப்பை ஜி.கே.வி.யிடம் போட்டுக்காட்ட அவர் வீட்டுக்குப்போனேன். என்னைப் பார்த்ததும், "வாடா ராஜா!'' என்றார். அவருக்கு பாடல்களை போட்டுக் காட்டினேன். "இது நீ பாடலைடா? அம்பாளே வந்து பாடியிருக்கா'' என்று பாராட்டினார்.

    அண்ணியும் (ஜி.கே.வி.யின் மனைவி) உடனிருந்து பாடலை கேட்டார். "அண்ணி! எப்படி இருக்கிறது?'' என்று கேட்டேன்.

    "ஐயோ அதைக் கேட்காதப்பா? எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது'' என்றார்கள்.

    இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.
    இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.

    தன் வாழ்க்கைப்பாதையைப் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "எனக்கு கார்த்தி, பவதா, யுவன் என மூன்று குழந்தைகள். அண்ணன் பாஸ்கருக்கு பார்த்தி, வாசுகி, ஹரி என மூன்று குழந்தைகள். குடும்பம் பெரிதான சூழலில் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களும் இருப்பது சிரமமாக இருந்ததை பாஸ்கர் உணர்ந்து கொண்டார். இதனால் தனியாக வீடு பார்த்தார்.

    ஒரு வீடு அவருக்கு பிடித்துப்போக, என்னிடம் வந்தார். "ராஜா! நீ வந்து பார்த்து சரி என்று சொன்னால் நான் மாறிக்கொள்கிறேன்'' என்றார்.

    நானும் பார்க்கப்போனேன். பார்த்த வீடு எனக்குப் பிடித்துப்போயிற்று. நான் பாஸ்கரிடம், "வீடு நன்றாக இருக்கிறது. இதில் நான் குடியிருந்து கொள்கிறேன். நீ வேறு வீடு பார்த்துக்கொள்'' என்றேன்.

    பாஸ்கரும், "சரி; நீயே இருந்து கொள். நான் வேறு இடம் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டார்.

    தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அந்த வீடு இருந்தது. வீட்டு எண் 157.

    "வீட்டின் கூட்டுத்தொகை 13 வருகிறது. அதனால் இந்த வீடு வேண்டாம். அதோடு கவியரசர் கண்ணதாசன் இந்த வீட்டில்தான் அவருடைய சினிமாக் கம்பெனியை தொடங்கி பெரும் கடனுக்கு உள்ளானார். அதனால் ராசி இல்லாத இந்த வீட்டுக்குப் போகவேண்டாம்'' என்றார்கள் நண்பர்கள்.

    எனக்கோ வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப்போனதால், அந்த வீட்டுக்கே குடிபெயர்ந்தேன். அம்மா என்னுடனே வந்துவிட்டார்கள்.

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    சினிமாவில் வளர்ந்து வந்த நிலையிலும் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்கும் ஆர்வம் இளையராஜாவை விட்டுவிடவில்லை. இதனால் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை கற்க விரும்பினார்.

    அதுபற்றி கூறியதாவது:-

    ஏற்கனவே டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக இசை கற்கும் ஆவல் எனக்குள் நீடித்து வந்தது. புது வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. டி.வி.கோபாலகிருஷ்ணன் அப்போது பெசன்ட் நகரில் இருந்தார். காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருக்கும்போது பத்து நிமிடத்தில் அவர் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இப்போதோ பெசன்ட் நகர் போய்வரவே அரை மணி நேரமாவது ஆகும்.

    அவரிடம் மறுபடியுமாக என் கற்றல் ஆர்வம் சொன்னபோது, "நீங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நான் சொல்லித்தர தயாராயிருக்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அதைச் சொல்லுங்கள்'' என்றார்.

    எனக்கு இருந்த வேலைகளுக்கிடையே சரியான நேரத்தை எப்படி அமைப்பது என்று யோசித்தேன். அவரோ எந்த நேரமானாலும் பரவாயில்லை என்று சொன்னதால் விடிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்தேன்.

    எப்போதும் விடிகாலை 4 மணிக்கு நான் எழுந்து பழக்கப்பட்டவன். சமீபகாலமாக அது கொஞ்சம் நின்று போயிருந்தது. இப்போது மீண்டும் அந்த நேரத்துக்கு மாறினேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத பாடம் அரை மணி நேரமும், பிறகு குளித்து விட்டு 5 மணிக்கு பெசன்ட் நகரில் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக சங்கீத பாடமும், 6 மணிக்கு உடற்பயிற்சியும், தியானமும், பூஜையுமாக தொடர்ந்தது.

    7 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டூடியோ. இல்லையேல் கம்போசிங். தினசரி இரண்டு பாடல்கள் இருக்கும்.

    ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடிய, வீட்டுக்கு வந்து மீண்டும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் பெசன்ட் நகரில் சங்கீதப் பாடம் முடித்துவிட்டு வர இரவு 12 மணி ஆகிவிடும்.

    இந்த அன்றாட நிகழ்ச்சி நிரலில் பெரும்பாலும் மாற்றமிருக்காது. எங்காவது வெளிïர் கோவிலுக்கு போனால் மட்டுமே மாறும். இந்த வகையில் தினசரி என் தூக்கம் 4 மணி நேரம்தான்.

    ஓரளவே நான் கற்றுக்கொண்ட சங்கீதம், டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஒத்துழைப்பால்தான் எனக்கு சாத்தியமாயிற்று. ஆயினும் அது எனக்கு அந்த அளவேனும் வந்ததே என்பதில் திருப்தியைக் காட்டிலும், அத்தனையையும் கற்றுக்கொள்ள இயலாமையால் ஏற்பட்ட வருத்தமே அதிகம் மேலோங்கி இருந்தது.

    ஜி.கே.வி.யிடம் இருந்தபோது ரெக்கார்டிங் ஓய்வு நேரத்தில், நான் எழுதிய இசைப் பகுதிகளை அங்கிருக்கும் கலைஞர்களை வாசிக்க வைத்துக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது.

    அவர்கள் கருத்தை வைத்து, எனது இந்த இசை அணுகுமுறை சினிமா சங்கீதத்துக்கு ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

    ஆனால் அதை உபயோகிக்க, தரத்தில் உயர்ந்த ஒரு படம் வரும்போதுதான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நான் கற்றுக்கொண்டவைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசித்து, அவ்வப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வரவும் செய்தேன்.

    மேல்நாட்டு இசையில் `கவுண்டர் பாயிண்ட்' என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் `ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும்.

    இதை எனது இரண்டாவது படமான "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்தில் "நான் பேச வந்தேன்'' என்ற பாடலின்போதே தொடங்கிவிட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் ஹம்மிங்கில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு டிïன் `ஹம்' செய்ய, எஸ்.ஜானகி வேறு டிïனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.

    இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் அட்வான்ஸ் ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.

    காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலிலும் இந்த யுக்தியை பாடலின் கடைசியில் கையாண்டிருந்தேன். இது பாடலின் அதே டிïனை அப்படியே `ரிபீட்' செய்யும் `இமிடேஷன்' என்ற விதிக்குள் அடங்கும்.

    பின்னால் "சிட்டுக்குருவி'' என்ற படத்தை தேவராஜ் - மோகன் இயக்கியபோது அதற்கு கம்போஸ் செய்ய நேரமே இல்லாமல் போனது.

    அப்போது "துர்காதேவி'' என்ற படம் சங்கரய்யர் டைரக்ஷனில் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னணி இசை நடந்து கொண்டிருந்ததால் எங்கும் நகர முடியவில்லை.

    இதற்கிடையே சிட்டுக்குருவி படத்துக்கு தேவராஜ் - மோகன் ரெக்கார்டிங்கிற்கு தேதி குறித்துவிட்டார்கள்.

    ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடியும். பத்து மணிக்கு தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கம்போஸ் தொடரும். அது முடிய விடிகாலை 3 மணி வரை ஆகிவிடும்.

    அதற்குப் பிறகு 4 மணிக்கு படுப்பதெங்கே? அடுத்த நாள் தொடங்கி விடும்.''


    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.
    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளிகிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்கு கொஞ்சம் கவலையாகி விட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டுமே.

    ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

    ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார். அதுதான் "சின்னக்கண்ணன் அழைக்கிறான்'' என்ற பாட்டு.

    பாடலைப் பாடியவர், "இதுதான் புதிது. சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் `ஸகரிக மரினி' என்று ஆரோகணபரமான பிரயோகத்தை - அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே! அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாடமாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே'' என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி இது.

    ஓரளவு படங்கள் வந்து, ஓய்வில்லாத வேலைகள் தொடர்ந்தன. இருந்தாலும் நானும், பாஸ்கரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்தான் இருந்து வந்தோம்.

    ரெக்கார்டிங்குக்கு நான், அமர், பாஸ்கர் மூவரும் டாக்சியில்தான் போவோம்.

    ஒருநாள் வீட்டில் இருந்து மூவரும் டாக்சியில் கிளம்பினோம். மந்தைவெளி வழியாக, நந்தனம் மவுண்ட்ரோடு கிராசிங்கில், சிக்னலுக்காக காத்திருந்தோம். காலை 6-30 மணி இருக்கும். அப்போது பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.

    அதில் முன் சீட்டில் சாண்டோ சின்னப்பதேவர் கையை கார் கதவில் வைத்தபடி உட்கார்ந்திருந்தார். அப்படியே பக்கத்தில் நின்றிருந்த எங்கள் டாக்சியை கவனித்தார். என்னை பின்சீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டு, "ஏய் கேவலப்படுத்தாதீங்கப்பா'' என்றார்.

    எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொடர்ந்து அவரே பேசினார்.

    "என்னப்பா நீங்க! இவ்வளவு பெரிய பேர் எடுத்திட்டு டாக்சியிலே போறீங்களேப்பா! கேவலப்படுத்தாதீங்க. சீக்கிரமா ஒரு கார் வாங்குங்கப்பா'' என்றார்.

    இதற்குள் சிக்னல் கிடைத்துவிட, "சரிங்க அய்யா'' என்று விடைபெற்றோம்.

    அதற்கும் முதல் வாரம்தான் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கையால் `கலைமாமணி' விருது வாங்கியிருந்தேன்.

    அங்குதான் தேவர் அவர்களிடம் என்னை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    நான்தான் இளையராஜா என்று அவரால் நம்பமுடியவில்லை. என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.

    அப்போது பார்த்து நடிகை கே.ஆர்.விஜயா அங்கு வர, "ஏம்மா, இங்க பார்த்தியா? இவருதான் இளையராஜாவாம்மா'' என்று ஆச்சரியப்படும் பாணியில் அறிமுகப்படுத்தினார்.

    கலைமாமணி விருது விழாவில் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எங்களை தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்ததும் வணக்கம் போடுபவர்களும், மரியாதை செலுத்தும் அதிகாரிகளுமாய் வந்து போய்க்கொண்டிருந்தாலும் எங்களுடன் சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.

    பழகுவதில் அவரது எளிமை கண்டு எனக்குள்ளும் அவரிடம் சகஜமாகப் பேசும் ஆர்வம் எழுந்தது. நானும் சாதாரணமாக, "அண்ணே! உங்ககூட ரெயிலில் வந்தது ரொம்ப ரொம்ப மோசம்ணே'' என்றேன்.

    "ம்... என்ன சொல்றே?'' தனது ஆச்சரியத்தை கேள்விக்குறியாக்கினார் எம்.ஜி.ஆர்.

    "ஆமாண்ணே! அன்னைக்கு மதுரை பாண்டியனில் நீங்க மதுரைக்குப் போனப்போ, அதே வண்டியில் நானும் இருந்தேண்ணே.''

    "ஆமாமா? எனக்கும் சொன்னாங்க'' என்று சொன்ன எம்.ஜி.ஆர், "ஆமா அதுல என்ன மோசம்'' என்று திருப்பிக் கேட்டார்.

    "இல்லண்ணே! நீங்க அந்த ரெயிலில் வர்றது வெளியே தெரிஞ்சு, காலையில் ரெயில் சோழவந்தான் விட்டுக் கிளம்பும்போது, ரசிகர்கள், வண்டி கிளம்பவும் செயினைப் பிடித்து இழுத்து நிறுத்தி உங்களைப் பார்க்க ஆர்வத்தோடு அவங்க செய்த கலாட்டா...''

    நான் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "ம்... ம்... அப்புறமா?'' என்று கேட்டார்.

    "இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்துவதும், நீங்கள் கையைக் காட்டியவுடன் விட்டு விடுவதுமாக இருந்தார்கள். இப்படி காலையில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு காலை 10 மணிக்குத்தானே மதுரைக்கே வந்து சேர்ந்தது.''

    நான் இப்படிச் சொன்னதும், "ஆமா தம்பி... மக்கள் அவ்வளவு ஆர்வமா இருந்தா நாம என்ன செய்யமுடியும்?'' என்று மக்கள் தன் மீது வைத்திருந்த அன்பை சிலாகித்தபடி சொன்னார் எம்.ஜி.ஆர்.

    இதற்குள் விழா தொடங்கி விட்டது. எம்.ஜி.ஆர். கையால் கலைமாமணி விருது வாங்கினேன்.

    தேவர் அன்றைக்கு என்னைப் பார்த்தவர், இப்போது வாகனப் பயணத்தின்போது மறுபடியுமாக என்னைப் பார்க்கிறார். டாக்சியில் நாங்கள் வருவதைப் பார்த்ததும், சொந்தமாய் கார் வாங்கும் எண்ணத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டார்.

    அடித்தளம் என்று உறுதியாக சொல்லக் காரணம் உண்டு.

    சொந்தக்கார் விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டு `நேரம் வரும்போது அமைவது அமையும்' என்று இருந்துவிட்டேன்.

    ஆனால் பாஸ்கரும், அமரும் அதை சீரியசாக எடுத்துக்கொண்டார்கள். ஜி.ராமநாதனின் உதவியாளராக இருந்த ராமச்சந்திரனின் தம்பி டி.பி.துரைமணி ரிலையன்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கார் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டார்கள்.

    அது டி.எம்.டபிள்ï 3335 என்ற அம்பாசிடர் கார்.

    என் ஆர்மோனியம் பெட்டி போல எனது இன்னொரு உடன் பிறப்பு.

    படங்கள் அதிகமானதால் உதவியாளர் தேவைப்பட்டது. பாஸ்கரின் நண்பர் ஒருவர் வந்தார்.

    இத்தனை காலங்களும் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு வந்த என் இளவயது உயிர்த்தோழன் எம்.சுப்பிரமணியன் அவ்வப்போது என்னைப் பார்த்துப்போக வருவதுண்டு.

    அப்படி வந்த ஒரு நாள் அவரிடம், "ஏம்ப்பா! உனக்கு காலேஜில் என்ன சம்பளம்?'' என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்பது - சுப்பிரமணியனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். "ஐயாயிரம் ரூபாய் வாங்கறேன். என்னப்பா திடீர்னு இப்ப இந்தக் கேள்வி?'' என்று கேட்டார்.

    "அதை நான் தந்தால் என்னிடம் மானேஜராக வேலை செய்ய முடியுமா?'' என்று கேட்டு விட்டேன்.

    "ஏய்! என்னப்பா இது?''

    "ஆமாப்பா. நாமெல்லாம் ஒண்ணா இருந்தா நல்லாயிருக்கும் இல்லையா?'' என்றேன்.

    அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருந்தது.

    அவர் ஆவடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் புரொபசராக இருந்தார். நான் கேட்டதற்காக வேலையை விட்டுவிட்டு உடனே எங்களிடம் வந்துவிட்டார்.

    தமாசுக்காக அவரை, "என்ன மானேஜர் ரெடியா? போகலாமா? அடுத்து என்ன புரோகிராம்?'' என்று நான், அமர், பாஸ்கர் மூவருமே கிண்டல் செய்வோம்.

    அம்மாவும் வெற்றிலைப்பாக்கு போட்ட வாயோடு கன்னத்தில் கை வைத்தபடி எங்களை ஆச்சரியமாய் பார்ப்பார்கள். அதோடு, "அட போங்கப்பா! உங்களை பண்ணைபுரத்துல பார்த்த மாதிரி அப்படியே இருக்கு. இப்படியே கடைசிவரை இருங்கப்பா'' என்பார்கள்.

    "16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.
    "16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.

    "16 வயதினிலே'' படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "16 வயதினிலே'' படத்தில், மயிலின் (ஸ்ரீதேவி) கன்னத்தில் சப்பாணி (கமலஹாசன்) அறையும் காட்சி முடிந்ததும், "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா'' என்ற பாடல் காட்சி வரும்.

    பாடலுக்கு முன்னால் வரும் அந்த சீனுக்கு, மிïசிக் கம்போஸ் நடந்தது. குறிப்பிட்ட `ஷாட்'டுகளுக்காக போடப்பட்ட இசை, அந்த ஷாட்டுகளில் அமையவில்லை.

    அது கொஞ்சம் முன்னால் போய்விடும். அல்லது அந்த ஷாட் முடிந்து லேட்டாகி விடும். இதை `கண்டக்ட்' செய்து கொண்டிருந்த கோவர்த்தன் சாரிடம், "அண்ணே! நீங்க உள்ளே வாங்க, நானே `கண்டக்ட்' செய்கிறேன்'' என்று உள்ளே போனேன்.

    ஒரு ரிகர்சல் `கண்டக்ட்' செய்தேன். எல்லாம் அதனதன் இடத்தில் உட்கார்ந்தது. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு குஷி.

    கண்டக்ட் செய்யத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் டப்பிங் தியேட்டரில் உட்கார்ந்திருந்த யாரோ ஒருவர், "கட்! கட்!'' என்றார்.

    நான் திரும்பிப் பார்த்தேன். பாரதி டென்ஷனாகி உள்ளே வந்துவிட்டார்.

    "யாருய்யா கட் சொன்னது?'' என்று பாரதியிடம் கோபமாக கேட்டேன்.

    பாரதிக்கு, அவரது அசிஸ்டெண்ட் யாரோ `கட்' சொன்னது தெரிந்து போயிற்று. அந்த அசிஸ்டெண்ட் யாரென்பதும் தெரிந்து போயிற்று.

    நான் அவரிடம், "எதுக்குய்யா கட் சொன்னே?'' என்று கேட்டேன்.

    அவரோ என்னையும், பாரதியையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு, "டேக்கில் டயலாக் வரலை சார். டயலாக் இல்லாம டேக் எப்படி சார்?'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் அந்தக் கோபத்திலும், எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

    அதாவது ரிகர்சல் பார்க்கும்போது திரையில் டயலாக் போகும். அதோடு இசைக் குழுவினரை வாசிக்க வைத்துப் பார்ப்போம்.

    டேக் போகும்போது அந்த ஸ்கிரீனுக்கு பின் இருக்கும் ஸ்பீக்கரில் டயலாக் வந்தால், அதுவும் மைக்கில் பிக்அப் ஆகி, வாத்தியங்களில் இசை கேட்காமல் போகும் அல்லவா? அதற்காக அதை `கட்' பண்ணி கண்டக்டரின் ஹெட்போனில் மட்டும் கொடுப்பார்கள். அதைத்தான் இவர் டேக்கில் டயலாக்கை கட் பண்ணிவிட்டார்கள் என்று எண்ணி, `கட்' சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது.

    பாரதி அவரைப் பார்த்து, "இங்கே இருக்காதே! உள்ளே போய் உட்கார்!'' என்று உள்ளே அனுப்பி வைத்தார்.

    பிறகு அந்த உதவியாளர் பற்றி பாரதி பேசும்போது, "எக்ஸ்போஸ் பண்ணின பிலிம் டப்பாவை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திறந்து பார்க்கப் போனவன் இவன்!'' என்று சொல்லி, அதுபற்றி விவரித்தார்.

    படப்பிடிப்பு முடிந்து வந்த பிலிம்கேனை திறந்து, படம் பிடித்த எல்லாக் காட்சிகளும் இருக்கிறதா என்று பார்க்கப்போனவராம் இவர்! நல்லவேளையாக பாரதி இதைப் பார்த்துவிட, பிலிம் ரோல் தப்பியிருக்கிறது.

    இப்படி பாரதியிடம் திட்டு வாங்கியவர் வேறு யாருமல்ல; பிற்காலத்தில் பெரிய டைரக்டராக உயர்ந்த கே.பாக்யராஜ்தான்!

    "16 வயதினிலே'' படம் 15-9-1977-ல் ரிலீசானது.

    வழக்கமாக வரும் படங்களைப் போல இல்லாமல் மாறுபட்டு இருந்ததால், படத்தைப்பற்றி என்ன கருத்து சொல்வது என்று சினிமா வட்டாரத்தினருக்குப் புரியவில்லை.

    கமலஹாசனின் உதவியாளராக இருந்த சேஷு என்பவர் "இந்தப் படம் ஒருவாரம்தான் ஓடும். மிட்லண்ட் தியேட்டரில் படம் பார்க்கும் ஜனங்கள் கிண்டல் செய்கிறார்கள். இது போதாதென்று, டைட்டிலிலேயே சினிமாவுக்குப் பொருத்தம் இல்லாத குரலில் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருக்கிறார். இது ஜனங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது'' என்று படத்தை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

    ஆனால் ஒரு இரும்புக் கதவை ஒரு சாதாரண சோளக் குச்சியால் தகர்த்த மாதிரியாகிவிட்டது. அதாவது "16 வயதினிலே'' படம் இமாலய வெற்றி பெற்றுவிட்டது.

    அதுவரை, ஸ்டூடியோவிலேயே செயற்கையான செட்டுகளில் படங்களை எடுத்துக்கொண்டிருந்த முறையை அடியோடு மாற்றி இப்படத்தை எடுத்திருந்தார், பாரதி.

    விரிந்து கிடந்த அழகான மூலை மூடுக்குகளை கலை நயத்தோடு மக்களுக்கு காட்டி, அவர்களின் இதயங்களில் அழியாத இடம் பிடித்தார்.

    பாரதிராஜாவை, மாபெரும் கலைஞனாக உலகம் ஏற்றுக்கொண்டது.

    இந்தக் காலக்கட்டத்தில் இருந்துதான், திரை உலகில் பெரிய மாற்றங்கள் தொடங்கின. இதை ஒரு புதிய சினிமா வரலாற்றின் தொடக்கம் என்றும் குறிப்பிடலாம்.

    இன்றைய மாற்றங்களுக்கெல்லாம், அன்றே அடிக்கல் நாட்டியவர் பாரதிராஜா. நான் அவரை வெளிப்படையாக புகழ்ந்து இதுபோல் பேசியதே இல்லை. அது பேசப்படாமலே போய்விடக்கூடாது என்பதற்காகத்தான், இப்போது சொல்கிறேன்.

    அதே நேரம் இதுபோன்ற முயற்சிகளுக்கு அடித்தளம் இட்டது `அன்னக்கிளி' படம்தான். அந்த அடித்தளம் வேண்டுமானால் சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் அதை இல்லை என்று தள்ளுவதற்கில்லை.

    அன்னக்கிளியில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரும், கிராமத்து மருத்துவச்சியும்தான் நாயகன்- நாயகி.

    இதேபோல் "16 வயதினிலே'' படத்தில் கிராமத்து இளம்பெண், கால்நடை மருத்துவர், சப்பாணி, வெட்டியாக ஊரைச்சுற்றும் இளம் சண்டியர்கள் என சாதாரணமானவர்களே பாத்திரப் படைப்புகள். அதோடு திரையுலகம் சந்தித்திராத திரைக்கதை வடிவமைப்பு. இன்றும் இந்தப் படத்தைப் பார்த்தால் எவருக்கும் சலிப்பு ஏற்படாது.

    இந்தப்படத்தில் அமரன் எழுதி எஸ்.ஜானகி பாடிய "செந்தூரப்பூவே'' பாட்டுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஜானகிக்கு சிறந்த பாடகி என்ற தேசிய விருதை பெற்றுத்தந்தது இந்தப்பாட்டு.

    தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் "கவிக்குயில்'' என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதை கதாநாயகனால் இசைத்துக்காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.

    நாயகனோ அந்த இசையை புல்லாங்குழலில் வாசித்து, பிறகு பாட்டாகவும் பாடிக்காட்டி நாயகியின் மனதில் இடம் பிடிப்பான்.

    இதற்கு ஒரு டிïன் கம்போஸ் செய்தேன். அதைக்கேட்ட பஞ்சு சார், "இதை பாலமுரளிகிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்'' என்று சொன்னார்.

    தொடர்ந்து பாலமுரளிகிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

    `பாலமுரளிகிருஷ்ணா பாடப்போகிறார்' என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது.



    ×