search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான ரசிகர்கருக்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Dhanush #Sterlite
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி, கமல் மற்றும் சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    உயிரிழந்தவர்களில் ரகு என்கிற காளியப்பன் நடிகர் தனுஷின் நற்பணி மன்றத்தில் இருப்பவர். இவருடைய இறப்புக்கு நடிகர் தனுஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், ‘துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S. ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்து வருவதால், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம் தள்ளி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kaala
    ரஜினி நடித்து சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். தூத்துக்குடி கலவரம்-துப்பாக்கி சூடு காரணமாக அந்த முடிவை ரஜினி ரத்து செய்துவிட்டார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார். பொதுவாக ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவரது படத்துக்கான விளம்பர வேலை என்ற ரீதியில் எப்போதுமே விமர்சிக்கப்படும்.

    எனவே தனது அரசியல் அடியை ரஜினி கவனமாக எடுத்து வைக்கிறார். ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்று நில உரிமைக்காக போராடும் போராளியாக ரஜினி நடித்திருக்கிறார். படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கலவரத்தால் பற்றி எரியும் சூழ்நிலையில் ‘காலா’ படத்தை வெளியிடுவது பிரச்சினையை உண்டாக்கும். மேலும் விமர்சனங்களும் கிளம்பும் என்று ரஜினி யோசிக்கிறார்.

    இந்த வாரம் ஆந்திராவில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டு இருந்தார். அவற்றை தள்ளிப்போட்டு விட்டார். இதே நிலை நீடித்தால் பட வெளியீட்டையும் தள்ளி வைக்க ரஜினி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல் கட்டமாக சர்வதேச விநியோகஸ்தர்களுடன் ரஜினி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
    25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்பதால் அப்போதே, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய 3 மாநிலங்கள் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க விடாமல் விரட்டியடித்து உள்ளனர். #SterliteProtest #Sterlite
    புதுடெல்லி:

    வேதாந்தா தொழில் நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைப்பது என்று 1995-ல் முடிவு செய்தது. இதற்காக பல மாநிலங்களில் ஸ்டெர்லைட் அணுகியது.

    குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் அந்த மாநில மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலை அமைக்கப்படவில்லை.

    அதன் பிறகு தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததால் தூத்துக்குடியில் ஆலை அமைக்கப்பட்டது. 4 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை உருவாக்கப்பட்டது. தாமிர ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி கொடுப்பது என்பது எளிதான வி‌ஷயம் அல்ல.

    ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் தவறான தகவல்களை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கொடுத்து அனுமதி பெற்றுவிட்டதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு கூறி உள்ளது.


    அதாவது இந்த ஆலை அமையும் இடத்தில் 25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்க கூடாது.

    ஆனால், இந்த ஆலையின் அருகிலேயே முன்னாறு கடல் தேசிய பூங்கா உள்ளது. அதை மறைத்து சுற்றுச்சூழல் அமைப்பில் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஆலையில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். அப்படி கலந்தாலோசனை நடத்தாமலேயே ஒப்புதல் பெற்றதாக சுற்றுச்சூழல் அமைப்பில் காட்டி இருக்கிறார்கள்.

    இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என்று அறிவியல் சுற்றுச்சூழல் இயக்கம் கூறி இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல் சுனிதா நாராயணன் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையால் 20 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அதை விரிவாக்கம் செய்ய முயன்றதால் மக்கள் அதை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். அவர்கள் பேராட்டம் நியாயமானது என்று கூறினார்.

    இந்த ஆலை தொடர்பாக கோர்ட்டு அமைத்த ஆய்வு கமிட்டி சோதனையில் பல்வேறு முறைகளில் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வில் இதன் கழிவு பொருட்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ஆர்செனிக் ரசாயனம் அதிக அளவில் இருப்பதும், சல்பர் டைஆக்சைடு வாயுவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெளியிட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. #SterliteProtest #Sterlite
    ஸ்டெர்லைட் மூடல், பெட்ரோல் விலை குறைப்பு, பொதுமக்கள் போராட்டம் முடிவு இதுதான் நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-



    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று மாநில அரசும், பெட்ரோல் விலை பெரிதும் குறைக்கப்பட்டது என்று மத்திய அரசும், போராட்டம் முடிவுக்கு வந்தது என்று பொதுமக்களும் அறிவிப்பதுதான் நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும்’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BanSterlite #SaveThoothukudi

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் போதாது, மேலே இருக்கும் இருவர் பதவி விலக வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #Kamalhaasan #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை, வதந்தி பரவாமல் தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருகிற 27-ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. 

    தூத்துக்குடி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசும் போது,



    அரசு தரப்பில் யாரும் தூத்துக்குடி மக்களை சந்திக்கவில்லை என்பது எனது குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து கேட்ட போது, பதவிநீக்கம் போதாது, மேலே இருக்கும் இருவர், அதாவது முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும். சொல்லப்போனால் அரசே விலக வேண்டும். 

    மக்களை வழிநடத்துவதும், அவர்கள் வாழ்க்கை இன்னும் ஏதாவாக நடத்துவதற்கு உதவி செய்வதற்கே இரு அரசுகளும். ராணுவத்தை அனுப்பி எங்கள் வாழ்க்கையை சரிபடுத்த முற்படுத்துவது, நியாயமான அரசு பரிபாலணமாக இருக்க வாய்ப்பில்லை. என்றார். #Kamalahaasan #BanSterlite #SaveThoothukudi
    ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்தில் வைகோவின் மருமகன் ‘காண்டிராக்ட்’ எடுத்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதற்கு வைகோ பதில் அளித்துள்ளார். #ministerjayakumar #vaiko
    சென்னை:

    அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.



    இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் வைகோ, நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1986-ல் இருந்து ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட ‘ஸ்டாக்கிஸ்டாக’ எனது சகோதரி மகன் ஜெகதீசன் இருந்து வந்தார். 1996-ல் ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் இயங்க தொடங்கியபோது, ‘எல் அண்டு டி’ நிறுவனத்துக்காக ‘வெல்டிங் ராடு’ வேலைகள் செய்து கொடுத்துள்ளார்.

    இந்த விவரம் எதுவும் அக்காலத்தில் முதலில் எனக்கு தெரியாது. 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஸ்டெர்லைட்’ நிறுவன அதிபர் அனில் அகர்வால் எனது மருமகனை சந்திக்க ஆள் மேல் ஆள் அனுப்பியும் என் மருமகன் சந்திக்க மறுத்துவிட்டார். மேலும், அதே 2000-ம் ஆண்டில், இந்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஜி.ராமசாமி டெல்லியில் இருந்து சென்னை தாயகம் வந்து, ‘ஸ்டெர்லைட்’ அதிபர் அனில் அகர்வால் என்னை சந்திக்க விரும்புவதாகவும், எங்கு அழைத்தாலும் அவர் வருவார் என்றும் தெரிவித்தார்.

    ஆனால், நான் அவரை ஒரு நிமிடம் கூட சந்திக்க மாட்டேன் என மறுத்து அனுப்பினேன். இதை 100-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் தெரிவித்து இருக்கிறேன். 2002-க்கு பிறகு எனது மருமகன் ‘எல் அண்டு டி’ ‘ஸ்டாக்கிஸ்டு’ உரிமையையே வேண்டாம் என்று விலக்கிக் கொண்டார்.

    இந்த நிலையில், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ‘ஸ்டெர்லைட்’ பிரச்சினை காரணம் என்று ஒரு வாரப்பத்திரிகை கட்டுரை வெளியிட்டு இருந்தது. உண்மையில், நான் தமிழக மக்கள் நலனுக்காக அணு அளவும் சுயநலம் இன்றி என்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறேன். என் மனசாட்சிக்கு நேர்மையாக நடக்கிறேன். என் உயிர் மூச்சு அடங்கும் வரை அப்படியே வாழ்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #vaiko

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், தொலைக்காட்சி நடிகை நிலானி, உண்மையில் தூத்துக்குடியில் நடப்பது திட்டமிட்ட படுகொலை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    அந்த வீடியோவில், போலீஸ் உடை அணிந்து நடிகை நிலானி பேசும் போது, 

    இந்த உடையை அணிவதற்கு ரொம்ப கேவலமாக நினைக்கிறேன். இந்த உடையை அணியவே கூசுகிறது. படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இது முடியப்போவதில்லை. இனிமேல் தான் ஆரம்பமாகப் போகிறது. இது தமிழர்களை தீவிரவாதிகளாக்கும் முயற்சி. நம்மை போராட விட்டு, தீவிரவாதியாக்கி, இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலை போல் நம்மையும் கொல்ல நினைக்கின்றனர். 



    இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். 

    இந்த நிலையில், தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest

    ஸ்டெர்லைட் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட கொடூரமானவை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுயதாவது,



    `தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட ரொம்ப கொடூரமானவயாக இருக்கின்றன.' 

    இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest #KarthikSubbaraj

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம் பதில் சொல்ல வேண்டும் என சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, அண்ணாநகர் பகுதியில் உள்ள  மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

    போலீசாரை நோக்கி பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை வீசியும், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். நிலைமை எல்லைமீறி போனதால் போலீசார் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.



    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம் பதில் சொல்ல வேண்டும் என பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் ப.சிதம்பரம் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதற்காக சம்பளமும் வாங்கி இருக்கிறார் என்பதற்கான எல்லா ஆவணங்களும் உள்ளன. ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பதில் சொல்ல வேண்டும் என சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #SubramanianSwamy
    ஸ்டெர்லைட் ஆலை தலைவரின் கொடும்பாவியை எரித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து நேற்று மாலை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    சென்னையில் இயக்குநர் கவுதமன் தலைமையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. சந்திப்பு முடிந்து வெளியே வந்த கவுதமன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை தலைவரின் கொடும்பாவியை எரித்தனர். மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவாறு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைத்தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கார்த்தி கூறியிருப்பதாவது, 

    `ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை தங்கள் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சத்தில் போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத்தான் நின்றிருக்க வேண்டும். ஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது; நேர்மையற்றது.



    எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மக்களைக் காப்பதுதானே காவல் துறையின் முதல் கடமை. அப்படியிருக்க, காவல் துறையினரே பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க
    முடியாதது.

    மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன், சுற்றுச் சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும். அதேநேரம் நல்ல மூச்சுக்
    காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள், நடந்த பெரும் துயரத்துக்கு அரசு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட 
    மக்களின் துயரங்களுக்குத் தீர்வாக நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை பேரின் குடும்பங்களும் அந்தத் துயரத்திலிருந்து மீளவும், சிக்கலின்றி வாழவும் அரசு
    உடனடியாக அவர்களின் தேவை அறிந்து ஓடோடிப் போய் உதவ வேண்டும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை அதற்கான தீர்வுக்கு இனியாவது அரசு காட்ட வேண்டும். மக்கள் போராட்டக் களத்துக்கே வரக் கூடாது என அரசு நினைப்பது தவறு. மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டுமே
     தவிர, அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகிற அராஜகங்களை ஒருபோதும் செய்யக்கூடாது.' என்று கார்த்தி கூறியிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest  #Karthi
    ஸ்டெர்லைட் போராட்டம் தூத்துக்குடி மாவட்டத்தையே போராட்டக் களமாக மாற்றியிருக்கும் நிலையில், இந்த போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார். #StuntSilva
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இதில் ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி வெனிஸ்டா, அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



    இந்த போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா கூறியிருப்பதாவது, 

    `எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்' என்று கூறியிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest  #StuntSilva

    ×