search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமன்"

    அமீரகம்-ஓமனில் இருந்து பாகிஸ்தானின் பைசலாபாத், முல்தான், சியால்கோட், கராச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. #IndiaPakistanWar
    துபாய்:

    சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தன. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்தன. இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தனது நாட்டின் வான்வழியாக விமானங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக துபாயில் இருந்து இயக்கப்பட்டு வரும் பிளை துபாய் விமான நிறுவனம் பாகிஸ்தானின் பைசலாபாத், முல்தான், சியால்கோட், கராச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகளை நேற்று முதல் 2 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. இதேபோல் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    ஓமனில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்களும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளன.  #IndiaPakistanWar 
    ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #SCOTvOMAN
    ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ரன்களை தாண்டியது.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.

    ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது.
    இதையடுத்து, 93 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமன்.

    ஓமன் அணி சார்பில் மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #SCOTvOMAN
    அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர். #IndianWorkers
    புதுடெல்லி:

    பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய அரேபிய நாடுகளில் பணிபுரிய இந்தியாவில் இருந்து ஏராளமானோர் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த 6 நாடுகளிலும் சேர்ந்து 2017-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 22 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக டெல்லி மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆர்.டி.ஐ. என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்திய மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-

    அரேபிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மத்திய மனித உரிமைகள் மற்றும் பொதுநல அமைப்பு, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அப்போது 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இதுநாள் வரை பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மரணமடைந்த இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை கேட்டது.

    அரேபிய நாடுகள் உள்பட அனைத்து வெளிநாடுகளுக்கும் சென்று பணிபுரியும் இந்தியர்களின் விவரம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சேகரிக்கப்பட்டது.

    2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்திய பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 410.33 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது. அரேபிய நாடுகளில் மட்டும் 209.07 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த புள்ளி விவரப்படி 2012-ம் ஆண்டு முதல் இதுவரை அரேபிய நாடுகளில் 24 ஆயிரத்து 570 இந்திய பணியாளர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த எண்ணிக்கையானது முழுமை அடைந்த எண்ணிக்கை அல்ல. எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். இந்த காலங்களில் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் சராசரியாக இறந்துள்ளனர்.

    இவ்வாறு தன்னார்வ அமைப்பு நிர்வாகி வெங்கடேஷ் நாயக் கூறி உள்ளார். #IndianWorkers
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.



    அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
    ஓமனில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவித்தது.
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமம், புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி சேவியர். இவருக்கு சொந்தமான ‘கவின் பிறைட்’ என்ற மீன்பிடி விசைப்படகில் அவருடன் சேர்த்து 10 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது இயற்கை சீற்றத்தினால் விசைப்படகு இழுத்து செல்லப்பட்டு, ஓமன் கடல்பகுதிக்கு சென்றது. இதையடுத்து விசைப்படகையும், அதில் இருந்த 10 தமிழக மீனவர்களையும் ஓமன் கடற்படையினர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி சிறைப்பிடித்தனர். கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் இயற்கை சீற்றத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டோம் என்று விளக்கமாக எடுத்துச்சொல்லியும் அவர்களை விடவில்லை.

    இந்த நிலையில் மீனவர்கள் குடும்பத்தினரிடன் வேண்டுகோளுக்கிணங்க, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    அதன் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஓமனில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கிறது. #tamilnews
    ஓமன், ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 11 பேர் பலியாகினர். #Cyclone #Omen #Yemen
    துபாய்:

    அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  #Yeman #Omen #Cyclone 
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஓமனுக்கான புதிய தூதராக முனு மஹாவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MunuMahawar
    மஸ்கட்:

    மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் நாட்டிற்கான இந்திய தூதராக இந்திரமணி பாண்டே இருந்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி முதல் மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார். இவரது பொறுப்பு காலத்தில் இந்திய தொழிலாளர் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திரமணி பாண்டே டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஓமனுக்கான புதிய தூதராக முனு மஹாவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது வெளியுறவுத்துறையில் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    ஓமனுக்கான இந்திய தூதராக முனு மஹாவர் விரைவில் பொறுப்பேற்பார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

     இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MunuMahawar
    ×