search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்லேடன்"

    பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #BinLaden #Pakistan
    புதுடெல்லி:

    புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பதிலடி தந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் இயக்க நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கையை நினைவு கூர்ந்தார்.

    அப்போது அவர், “பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும். இதுவரை நினைத்து பார்த்திராத வகையில், இந்தியா எதையும் செய்ய முடியும் என்பதை விமானப்படை தாக்குதல் நிரூபித்துக்காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதே கருத்தை ராம் மாதவ் போன்ற பாரதீய ஜனதா தலைவர்களும் ஆமோதித்தனர்.
    20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தங்கியிருக்கும் பின்லேடன் பாதுகாவலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    பெர்லின்:

    அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இவரது பாதுகாவலராக சமி ஏ என்பவர் இருந்தார். துனிசியா நாட்டை சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளார். தனக்கு குடியுரிமை வழங்கும்படி அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இவர் ஒரு பயங்கரவாதி என காரணம் கூறி அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவருக்கு மாதம் 1200 யூரோ உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் அவரை கடந்த மாதம் நாடு கடத்த ஜெர்மனி அரசு உத்தரவிட்டது. ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் தெரிவித்தார். இதனால் அவர் ஜெர்மனியில் தங்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் அவரை தொடர்ந்து ஜெர்மனியில் தங்க அனுமதிக்க முடியாது. ஒரு பயங்கரவாதி என்று தெரிந்தும் அவரை நாட்டில் தங்க வைத்திருப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருதுகிறார். எனவே அவரை நாடு கடத்துவதற்கான அனுமதி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    எனது மகன் மிகவும் நல்லவன், மூளை சலவையால் பயங்கரவாதி ஆனான் என்று பின்லேடன் தாயார் அலியா கூறியுள்ளார். #BinLaden

    ஜெட்டா:

    அல்கொய்தா பயங்கரவாதி இயக்கத்தின் தலைவராக பின்லேடன் இருந்தார். உலக நாடுகளை அச்சுறுத்திய அவர் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பின்லேடன் தாயார் அலியா தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் வசித்து வருகிறார். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு முதன் முறையாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ‘‘எனது மகன் (பின்லேடன்) மிகவும் நல்லவன். மாணவ பருவத்தின் போது அவன் மூளைசலவை செய்யப்பட்டான். சவுதி அரேபியாவில் பல்கலைக் கழகத்தில் படித்தபோது கலாசார குழு ஒன்றுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனவே அந்த குழுவிடம் இருந்து விலகி இருக்குமாறு அவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். இருந்தும் அவன் வித்தியாசமான மனிதனாக ஒரு பயங்கரவாதியாக மாறினான்.

    அவன் என்ன செய்கிறான் என்பதை என்னிடம் ஒருபோதும் தெரிவித்ததில்லை. ஏனெனில் என்னை மிகவும் நேசித்தான்’’ என்றார். #BinLaden

    ×