search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:-

    "அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.

    ஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.

    அமரும் டிïனைக் கேட்டுவிட்டு "செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.

    "செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.

    செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா?

    இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.

    "சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.

    படம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.

    `அடடே! பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா?' என்று பிரமித்துப் போனேன்.

    அவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.

    இந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.

    இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

    இந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

    16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.

    கேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.

    அந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.

    இசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், "அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.

    பதிலுக்கு நான், "என்ன... என்ன? என்னடா எந்த இடத்துல?'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.

    அமர் தயங்கியபடி "இல்லே! இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...

    அவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.

    "இது உன் ஐடியாவா?''

    "இல்ல... பாரதியுடையது!''

    திரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், "ஏன்யா! ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன?'' என்று கேட்டேன்.

    "ஒங்கிட்டயா? நானா? சொன்னா சும்மா விட்டுருவியாக்கும்? உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்! மானம் போயிடாது!'' என்று சொன்னார், பாரதி.

    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.
    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

    "16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

    நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.

    பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.

    நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

    "16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

    இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

    இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

    மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

    நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

    கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

    நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

    "செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

    பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

    மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

    ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

    பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

    "பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

    என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

    எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

    பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.

    யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

    மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

    அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

    மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.

    இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

    ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

    பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

    நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

    இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

    அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

    மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

    அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

    தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

    அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

    "இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

    அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை.
    ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார்.
    ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார். கடைசியில், குரு ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, இளையராஜாவை சம்மதிக்க வைத்தார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "16 வயதினிலே கதையைக் கேட்டு ராஜ்கண்ணு `ஓ.கே' சொன்னதும், கதாநாயகனாக யாரைப்போடலாம் என்று கேட்டார். அப்போது சிவகுமார் நடித்த "அன்னக்கிளி'' போன்ற படங்கள் நன்றாகப் போனதால் ராஜ்கண்ணு பாரதிராஜாவிடம், "சிவகுமாரைப் போடலாமே'' என்று கூறியிருக்கிறார்.

    பாரதிராஜாவோ திட்டவட்டமாக மறுத்து, "இந்தக் கதைக்கு கமலஹாசன்தான் சரியாக இருப்பார்'' என்று தன்பக்க காரணங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் "கமலஹாசனே நடிக்கட்டும்'' என்று ராஜ்கண்ணு கூறிவிட்டார்.

    பாரதி சொன்னது சரிதான். சிவகுமார் நன்றாகவே செய்திருக்கலாம். கமலஹாசன் இடத்தில் சிவகுமாரை இப்போது நம்மால் கற்பனைசெய்து பார்க்க முடியுமா?

    அடுத்து இசையமைக்க யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, பாரதி, "இளையராஜாவைப் போடலாம்'' என்று என் பெயரை சொல்லியிருக்கிறார்.

    "என்ன பாரதி! விளையாடறீங்களா? இளையராஜாவாவது கிடைக்கிறதாவது? அவர் இருக்கிற பிஸியில இதுமாதிரி படத்துக்கெல்லாம் வருவாரா?'' என்று கேட்டிருக்கிறார், ராஜ்கண்ணு.

    "இல்லையில்லை. இளையராஜா என் நண்பன்தான்'' என்று பாரதி சொல்ல, ராஜ்கண்ணு நம்பவே இல்லை.

    உடனடியாக நம்ப வைக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று எண்ணிய பாரதி, என் அண்ணன் பாஸ்கரை அழைத்துக்கொண்டு ராஜ்கண்ணுவை போய் பார்த்திருக்கிறார்.

    "வாங்க பாரதி'' என்றவர், "இவர் யாரு?'' என்று பாஸ்கரை கேட்டிருக்கிறார். "இவர் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர்'' என்று பாரதி சொல்ல, உடனே பாஸ்கருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கிறது. இப்போது `உண்மையிலேயே இளையராஜா பாரதிராஜாவின் நண்பர்தான் போலிருக்கிறது' என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்.

    ராஜ்கண்ணு பாஸ்கரிடம், "தம்பியிடம் சொல்லி படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.

    "அதுக்கென்ன சார்! இதில் ஒரு பிரச்சினையும் இல்லே. தம்பிகிட்ட நான் சொல்றேன்'' என்று பாஸ்கரும் தன் பங்குக்கு படுகூலாக சொல்லிவிட்டார்.

    அதே வேகத்தில் என்னிடம் வந்து, "டேய்.. பாரதிக்கு படம் வந்திருக்கிறது. நாமதான் மிïசிக்'' என்று சொன்னார்.

    நான் அண்ணனிடம், "பாரதியின் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கப்போவதில்லை'' என்றேன்.

    அண்ணன் அதிர்ந்து போனார். "என்னடா சொல்றே?'' என்று, தன் அதிர்ச்சியை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.

    பாரதிக்கும், எனக்கும் ஏற்கனவே இருந்த பந்தயம் பற்றி அண்ணனிடம் விவரித்தேன். "பாரதியின் முதல் படத்துக்கு அண்ணன் ஜி.கே.வெங்கடேஷ்தான் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்குகூட நான் இசையமைக்கும்படி ஜி.கே.வி.தான் சொல்ல வேண்டும்'' என்றேன்.

    பாஸ்கருக்கு என் பிடிவாத குணம் தெரியும். ஒரு முடிவெடுத்தால் அதில் இருந்து என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை அறிவார். அதனால் பாரதியை சந்தித்தவர், "விடு! எங்கே போயிடப்போறான்? இரண்டு மூணு நாள் விட்டுப் பிடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்'' என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

    அவர் சொன்ன மூன்று நாள் மட்டுமல்ல... மூன்று வாரம் போனபோதும் என் நிலை அதுவாகத்தான் இருந்தது.

    வாரங்கள் ஓடி மாதங்களானபோது, சகோதரர்களுக்குள் பிரச்சினை ஆகிவிட்டது. பாஸ்கரும், அமரும் (கங்கை அமரன்) என்னை பாரதி படத்துக்கு இசையமைக்க வற்புறுத்தினார்கள்.

    பாரதியோ, இந்த காலக்கட்டத்தில் என்னைப் பார்க்க வரவேயில்லை. நானும் இறங்கி வருவதாக இல்லை.

    ராஜ்கண்ணுவோ, "என்னாச்சு? என்னாச்சு?'' என்று என் விஷயமாய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

    இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பாஸ்கர், நேராக ஜி.கே.வி.யிடம் போய்விட்டார். அவரிடம் முழு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.

    ஜி.கே.வி. என்னை கூப்பிட்டு அனுப்பினார். என்னிடமும் விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், "சரிடா! போ! வேலையைச் செய்''

    என்றார்."இல்லண்ணா! நான் சொன்னா சொன்னதுதான்'' என்றேன்.

    "என்ன, சொன்னா சொன்னதுதான்! நான் இசையமைக்கச் சொன்னாத்தான் பாரதி படத்துக்கு இசையமைப்பேன்னு சொல்லியிருக்கே அதானே?'' ஜி.கே.வி. கேட்க, "ஆமா! அதுமட்டுமில்ல. பாரதிக்கு முதல் படம் நீங்கதான் இசையமைக்கணும். இரண்டாவது படத்தைக்கூட நீங்க சொன்னாத்தான் நான் இசையமைக்கறதா ஐடியா.''

    அவருக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது. "என்னடா இதெல்லாம், சின்னப்பசங்க மாதிரி! நான்தான் சொல்றேனில்லே... போடா, போய்ச் செய்'' என்றார். இதற்குப்பிறகும் மறுக்க முடியவில்லை. ஒத்துக்கொண்டேன்.

    பாடல் பதிவுடன் பூஜை என்று முடிவு செய்யப்பட்டது. கம்போசிங்கிற்காக ராஜ்கண்ணுவின் ஆபீசுக்குப் போனேன்.

    பூஜைப் பாடலாக, சப்பாணியை வெறுத்து வந்த மயிலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, அந்த மனமாற்றம் சப்பாணிக்கும் தெரிய வருகிற ஒரு பாடலை கம்போஸ் செய்யலாம் என்று பாரதி சொன்னார்.

    இதற்கிடையில், என்னுடைய ஒரு டிïனை என்னைக் கேட்காமல் பாரதியிடம் பாஸ்கர் பாடிக்காட்டி, "ஓ.கே''யும் செய்து வைத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. கம்போசிங் தொடங்கும் முன்பு அதைப் பாடிக்காட்டச் சொன்னார்கள்.

    `சும்மா கேட்பதற்காகத்தான் போலிருக்கிறது' என்று எண்ணி நான் அந்த டிïனை பாடிக்காட்டினேன்.

    "இதுவே போதும். இது ஓ.கே'' என்றார் பாரதி.

    அந்த டிïனை பஞ்சு சார் (பஞ்சு அருணாசலம்) ஏற்கனவே அவரது `கவிக்குயில்' படத்துக்கு "ஓ.கே'' செய்து இருக்கிறார்.

    இப்போது இவர்களும் "ஓ.கே'' சொல்லியிருக்கிறார்கள்!

    எனக்கு மனசுக்கு கஷ்டமாயிருந்தது. என் இக்கட்டான நிலையை பாரதியிடம் விளக்கினேன்.

    பாரதியோ, "பாஸ்கர் இதை பாடிப்பாடி அதற்கேற்ப எப்படி எப்படி `ஷாட்ஸ்' எடுக்கவேண்டும் என்று மனதில் நிறைய கற்பனைகளை செய்து வைத்துவிட்டேன்'' என்றார். அதோடு, "நான் நினைத்திருக்கும் அந்தக் காட்சிக்கு இதுபோல எந்த டிïனுமே அமையாது'' என்றும் உறுதிபடக் கூறிவிட்டார்.

    நான் விடவில்லை. "அது எப்படி பாரதி? நான் பஞ்சு சார் செலக்ட் பண்ணின டிïனை `இது பாரதிக்கு வேணுமாம்' என்று எப்படிச் சொல்வேன்? இதைவிட நல்லா டிïனா உனக்குப் போடறேன்'' என்றேன்.

    பாரதி வேண்டா வெறுப்பாக, "ம்... ம்... உன் இஷ்டம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தார். என்ன பாடினாலும் கவனிக்காமல் சிரத்தையின்றி இருந்தார். கடைசியாக ஒரு டிïனை அடிக்கடி பாடிக்காட்டி "இது நல்லா வரும்'' என்றேன்.

    பாரதி அரை மனதுடன்தான் அந்த டிïனுக்கு `ஓ.கே' சொன்னார். பாடலை எழுத கவிஞர் கண்ணதாசனை அழைக்கலாம் என்று

    சொன்னேன்."கவிஞருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ? அதற்கு புரொடிïசர் என்ன சொல்வாரோ?'' என்றார், பாரதி.   "அதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றேன்.

    கவிஞர் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், "இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க'' என்றேன்.

    இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.
    இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

    "அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெற+வில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.

    இந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏவி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.

    அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். "அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.

    என்னைப் பார்த்ததும் "நீங்கள்தான் இளையராஜாவா?'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.

    ஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே "என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.

    இதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். "நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்''

    என்றார்.இப்படிச் சொன்னதோடு, "மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.

    சந்தோஷமாக விடைபெற்று வந்தேன்.

    இதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.

    வந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.

    பாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த "மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. "மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.

    அப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக்

    காட்டினார்.தமிழில் அதற்கு "தீபம்'' என்று பெயர் சூட்டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.

    இந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.

    அதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

    அப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

    அப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய "தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.

    அவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.

    அதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் "வாடா பாலமுருகா! உட்கார்!'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.

    பாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து "உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி "உட்கார், மகேந்திரா!'' என்று சொன்னார்.

    பாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.

    சிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், "இல்லண்ணே! நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    சிவாஜியை "தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.

    பிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு? உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா! என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்!

    தீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே "பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.

    இங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.

    பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.

    இசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் "ஓ.கே'' சொன்னார்.

    பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, "ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி

    விட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.

    நான் மட்டும் வாலி அண்ணனிடம், "அண்ணா! வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.

    "எப்படி?'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.

    "டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.

    "இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.

    "தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.

    உடனே அவர், "ராஜா பாருங்க! ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.

    "இது சரியாக இருக்கிறது'' என்றேன்.

    அன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, "யோவ்! சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல?'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.

    ஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், "அதெல்லாம் இல்ல வாலி! சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு?'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

    இந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, "இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்?'' என்று கேட்டார்.

    சிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.

    அதை வாசித்தேன். கேட்டு விட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.

    அடுத்த பாடல்தான் "வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''

    இந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.

    இந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.

    இது என் மூன்றாவது வெற்றிப்படம்.''

    "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.
    "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.

    அவரது இரண்டாவது படமான `பாலூட்டி வளர்த்த கிளி' சரியாகப் போகவில்லை. என்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "கொலை கொலையா முந்திரிக்கா'' பாடல் ஹிட்டாகி, இளையராஜா பெயரை தக்க வைத்துக்கொண்டது.

    இரண்டாவது படம் வெளியான பிறகும் இளையராஜா தொடர்ந்து `இசை' கற்றுக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். இதற்கென சுவாமி தட்சிணாமூர்த்தி என்ற இசை அமைப்பாளரிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தியின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது இரண்டு படங்களுக்கு இசையமைத்துவிட்ட நிலையிலும் அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆசை எனக்குள் இருந்தே வந்தது. இனியும் தள்ளிப்போடலாகாது என்ற முடிவுக்கு வந்து, சென்னை மந்தைவெளியில் இருந்த அவரது வீட்டுக்குப்போய் கேட்டேன்.

    என் ஆர்வம் புரிந்து கொண்டவர், "நாளையில் இருந்து பாடம் தொடங்கலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    மறுநாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு தட்டுடன் போனேன்.

    அவர் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை முடித்து, எனக்கு பாடம் தொடங்கினார்.

    ஆரம்பப் பாடமான சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

    அவரோ ஏதோவொரு கீர்த்தனையைத் தொடங்கி விட்டார். அவர் சொல்லித் தரும் பாடங்களை குறித்துக்கொள்ள `நோட்டு' கொண்டு போயிருந்தேன். கீர்த்தனையில் இருந்து தொடங்கி விட்டதால் எழுதும் வேலை ஒன்றும் இல்லை.

    பாடினார். அதையே என்னைத் திரும்பப் பாடச் சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை.

    சரி செய்தார். மறுபடியும் பாடினேன்.

    ஊஹும். அவர் மாதிரி வரவேயில்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது.

    அன்று மட்டுமில்லை. அடுத்து நான் போன மூன்று மாதங்களிலும் இதே தான் என் நிலை. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று. என்றாலும் அவர் பாடுவதும், அவர் பாட்டுக்கு நான் பாடிப்பார்ப்பதுமாக 6 மாதங்கள் ஓடிப்போயிற்று.

    சுவாமி அப்போது, "நந்தா என் நிலா'', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

    நானும் இரண்டொரு படங்களுக்கு இசையமைப்பை தொடர்ந்ததோடு, ஜி.கே.வி.யிடமும் பிசியாக இருந்தேன்.

    இதற்கிடையே சுவாமி ஒருநாள் என்னிடம் தனது படம் ஒன்று பின்னணி இசை சேர்ப்புக்கு (ரீரிகார்டிங்) வந்துவிட்டதாகவும், அதற்கு `காம்போ' (இசைக் கருவி) வாசிக்க யாரும் கிடைக்கவில்லை என்றும் என்னிடம் சொன்னார்.

    நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், "அதனாலென்ன சுவாமி! நான் இல்லையா? நீங்க சொல்றப்போ வந்துடறேன்'' என்றேன்.

    சொன்னது போலவே அவரது படத்துக்கு `கம்போ' வாசிக்கப்போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு, நான் ஒரு உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும். அங்கிருந்த எல்லாரும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

    ஸ்டூடியோவில் வேலை செய்வோருக்கும் ஷூட்டிங் புளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் வந்தவர்களுக்கும் தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் "காம்போ'' வாசித்த நாலு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது.

    இப்படி பார்த்துப் போனவர்களில் ஒருவரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப் பார்த்தால்கூட அந்த சம்பவம் பற்றி வியந்து பேசுவார்.

    சுவாமிக்கும் என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. `இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஏற்பட்ட ஆச்சரியம்தான் என்மேல் அவருக்கான அன்பை கூட்டிற்று என்றும் சொல்லலாம்.

    அப்புறம் அந்த இசைப் பயிற்சி என்னாயிற்று என்று கேட்பீர்கள். அது அவ்வளவுதான்.

    இந்த நேரத்தில் மாஸ்டர் தன்ராஜை பார்க்க விரும்பினேன். தன்னிடம் இசை கற்றுக்கொண்டவர்களில் ஒருவராவது தன்னை வந்து பார்க்கவில்லை என்று அவர் குறைப்பட்டுக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.

    ஜோசப்பிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து மாஸ்டரின் தொடர்பு நின்று போனது. இருந்தாலும் அவர் மீதான மரியாதையும் அன்பும் குறையவே இல்லை.

    ஒருநாள் கையில் ஒரு ஐயாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்கப்போனேன்.

    என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், "நீ ரொம்பவும் பிசியா இருப்பதை கேள்விப்பட்டேன். இருந்தாலும் இசையில் மேற்கொண்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்கறதை மறந்துடக்கூடாது. உனக்கு இதுக்காக எப்ப `டைம்' ஒதுக்கி வர முடியுமோ வா. நான் இருக்கிறேன்'' என்றார்.

    அவர் கையில் ஐயாயிரம் ரூபாய் பணத்தை வைத்தேன். இப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் போலானார். "என்கிட்ட எத்தனையோ பசங்க கத்துக்கிட்டு சினிமாவில் நல்லா சம்பாதிக்கிறானுக. இதில் ஒருத்தன்கூட என்னை கவனிக்கணும்னோ, பார்க்கணும்னோ நினைச்சது கிடையாது. பிசியா இருக்கிற நீ என்னை பார்க்க வந்ததே பெரிசு. பணம், காசு கிடக்கட்டும். ஆனா ராஜா நீ `கிரேட்'டுடா!''

    இப்படி  அவர் சொன்னது எனக்கு  ஆசீர்வாதமாகவே  பட்டது.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    தொடர்ந்து வந்த படங்களுக்கான இசையமைப்பின்போது "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்'' என்ற பாடல், ஒத்திகையின்போது சின்னதாய் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது இளையராஜாவுக்கு.

    அதுபற்றி கூறுகிறார்:

    `அன்னக்கிளி' டைரக்டர்கள் தேவராஜ் - மோகன், "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்துக்குப் பிறகு "உறவாடும் நெஞ்சம்'' என்ற படத்தை இயக்கினார்கள். இதே நேரத்தில் பஞ்சுவின் "அவர் எனக்கே சொந்தம்'' படமும், காரைக்குடி நாராயணனின் `துர்காதேவி' படம் சங்கரய்யர் டைரக்ஷனிலும் தொடங்கியது.

    "உறவாடும் நெஞ்சம்'' படத்தில் "ஒருநாள், உன்னோடு ஒரு நாள்'' பாடல் பதிவாகும் போது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்னணி இசையில் வயலினோடு ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கம்போஸ் செய்யப்பட்ட இசை, ஒரு ஒத்திகையிலும் சரியாக வரவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது.

    கோவர்த்தன் மாஸ்டர், "சரிய்யா, டேக் போகலாம். அதற்குள் எப்படியாவது பிராக்டீஸ் செய்து வாசிப்பார்கள். சரியாக வந்துவிடும்'' என்று நம்பிக்கை கொடுத்தார்.

    `டேக்' போய் விட்டோம். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் - ஜானகியும் பாடிக்கொண்டிருந்தார்கள். நிறைய டேக்குகள் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, மிïசிக் சரியாக வரவில்லை.

    கடைசியாக ஒரேயொரு டேக்கில் மிகவும் சரியாக வாசித்து விட்டார்கள். அதுதான் இசைத் தட்டில் இன்றும் இருப்பது.

    இதுபோல எத்தனை பாடல்களில் ஒரேயொரு டேக்கில் மட்டும் சரியாகப் பாடியிருப்பார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.''
    "அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.
    "அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.

    "அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

    "அன்னக்கிளி'' ரிலீஸ் ஆனபோது, மூகாம்பிகை கோவிலுக்குப் போகத் திட்டமிட்டேன். முடியவில்லை. 100-வது நாளுக்கும் போகமுடியவில்லை. 150-வது நாள், 175-வது நாள் (வெள்ளி விழா) எதற்கும் போக இயலவில்லை. `இனி அம்மா கூப்பிட்டால்தான் போகமுடியும்' என்று தீர்மானித்து, முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.

    ராஜ்குமார் ஷெனாய் வித்வானாக நடித்த "ஷெனாதி அப்பண்ணா'' என்ற படத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஷெனாய் வாசிக்க பிரபல ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் வந்திருந்தார். அவர் இதுவரை எந்த சினிமா படத்துக்கும் ஷெனாய் வாசித்ததில்லை. ஷெனாய் வித்வானைப்பற்றிய கதை என்பதால், அவர் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

    அந்தப் படத்திற்கு நான் ஜி.கே.வி.யுடன் பணியாற்றியபோது, என்னை பிஸ்மில்லாகானுக்கு ஜி.கே.வி. அறிமுகப்படுத்தி வைத்தார். "என் சிஷ்யன்; இப்போது இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார்'' என்றார்.

    நான், பிஸ்மில்லாகானின் காலில் விழுந்து வணங்கினேன். அவர் ஆசி கூறினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், எல்லா நேரமும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே கிடந்தேன். இசை ஆறாக - நதியாக ஓடி, சங்கீத சாகரத்தில் கலக்கும் அழகை ரசித்தேன்.

    பிஸ்மில்லாகான் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிடுவார். ஒரு துண்டை விரித்து நமாஸ் (தொழுகை) செய்வார். ஒரு நாளில் 6 முறை தொழுகை நடத்தும் ஒழுக்கத்தை அவர் கடைப்பிடித்து வந்தார். ஒருநாள்கூட, இந்த வழக்கத்தை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.

    ஒருநாள், ராஜ்குமாரின் பாடலை பதிவு செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சற்று நேரத்தில் ராஜ்குமார் அண்ணா வந்துவிட்டார். பாடலை கையில் வாங்கிக்கொண்டார்.

    ஜி.கே.வி. ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவருக்கு நேரே எதிர்த்தாற்போல் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். ஜி.கே.வி.யின் வலது புறம் நான். மறுபுறம் தபேலா கன்னையா, `டோலக்' பாலா.

    ஜி.கே.வி. பாட ஆரம்பித்தார். ராஜ்குமார் அண்ணா, பாடலை கவனிக்கவே இல்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    எனக்கு கூச்சமாக இருந்தது. ஜி.கே.வி.யின் பாடலுக்கு தக்கபடி நான் வாத்தியம் வாசிக்க அது இடைïறாகவும் இருந்தது.

    ராஜ்குமார் "எல்லாம் கடவுள் செயல்'' என்பது போல மேலே கையைக்காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு, "எல்லிநோடிதரு நின் ஹெசுரே கனோ'' (எங்கு பார்த்தாலும் உன் பெயர்தானப்பா) என்றார்.

    எனக்குக் கூச்சம் அதிகமாயிற்று. "அண்ணா! பாட்டைப் பார்க்கலாம் அண்ணா!'' என்றேன்.

    அப்போது ராஜ்குமாரைப் பார்த்து ஜி.கே.வி, "ஆமா, ஆமா முத்துராஜ்! பேரு பெரிய பேருதான்'' என்றார்.

    பிறகு ஒரு வழியாக, ராஜ்குமார் பாடுவதற்குத் தயாரானார்.

    அவர் பாடலை பதிவு செய்தோம்.

    "அன்னக்கிளி'' மிகப்பிரபலமான போதிலும், நான் இசை அமைப்பாளர்கள் இடையே பத்தோடு பதினொன்றாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன். அதற்கு மேல் நினைக்கவில்லை.

    "இரண்டாவது படம் வந்தால் மூகாம்பிகை போகலாம்'' என்று நினைத்தேன்.

    இந்த சமயத்தில், மனைவி ஜீவா, இரண்டாவது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இந்த முறை அடிக்கடி போய் பார்த்துக்கொண்டேன். பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நேரம், "பாலூட்டி வளர்த்த கிளி'' என்ற படத்துக்கு இசை அமைக்க, எனக்கு டைரக்டர் மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது. "பெண் குழந்தை பிறந்த ராசி'' என்று அம்மா கூறினார்கள்.

    அருண்பிரசாத் மூவிஸ் பேனரில் இப்படம் தயாராகியது. பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். கதாநாயகி ஸ்ரீபிரியா பாடுவதுபோல் "கொலை கொலையா முந்திரிக்கா'' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

    "அண்ணே! எனக்காக நீங்கள் எழுதும் முதல் பாட்டு இது!'' என்று நினைவூட்டினேன்.

    "அதனால்தான், இந்தப் பாடலின் நடுவே, `வா, ராஜா வா' என்று வருமாறு எழுதியிருக்கிறேன்'' என்றார், கவிஞர்.

    "உங்கள் ஆசி அண்ணே'' என்று மகிழ்ச்சியோடு கூறினேன்.

    பி.மாதவன் தயாரித்த இந்தப் படத்தை, தேவராஜ் - மோகன் இயக்கினர். விஜயகுமார் - ஸ்ரீபிரியா நடித்தனர். வசனம்: கோமல் சாமிநாதன்.

    20-8-76 அன்று வெளிவந்த "பாலூட்டி வளர்த்த கிளி'' சரியாக ஓடவில்லை. "கிளியின் அருமையான இசை'' என்றெல்லாம் மாதவன் சார் விளம்பரம் செய்து பார்த்தார், பலன் இல்லை.

    "அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.
    "அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.

    இதுபற்றி இளைய ராஜா கூறியதாவது:-

    "பஞ்சு சாரின் கதை - வசனத்தில் ஹிட் ஆகியிருந்த "உறவு சொல்ல ஒருவன்'', "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற 2 படங்களுக்கும் விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.

    அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப்பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார்.

    "பஞ்சுசார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க'' என்றார்.

    இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சுசாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள்.

    "சார்! இந்த ராஜா ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்கிறவர் சார். ஏற்கனவே அன்லக்கி மிïசிக் டைரக்டர் என்று பெயர் எடுத்திருக்கார். அவர் மிïசிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்று போயிடும்'' என்று பலவிதமாக சொல்லி, பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்து விட்டார்.

    பஞ்சுசாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், "எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மிïசிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்டிரிபிïட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?'' என்று சொன்னார்கள்.  

    "அதைப்பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மிïசிக்!'' என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்து சொல்லிவிட்டார்.

    இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள்.

    பூஜைதேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாக சொல்லிவிட்டார்.

    "எப்போது திரும்பி வருவார்?'' என்று கேட்டதற்கு, "படத்தின் பூஜை முடிந்த பிறகு தான் திரும்பிவருவார்'' என்று பதில்வந்தது.   

    எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    அதேநேரம் "பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்'' என்று பஞ்சு சார் கூறிவிட்டார்.

    அதன்படி பாடலை எழுதித்தந்தார்.

    ரிகர்சல் நாள்வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும்

    வந்தது.காலையில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' பாடலுக்கு ரிகர்சல் செய்தோம்.

    அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, "மச்சானை பார்த்தீங்களா'' பாடலை ரிகர்சல் செய்தோம்.  மதிய உணவுக்குப்பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ்.ஜானகி வந்தார்.

    பெரும்பாலும் பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    ஆனால் ஜானகி ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார்.

    தவறாக பாடினால் ஜீ.கே.வி. என்னை விட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச்சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர்.

    ரிசர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும் போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.

    சுப்புவுக்கும், லட்சுமணனுக்கும் என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்து போனது.

    "நீ நன்றாகப்பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை'' என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார்.

    அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்து விட்டோம்.     

    பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது.

    ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, "ரெடி, ஒன், டூ, த்ரி'' என்று நான் சொன்ன அந்த நொடியில் "மின்சாரம் கட்'' ஆகி விளக்குகள் அணைந்து விட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.

    டோலக் வாசிக்கும் பாபுராஜ் `எம்... நல்ல சகுனம்' என்றார், கேலியாக.

    மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிதுநேரம் அப்படியே கழிந்தது.

    தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, "டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்கவேண்டுமாம்'' என்றனர்.

    நான் உடனே எழுந்து போனேன், அவர் "கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இந்தா பிரசாதம்'' என்று என் கையில் கொடுத்தார்.

    பின்னர், "நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்'' என்றார்.

    அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது.

    தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்கு காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.

    "சைலன்ஸ்! டேக்..ரன்னிங்'' என்ற குரல் ஒலிக்க, கோவர்தன் மாஸ்டர், "ஒன் டூ கொடுக்க, ஜானகி ஆ...ஆ... என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது.

    என்ஜினீயர் சம்பத், ஒன்ஸ்மோர் என்று கேட்கப்போனார்.

    "முதல் டேக் டேப்பை போட்டுக்காட்டினால், ஆர்க்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக் கொள்வார்களே'' என்று நான் கூறினேன்.

    எல்லோரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, "என்ன இது? இந்தபையன் இப்படிச் செய்கிறானே?'' என்று நினைத்தார். "ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே'' என்றார்.

    "எடுக்கலாம் சார்! ஆனா இதப்போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க'' என்றேன்.

    `சரி' என்று டேப்பை ரிவைண்ட் செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை.

    காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்கு தெரிந்து போய்விட்டது. உடனே, "சார், சார்! பாட்டு பதிவாகலை சார்,

    ஒன் மோர் டேக் சார்!'' என்றார்.

    சுப்புசாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார்.

    மீண்டும் பாடல் பதிவு தொடங்கியது.

    "டேக் நம்பர் ஒன்று இரண்டு'' என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது.

    பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார்.

    பாரதிராஜா மட்டும் பூஜைக்கு வரவில்லை. அது எங்களுக்குள் இருந்த அந்த போட்டியை எனக்கு நினைவு படுத்தியது.

    2-வது பாடல், "மச்சானைப்பார்த்தீங்களா'' பதிவாகியது. "சொந்தமில்லை பந்தமில்லை'' பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.

    `அன்னக்கிளி உன்னைத்தேடுதே' பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்த பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாக பாடிக்கொடுத்தார்.

    பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மியூசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார்,
    பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மியூசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம். அதன்படி "அன்னக்கிளி'' படத்தின் இசை அமைப்பாளர் வாய்ப்பை வழங்கி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    கன்னடத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தவர் ஜி.கே.வெங்கடேஷ். அவரிடம் இளையராஜா 1969-ம் ஆண்டு உதவி இசையமைப்பாளராக சேர்ந்தார். 150 படங்கள் வரை அவருடன் இணைந்து பணியாற்றினார்.

    இளையராஜா ஆர்மோனியத்தை வாசிப்பதைத்தான் அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் ஜி.கே.வெங்கடேசிடம் பணியாற்றும் போது, கிட்டார், பியானோ, கம்போஆர்கன் ஆகிய இசைக்கருவிகளையும் வாசித்தார். அத்தோடு பாடல்களை எப்படி பாட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது, பின்னணி பாடகர்கள் பாடும்போது தவறுகள் ஏற்படும்போது, அதை சரிசெய்வது போன்ற பணிகளையும் செய்தார்.

    இந்த சமயத்தில், இளையராஜா வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    இளையராஜாவின் நண்பரும், பிற்காலத்தில் பிரபல கதாசிரியராக உயர்ந்தவருமான ஆர்.செல்வராஜ் உருவத்தில் அதிர்ஷ்டம் அவரைத் தேடி

    வந்தது.இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "செல்வராஜ் ஒருநாள் வந்து, `டேய்! உனக்காக பஞ்சு அருணாசலத்துக்கிட்டே சொல்லியிருக்கிறேன். அவர் உன்னை பார்க்க வேண்டும் என்று அழைத்துவரச்சொன்னார்' என்று கூறினான். பின்னர் நானும், செல்வராஜ×ம் ஒருநாள் அவரைப்பார்க்க சென்றோம்.

    காலை 10 மணி இருக்கும். ஒரு சிறிய அறையில் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தார். எங்களைப்பார்த்தவுடன் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, `வா..செல்வராஜ்' என்றார். உடனே செல்வராஜ், `இவர்தான் ராஜா!' என்று என்னை அறிமுகம் செய்து

    வைத்தான்.அதன்பின்னர் பஞ்சு அருணாசலம், `நீ ஏதாவது படத்திற்கு டிïன் போட்டு இருக்கிறாயா?, இருந்தால் கொஞ்சம் பாடிக்காட்டு, கேட்கலாம்' என்றார்.

    உடனே நான், ஏற்கனவே மெட்டமைத்து வைத்திருந்த "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப்பார்த்தீங்களா'', "சுத்தச்சம்பா'' போன்ற பாடல்களைப் பாடிக்காட்டினேன். பாட்டுக்கு ஏற்ற தாளமாக பக்கத்தில் இருந்த டேபிளையும் லேசாக தட்டினேன்.

    அவர் அந்தபாடல்களை ரசித்துக்கேட்டு விட்டு, `டிïன் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. இப்போது நான் எழுதுகின்ற படம் அனைத்தும் காமெடி படம்தான். ஏற்கனவே நான் எழுதி அதிக படங்கள் பாதியில் நின்று போனதால் எனக்கு `பாதிப்படம் பஞ்சு அருணாச்சலம்' என்று பேர் வைத்திருக்கிறது, திரைஉலகம்! இந்த நல்ல டிïன்களை காமெடிப் படத்தில் போட்டால், அதற்குரிய மரியாதை போய்விடும். நல்ல கதை அமைந்து அதில் இந்த பாடல்களுக்கு முக்கியத்துவம் வருகிற மாதிரி வந்தால்தான் படமும், இசையும் நன்றாக இருக்கும். அது போல எடுக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கின்ற நிலையில் எந்த புரோடிïசர் வரப்போகிறார்! ஒரு வேளை நானே தயாரிப்பாளராக வந்தால், உனக்கு கண்டிப்பாக சான்ஸ் தருகிறேன். அதுவரைக்கும் நீ பொறுத்து இருக்கணும்!' என்றார்.

    "சரி சார்'' என்று அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வந்தோம்.

    பஞ்சு சார் சொன்ன பதிலை, சாதாரணமாக எல்லோரும் சொல்கின்ற பதில்போல்தான் எடுத்துக்கொண்டேன். ஜீ.கே.வியின் வேலைகளில் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.

    இடையில் செல்வராஜ் ஒருநாள் வந்து `ஏய்.. பஞ்சுசார் கதை - வசனம் எழுதிய "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற படம் நல்ல ஹிட்டாகி விட்டது. அடுத்த படம் தொடங்கினால், நீதான் மிïசிக் டைரக்டர்! ரெடியா இருடா' என்றான். நான் அதையும் ஒரு பேச்சாக எடுத்துக் கொண்டேனே தவிர உண்மையாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சில நாட்களுக்குப்பின் செல்வராஜ் என்னிடம் வந்து, பஞ்சு அருணாசலம் என்னை அழைப்பதாகக் கூறினான். போனேன்.

    "வாய்யா'' என்று வரவேற்ற பஞ்சு சார், "செல்வராஜ் ஒன்றும் சொல்லலியா?'' என்று கேட்டார்.

    `இல்லை' என்கிற மாதிரி தலையசைத்து, செல்வராஜை நோக்கினேன்.

    "இல்லை சார். அதை நீங்களே சொன்னாத்தான் நல்லாயிருக்கும்'' என்று செல்வராஜ் சொன்னான்.

    "செல்வராஜ் சொன்ன ஒரு கதையை நானே சொந்தமாகத் தயாரிக்கப்போறேன், நீதான் மிïசிக்!'' என்றார், பஞ்சு அருணாசலம்.

    மகிழ்ச்சி தாங்காமல், "சரி அண்ணே'' என்றேன்.

    கோவர்த்தனுடன் சேர்ந்து இசையமைக்க ஒத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

    "வரப்பிரசாதம் என்ற ஒரு படத்தை கோவர்த்தன் - ராஜா என்ற பெயரில் இருவரும் சேர்ந்து இசையமைக்கிறோம். அதே பெயரில் இதில் இசையமைத்து விடுகிறோமே'' என்றேன்.

    "இங்கப்பாரு! நான் சான்ஸ் கொடுப்பதே உனக்கு! இதில் ஏன் அவர் பெயரைப்போட வேண்டும்? "கைராசி'', "பட்டணத்தில் பூதம்'' என்று பல படத்திற்கு கோவர்த்தன் தனியாகவே இசையமைத்திருக்கிறார். இது நான் உனக்கு கொடுக்கும் படம்'' என்று பஞ்சு சார் கூறினார்.

    இதை தயங்கி தயங்கி நான் கோவர்த்தனிடம் சொன்னேன். "பரவாயில்லை; சான்ஸ் கிடைப்பது கஷ்டம். உன் பெயரில் செய்'' என்று அனுமதி கொடுத்தார்.

    பஞ்சு சார், தன் தம்பி சுப்புவை தயாரிப்பாளராகப் போட்டு இந்த படத்தை எடுத்தார்.

    செல்வராஜ் ஏற்கனவே சொல்லியிருந்த ஒரு கிராமத்து மருத்துவச்சி கதையை கேட்டு, சில மாற்றங்கள் செய்து, திரைக்கதையையும், வசனத்தையும் பஞ்சு சார் எழுதினார். இதை தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தார்கள்.

    பாடல்களை எல்லாம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை டைரக்டர் தேவராஜிடம் விளக்கிக்கூறி, ஏற்கனவே கம்போஸ் செய்யப்பட்ட பாடல்களை அவரை கேட்கவைத்தார் பஞ்சு.

    உத்தமபாளையம் பகுதியில் பாடப்படுகின்ற நாட்டுப்பாடல். ஏற்கனவே சிறுவயதிலிருந்து நான் கேட்டு வந்த "புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி'' என்று தொடங்கும் ஒரிஜினல் பாடலை, நான் வேறுவகையாக மாற்றி அமைத்தேன்.

    அதுதான் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' என்ற பாடலாகும். அந்த அன்னக்கிளி என்ற பெயரே படத்தின் பெயரானது.

    அடுத்து "மச்சானை பார்த்தீங்களா'' என்ற பாடலை ஏற்கனவே அமர் (கங்கை அமரன்) எழுதி டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி.ரமணன் ஸ்டுடியோவில் பதிவு செய்து வைத்து இருந்தோம். அதை "அன்னக்கிளி'' படத்தில் பயன்படுத்த தீர்மானித்தோம்.

    பூஜை தினத்தன்று இந்த 2 பாடல்களையும் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதுவார் என்று பஞ்சு சொன்னார்.

    அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருந்தேன்.

    இசை அமைப்பில் இளையராஜா.


    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.
    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக இளையராஜா பணியாற்றி வந்தபோது, இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு நாள் மதுரையில் அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) உடல்நலமில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்கிறார்கள் என்றும், செலவுக்கு பணம் வேண்டும் என்றும் மூத்த மகன் ஜீவதுரை வந்தான்.

    அவ்வளவு சீரியசாக இருக்காது என்று நான் நிச்சயமாக நம்பினேன். பணத்தை, தேவையானபோது அனுப்பலாம் என்று சாதாரணமாக இருந்து விட்டேன்.

    அடுத்த நாள், ஜி.கே.வி.யின் ரெக்கார்டிங்குக்குப் போனேன். காலை 7 மணிக்கு, விஜயா ரெக்கார்டிங் தியேட்டரில் ஜி.கே.வி.யுடன் அமர்ந்தேன்.

    அண்ணன் இறந்துவிட்டார்கள் என்று செய்தி வந்தது. அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

    `பணம் கொடுத்திருந்தால் ஒருவேளை பிழைத்திருப்பாரோ?'

    குற்ற உணர்ச்சி, அண்ணன் போய்விட்ட வேதனை எல்லாம் சேர்ந்து, என்னை ஸ்தம்பிக்க வைத்து, துயரத்தில் மூழ்கடித்தன.

    அம்மா, பாஸ்கர், அமர் ஆகியோருடன் நானும், மனைவியும், குழந்தையும் வாடகைக் காரில் கிளம்பினோம். போகும்போது யாருக்கும் பேச்சு வரவில்லை. அம்மா புலம்பிக் கொண்டே வந்தார்கள்.

    உடலை மதுரையில் இருந்து பண்ணைபுரத்துக்கு பிள்ளைகள் கொண்டு போனார்கள்.

    அண்ணன் உடலைப் பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைத்தது. துயரத்தைத் தாங்க முடியவில்லை. அப்பா உயிர் பிரியும்போது, எங்கள் கைகளைப் பிடித்து, அவரிடம் தானே ஒப்படைத்தார்! அண்ணன்தானே எங்களை வளர்த்து ஆளாக்கினார். `எங்கள் வளர்ச்சியைக் காணாமல் போய்விட்டீர்களே' என்று கதறி அழுதோம்.

    இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது, துக்கமும், அழுகையும் அதிகமாகியது. உடலை குழிக்குள் இறக்கியபோது, கண்கள் வற்றும்வரை கண்ணீர் கொட்டியது.

    நான் அழவேண்டியது எல்லாம், அன்றோடு முடிந்தது. அதற்குப் பிறகு, அத்தனை வேதனையோடு நான் என்றும் அழவில்லை.

    திரும்பி வந்தோம். ரெக்கார்டிங்குக்கு போனபோது, ஜி.கே.வி.யை பார்த்ததும், அழுகை அதிகமாக வந்தது. "எங்களுக்கு இனி இந்த உலகில் அண்ணன் என்பது நீங்கள்தான் அண்ணே'' என்று கதறியபடி கூறினேன். அவர் ஆறுதல் சொன்னார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    அண்ணன் - தம்பி போல் ஜி.கே.வெங்கடேசும், இளையராஜாவும் பழகுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களைப் பிரிக்க முயற்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசையமைப்பாளர் கோவர்த்தனும், நானும் சேர்ந்து இசையமைப்பதும், ஆர்க்கஸ்ட்ரா ரிகர்சல் நடத்துவதும், ஜி.கே.வியின் இன்சார்ஜ் சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை.

    `நம்ம ரெக்கார்டிங் எல்லாம் ராஜாவுக்குப் பெரிது இல்லை, அவனும் கோவர்த்தனும் மிïசிக் பண்றாங்க! அதோட வெளிநாட்டில் இருக்கும் குரூப்போல ஆர்க்கஸ்ட்ரா கச்சேரியும் பண்ணப்போகிறார்களாம் என்று சொல்லிவிட்டார். "அவன் பிசியா இருந்தா விட்டுடுடா'' என்று ஜி.கே.வி.யை சொல்ல வைத்து விட்டார்.

    இதனால், வழக்கமாக என்னை அழைத்துப்போக வீட்டுக்கு வரும் டாக்சி 2 நாட்களாக வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

    ஜி.கே.வியின் அண்ணன் மகன் வித்யா, வயலின் வாசிப்பவன், என் வீட்டிற்கு வந்து "நீ ஏன் வரவில்லை'' என்றான். அதற்கு நான் "வண்டி என்னை பிக்அப் பண்ண வரவே இல்லை'' என்றேன்.

    பின்னர் நான் ஜி.கே.விக்கு ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டேன். அதில், "நான் ஏதோ தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதைப்போலவும், செய்யத்தகாத நடவடிக்கையைச் செய்துவிட்டதைப் போலவும் அதனால் என்னைத் தண்டிப்பதாகவும் நினைத்துக்கொண்டு, என்னை, அப்படியே விட்டுவிடு என்று சீனிவாசனிடம் சொன்னதாக அறிந்தேன். அண்ணா.. உங்களை நம்பி நான் சென்னைக்கு வரவில்லை. இனிமேல் வேலையே இல்லாமல் போனாலும், பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர உங்களிடம் வந்து எனக்கு வேலை வேண்டும் என்று நிற்கமாட்டேன். இப்படிக்கு ராஜா'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

    இந்தக் கடிதம் கிடைத்ததும், என்னை அழைத்து வர ஆள் அனுப்பினார், ஜி.கே.வி.

    முதலில் அந்த சீனிவாசனே வந்தான். நான் "வரமுடியாது'' என்றேன். பிறகு வித்யா வந்தான்.

    "வாடா! என்ன இருந்தாலும் அவர் பெரியவர்'' என்றான். போனேன்.

    "என்னடா இது லெட்டர்!'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    நடந்ததை சொன்னேன். அவர் வருத்தப்பட்டார்.

    "சரி, சரி! போனது போகட்டும். வாடா!'' என்று அழைத்துப்போனார்.

    கம்போசிங்கிலும், ரெக்கார்டிங்கிலும் `உம்' என்று இருந்தேன்.

    நான் சரியாவதற்கு இரண்டு மூன்று நாட்களாயிற்று.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.
    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.

    பாரதிராஜா உதவி இயக்குனராகவும், இளையராஜா ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (என்.எப்.டி.சி.) உதவியோடு படம் எடுக்க `மயில்' என்ற கதையை பாரதிராஜா உருவாக்கினார். அதற்கான விண்ணப்ப மனுவில், திரைக்கதை, டைரக்ஷன் பாரதிராஜா என்றும், கேமரா நிவாஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இசை அமைப்பாளராக என் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டார்.

    நிதி உதவி எப்படி யும் கிடைத்துவிடும், படம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இழுத்துக்கொண்டே போயிற்று.

    பாரதிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று, அவர் தாயார் விரும்பினார்.

    விரைவில், சொந்தத்திலேயே பெண் பார்த்து முடிவு செய்தார்கள். மணமகள் பெயர் சந்திரலீலா.

    கல்யாண நாள் குறித்தார்கள். திருமண வேலைகள் ஆரம்பம் ஆயின. அப்போது அவினாசி மணி இயக்கத்தில் "தலைப்பிரசவம்'' என்ற படத்தை, கே.ஆர்.ஜி. தயாரித்துக் கொண்டிருந்தார். கே.ஆர்.ஜி.க்கு பாரதி மீது ரொம்பப் பிரியம். அது, அடுத்த படத்தை பாரதிக்கு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வளர்ந்தது. அவரே கல்யாண விஷயங்களில் கலந்து கொண்டு நிறைய உதவி செய்தார்.

    திருமணம் ஆன பிறகு, காரணீஸ்வரர் கோவில் தெருவில் ஒரு வீடு பார்த்துக்கொண்டு, பாரதிராஜா குடியேறினார். பாரதிராஜாவின் அம்மா கொஞ்சநாள் வந்து இருந்துவிட்டுப் போனார்கள்.

    திருமணத்துக்குப்பின், நானும், பாரதியும் சந்திப்பது குறைந்து போயிற்று. அதைப் புதுப்பித்துக் கொள்ள நாங்கள் எப்போதாவது கடற்கரைக்கோ, டிபன் சாப்பிட லஸ் கார்னருக்கோ போய் வருவதுண்டு.

    அப்படி போகும்போது ஒருநாள், புதிய போட்டி ஒன்றை பாரதிராஜா தொடங்கினார்.

    நான் எப்போதும் ஜி.கே.வி., குமார், விஜயபாஸ்கர், ராஜன், நாகேந்திரா, ராகவலு, உபேந்திரகுமார், தேவராஜன், ஏ.டி.உமர், பாபுராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கிட்டாரோ, காம்போவோ வாசிக்கப்போய் வருவதைப் பார்த்த பாரதிராஜா, அதுபற்றி குறிப்பிட்டார். சிலர் வாழ்நாள் முழுவதும் உதவி டைரக்டராகவே காலம் கழித்துவிட்டு, அறுபது வயதுக்கு மேலும் வேலை செய்வதை சுட்டிக்காட்டினார்.

    பிறகு, "டேய்! நீ எல்லாம் மிïசிக் டைரக்டர் ஆக முடியாது போலிருக்கே! இப்படி கிட்டார் வாசிச்சுக்கிட்டே இருக்கணும்னு விதியோ என்னமோ! ஆனா ஒண்ணு! நீ மிïசிக் டைரக்டரா எப்போது ஆகமுடியும் தெரியுமா? நானெல்லாம் ஒரு இருபத்தஞ்சு முப்பது படம் டைரக்ட் பண்ணி, எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி பேர் எடுத்துப் புகழோடு இருக்கிறபோது, `சரி, போனாப்போகுது, நம்ம இவனுக்கு ஒரு படம் கொடுப்போம் என்று கொடுத்தாத்தான் நீ மிïசிக் டைரக்டர் ஆக முடியும்!'' என்றார்.

    எனக்குத்தான் மிïசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஐடியாவே இல்லையே! இசையைக் கற்றுக்கொண்டால் போதும் என்று இருக்கிறபோது பாரதி ஏன் இப்படி பேசுகிறார்! நாமும் ஒரு உதார் விடுவோம் என்று நினைத்தேன்.

    "பாரதி! நீ பெரிய டைரக்டர் ஆகு, அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனா, உன் படத்துக்கு நான் மிïசிக் பண்ணணும்னா, உன்னை புட்டண்ணாவிடம் அனுப்பி அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்த்து விட்டாரே ஜி.கே.வி, அவர் உன் படத்துக்கு மிïசிக் பண்ணியிருக்க வேண்டும். அதற்கப்புறம் அவர் என்னிடம், `டேய், ராஜா! போனாப் போகுது. பாரதி படத்துக்கு மிïசிக் பண்ணுடா' என்று சொன்னாத்தான் நான் மிïசிக் பண்ணுவேன். இல்லேன்னா பண்ணவே மாட் டேன்'' என்று சபதம் செய்தேன்.

    பெண்டியாலா சீனிவாசன் என்ற தெலுங்கு இசை அமைப்பாளர் இசை அமைக்கும் தமிழ்ப்படமான "பட்டாம்பூச்சி'' படத்துக்கு, உதவி இசை அமைப்பாளராக கோவர்த்தன் பணியாற்றினார். இவர் எம்.எஸ்.வி. அவர்களிடம் உதவி இசை அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

    இந்தப் படத்திற்கு கதை - வசனம்: ஏ.எஸ்.பிரகாசம். கமலஹாசன் ஹீரோ. ஜெயசித்ரா கதாநாயகி.

    இந்தப் படத்திற்கு கோம்போ ஆர்கன் வாசிக்க கோவர்த்தன் என்னை அழைத்தார். நானும் சம்மதித்து, வாசித்தேன். என் வாசிப்பைப் பார்த்துவிட்டு எனக்கு நிறைய சான்ஸ் கொடுத்து, பல இடங்களில் வாசிக்க வைத்தார்.

    ஒருநாள் சாப்பாடு இடைவேளை முடிந்து நான் வேலை தொடங்குவதற்கு முன், அவருக்கு இசையமைக்க ஒரு படம் வந்திருப்பதாக சொன்னார். "நíயும், நானும் சேர்ந்து இசை அமைக்கலாமா? பெயரை `கோவர்த்தன் - ராஜா' என்று போட்டுக்கொள்ளலாம்'' என்றார்.

    "சரி'' என்று சொல்லிவிட்டேன்.

    பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார்.
    பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிக்குப்பின் திருமணத்துக்கு இளையராஜா சம்மதித்தார். மணமகள் ஜீவா, இளையராஜாவின் முறைப்பெண். (அக்காள் மகள்)

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். அமர் - கலா காதல் தீவிரமாகி வந்ததும், இதற்கு ஒரு காரணம்.

    என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க, அம்மா ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். "எனக்கும் வயசாச்சு. இப்படியே தினமும் உங்களுக்கு சமைச்சுப் போட எத்தனை நாள் முடியுமோ! அதனால் காலா காலத்திலே...'' என்று அம்மா கூறிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து விடுவேன்.

    என் அக்காவுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை (ஜீவா) பிறந்தபோது, அதன் ஜாதகத்தை என் தந்தையார் பார்த்திருக்கிறார்கள். "இந்தக் குழந்தையைத்தான் ராஜையாவுக்கு கட்டி வைக்கவேண்டும்'' என்று உத்தரவு போட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை அம்மா என்னிடம் சொல்லி பயமுறுத்துவார்கள்.

    ஜீவா பிறந்து, சிறு குழந்தையாக இருந்தபோதே, அதைப் பார்த்துக் கொள்ளும்படி அக்கா என்னிடம்தான் சொல்வார்கள். நான்தான் பார்த்துக் கொண்டேன். நான்தான் வளர்த்தேன். ஒரு தாய், சிறு குழந்தைக்கு செய்யும் அத்தனையும் நான்தான் ஜீவாவுக்கு செய்தேன்.

    அம்மாவிடம் மேற்கொண்டு மறுத்துப் பேசமுடியாத கட்டம் வந்தது. திருமணம் செய்து கொள்ள நான் சில நிபந்தனைகளை அம்மாவிடம்

    சொன்னேன்."அதைப் பார்க்கவேண்டும், இதைப் பார்க்க வேண்டும், சினிமாவுக்குப் போகவேண்டும், அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும் என்றெல்லாம் எல்லா பெண்களும் கணவன்மாரிடம் வற்புறுத்துவார்கள். அதுமாதிரி என்னிடம் கூறக்கூடாது. எனக்கு முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் இசைதான். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்'' என்று கூறினேன்.

    இது என் அக்காவுக்கும் தெரிந்தது. அவர்களும் மகளை பயமுறுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!

    எல்லாம் ஈசன் செயலே. கல்யாணம் நிச்சயம் ஆயிற்று, என்னைக் கேட்காமலேயே! அண்ணன் பாவலரும், அத்தானும், அம்மாவும் கலந்து பேசி, 1972 மே 22-ந்தேதி எனக்கும், ஜீவாவுக்கும் திருமணம் என்று நிச்சயித்து விட்டார்கள்.

    திருமண அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும் என்று, பாஸ்கர் கட்டாயப்படுத்தினார்.

    அதன்படி அழைப்பிதழும் அடித்துவிட்டோம். ஆனால் இன்று நினைத்தாலும், நெஞ்சை மிகவும் உறுத்துகிற விஷயம் - அழைப்பிதழில் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் பெயரை போடாமல் விட்டு விட்டோம்.

    "விட்டுவிட்டோம்'' என்ன, "விட்டு விட்டேன்.''

    அண்ணன் பெயரைப் போட்டால், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பவேண்டும். கூட்டம் வந்தால் செலவு தாங்காது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம் என்று சமாதானம் சொன்னால் அதை நம்பி விடுவீர்களா என்ன!

    அண்ணனும் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லை. அதுதான் மிகவும் வருத்தம்.

    திருமணத்துக்கு புதுத்துணிகள் எடுக்க வேண்டியிருந்தது.

    பாலு ஒரு டெய்லரைக் காட்டி, "ஒரு சூட் தைத்துக்கொள்'' என்றான். பணம் அவனா கொடுப்பான்? நான்தானே கொடுக்கவேண்டும்!

    கல்யாணம் நிச்சயமான நாளில் இருந்து எத்தனை கச்சேரிகள் இருந்ததோ, அத்தனை கச்சேரிகளில் என் சம்பளத்தை மொத்தமாக பாலுவையே வைத்திருக்கச்சொல்லி கல்யாணத்துக்கு முன் என்னிடம் கொடுக்கும்படியும், இல்லையென்றால் செலவாகிவிடும் என்றும் கூறியிருந்தேன்.

    ஜி.கே.வி.யிடம் `ஆர்க்கெஸ்ட்ரா' இன்சார்ஜ் ஆக இருந்த சீனிவாசன்தான் பாலுவிடமும் இன்சார்ஜ் ஆக இருந்தான். கடைசியில் பணம் பட்டுவாடா செய்தபோது, பெரிய தொகையை நான் எதிர்பார்க்க, ஏதோ ஒரு தொகையை "இவ்வளவுதான்'' என்று சொல்லி என் கையில்

    வைத்துவிட்டான்!சீனு விளையாடி விட்டானோ என்று எனக்கு சந்தேகம். பாலுவிடம் கேட்டதில், நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தபடிதான் இருக்கிறது என்று கூறிவிட்டான்.

    சரி; இப்போது என்ன செய்ய முடியும்!

    கல்யாணத்திற்கு பட்டுச்சட்டை தைத்துக்கொண்டேன். கல்யாண வேட்டியின் விலை என்ன தெரியுமா? 37 ரூபாய்! இன்றும் அந்த வேட்டி (என் மனைவியால் காப்பாற்றப்பட்டு) என்னிடம் இருக்கிறது!

    கல்யாணத்துக்கு ஒவ்வொரு காசையும் இழுத்துப்பிடித்து, எண்ணிப் பார்த்து செலவு செய்தேன்.

    என் திருமணத்துக்கு முக்கியமாக இரண்டு பேர் வரவேண்டும் என்று விரும்பினேன் - எதிர்பார்த்தேன்.

    அந்த இரண்டு பேர் பாரதிராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்.

    தனக்குப் படப்பிடிப்பு இருக்கிறது என்றும், திருமணத்திற்கு வர இயலாது என்றும் பாரதி சொல்லிவிட்டார்.

    எஸ்.பி.பி.யிடம், "நீ கட்டாயம் வரவேண்டும்'' என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், "நீ வராவிட்டால், நம் நட்பு பொய் என்றாகிவிடும். அவசியம் வா. உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்'' என்றும் சொல்லிவிட்டேன்.

    இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.
    இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தம்பி அமர் (கங்கை அமரன்) கலாவை காதலிக்கும் விஷயம், அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கடைசி பிள்ளை என்ற முறையில், அமர் மீது அம்மாவுக்கு ரொம்பப் பிரியம்.

    ஆனால், மூத்தவர்களான பாஸ்கரும், நானும் இருக்கும்போது, எங்களுக்கு முன் அமர் திருமணத்தை எப்படி நடத்துவது என்று அம்மா

    யோசித்தார்.என் அக்கா பத்மாவுக்கு பம்பாயில் திருமணமாகியிருந்தது. மாப்பிள்ளை ராஜன், கம்ïனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். பாஸ்கருக்கு பெண் பார்க்கச் சொல்லி, அவருக்கு அம்மா கடிதம் எழுதியிருந்தார் போலிருக்கிறது. பாஸ்கருக்கு பம்பாயிலேயே பெண் பார்த்து

    விட்டார்கள்.பாஸ்கருக்கு திருமணம் என்று தெரிந்ததுமே, பாரதியும், நானும் அவரை கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டோம்.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். அன்றுதான் பம்பாயில் பாஸ்கருக்குத் திருமணம் என்று முடிவாகியது.

    ஜாதகப் பொருத்தம் பார்த்தார்களா, ஜோசியர்கள் நாள் குறித்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. சாதாரணமாக, எந்த ஒரு காரியமானாலும், அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம். இதற்கும் ஜோசியம் பார்த்திருப்பார்களோ என்னவோ!

    குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே, நான், பாஸ்கர், பாரதி, அம்மா, அமர் எல்லோரும் ரெயில் மூலம் பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தோம். அண்ணனும் (பாவலர் வரதராஜன்) வந்து கலந்து கொண்டார்.

    தமிழர்கள் வசிக்கும் தாராவியில், குடிசைகள் நிறைந்த பகுதியில், ஒரு வீட்டின் முன் சிறிய பந்தல் போடப்பட்டு இருந்தது. அக்காவின் வீட்டில் உடைகளை மாற்றிக்கொண்டு, கல்யாணத்துக்கு பாஸ்கர் தயாரானார்.

    "மாப்பிள்ளை அழைப்பு'' ஊர்வலம் நடந்தது. யாரோ சரியாக வாசிக்கத் தெரியாத ஒருவர் நாயனம் வாசித்தார். மேளதாளம் முழங்க, பாஸ்கரை நடக்க வைத்து அழைத்துச் சென்றோம்.

    ஒரு சாதாரணப் பந்தல். இரண்டு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அதில் மாப்பிள்ளையும், பெண்ணும் உட்கார்ந்தார்கள். சுற்றிலும்

    கூட்டம்.பூக்கள் கிடைக்காத பம்பாயில், எப்படியோ இரண்டு சிறிய மாலைகளை தயார் செய்திருந்தார்கள். கெட்டி மேளம் முழங்க, மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ள, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட, திருமணம் நடந்தேறியது.

    திருமணம் முடிந்து சென்னைக்குத் திரும்பினோம். அங்கே ஒரு பிரச்சினை.

    எங்கள் வீட்டில் மேற்கு புறம் இருந்த அறையில் பாஸ்கரும், பாரதியும் வழக்கமாகப் படுப்பார்கள். அதை புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்க வேண்டி இருந்தது.

    நானும், அமரும் ஹாலில் படுப்பது வழக்கம். பாரதி, எங்களுடன் ஹாலில் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால், அது பாரதிக்கு சரியாகத் தோன்றவில்லை. தனியாக வேறு ரூம் பார்த்துக்கொண்டு போக விரும்பினார்.

    எது வந்தாலும் ஒன்றாக வாழ்வது என்ற உயர்ந்த நோக்கம் உள்ள நண்பர்களைக்கூட, கால நேரமும், சூழ்நிலைகளும் பிரித்து விடுகிறது

    அல்லவா?பக்கத்திலேயே வேறு ரூம் பார்த்துக்கொண்டு பாரதிராஜா போய் விட்டார். சாப்பாட்டிற்கு மட்டும் வீட்டுக்கு வந்து
    போவார்.

    அம்மா அடுத்தபடியாக என் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். நான் அதைக்கண்டு கொள்ளாமல், தட்டிக் கழித்து, நான் உண்டு என் வேலை உண்டு என்று போய்க்கொண்டிருந்தேன்.

    முன்பே சொன்னது போல், நாள் முழுவதும் ஜி.கே.வி.யின் கம்போசிங் அல்லது ரெக்கார்டிங்கில் இருப்பேன். இரவுதான் வீடு திரும்புவேன்.

    இந்தக் காலக்கட்டத்தில், மற்ற இசை அமைப்பாளர்களும் என்னை வாசிக்கக் கூப்பிட்டார்கள். மலையாளத்தில் தேவராஜன் மாஸ்டர், பாபுராஜ், ஏ.டி.உமர், தட்சிணாமூர்த்தி சுவாமி, கன்னடத்தில் விஜயபாஸ்கர், ராஜன் நாகேந்திரா, உபேந்திரகுமார், தெலுங்கில் ராஜேஸ்வரராவ், பெண்டியாலா சீனிவாசன், ராகவலு... இப்படி எல்லோருக்கும் வாசித்துக் கொண்டிருந்தேன்.

    கர்நாடிக் இசை கற்பதும், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் கற்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. பாடல் பதிவுகளின்போது என்னை உற்சாகமாக வைத்திருந்ததே கர்நாடிக் இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம்தான்.

    ஆதலால், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. கல்யாணம் செய்து கொள்வது, இசை வாழ்க்கைக்கு இடைïறாக ஆனாலும் ஆகிவிடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எனவே, திருமணத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் இருந்தேன்.

    மாலையில் கடற்கரை வரை `வாக்கிங்' போவதாக இருந்தால், நானும், பாரதியும் மட்டும் போவோம். பாஸ்கர் எங்களைப் பார்ப்பார். பாரதி சிரித்துக்கொண்டே, "நாங்கள் எல்லாம் சின்னப் பசங்க. நீ இப்போது குடும்பஸ்தன்! அதனால் எங்கள் கூட வரக்கூடாது!''

    என்பார்.பாஸ்கர் பொறுத் துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, "அட போங்கடா'' என்று கூறிவிட்டு சில சமயம் எங்களுடன் வருவார்.

    அப்படி அவர் ஒரு நாள் வந்தபோது, "குடியரசு என்றால் என்னய்யா?'' என்று பாரதி வேடிக்கையாக கேட்டார்.

    "மக்களாட்சி. அதாவது நம்மை நாமே ஆள்வது!'' - இது பாஸ்கர்.

    "அப்படியானால் அது சுதந்திரம்தானே?''

    "ஆமாம். சுதந்திரம்தான்!''

    "அப்படியானால், சுதந்திரமாக இருக்க வேண்டிய நாளில் யாராவது கைதாவானா?'' என்று சிரித்தபடி கேட்டார், பாரதி.

    "ஆமாய்யா! ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினம் - சுதந்திரமாக இருக்க வேண்டிய நாள். அன்றைக்குப் பார்த்து, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஜெயில்லே அடைச்சுட்டீங்க!'' என்பார் பாஸ்கர்.

    "தலையில் எழுதினதை மாத்த முடியுமா பாஸ்கரூ!'' என்று சிரிப்பார், பாரதி.

    பாஸ்கர் எங்களுடன் வராதபோது, நானும் பாரதியும் பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு வருவோம்.

    அப்போது, மத்திய அரசின் "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்'' (என்.எப்.டி.சி.) உதவியுடன் தயாரிக்கப்பட்டு வந்த "தாகம்'' என்ற படத்திற்கு பாரதிராஜா உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் திரைப்படத்துறை எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றன, எவ்வளவு உன்னதமான படங்களை வெளிநாடுகளில் தயாரிக்கிறார்கள், இங்கே அப்படி இல்லையே என்று ஆதங்கத்துடன் பேசி வருந்துவோம்.

    உலகத் தரத்துக்கு உயரும் வகையில் தமிழ்ப்படங்கள் வரக்கூடாதா? எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? இந்த மாதிரி உயர்ந்த படங்களைத் தந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்குவோம்.

    ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தயாரித்தால்தானே! தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் ஒத்துக்கொள்ள வேண்டுமே!

    இல்லை; ஒரு நாள் இதெல்லாம் மாறத்தான் போகிறது!

    - இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நடப்போம்.

    அதற்குள் நிலா கடலில் இருந்து மேலே வந்து, அதன் நிழல் கடல் பரப்பில் விழ, அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    ×