search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123633"

    • மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
    • மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்ற வர்களுக்குபல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசால் மாற்றுத்திற னாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் கட்டமாக கும்பகோணம், பூதலூர், சேதுபாவாசத்திரம் ஆகிய 3 ஒன்றியங்களில் 9 இடங்களில் நடைபெற உள்ளது.

    கும்பகோணம் ஒன்றியம் சோழன் மாளிகை முழையூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மையத்தில் வருகிற 21-ந் தேதியும், தேவனேஞ்சேரி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் அடுத்த மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.

    பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 16-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24-ந் தேதியும், செங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-ந் தேதியும் நடைபெறுகிறது.

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகிய நாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 17-ந் தேதியும், பெருமக்களும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25-ந் தேதியும், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடுத்த மாதம் 1ஆம் தேதியும் முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்தறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    எனவே மேற்கூறிய மூன்று ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளை சேர்ந்த இதுநாள்வரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
    • மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    பேராவூரணி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் எம்.எல்.ஏ.-க்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள், பேராவூரணி தொகுதி அசோக்குமார் எம்.எல்.ஏ.-வை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்டதலைவர் பகாத் அகமது,மாவட்ட பொருளாளர்சுதாகர், மாவட்ட ஒருங்கி ணை ப்பாளர் பாலசுப்பி ரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதி, பேராவூரணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய துணை தலைவர் ராஜேஷ்கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அசோக்குமார் எம்.எல்.ஏ -வை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பண்ருட்டி தலைவர் தனுஷ் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விருத்தாச்சலம் தலைவர் அமரேசன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, நிர்வாகிகள் பாலமுருகன், கொளஞ்சிநாதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×