search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123633"

    • மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2005 ஆம் ஆண்டு முதல் உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத வாய்பேச இயலாதோர், பார்வையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பெற்றிட தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள், ஆதார் அட்டை, தற்போதைய புகைப்படம், கையொப்பம் (அ) கைவிரல் ரேகை ஆகியவற்றின் ஒளி நகலுடன் இ-சேவை மையங்களில் இதுவரை 47,159 நபர்கள் விண்ணப்பித்து அதில் சான்றுகள் சரியாக உள்ள 37,541 நபர்களுக்கு நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் அவரவர் முகவரிக்கு தனித்துவ அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மீதம் 896 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பம் குறைபாடாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 20-ந்தேதிக்குள் நேரடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுநாள் வரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றிட ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் திருச்சி கண்டோன்மென்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    அல்லது நேரில் மாற்றுத்திறனாளிகள் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆவணங்களுடன் வந்து பயனடையுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590 ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • சங்கராபுரத்தில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா நடைபெற்றது.
    • பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் சீனிவாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் டாக்டர் பார்த்திபன், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் மாவட்ட சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து மாநில பொது செயலாளர் சந்திரகுமார், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தொகுப்பூதியம், தற்காலிக, நீண்டகால ஒப்பந்தம், சிறப்பு கால முறை ஊதியம் ஆகிய அடிப்ப டையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலி யர்கள், ஊர்புற நூலகர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போன்ற ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து தர முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள். இதில் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
    • கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் சார்பாக தாலுகா 3-வது மாநாடு நடந்தது. மயில்சாமி தலைமை தாங்கினார். மதன்குமார் முன்னிலை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாடசாமி, அழகர்சாமி, தங்கபாண்டி, முனியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், மாதத்திற்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணிநேர சட்ட கூலி ரூ.281-ஐ அனைத்து ஊராட்சிகளில் அமல்படுத்த வேண்டும்.

    கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார்கள் நாகேந்திரன், மணிகண்டன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டிய கீர்த்தி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச் சந்திரன் கோரிக்கை மனுக்கள் பெற்றார். மண்டல துணை தாசில் தார்கள் செந்தில், திருமுருகன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், மாற்றுதிறனாளிகள் நல சங்க மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 132 மனுக்கள்பெறப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடப்பது பற்றி 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்து இருந்தால் அதிக அளவில் பயனாளிகள் பயன்பெறுவார்கள். ஆனால் திடீரென்று ஏற்பாடு செய்ததால் குறைந்த அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    வரும் காலங்களில் அதிகாரிகள் கடமைக்கு செய்யாமல் கடமையை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் 21,240 மாற்றுத்திறானாளிகளுக்கு அடையாள அட்டைகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
    • நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாமில் 279 பேர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறானாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடை பெற்றது.

    முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசிய தாவது:-

    கடந்த 01.08.2021 முதல் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு 8,435 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒருங்கிணைந்த விழுப்புரம் அலுவலகம் மூலமாக 12,541 மாற்றுத் திறானாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடை யாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 279 ேபர் கலந்து கொண்டனர்.

    இதில் ஒற்றை சாளர முறையில் நேற்று 264 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 21,240 மாற்றுத்தி–றனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து சலுகை கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பெற்றிட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பயண்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவ அலுவலர் (எலும்பு அறுவை சிகிச்சை) பிரவீன் பால் மற்றும் மாற்றுத்திறனாளி கள் பலர் கலந்து கொண்ட னர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
    • 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

    பெரம்பலூர் வட்டத்தில் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.07.2022 காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரையிலும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-தேதி காலை 9.00மணி முதல் 2.00 மணி வரையிலும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காது கேளாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
    • டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 1 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட ௧௯ கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் ஏராளமானோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கூட்டமைப்பில்நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க வாய்ப்பு வழங்கவேண்டும். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 1 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை மாற்றுத்திறனாளி துறை மூலம் மாற்றி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    சைகை மொழி பெயர்ப்பாளரின் வீடியோ பட வடிவமைப்பை பெரிதாக அரசு செய்தி தொலைக்காட்சியில் கொண்டு வரவேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு துறை அலுவலகங்களில் சைகை மொழியை அமுல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

    காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்கவேண்டும் என்பது உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.

    • ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் தலைவர் மோகன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்தி றனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளனர்.

    • தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு பெறுவது குறித்த குழு கூட்டம் நடைபெற்றது
    • இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளு க்கான சமவாய்ப்பு மற்றும் சமஉரிமை, செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனா–ளிகளு க்கான மருத்துவச்சான்றிதழ், தனித்துவமான அடையான அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதுகேளாத மனவளர்ச்சி குன்றிய 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை பயிற்சி, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வழங்கப்பட்ட விபரங்கள், வழங்கப்பட வேண்டிய விபரங்கள் குறித்தும் ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பரிசோதனை மையம், சிறப்பு பள்ளிகள், பகல் நேரக் காப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பபாடுகள், சமூக பாதுகாப்புத்திட்டம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மாற்றுத்திற னாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அளித்தி டவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்கிடவும், அனைத்து துறைகளிலும் மாற்று த்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களில் முன்னு ரிமை வழங்கிடவும் நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவல ர்கள், தொழி ற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக செய்கை மொழி பெயர்ப்பாளர் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில 6 நபர்களுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை கலெக்டர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

    • கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
    • விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்தி றனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது, மாற்றுத்தி றனாளிகளுக்கான முகாமில் சுமார் 17 தனியார் நிறுவனங்கள் மற்றும் 3 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த முகாமில் 269 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

    முகாமில் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையினையும், 24 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆணையும் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் வழங்க 72 மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும், மத்திய கூட்டுறவுவங்கி மூலமாக 49 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இவ்விண்ணப்பங்கள்மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் முரளிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டனர். 

    • மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.
    • மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் வழங்கினர்.

    ெபாள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமில் பொள்ளாச்சி , ஆனைமலை, கிணத்துக்கடவு தாலூக்காக்களில் இருந்து பயனாளிகள்பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம் வழங்கினர். மொத்தம் 175 மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் அரசு மருத்துவர் ராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா 260 பேருக்கு ரூ.19. 89 லட்சம் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டுபயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் 50 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் இலவச வீட்டுமனைப்பட்டா 31 பேருக்கும் ரேசன் கார்டு 20 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3பேருக்குஅரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 3 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 260 பேருக்கு ரூ.19 லட்சத்து 89 ஆயிரத்து290 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் மேல்மலையனூர் யூனியன் தலைவர் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் தாசில்தார் கோவர்தனன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், ஜமாபந்தி கண்காணிப்பு அலுவலர் உஷா, யூனியன் துணைத்தலைவர் விஜயலட்சுமி முருகன் மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதை சந்திரகுப்தன்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×